Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி இரண்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி இரண்டு 
**************************************************************************************
தனக்கு நிகர் தான் மட்டுமே
அகநான் புறநான் என்ற இரண்டு நான் என்ற உணர்வுக்கு இடையே நடக்கும் போராட்டத்தை நிறுத்துவதே ஆன்மீகமாகும்.. அகநானோடு புற நான் இணைய இணைய வாழ்வு ஓங்கத் தொடங்குகிறது.. விலக விலக வாழ்வு ஒடுங்கத் தொடங்குகிறது... இன்றைய கால கட்டத்தில் இரண்டையும் விலக்கி வைத்து வாழ்வினை ஒடுங்க செய்யும் ஆன்மீகம் தலை எடுத்து ஓங்கி நிற்கின்றது.. எங்கும் எதிலும் இரண்டையும் விலக்கி வைக்கும் அல்லது அகல வைக்கும் செயல் பாடே நடைபெறுகிறது.. இணைந்து மதி நிறைந்த வாழ்வா, அல்லது விலகி மதி நீங்கிய வாழ்வா, என்ற இரண்டு கேள்விகளுக்கு நடுவே மனித குலம் எதுவும் புரியாது தவித்துக் கொண்டு இருக்கிறது..

மதி நிறைந்த வாழ்வுக்கு தனக்கு தானே போதும்.. தனக்கு தான் மட்டுமே வேண்டும்.. மதி நீங்கிய வாழ்விற்கு மதங்கள் மார்க்கங்கள், வெளி உலக தொடர்புகள் அனைத்தும் திசைமாறி செயல் படுகின்றன... ஆனாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே மிகவும் சிரமப் பட வேண்டியதாகிறது... சுத்த சத்து மார்க்கிகள் ( சன்மார்க்கிகள் ) விடுக்கும் அறை கூவல்கள் துளியும் எடுபடுவதே இல்லை.. ஆனால் அசுத்து மார்க்கிகள் (துன்மார்க்கிகள் ) செய்யும் ஒவ்வொரு அசைவும் பெரும் கவர்ச்சியை தோற்றுவித்து அந்த கவர்ச்சி வலையிலே மனிதன் விழுந்து சிக்குண்டு தன்னை இழந்து கொண்டே போகிறான்..

தன் நிலையிலே ( த ) இசைந்து வாழ்ந்து (மி ) மதிநிலை ( ழ் ) அடைந்து பெரு வாழ்வு வாழ்க என்ற மிக மிக எளிய தமிழ் நிலை என்று ஓங்கத் தொடங்குகிறதோ அன்று மட்டுமே மனித குலம் அமைதியும் ஆனந்தமும் காணும்..

இப்படி தன்னில் தானாய் இருந்து தனக்கு நிகர் தானே ஆகி, தன்னில் அன்பு பெருகி, அது தரணியை வாழ வைப்பதற்கு பதிலாக, தன்னையே உலக சார்புகளாக்கி, இழிவு பட்டு, தானே சார்புகளுக்கு அடிமையாகி, அலைகழிக்கப் பட்டு அல்லல் உற்று, அடி மட்ட நிலைக்கு தள்ளப் படும் நிலை வருகிறது...

தமிழ் நிலை என்றும் ஓங்கும் நிலையே.. அது வாழ்வின் ஆதார அடிபடை நிலை.. உறுதியான அடிதளமாக விளங்கும் தமிழ் நிலை மேல் கட்டப் படாத எதுவும் நிலைத்து நின்றதாக சரித்திரம் வரலாறு இல்லை... தமிழ் நிலையை மறந்ததால் தமிழ் நிலை மறந்த தமிழர்கள் சரிந்த நிலை தோற்ற நிலை சாய்ந்த நிலை, பல் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.. சமீபத்தில் இலங்கை தமிழர்களின் பெரும் சரிவு, சீரழிவு தமிழ் நிலை மறந்ததின் உயர் நிலை, உச்ச நிலை...

தமிழ் என்ற மூன்று எழுத்தில், முதலில் வரும் தகர உயிர் மெய் எழுத்தை தூக்கி கடைசியில் வைத்தால் அது மிழ்த எனவாகும்.. அந்த நிலையோடு கூடிய இயக்கம் ( உ ) இணைய மிழ்து எனவாகும்.. மிழ்து என்றால் நிலையாமை மரணம் எனவாகும்.. அமிழ்து என்றால் நிலைத்த தன்மை என பொருள் கொள்ளும்.. தமிழுக்கு அமிழ்து என்ற பேர். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் ஒரு தமிழ் மகன்.. உண்மைதான் தமிழ் நிலை அமிழ்து என்ற நித்தியத்தை, என்றும் நிலைத்ததை தரவல்லது.. அதை நம் உயிருக்கு நேர் நிலையாக அதாவது இணையாக கொண்டால் மட்டுமே நாம் நிலைத்து வாழ முடியும்... அப்பொழுது சார்புகள் நம்மை சார்ந்து இருக்கும்.. இன்றைய அவல நிலை சார்புகள் என்ற உலக தொடர்புகளை நாம் சார்ந்து அடிமைகளாய் உள்ளோம்.. அடிமை நிலை நீங்கி அரசன் நிலை பெற தமிழ் நிலையினை உணர்ந்து, ஏற்று, உலகிற்கு உறு துணையாவோம்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி ஒன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி ஒன்று..
********************************************************** ***********************
மதி நிறைந்த வாழ்வு
உலகில் உள்ள ஆத்திகவாதிகள் இறைவனை ஏதாவது ஒரு வகையில் உருவில் முன் நிறுத்தியே வழிபாடுகளை செய்கின்றனர்.. கடவுளை மறுக்கும் புத்தமதம் போன்ற மார்க்கத்தில் உள்ளவர்கள் தங்கள் மார்க்க குருவை மையப் படுத்தி மார்க்க நெறிகளில் ஈடுபட்டு வருகின்றனர்... எது என்னவாக இருந்தாலும் ஏதாவது ஒரு உருவத்தை மையப் படுத்தியே எல்லா நிகழ்வுகளும் ஆன்மீகத்தில் நடைபெறுகிறது.. பண்டைய தமிழ் நிலையில் கனல் நிலை என்ற எதையும் மையப் படுத்தாத ஒரு நிலையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இன்றைய ஆன்மீகம் திசைமாறி போய்விட்டது.. தோன்றா நிலைக்கு ஒரு புரிதலை தேடும் மனம் ஏதாவது ஒரு உருவத்தை மையப் படுத்தவே முனைய அலைகிறது.. புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலை வரும் வரை தோன்றா நிலையை மனித குலம் புரிந்து கொள்ள முடியாது..

தோன்றா நிலை ஒன்றே மனிதனை மனிதனாக்கும் ஒரு நிலை.. ஏனையவை மனிதனை பிற பொருளாக்கும் இயல்பு உடையவை.. தோன்றா நிலையில் தன்னில் மையம் கொள்ளும் மனிதன் அண்ட ஆற்றலோடு இணைக்கப் படுகிறான்.. தோன்றும் நிலையில் உள்ள உருவங்களோடு தொடர்பு கொள்ளும் போது அண்ட ஆற்றலை விட்டு துண்டிக்கப் படுகிறான்.. சுவாச பயிற்சியில் சூரிய கலையில் முடியும் நிலையில் அகப்படும் அந்த அரை நொடி தோன்றா நிலையில் கிடைக்கும் அண்ட ஆற்றலால், உயிர் வாழும் மனிதன், சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலையினை அனுபவப் பட்டு மிக உயர்ந்த நிலையிலே அண்ட ஆற்றலை பெறும் வழியினை அறியாது இருக்கின்றான்.. அதற்கு காரணம் தோன்றும் நிலையிலே சிக்குண்ட களங்கப் பட்ட சந்திர கலையாகிய மனம்.. சூரிய நிலையில் முழுமையாக தோன்றாநிலையை அனுபவப் படும் போது, களங்கப் பட்ட கலைகள் நிறைந்த மனம் முழுமையான மதி (பௌர்ணமி) ஆகிறது.. அது மீண்டும் தேய்பிறையோ வளர்பிறையோ ஆகாமல் என்றென்றும் மதியாகவே விளங்குகிறது.. இப்படி மதியில் நிலைகொள்ளும் ஒரு அற்புத கனல் வழியில் வாழ்க்கை நடத்திய தமிழ் இனம் அன்று எல்லா நிலைகளிலும் சிறப்புற்று இருந்தது.. அந்த நிலையை, இன்றைய தோன்றும் நிலைகளை மையப் படுத்தி இயங்கும் மதங்களும் மார்க்கங்களும் முழுமையாக அழித்து விட்டது..

மீண்டும் தமிழ்நெறி உருவாகி வல்லவன் ஆக வேண்டும் என்றால் தோன்றாநிலையை அனுபவப் பட்டு அளவற்ற அண்ட ஆற்றலை பெற்றால் மட்டுமே முடியும்.. இதில் எந்த நுணுக்கங்களும் நுட்பங்களும் இல்லை.. அவை எல்லாம் தோன்றும் நிலைக்கே உரியது.. எந்த சடங்குகளும் சாத்திரங்களும் நியதிகளும் கட்டுப் பாடுகளும் முழுமையாக இல்லாத நிலையில் அகப்படும் இந்த தோன்றா நிலையை, உணர மட்டுமே முடியும்.. உணர்விலே உட்புகுந்து, தோன்றா நிலையிலே மையம் கொண்டு, தன்னில் தானாய் நிலைகொண்டு மதி நிறைந்த வாழ்வு வாழவே, அன்றைய தமிழ் நெறி உணர்த்தியது.. அதை நோக்கிய பயணத்தை நாம் உணர்ந்து விரைவு படுத்துவோமாக..

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பது 
*********************************************************************
மி என்ற மிசையின் உயரிய சிறப்பு
தமிழ் என்பதில் தன்மை என்ற த கர உயிர் மெய் எழுத்தின் சிறப்பை பார்த்தோம்.. அடுத்து மி என்ற இரண்டாம் எழுத்தின் சிறப்பை பார்க்கலாம்.. த என்பது தடி நிலையான உலகியல் இயக்கத்திற்கு உதவும் உடலை குறிக்கும்.. மி என்பது நுண் உடலாகிய சூட்சம தேகத்தை குறிக்கும்.. மின்சாரம் என்பதே நுண் ஆற்றல் ஆகும்.. அந்த மி என்ற நுண் ஆற்றலோடு இசைந்து வாழ்வதையே குறிப்பால் மி என்றனர்.. ஏறா நிலை மிசை அருட்பெரும்சோதி என்னை ஏற்றி வைத்தது என புகழ் பாடினார் வள்ளலார்... அந்த அருட்பெரும் சோதி அகப்படும் இடம் தான் மனம் சீண்ட முடியாத நிலையாகிய தோன்றாநிலை... அந்த தோன்றா நிலையில் நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் தகுதி யாருக்கு உண்டு என்றால் அந்த தோன்றாநிலை என்ற வலுவான கோட்டைகுள்ளே அரசாட்சி செய்யும் அரியாணையில் அமர்ந்துஇருக்கும் வேந்தன் அகநானாகிய அககுருவுக்கு மட்டுமே உண்டு..

ஆகவே தான் நாம் முதலில் தோன்றாநிலையை அனுபவப் பட்டு அதில் வலு அடைந்து அதில் நிலை கொண்டு பின் அகநான் மூலமாக மி என்ற நுண் ஆற்றல் மூலம் இசைந்து வாழ முனைகின்றோம்... எப்படி நாம் உடன்பாட்டு சுவாசத்தின் மூலம் இசைந்து இருந்து தோன்றா நிலையினை கை கொண்டோமோ அதே போல் நாம் தோன்றா நிலைகுள்ளே நுண் ஆற்றலாகிய சூட்சம சக்தியோடு இசைந்து உடன் பட்டு நுண் ஆற்றலை அகநானால் கைகொள்கிறோம்... நாம் அகநானாய் மாறிய உடன் மிசை நிலையை அதாவது நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் 
பயிற்சியினை தொடங்க உள்ளோம்.. நுண் ஆற்றலோடு இசைந்து வாழும் தகுதி, தன்மை நிலை அடைந்த அகநானுக்கு மட்டுமே உள்ளதால் அகநான் உணர்வு பெற, முழு மூச்சோடு தோன்றா நிலை அனுபவத்திற்கு உள்ளே உணர்வு அனுபவத்தை பெற ஆவன செய்திட வேண்டும்...

சித் என்றால் விளக்கம்.. விளங்க வைக்கும் சக்தி என்றும் பொருள் கொள்ளலாம்.. தடி பொருளாகிய தேகத்தை உடலை விளங்க வைக்கும் சக்தி சித் ஆகிய நுண் ஆற்றலாகும்.. அந்த நுண் ஆற்றலோடு இசைந்து வாழ்பவர்களையே சித் 
நிலை அறிந்த சித்தர்கள்.. அதற்கும் மேலே ஆதி ஆற்றலாகியாகிய சத்தோடு கூடி இருக்கும் சத்தர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் வல்ல நிறைநிலை மனிதர்களாக உள்ளனர்.. நம் இன்றைய நிலையில் நுண் ஆற்றலோடு இசைந்து சித்தர்கள் ஆக முனைவோமாக...

ஏன் நாம் நுண் ஆற்றலோடு இசைந்து வாழ முனைய வேண்டும்.. நமக்கு இருக்கும் நுண் ஆற்றல் சக்தி விதிக்கப் பட்ட நிலையில் உள்ளது.. விதிக்கப் பட்ட எதுவும் நிலைப்பதில்லை.. அதிகப் பட்ட நுண் ஆற்றல் பெற்று நம் நிலையை நன்கு விளங்கிட செய்ய ஏற்றம் பெற நாம் நுண் உடல் ஆற்றலோடு இசைந்து வாழ்ந்து அதை வேண்டிய அளவு பெற, கைகொள்ள வேண்டும்... பரு உடலாகிய தூல தேகத்தில் வரும் நோய்கள், முதுமை, எல்லாம் நுண் ஆற்றல் குறைபாடே.. மிக உயர்வாக கருதப்படும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம் சமாதியில் முடிந்து விடுகிறது.. அதாவது தமிழின் முதல் நிலையாம் தன்மையில் முடிந்து விடுகிறது... ஆனால் அதற்கு மேலே பன் மடங்கு உயர் நிலைக்கு 
சென்றது நம் தமிழ் ஓகம் என்ற யோகமே..

நமது திட உடல் எடையை, அதை இயக்கும் நுண் ஆற்றல் தாங்கும் எடையால் வகுத்தால், அது தற்போது 100 லிருந்து 200 வரை இருக்கும்.. இது நுண் ஆற்றல் இசைந்து வாழும் பயிற்சியால் சிறுக சிறுக குறைந்து, இரண்டும் சம நிலைக்கு 
வரும் போது, மனிதன் நீரின் மேலே நடக்கும் அளவிற்கு மென்மை அடைகிறான்.. வன்மையால் முதுமையும், மென்மையால் இளமையும் வருகிறது.. இந்த இளமை குழந்தையின் இளமையை காட்டிலும் பன் மடங்கு உயர்ந்து 
இருக்கும்...

ஆகவே இதுவரை மலைஏறும் பயிற்சியிலும் மற்றும் உடன்பாட்டு சுவாசத்திலும் சுவாச ஒழுங்கிலும் பயின்ற அன்பர்கள் தங்கள் பயிற்சியில் பின் தங்கி இருந்தால் சற்று கவனமாக தீவிரமாக பயின்று, நுண் ஆற்றலோடு இசைந்து இருக்கும் 
மிசை நிலை பயிற்சிக்கு தங்களை இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஆயத்தப் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஒன்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஒன்பது ( 20-11-15 )
*************************************************************************************************
வண்ணத்துப் பூச்சியின் கனல் வீரம்
அருவருக்கத் தக்க வடிவம் தாங்கிய கம்பளி புழுவை நாம் பார்த்து இருக்கின்றோம்,,, அதனை கருணை வடிவான கடவுள் கூட விரும்ப மாட்டார் என்று எண்ணும் அளவிற்கு அதன் தோற்றம்... நகர்ந்து நகர்ந்து அது சென்று ஒவ்வொரு இலையை தின்று தன் பசியை போக்கிக் கொள்ளும்.. ஒரு நாள் எல்லாம் அது நகர்ந்தாலும் அது ஒரு மீட்டர் தூரம் மட்டுமே நகர முடியும்... உரோம கால்கள் ஆயிரத்திற்கு மேலேயாம்.. அத்தனை கால்களை பயன் படுத்தினால் தான் அது நகர முடியும்... இரவும் பகலும் இலைகளை தின்று தின்று வாழும் கம்பளி புழு போல் வாழும் உயிர் வகைகள் மிக மிக குறைவே... ஆனாலும் அது தன்னை மாற்றி கொள்ள முடிவு எடுக்கிறது.. தன் தோற்றத்திலிருந்து விடுப்பட்டு ஒரு புதிய தோற்றத்திற்கு வர வேண்டும் என விரும்பியதால் என்னவோ, அதை தன்னை சுற்றி ஒரு கூடு ஒன்றை அமைத்துக் கொண்டு உலக உறவுகளை துறந்து இருக்கிறது.. இப்படி உலக உறவுகளை துறந்து தனி மனிதனாய் எத்தனையோ மனிதர்கள் நடைபிணமாய் இருந்தார்கள்.. இனி இருப்பார்கள்.. அப்படி இருப்பதால் ஒரு பலனும் இல்லை.. அவர்களை செத்தாரை போல் உள்ளவர்கள் கணக்கில் சேர்க்கப் படும்.... அப்படியான துறவுக்கு முன் எப்படி இருந்தார்களோ, அப்படியே பல வருடங்கள் ஆனாலும் இருப்பார்கள்..

ஆனால் கூண்டு புழுவாய் இருந்த அந்த கம்பளி புழு ஒரு மகா தமிழ் சித்தன் செய்த யோகப் பயிற்சியை செய்கிறது... அது அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ்கிறது.. ஆம் இசைபட வாழ்தல் என்பது தமிழின் இடைபட்ட பகுதி.. இயல் இசை நாடகம் என்பதில் இடை நிலை... ஆனால் இந்த இசைபட வாழ்வதற்கு பணிவு என்ற மிக பெரிய குணம் தேவைப் படுகிறது.. பணிவு என்பது தமிழோடு கலந்த ஒன்று... நமது நாயன்மார்களின் ஆழ்வார்களின் பணிவு மிகவும் பிரமிப்பு தரக்கூடியது.... ஆனால் அந்த பணிவோடு சிறுக சிறுக வீரம் கலவாத, மறந்த ஒரு நிலையால் தான், தமிழ் நிலை தாழ்ந்தது... வீரம் என்பது பிறரோடு கொள்ளும் உறவை மையம் வைத்தே இன்றைய நிலையில் கருதப் படுகிறது.. ஆனால் தன்னில் தானாய் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்ள அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ உலக சார்புகளை துறந்து ஒரு வீர துறவு கொள்ளும் நிலையைதான் பண்டைய நிலையில் கருதப் பட்டது...

தன்னுடைய இயல் நிலையை மாற்றிக் கொள்ள வீர துறவு கொண்டு அண்ட ஆற்றலோடு இசைந்து வாழ தன்னில் தானாய் இருக்கும் நிலையை தான் தமிழில் தன்மை என்றனர்.. தன்மை என்பது தன்னில் மையம் கொண்ட நிலை ஆகும்... தன்மையாக பேசவும் நடக்கவும் பழகவும் எதுவும் செய்யவும், தன்னில் மையம் கொண்டவர்களுக்கே சாத்தியமாகும்... தன்னில் மையம் கொண்டவர்கள் தன்னை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டவர்கள்.. அப்படிபட்டவர்களுக்கு மட்டுமே மற்றவர்களையும் உணரும் வல்லமையும் இருக்கும்... தன்னில் மையம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களோடு தன்மையாக நடக்க இயலும்... அப்படி பட்ட உயர்ந்த நிலையான தன்மையின் முதல் எழுத்து தான் தமிழ் என்பதின் முதல் எழுத்து...

தன்மை அடையாதவர்கள் தமிழ் நிலையை ஒரு போதும் அடைய முடியாது... பணிவும் வீரமும் இரு கண்களாய், நினைந்து இசைந்து வாழும் முழுமையான பண்பைதான் த என்ற தமிழின் முதல் எழுத்து... தன்மையில் கூண்டுக்குள் புகுந்த கம்பளி புழு தன் வீரத்தாலும் தன்மையாலும் அண்ட ஆற்றலோடு கனல் பெருக்கத்தில் இசைந்து வாழும் பணிவாலும், அழகிய வண்ணத்துப் பூச்சியாய் தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு புற உலகில் அனைவரும் கவரும் விதமாக புது பிறவியாய் வெளி வருகிறது... நாமும் தன்மையும் வீரமும் கொண்டு புது பிறவி ஒன்றை தமிழின் முதல் எழுத்தான தன்மையில் அடைவோமாக.. தன்மை அககுரு அகநான் என்பது எல்லாம் ஒரே பொருளையே குறிக்கும்... அகநானாய் மாறி அகநானாக செயல் படுவது என்பது தன்மையாய் மாறி தன்மையாய் செயல் படுவதாகும்.. தன்மையால் எந்த செயலும் சித்தி பெறும் என்பது திண்ணம்... எழுதலுக்கும் எழுத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.. தன்மையில் புத்தம் புது பிறவி ஒன்றில் எழுவோமாக.. அடுத்து தமிழின் அடுத்த நிலையாகிய மி என்ற நிலையையும் ழ் என்ற நிலையையும் அடுத்த பதிவுகளில் காண்போமாக....

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி எட்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி எட்டு
*******************************************************************************
தமிழே உலகை காக்க வல்லது
தமிழாய் இருந்தால் தரணி ஆளும் தகுதி கிடைக்கும்... பண்டை காலத்தில் தமிழ் ஓகநெறியிலே தமிழ் இனம் ஓங்கி இருந்த நிலையிலே தரம் திடம் திரம் இவற்றில் முன்னணியில் இருந்ததாலும் தெய்வீகம் நிறைந்து ஒரே கடவுள் என்ற அசைக்க முடியாத தத்துவத்தில் அருள் சோதி என்ற முகமையான இறை தத்துவத்தில் மட்டுமே நின்று ஓர்மை மற்றும் ஒருமையில் மேன்பட்டு எல்லாவற்றிலும் கலை இலக்கியம் ஆளுமையில் எல்லா இனத்தை விட தேர்ந்த நிலையில் இருந்தனர்... நெஞ்சில் வெள்ளை உள்ளத்தோடு பண்போடு, அன்பு பொங்க இருந்ததால் தமிழகத்தில் வந்தாரை எல்லாம் வாழ வைத்தனர்.. செழிப்பிலே, வந்தாரில் வஞ்சக கூட்டம் இருப்பதை தமிழன் மறந்தது தான் தமிழன் செய்த மிகப் பெரும் தவறு... வஞ்சக கூட்டம் முதலில் தமிழனின் ஒரே கடவுளை பிரித்தது... மூன்றாக ஆக்கியது.. பின் பலவாக ஆக்கியது..... தமிழனின் ஒருமை நிலையையும் ஓர்மை நிலையை சிதைத்தது.. அண்ட ஆற்றலில் மட்டுமே அருள் நிலையாய் பயின்று வந்த தமிழ் இனம் ஓர்மையும் ஒருமையும் இழந்தது.. ஓர்மையும் ஒருமையும் கூடி விழிப்பு நிலையில் கனல் பக்கம் சாய்ந்து கனல் ஓகக் கலையை தன் உயிர் மூச்சாய் பழகி வந்த தமிழன் பல் நிலை கடவுள் நிலைகளால் அவன் மனம் சிதைந்து வெளிச்சம் பக்கம் வெகுவாக சாய்ந்து, சோதிடம் போன்ற வேண்டாத கலைகளில் சாய்ந்து மனம் அளவில் சிதைந்து போனான்.. தன் தரம் திடம் திரத்தில் குறைவு பட்டான்.. சிறுக சிறுக வஞ்ச கூட்டத்தால் அடிமை ஆக்கப் பட்டான்.. வட இந்திய மத வழிகள் பல வகை கோணத்தில் புகுந்து தமிழனின் ஓர்மையும் ஒருமையும் முற்றிலும் பாழாக்கி அவனை சவநிலைக்கு ஆளாக்கி விட்டது... தமிழ் மொழியை சிதைக்க வஞ்சகம் கொண்டோர் வட இந்திய மொழி வார்த்தைகளை பெரும் அளவில் புகுத்தி தமிழ் மொழியின் தரத்தை வெகுவாக தாழ்த்தி விட்டு கெடுத்து விட்டனர்...

தமிழை காப்பாற்ற வெளி நாட்டை சேர்ந்த மறைமலை அடிகள் செய்த தொண்டு கூட தமிழ் இனம் தமிழுக்கு செய்ய மறந்து விட்டது... விழித்துக் கொண்ட தமிழ் அறிஞர்கள் சற்று தாமதமாக விழித்ததால் அதற்குள் தமிழின் உயிரோட்டம் முக்கால் பங்கு முடங்கி போய் விட்டது.. இன்றைய சூழ்நிலையில் சற்று தூய தமிழில் பேசினாலே மற்றவர்களால் ஏறிட்டு கேவலமாய் பார்க்கும் அளவிற்கு தமிழ் மொழியின் மேல் உள்ள மதிப்பு தாழ்ந்து போய் விட்டது... பண்டை காலத்தில் ஒருமை உணர்வு வளர்த்த பண்புக்கு ஏற்ற தமிழ் மொழியின் நடை வள்ளுவனின் திருக்குறள் போல் அன்று இயல்பாக இருந்தது.. திரிந்து மாறி போன இன்றைய தமிழ் அந்த வள்ளுவன் தமிழை புரிந்து கொள்ள முடியாமல் இன்று எத்தனை விரிவுரை நூல்கள் வந்தும் இன்னும் சரியாக புரியாமல் உள்ளது..

அப்படி திரிந்து போன தமிழ் மொழியால் ஓர்மையும் ஒருமையும் வளர்க்கும் தமிழ் ஓகக் கலையை சரிவர சுட்டிக் காட்ட முடியாமல் தவிக்கிறது... சமஸ்கிருதத்தின் கலப்பு தமிழில் 60 விழுக்காடுகளை தாண்டி விட்டது... ஆங்கிலம் 10 விழுக்காடுகளை தாண்டி விட்டது... 30 விழுக்காடுகள் மட்டுமே தமிழ் தமிழாக உள்ளது... தமிழுக்கு வந்த கேடு தமிழ் ஓகக் கலைக்கு வந்த கேடு.. அதனால் மனிதனின் மனதின் ஒருமை கெட்டு, தமிழன் மட்டும் பாதிக்கப் படவில்லை.... உலக மனித இனமே ஒருமை சீர் கேட்டால் பாதிப்பு அடைந்து இன்று மனித குலமே அழிந்து விடுமோ என்ற அச்சம் உலகை கவ்விக் கொண்டு இருக்கிறது.. உலகை காக்க தமிழ் மொழியின் வளமும் அதனால் தமிழ் ஓகக் கலை சுட்டி காட்டப் பட, எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் ஒருமை, ஓர்மை நிலை ஓங்க தமிழ் மொழி தமிழர்களால் மட்டும் அல்லாமல் உலகத்தாரால் காக்கப் பட வேண்டிய அவசியம் ஆகிறது.. தமிழ் மொழியின் மூலம் மட்டுமே உலகத்திற்கு விடிவு.. வேறு எந்த மதத்தாலும் மார்க்கத்தாலும் உலகை காக்க முடியவே முடியாது என்பது திண்ணம்.. இதை படித்து விட்டு சிரிப்பவர்கள் முகம் சுழிப்பவர்கள், நம்பாதவர்கள் இருக்கலாம்.. ஆனால் உண்மையை விழிப்பு நிலையாளர் மட்டுமே உணர முடியும்... காரணம் ஒருமையை தர வல்ல கனல் உணர்வு தமிழ் ஒன்று மட்டுமே தர முடியும்.. கனல் பெருக்க நிலை போன்ற ஒன்றை இதுவரை தமிழை தவிர வேறு மதமும் மார்க்கமும் இதுவரை தரவில்லை... சிவகலப்பு என்ற நெறியை உலகில் எதுவும் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை... தமிழ் வாழ்க வளர்க என உலகத்தாராலால் போற்றப் பட்டால் தான் இனி உலகம் காப்பாற்றப் படும்...

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஏழு

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஏழு
****************************************************** ***********************
ஒரு அன்பரின் முகமையான கேள்வி:---
 ஐயா,சரியையில் ஞானம் என்ற நிலையை அடையாளம் காணும் போது , ஏன் கதி சுவாசம் ,கனல்,கரு சுவாசம் என்ற 2,3,4 நிலை தேவைபடுகிறது? அதாவது 16 நிலையில் முதல் 4 நிலையில் ஞானம் உணர படும் போது ஏன் மற்ற 12 நிலை தேவைபடுகிறது??

முதலில் ஞானம் என்பது தெளிவு என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்... தெளிவு என்பது மாசு களங்கம், களிம்பு அற்ற நிலையாகும்.. மாசு என்ற அழுக்கு படிவதால் குற்றங்கள் ஏற்படுகின்றன.. அதனால் துயரங்கள் தொடருகின்றன.. மனிதனுடைய முடிவான பயணமே துயரங்கள் அற்ற ஒரு நிலை.. துயரங்கள் இல்லையேல் எஞ்சி நிற்பது இன்பம் ஒன்றே... அதுவே நம் இயல் நிலை என்பது வியப்பான ஒன்று.. இயல்பிலே இன்பமாய் இருக்க வேண்டிய நாம், நம்மை மாசு சூழ்ந்து உள்ளதால் துயரம் படுகிறோம்.. காரியப் பட்ட அந்த துயரத்தை நீக்க பாடு படும் போது துயரத்திற்கு மேல் துயரம் அடைகிறோம்.. மனித குலம் காரணமாக இருக்கின்ற மாசு நீக்கி துயரை துடைக்க விரும்புவதில்லை... எதை ஒன்றை செய்தால் எதையும் செய்ய முடியுமோ அந்த மூல காரணமான ஒன்றை செய்து துயரை முழுமையாக என்றென்றும் வராத நிலைக்கு முயற்சி செய்வதில்லை.. காரணம் அவனுடைய தெளிவற்ற, மட, அஞ்ஞான நிலை.. தெளிவு நிலையே, முழுமையான மூல அடிநிலை காரணத்தை பிடிக்கக் கூடியது... மறைந்துள்ள அதனை மர்மமான மறை நிலையில் நீக்கும் போது, காணும் நிலையில் உள்ள காரியப் பட்ட துயரம் காணாமல் போய் விடுகிறது.. ஞானமாகிய தெளிவு கண்ணுக்கு தெரியாது.. தெரியாத மர்மமான தெளிவு நிலையை அணுக இருட்டிலே பயிற்சி செய்ய வேண்டிய முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது... ஆனால் அந்த இருட்டுக்கு, எதுவும் தோன்றா நிலைக்கு ஒரு அதிபதி இருக்கிறான்.. அவன் உறவு கொண்டுதான் இருட்டிலே பயில வேண்டும்.. இல்லையேல் எல்லாம் தவறு தவறாக போய் விடும்.. அந்த அதிபதி தான் விழிப்பு நிலை...

காரணத்தை கலைக்காமல் நீக்காமல் காரியப்பட்டதில் கவனம் வைத்து செய்யப்படும் அனைத்தும் வீணே.. கொஞ்சம் தற்காலிக நிவாரணம் குணம் தரலாம்.. ஆனால் அதில் மீண்டும் மீண்டும் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்... மர்ம யோகம் ஒன்றே மறைந்த நிலையில், மறைந்த நிலையில் இருக்கும் காரணத்தோடு தொடர்பு கொண்டு, இருட்டு நிலை மர்ம நிலை நாயகன் --விழிப்பு நிலை--- துணையோடு காரணத்தை அடியோடு நீக்கி காரியப் பட்ட துயரத்தை முழுமையாக துடைத்து எறியக் கூடியது... அந்த விழிப்பு நிலையாளன் ஒருவனே தெளிவை தரக்கூடிய வல்லமை உடையவன்...

பல பிறவிகளின் விளைவாக மாசு என்ற குற்றங்களால் சூழப்பட்ட நாம் குழந்தை நிலை, சிறுவன் நிலை,வாலிபன் நிலை, வயோதிக நிலை குற்றங்களாக அவைகளை பிரித்து ஒவ்வொன்றாக கலைய வேண்டியதிருக்கிறது.. அதே போல் சரியை என்ற இயல் நிலை, கிரியை என்ற செயல் நிலை, யோகம் என்ற மாற்றம் தரும் நிலை, முடிவாக ஞானம் அல்லது தெளிவு என்ற பயன் தூய்ப்பு ( அனுபவ நிலை ) நிலை ஆகிய நான்கு நிலைகளில் தெளிவு நிலை படிப்படியாக உயர்ந்து முடிவான மகா காரணத்தை தெளிவு படுத்தும் முழு தெளிவு நிலையான அருள்நிலை தெளிவுக்கு வருகிறோம்.. அந்த தெளிவு தான் எதை அறிந்தால் எல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அந்த மகா காரணத் தெளிவு.. 
ஞானம் என்றால் எல்லோரும் அந்த முடிவான முழு தெளிவாகிய மகா காரண தெளிவை தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. படி நிலை தெளிவு, சிந்தனைக்கு வருவதே இல்லை.. அந்த முழு தெளிவில் சிக்குண்ட நிலையால் தான் மேலே சொன்ன கேள்வி ஒவ்வொரிடத்திலும் எழுகிறது..

படி நிலை தெளிவு பெற்று முடிவான அருள் நிலை தெளிவு, விழிப்பு நிலையால் பெறவே, அதற்கு ஏற்ற பயிற்சிகள் அந்த அந்த நிலைக்கு ஏற்றால் போல் வகுக்கப் பட்டு, பயிற்சிகளும் வசதிக்காக ( !!!?? ) 16 வகைகளாக பிரிக்கப் பட்டு தெளிவாக பயில வேண்டிய திருக்கின்றது.. பயிற்சியிலும் தெளிவு இல்லையேல் குழப்பத்தால் மாசு நீக்கும் நெறி மிகவும் தாமதமாகும்.. எதையும் தாண்டி செல்லாது ஒன்றன் பின் ஒன்றாக பயின்று தெளிந்து ( !!! ) பின் தேறி படி படியாக விரைவோமாக.. தேறான் தெளிவு வள்ளுவர் வாக்குபடி பயன் தராது... முடிவான அருள் நிலை தெளிவுதான் நிறை நிலை மனிதனுடைய தெளிவு.. எதை செய்தால் எல்லாம் செய்ய இயலுமோ அதை செய்யும் தெளிவு அவனுக்கு மட்டுமே அவனுடைய முழு தெளிவான அருள் தெளிவில் தெரியும்... கரு சுவாசம் என்பது அருள் நிலை தெளிவுக்கு அழைத்துச் செல்வது.. அது கரு பையில் புகாமலே பிறக்கும் நிலை.. குணங்குடி மஸ்தான் போல்,மூன்றே நாளில் உயிர் பெற்ற நிலை.. செத்தாரை எழுப்பும் நிலை.. அதே சமயத்தில் தேகத்தை எரிக்கப் படாமல் அருள் கலப்பில் வள்ளலாரை போல் கலக்கும் நிலை.. மரணமிலா பெருவாழ்வு நிலை.. அருள் தெளிவுக்கு அதாவது பூரண ஞான நிலைக்கு பயணப் பட்டு நிறை நிலை மனிதனாக முனைவோமாக...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஆறு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஆறு 
********************************************************** ********************* 
மனதிற்கு நித்திய சுகம், நித்திய வாழ்வு, என்றுமே சாத்தியமாகாது
ஒவ்வொரு மனிதனும் தன்னை சூழ்ந்தவர்கள் பலர் இறந்து போகின்றதை கண்டும், தான் மட்டுமே என்றும் உயிரோடு இருப்பதாக கனவு காண்பது தான் உலகில் மிக பெரிய அதிசயமென எமதர்மர் வெளிப்படுத்துகிறார்.. அப்படி, என்றும் உயிரோடு இருப்போம் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது விழிப்பு நிலையாளர்களுக்கு மட்டுமே விளங்கும்... வெளிச்சத்திற்கு பலியாகும் மனித மனம் எந்த நிலையிலும், நிரந்தர சுகம் என்று எதையும் தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது... ஒன்று நிரந்தர சுகம் என்று ஒன்றை பாடுபட்டு பெற்றுக் கொண்டாலும் அவன் மன நிலையில் அந்த சுகம் விரைவில் மங்கி அதன் கலை விரைவில் இழந்து போய் விடும்.. பின் மறு படியும் அதிக சுகம் தரும் ஒன்றை நாடி செல்ல வேண்டியது தான்... இப்படியே மனிதன் வெளிச்சத்தில் பலியான மனதால் தேடுதலை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.. தேடுதலை நீடித்துக் கொண்டே இருக்கும் மனிதன், முடிவாக ஒரு நாளும் அமைதியாக உட்கார்ந்து தன்னை பற்றி சிந்திக்கவே முடியாது.. தன்னை சிந்திக்க நேரம் கிடைக்காதவன் தன் தேகத்தையும் இழக்கும் நிலையிலும் நித்திய சுகம் தரும் சுவர்க்கம் என்ற எதிர்பார்ப்போடு மரணத்தை எதிர் கொள்கிறான்... அது ஒரு நாளும் வாய்க்கப் போவது இல்லை.. அது வாய்த்தாலும் சிறிது காலத்திற்குள்ளேயே பழமையாக்கி அதனுடைய நித்திய தன்மையை இவனே தனக்கு தானே இழக்கச் செய்து, மீண்டும் ஒரு நித்தியத்தை தேடி அலைவான்.. அதனால் தான் பல வருடங்கள் தவம் செய்து, கடவுள் நேரடி காட்சி கிடைத்தாலும், சிறிது காலத்திலேயே அந்த கடவுளே அவனுக்கு பழமையாகி, அவன் மீண்டும் அந்த கடவுளிடமே உன் கடவுள் யார் அவரை காண்பிப்பாய் என கேட்பான்... அவன் செய்த பல வருடங்கள் செய்த தவம் இதனால் வீணாய் போவது நிச்சயம்.. மனம் ஆதிக்கம் படைத்த மனிதனுக்கு நிச்சயமற்ற அநித்தியமான ஒன்றே நிச்சயமான, நித்தியமான ஒன்றாய் உள்ளது...

மேற் கூறிய கருத்திலிருந்து முக்கியமாக அறிந்து கொள்ளக்கூடிய செய்தி என்னவென்றால், மனிதன் தான் பெரும்பாடு பட்டு பெற்ற அனைத்தையும் தன் மன அளவில் பழமையாக்கி அதனை செயல் இழக்கச் செய்து, நடை பிணமாக்கி அதனை காட்சி பொருளாய் ஒரு நாள் மலரும் நினைவுக்கு பயன் படுத்த அதனை வீட்டில் தனி அறையில் அடைத்து வைப்பான்.. இப்படி அடைத்து வைத்து வைத்து ஒரு நாள் தான் இருக்க, உட்கார, ஏன் நகரவே, தான் கட்டிய வீட்டிலேயே இடம் தேடுவான்.. அப்படி ஒரு அவல நிலையை பல மனிதர்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்... எதை ஒன்றை நித்தியம் என்று தேடி அலைந்து பெற்றானோ அந்த ஒன்றே அவனுக்கு அநித்தியத்தை உடனே மனதளவில் தருகிறது என்பதை அறியாது இருக்கின்றான்.. இதில் மனதளவில் என்ற சொல் ஆயிரம் அர்த்தங்களை சொல்லுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

அப்படியானால் மனம் படைத்த மனிதனின் செயல் பாடுகள் அனைத்தும் வீணா என்ற கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான்... அது வீண் தான் என்பது... பஞ்ச பூதங்களில் ஒன்றான மனதை வெட்டி போட்டு விடலாமா ? என்ற கேள்வி எழலாம்.. மனம் என்ற பூதம் இல்லையென்றால் அருவ உருவ நிலையான பூதங்கள் பிளவு பட்டு சமச்சீர் பஞ்ச பூத ஒருமைபாடு காணாமல் போய் எல்லாமே முடங்கி போய் விடும்.. இங்கே நாம் குறிப்பிடுவது எல்லாம் வெளிச்சத்திற்கு பலியான மனதை தான்.. அதே மனம் கனலை நாடி கனலுக்கு செல்லும் போது, எல்லாமே தலைகீழாக மாறுகிறது.. நரகம் சொர்க்கம் ஆகிறது.. அநித்தியம் நித்தியம் ஆகிறது.. வெளிச்சத்தில் பலியான மனிதன் கனலில் பதவியை அடைகிறான்.. அதாவது உயர்ந்த இறைநிலையை அடைகிறான்.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று கிடைக்கப் பெற்று முழுமையான நிறைவினை மனிதன் பெற முடியும்... அதனால் தேடுதல்கள் நிறுத்தப் படுகின்றன... நித்திய சுக வாழ்வு தானாகவே வந்து சேருகின்றது...

ஆனால் மனிதர்களை பலி இடுவதற்கென்றே வெளிச்சத்தை திட்டமிட்டு பரப்பி உலகை கொலை களமாக்கி கோடிக்கணக்கில் உயிர் கொலை செய்து தானும் கொலை செய்யப்பட்டு மடிந்து போகிற மனித குலம் விடிவை பார்க்க வேண்டும் என்றால் மனித மனம் கனலுக்கு வர வேண்டும்... வெளிச்சம் என்ற கவர்ச்சி பஞ்ச பூத சமச்சீர் ஒருமை பாட்டை உடைக்க முயற்ச்சி செய்யும்.. ஆனால் கனல் அதனை பலப் படுத்தவே முயலும்..

போர் என்ற சொல்லுக்கு இரண்டு விளக்கம் உள்ளது.. புற உலக வழக்கில் அது சண்டை எனப்படும்.. அக உலக உள் விளக்கத்தில் அது பஞ்ச பூத சமச்சீர் ஒருமை பாட்டை குறிக்கும்.. போர் என்பதை பிரித்தால் ப் + ஓர் என பிரிந்து உயிர் (ப்) ஒருமைபட்ட ( ஓர் ) நிலையை குறிக்கும்.. பாரதம் என்ற சொல்லை பிரித்தால் ப் + ஆரதம் என பிரிந்து உயிரை ஆராதிக்கின்ற, போற்றுகின்ற, செயல் பாட்டினை குறிக்கும்.. பாரத போர் எனப் படுவது உயிரை போற்றி காக்கின்ற பஞ்சபூத சமசீர் ஒருமைப் பாடு என பொருள்..

உண்மை என்னவென்றால் கனல் உணர்விலே எழுதப் பட்ட அக நிலை மகா பாரதம், வெளிச்சத்திலே திரிந்து போய், புற நிலை மகா பாரதமாய் பழுதாகி விட்டது.. மிக வலிமை வாய்ந்த 100 சகோதரர்களும் பீஷ்மர் துரோச்சாரியார் கர்ணன் போன்ற மிக மிக வல்லமை வாய்ந்தவர்களையும் கொண்ட கௌரவப் படையை, கனல் வடிவான அகநான் வடிவான, ஆயுத தாங்காத கண்ணன் தலைமையில் பஞ்சபாண்டவர்கள் வென்றார்கள் என்றால் அந்த வெற்றி முழுக்க முழுக்க கண்ணனையே சாரும்... அதே போல் ஆயிரம் ஆயிரம் வலுவான வடிவ எண்ண ஆதிக்கங்களை கொண்ட, வெளிச்சத்திற்கு பலியான வலுவான மனம் இருந்தாலும், எந்த வடிவம் தாங்காத ( ஆயுதம் ஏந்தாத ) தோன்றா நிலையில் இருக்கும் அகநானிடம் மனம் தோற்று போவது நிச்சயம்... கனல் வழி சென்று அக பாரத போர் புரிந்து நிறை நிலை மனித நிலைக்கு உயருவோமாக...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஐந்து

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஐந்து
*********************************************************************************
நமது தமிழ் தீபாவளி
அருளே எங்கும் நிறைந்து நீக்கமற உள்ளது.. அதுவே அண்ட ஆற்றலாய் உள்ளது.. அது எங்கும் நிறைந்து இருக்கும் தன்மையை வெளிபடுத்த முனைகிறது.. அந்த முனைப்பே அறிவாகிறது... அந்த அறிவே ஒரு இனம் தெரியாத தவிப்பு ஆகி தன்னை வெளிபடுத்த தன் அணு துகள்களை ஒன்று கூட்டு அணுவாய், அணு கூட்டாய் மாறி உலகில் எண்ணிக்கையில்லா வடிவங்கள் தோன்றி இயற்கையாய் பரிணாமம் பெறுகிறது... அப்படி வடிவம் எடுத்த பொருள்களில் வடிவம் ஆகாத அருள் ஆற்றல் சிக்கி கொண்டால், அப்படி சிக்கி கொண்ட அருளின் அறிவு, இரண்டு வகைகளில் வேலை செய்கிறது.. ஒன்று அந்த அருள் அறிவு தன் மூலமான பேரறிவுக்கு செல்ல முனைகிறது.. இல்லாவிட்டால் வடிவமாக மாறி சடமாக மாற முனைகிறது.. அப்படி சிக்கி கொண்ட அருள் அறிவே உயிர் எனப் படுகிறது.. ஒவ்வொரு உயிரும் தாய் நிலையில் கருவில் ஒரு வடிவத்தை ஏற்படுத்தும் போது அதில் சிக்கி கொண்ட அருள் ஆற்றலையும் சேர்ந்தே வளருகிறது... அந்த அறிவே உயிராய் மலர்ந்து உலகில் நடமாடுகிறது...

அந்த அறிவு கீழ் நோக்கிய இறுக்கமான முதிர்ந்த ஒடுங்கிய நிலையாகிய வடிவத்தை நோக்கி நகர்ந்தால் அது மனம் எனப்படும்.. அதே அறிவு தன் மூல ஆற்றலை நோக்கி நகர தொடங்கி விட்டால் அது தான் புத்தி, அல்லது விழிப்பு எனப்படும்.. ஆனால் அந்த அறிவு கீழ் நோக்கிய பாதையையே தேர்ந்தெடுக்க விரும்பும்.. காரணம் ஒடுங்கி குறுகி சோம்பி போவது என்பது மிக சுலபம்.. ஓங்கி நீண்டு எழுந்து இயக்கத்திற்கு வருவது மிகவும் கடினம்... சுற்றி உள்ள இறுகி போன வடிவங்களில் சிக்கி உள்ள அருள் ஆற்றல், தான் நினைத்தால், மனதாய் மாறி விட்ட அறிவு விழிப்பு நிலையாய் மாற முடியும்.. சிக்குண்ட தன் தற்போதைய நிலை தேவையற்ற நிலையென உணர வேண்டும்... வடிவத்தில் சிக்குண்ட மனமான அந்த அறிவு அகண்ட விரிவான பெருவெளியே தன் இயல் நிலையென அறியும் போது விழிப்பு நிலை அடைகிறது.. ஆனால் அது போதுமானதாக ஆகவேண்டும்.. தன் சோம்பை உடைத்து எறியும் அளவிற்கு பலம் அடைய வேண்டும்.. அப்படி பலம் ஆன சிக்குண்ட அண்ட ஆற்றல் தன் மூல ஆற்றலோடு கலந்து விடும்.. கலந்த அந்த சிக்குண்ட ஆற்றலுக்கு ஒரு விசேச சக்தி உண்டு.. அது, தான் கலந்த மூல ஆற்றலோடு எப்பொழுது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், அல்லது தேவையானால் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதில் சிக்கி கொள்ளாமலும் இருக்கலாம்.. அதற்கு எல்லாம் காரணம், தன்னில் இருக்கும் அற்புதமான விழிப்பு நிலைதான்.... முதலில் சிக்கி கொண்ட வடிவ நிலை, விதி வழி வடிவம்.. விழிப்பு நிலையோடு சிக்கி கொள்ளாத வடிவநிலை மதி வழி வடிவ நிலை என அறிவோம்...

நாம் இப்போது விதி வழி வடிவமாய் உடலை தாங்கி இருக்கின்றோம்... அதனை மதி வழி வடிவமாய் மாற்றவே நம் தமிழ் யோகம் வழி காட்டுகிறது... சிக்குண்ட நம் அருள் ஆற்றல் மேலும் மேலும் வடிவத்தை பலப் படுத்தி வடிவமாய் மாறி, செயல் இழந்து போக விடாமல், வடிவ பிடிப்பினை தளர்த்தி பின் நீக்கி உடைத்து எறிய தக்க வழிக்கு வழி வகுக்கும் விழிப்பு நிலை பெருக்கத்திற்கு முனைய வேண்டும்.. இதற்கு அதிக கால அளவு ஆகும் என்பதால் சிக்குண்ட அருள் ஆற்றல் வடிவ நிலையோடு எந்த போராட்டமும் பண்ணாமல், தன் நிலை உணர தொடங்க வேண்டும்.. வடிவத்தோடு கூடிய தன் செயற்கை நிலையை மறந்து தன் வடிவமற்ற தோன்றா நிலையினை உணர தொடங்க வேண்டும்.. அப்படி பூரணமாய் உணர்ந்து தன் தோன்றா நிலையில் வலு அடைந்த உடன் அதே நிலையில் உள்ள அண்ட ஆற்றலான அருள் ஆற்றல் தன் இனமான, தோன்றா நிலைக்கு மாறி விட்ட சிக்குண்ட வடிவத்தில் உள்ள ஆற்றலை, அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்கிறது.. இந்த நிலையில் சிக்குண்ட உயிர் ஆற்றலான அருள் ஆற்றல் தன்னை சிக்க வைக்கும் எல்லைகளை ஒரு நொடி கால அளவிற்கும், குறைவாக வெடித்து சிதற வைத்து, தன் இனமான பேரண்ட ஆற்றலோடு கலக்கிறது.. அதுவே ஞானம் அல்லது தெளிவு அடைந்த காலம்..

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இரண்டு செய்திகள்.. ஒன்று சிக்குண்ட அருள் ஆற்றல், பேராற்றலின் துணையின்றி, தானே முனைந்து முனைந்து, தன் அற்ப, குறைந்த பலத்தை அறியாது, தன் அகண்டகார பலத்தை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு, ஆணவ மலத்தால், தன் வடிவத்தை சிறுக சிறுக உடைக்க முயற்சி செய்து, முடிவில் நிச்சயமாக தோற்று போவது..

மற்றொன்று தானே தன்னை மாற்ற, தோன்றா நிலைக்கு சென்று, தன் இயல் வடிவான பேரண்ட ஆற்றலாய் மாறும் போது, அது பேரண்ட அருள் ஆற்றலால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டு, வலுவாய்ந்த அந்த பேர் ஆற்றலே எல்லைகளை வெடித்து சிதற வைத்து சிக்குண்ட உயிர் அருள் ஆற்றலுக்கு நொடிக்குள் விடுதலை தர செய்வது...

இதில் எது சிறந்த, உகந்த, சரியான, நேரான வழி என்பதை அன்பர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.. தீபாவளியை பிரித்தால் தீ +ப்+ ஆவ+ ளி என பிரியும்.. இதில் தீ என்ற எழுத்து சுத்த கனலான விழிப்பு நிலையை குறிக்கும்.. அதாவது தோன்றா நிலையில் மையம் கொண்ட விழிப்பு நிலையாகும்.. 'ப்' என்ற பகர மெய் ப என்ற வடிவ பாத்திரத்தில் சிக்குண்ட உயிர் ஆற்றலை குறிக்கும்.. ஆவ என்பது சிக்குண்ட உயிர் ஆற்றல் தீயாக ஆவ, அதாவது ஆவதற்கு என பொருள்.. ளி என்பது ள்+ இ ஆக பிரிந்து பயின்று கொண்டு இரு என பொருள் கொள்ளும்.. பள்ளி என்ற பள்ளிக்கூடம் என்பது உயிர் ஆற்றல் பயிலும் இடம் எனப்படுவது..

தீபாவளி என்பது சிக்குண்ட உயிர் ஆற்றல் சுத்த கனலாய் மாறுவதற்கு பயில்க என்ற ஆணை ஆகும்... மர்ம யோக மொழியில் அது தமிழ் ஆணையே அதாவது இறை கட்டளையே.. இறையும் தமிழும் ஒன்றே.. அவ்வாறு அந்த ஆணையை போற்றி கொண்டாடும் போது புத்தாடைகளால் புது மனிதன் ஆகி பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல மனித உயிர் ஆற்றல் நரக நிலையில் உள்ள எல்லைகளை தகர்த்து சிதற வைத்து, ஜோதியாய், ஒளியாய் பிரகாசிக்கும் சுடர் விடும் அண்ட ஆற்றலோடு கலக்கும் பேரினை, பாக்கியத்தை பெறுவாய் என்பதையும் சொல்லாமல் குறிக்கும்..

தீபாவளி என்பது இறை ஆணையே என அறிந்து, அண்ட, இனம் சேரும் வழியாகிய தோன்றா நிலைக்கு, பயணப்பட்டு இக்கரையோடு அக்கரையும் அடைந்து, பெருத்த ஆன்ம இலாபம் பெறுவோமாக... சேரும் இனம், இடம், அறிந்து சேருவோமாக... தீபாவளி என்ற ஆணையை சிரம் மேல் கொள்வோமாக...

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பணிரெண்டு ( 21-12-15)

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பணிரெண்டு ( 21-12-15)
***************************************************************************************
13-12-15 அன்றும் 20-12-15 அன்றும் ஏற்பட்ட மலைஏற்ற அனுபவங்கள் இன்று பகிர்ந்து கொள்கிறோம்... பயிற்சிக்கு நடுவே 20 நிமிடம் வகுப்பு நடந்தது.. அந்த சமயத்தில் நுண் உடல் தனி இயக்கம் பயிற்சி தரப் பட்டது.. அது சிலருக்கு நன்றாக கைகூடியது.. சிலருக்கு திருப்திகரமாக கைகூடவில்லை.. சிலருக்கு சுத்தமாக கைகூடவில்லை போல் தெரிந்தது... இந்த வித்தியாசம் எதனால் என்றால் உடல் உணர்விலே ஊடல் கலத்தல் என்ற நிலைகளில் முன்னேற்றம் ஏற்படாததே காரணம்.. நினைத்தல் என்ற நிலையிலே நான் உணர்கிறேன் உணர்கிறேன் என்று மனம் வாய்ப்பாட்டு பாடியதில் சிலர் அன்பர்கள் ஏமாந்து போய் இருக்கலாம்.. அந்த வாய்ப்பாட்டை நிறுத்தி நம்மில் மையம்கொண்ட குறைந்த அளவில் உள்ள விழிப்பு நிலை மூலமாக உணர்விலே ஊடுருவி சென்று உணர்விலே கலந்து உணர்வு மயமாய் ஆக வேண்டும்.. நான் செய்கிறேன் என்ற ஆணவ மலம் உடைய மனம் அந்த வாய்ப் பாட்டை பாடிக் கொண்டே இருக்கும்.. உணர்விலே இருப்பதாக கூறிக் கொண்டே வாய்ப்பாட்டை பாடும் செயலை செய்து கொண்டே இருக்கும்.. இதனால் சக்தி விரையம் ஆகலாம்...

அதே நேரத்தில் அந்த வாய்ப் பாட்டை பாடுவதில் சலிப்பு நிலை அடைந்த மனம் வேறு ஒரு செயல் பாட்டை செய்ய விரும்பும்.. அரை மணி நேர வகுப்பில் சற்று வேடிக்கையான ஓரிரு விசயங்களை பேசும் போது பலத்த சிரிப்பொலிகள் எழுந்தது இதனால் தான்.. மாற்று செயல் பாட்டிற்கு, சலிப்படைந்த மனம், தாவும் வேகத்தையே இது காட்டிற்று.. மேலும் இரு அன்பர்கள் கோவிலில் சக்கரை பொங்கலை பிரசாதமாக வாங்கி உண்டு விட்டு தொடர்ந்து படியேறும் பயிற்சியினை முறையாக செய்ய தவற விட்டார்கள்.. மிகவும் அன்பாக கொடுத்ததாலும்,பிரசாதம் என்பதாலும் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்றனர்.. சலிப்படைந்த மனம் அன்பு பிரசாதம் என்ற புனித பெயர்களை 
உபயோகப்படுத்தி, மிக தந்திரமாக புற உலகில் புகும் செயலை பலம் குறைந்த விழிப்பு நிலையால் கட்டுப் படுத்த முடியாமல் போனதே இது காரணம்..

மனம் ஆழ் நிலையிலே, உணர்விலே ஊடுருவி, உணர்விலே கலந்து, அதில் விழிப்பு நிலையோடு ஆனந்தம் பெற்ற சிலர் அன்பர்கள், பயிற்சியில் முழு ஈடு பாடு கொண்டு இருந்தது, பத்து வார மலை யேற்ற பயிற்சிக்கு சமாதானமாக இருந்தது.. பத்து வார பயிற்சி முடிந்தது... உணர்விலே கலந்த நிலை என்பது அகநானுடன், அககுருவோடு கலந்த நிலையே.. அந்த அகநானாகிய அககுருவே நம் நுண் உடலாகிய சூட்சம தேகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் தகுதி உடையது.. புற நானுக்கு அது முற்றிலும் இயலாத காரியமே.. சில அன்பர்களுக்கு நுண் உடல் தனி இயக்கம் கை கூடியது.. இது அவர்கள் உணர்விலே கலந்து அகநானை பிடித்ததே காரணம்... அன்பர்கள் மேலே சொன்னவற்றை நன்கு புரிந்து கொண்டு உணர்விலே ஊடுருவி கலந்து, தீவிரமாக பயிலுமாறு வேண்டப் படுகின்றனர்...

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பதினொன்று ( 5-12-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பதினொன்று ( 5-12-15 )
***************************************************************************************
உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள் :

உணர்வு என்பது பரு உடலுக்கும் நுண் உடலுக்கும் இடையே ஆன பாலம் போன்றது.. அந்த பாலம் அல்லது இணைப்பு சரியாக இருந்தால் நுண் உடலான சூட்சம தேக ஆதிக்கம் விரைவில் கிடைக்கும்.. ஏன் சூட்சம தேக ஆதிக்கம் தேவை.. அது ஒன்றே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பு கொண்டது.. காரண தேகமாகிய அது செம்மை ஆகும் போது காரிய உடலாகிய பரு உடல் செம்மை ஆகிறது.. அதாவது நோய் நொடிகள் நீங்கி உடல் வளமை,செழுமை, வலு அடைகிறது...

நுண் உடலின் ஆதிக்கம் புரிபவன் தான் விழிப்பு என்ற அகநான்.. பரு உடலின் ஆதிக்கம் புரிபவன் மனம் என்ற புறநான்...அகநான் செய்யும் எல்லா வினைகளும் சத்தியமும் உண்மையும் நிகழ் காலமாய் இருக்கும்.. புறநான் செயல்களை நாம் அப்படி இருக்க முடியாது..

உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள்:- 
1) காணல் 
2) ஊடல் 
3) கலத்தல் 
4) அதுவாய் ஆதல்

1) காணல் :-- மலை ஏறும் அன்பர்கள் தேக உடல் உணர்வு மயமாய் படி யேறி நடக்க வேண்டும்.. அப்படி நடக்கும் அன்பர்கள் தாங்கள் அனுபவப் படும் உணர்வை மனதால் கண்டு அதாவது அடையாளம் கண்டு நடக்கின்றார்கள்.. நடந்து பார்கிறேன் செய்து பார்கிறேன் முகர்ந்து பார்கிறேன் போன்ற செயல்கள் எல்லாம் மனதால் அடையாளம் கண்டு நடை பெறுகின்றன.. இதில் மனம் இருப்பதால் கொஞ்சம் குறைபாடு உள்ளது... மனம் வெளியே செல்லாமல் உடலில் தங்கி முழு முரண் பட்டு இல்லாமல் இருந்தாலும், இதில் மனதின் செயல் பாடாகிய நான் உணர்வினை பார்கின்றேன் என்ற ஒன்று விரும்பத்தக்கது அல்ல.. இதனால் 25 விழுக்காடு சதவீதம் பலன்,பயன் மட்டுமே கிடைக்கும்... மனதின் செயல் பாடு பட்டும் படாமலும் இருப்பதால் மனம் உடலை விட்டு புறத்தே பாய்ந்து செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன... வினாடிக்கு வினாடி மனம் அப்படி வெளியே செல்வதை விழிப்பு உணர்வால் உணரலாம்..

2) ஊடல் :-- மனம் உணர்விலே ஊடுருவி செல்ல, அதற்கு விழிப்பு நிலை உதவ உணர்விலே ஆழ் நிலையிலே ஊடுருவிய மனம், அவ்வளவு விரைவாக வெளியே செல்லாது.. மனம் உணர்விலே தங்கி இருக்கும் காலம் அதிகமாகி கொண்டே போகும்... மனம் உணர்வில் உடலில் ஊடலிலே இருக்கின்றதா என்பதை உணர கால அளவு அதாவது மனம் உடலில் தங்கி இருக்கும் நேர அளவினை வைத்து அன்பர்கள் கணக்கிடலாம்.. இது உணர்வு மயமான அனுபவ பயிற்சியில் இரண்டாம் கட்ட முன்னேற்ற நிலை... இதில் 50 விழுக்காடு பயன் கிடைக்கும்..

3) கலத்தல் :-- மூன்றாம் கட்ட முன்னேற்ற பயிற்சியாக மனம் உணர்விலே கலத்தல் என்பதாகிறது... இன்னும் இன்னும் ஆழ் நிலையிலே மனம் உணர்வோடு இருக்கும் போது, உணர்வோடு மனம் கலக்கத் தொடங்குகிறது... அப்படி உணர்வோடு கலந்த மனம் மிக அதிக நேரம் உணர்வோடு ஒன்றி இருந்து வெளியே பாய்ந்து செல்லாமல் உடலில் தங்கி இருந்து கனல் பெருக்கத்திற்கு உதவும்... எண்ண ஆதிக்கங்களும் புற உலக தேவை யற்ற செயல்பாடுகள் மனதை வெளியே இழுக்காது.. மனம் விழிப்பு நிலைக்கு உடன் பட்டு அதிக நேரம் இருக்கும் போது விழிப்பு நிலை அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே மனம் விழிப்பு நிலை கட்டுப்பாட்டில் வெளியே இயங்கும்.. இந்த நிலையில் மனம் வெளியே சிக்கி கொள்ளாது உண்மைக்கும் சத்தியத்திற்கும் மட்டுமே நாடும்.. ஆனாலும் மிக வலுவான புற உலக செயல் பாடுகள் வந்தால் விசுவாமித்திரர் மோகினியிடம் காமத்தில் சிக்கிய நிகழ்வாக நடக்க வாய்ப்புகள் உண்டு... இதில் 75 சதவீதம் பயன் கிடைக்கும்...

4) அதுவாய் ஆதல் :-- உணர்வாய் மனம் ஆகவும், உணர்வும் மனமும் ஒன்றான நிலை ஏற்படவும் மிக மிக ஆழ் நிலைக்கு மனம் உணர்விலே செல்ல வேண்டும்.. அது படிப்படியான தான் செல்ல வேண்டும்.. தாவி செல்ல நினைத்தால் தோல்வியிலே தான் முடியும்... அவ்வாறு மனம் தாவி தாவி தோல்வியை தழுவது அதன் இயல்பு... இதனை தடுக்க விழிப்பு நிலை பெருக்கமே உதவும்... விழிப்பு நிலைக்கு உடன் பட்ட மனமே படிப்படியாக செல்லும்.. விழிப்பு நிலையால் அடக்கப் பட்ட மனம் விபரீத போக்குகிற்கே செல்லும்... அப்படி உணர்வாய் ஆன மனம் எந்த நேரமும் கனல் பெருக்கத்திற்கு உதவி, விழிப்பு நிலைக்கு நிகழ்நிலைக்கு எப்பொழுதும் உடன் பட்டே இருக்கும்.. அந்த மனமே சுத்தமனம் அல்லது கனல் மனம் எனலாம்... புறநான் முழுமையாக அகநானாக மாறும் போது எல்லா செயல் பாடுகளும் முழுமையான நிறைவினை, திருப்தியை தரும்... இதில் 100 விழுக்காடு முழு பலன் பயன் கிடைக்கும்...

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பத்து ( 29-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பத்து ( 29-11-15 )
****************************************************************************
இன்று பயமுறுத்தும் வானிலையும், வானிலை மைய எச்சரிக்கையும் இருந்தாலும் மிதமான மழைக்கு நடுவே அன்பர்கள் குறித்த நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்து 6.30 மணியிலிருந்து பயிற்சியினை தொடங்கினார்கள்... இரண்டு மூன்று அன்பர்கள் உடன் பாடு சுவாசத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்து இருந்தது தியானம் என்ற பெயரில் ஒரு குட்டி தூக்கம் அல்லது அரை தூக்கம் தூங்குவது போல் இருந்தது... தோன்றா நிலையிலே மையம் கொள்ள வைக்கும் உணர்வு மயமான பயிற்சியில் அண்ட ஆற்றல் பெருக்கத்தில் ஊக்கம் மிகுந்து காணப் படவேண்டிய தருணத்தில் இப்படி அதிக நேரம் அமர்ந்து இருந்தது முரண் பாடாக தெரிந்தது.. மூச்சு இளைப்பு வராமலேயே மூச்சு இளைப்பு வந்தது போலவும் அதற்கு உடன்பாடு சுவாசம் அவசியம் போலவும் மனம் விரித்த வலையில் விழுந்து விட்டார்கள் போல் தெரிந்தது... உணர்வு மயமான பயிற்சி, உடன் பாடு சுவாசப் பயிற்சியில் தேறி வந்தவர்களுக்கு தான் நன்றாக கை கூடும்.. பெரும்பாலான அன்பர்கள் தொடர்ந்து ஓய்வு இன்றி ஊக்கத்தோடு சற்றும் மூச்சு இளைப்பு ஏற்படாமல் உணர்வு மயமாய் மலை ஏறி இறங்கி பயின்ற தோரணை அவர்கள் ஆறு வார பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தில் தேறிய நிலையை காட்டியது...

7.20 முதல் 7.35 மணி வரை நடந்த வகுப்பில் உணர்வோடு மலை ஏறும் பயிற்சியின் குறிக்கோள் எடுத்து சொல்லப் பட்டது.. உணர்வை உணருபவன் யார் என்ற கேள்வியின் பதிலை பெறுகின்ற போது அது தன்னில் தானாய் இருக்கும் அகநானே என்பதை எடுத்துரைக்கப் பட்டது.. இந்த வார பயிற்சியில் உணர்வை உணருபவனை பிடித்தால் அது அகநானே என்பதை அனுபவப் படவும் அவனே நம்மில் செங்கோல் ஏந்திய அரசன் எனவும் அவன் தோன்றா நிலை என்ற வலுவான எண்ண ஆதிக்கங்கள் இல்லாத அக கோட்டைக்குள்ளே அரசு செய்யும் அரசன் எனவும் எடுத்துரைக்கப் பட்டது.. உணர்வு பயிற்சியின் மூலம் அகநான் நிலையை பிடிக்க வேண்டும் என்பதையும், உணர்வே புற நானிலிருந்து அகநானுக்கு முன்னோக்கி பயணப் படும் பாதை என எடுத்துரைக்கப் பட்டது.. அடிபடுதல், நெருப்பு சுடுதல், மிளகாய் போன்ற மிக காரமான உணவு ஏற்கும் போது மட்டுமே வல்லின உணர்வில் பழக்கப் பட்ட மனம் மெல்லின உணர்வினை அலட்சியப் படுத்துவதால் மனம் கனலை நோக்கி பயணப் பட சற்று சிரமப் படும் என்பதை உணர்த்தப் பட்டது.. சாதாரண நடை, இயக்கங்களில் மனதை கனலின் பக்கம் திரும்பும் படியாக உணர்வில் நாம் இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது..

உணர்வு மயமாய் இருக்கும் போது ஒருவர் எப்படி ஊக்கத்துடன் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட பின் சில அன்பர்கள் அதை மனதில் எண்ண பதிவோடு, சிரமத்துடன் விடாமல் மலை ஏறி வியர்வை கொட்ட வியர்த்த நிலைக்கு ஆளானது சற்று முரண்பாடாக இருந்தது.. ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக ஏறி இறங்கி பயில வேண்டிய அவர்கள் ஏதோ ஒரு நிலைக்கு தங்களை ஆளாக்கி கொண்டு குறிக் கோளை விட்டு நகர்ந்து சென்றது போல் இருந்தது.. வகுப்பில் சொன்ன கருத்தை மனதால் பிடித்தார்களே தவிர தங்கள் தேக உணர்வுக்கு மதிப்பு அளிக்க தவறி விட்டது போல் தோன்றியது... அதனால் மன ஆதிக்கத்திற்கு ஆளானார்களே தவிர விழிப்பின் பலம் பெறவில்லை போல் தோன்றியது.. இது சுற்றுபுற சூழ்நிலையில் கிடைக்கும் அறிவுரைகளை மையப் படுத்தி விழிப்பு நிலையிலிருந்து விலகும் மனதின் செயல் பாடு ஆகும்.. இப்படிதான் புறநான் செய்யும் எதுவும் முறையற்ற ஒன்றாக இருக்கும்.. இதிலிருந்து விடுபடவே எந்த எண்ண ஆதிக்கமும் இல்லாத தோன்றா நிலையால் ஆன வலுவான கோட்டைகுள்ளே, அரசு செய்யும், உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் அகநான் நிலையை கைபிடிக்க வேண்டும் என மர்ம யோகத்தில் வற்புறுத்துவது.. தோன்றா நிலையில் குடி இருக்கும் அகநான், மனமாகிய புற நானுக்கு தோன்றவே தோன்றாது.. புற நானுக்கு தோன்றா நிலையில், அகத்திலே அருள் ஆட்சி செய்யும் அகநான் அனுபவநிலையில் இயங்குவதால், அகநானில் செயல் படுபவர்களை மர்ம யோகிகள் எனப் படுகிறார்கள்.. அகநானில் இயங்கிய நம் தமிழ் யோக அரசர்கள் பிரமாண்டமான கோவில்களை கட்டியும் தங்களை விளம்பர படுத்தவோ அடையாளப் படுத்தவோ எந்த முயற்சியும் செய்யாதது அவர்களின் தியாகமும் அன்பின் பண்பின் வெளிப்பாடே ஆகும்.. ஆனால் இன்றைய கால கட்டம் அதற்கு முற்றிலும் முரண் பாடாய் இருப்பது வேறு விசயம்..

இப்படியாக சிறுக சிறுக பயணப் பட்டு அகநானில் அமரும் நிலைக்கு வருவோமாக.. காரணம் அகநான் மட்டுமே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பும் அண்ட ஆற்றலையே கையாளும் வல்லமையும் உடையது.. சிறு சிறு தோல்விகளில் துவண்டு போகாமல் தோல்விகளில் பாடம் கற்று உயர் நிலைக்கு உயருவோமாக...

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி ஒன்பது (28-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி ஒன்பது (28-11-15 )
**********************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி:-- அய்யா இந்த முறை விழிப்பு நிலையில் வேகமாக அல்லது மெதுவாக படி ஏறி இறங்க வேண்டுமா என்ற முறையினை தெரிவியுங்கள் அய்யா

விழிப்பு நிலை என்பது ஒன்று மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை.. மற்றொன்று மனதிற்கு கட்டு படாத விழிப்பு நிலை.. இந்த மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை என்பது மனம் எப்பொழுது எல்லாம் தோன்றா நிலைக்கு சென்று செயல் இழந்து போகிறதோ அப்பொழுது விழிப்பு நிலை சுதந்திரமாக கட்டுபடாத நிலையில் செயல் பட தொடங்கும்... இந்த வகையில் தோன்றா நிலை நமக்கு மிக மிக அவசியம் ஆகிறது... இந்த மாதிரி தோன்றா நிலை உருவாகும் சூழ் நிலையை ஏற்படுத்தி மனதை செயல் இழக்கச் செய்து, விழிப்பு நிலை பலப் படுத்தும் பயிற்சியை தான் நாம் மூச்சுப் பயிற்சி மூலம் மலை ஏறும் பயிற்சியிலும் மற்ற பயிற்சிகளிலும் செய்து கொண்டு வருகிறோம்.. இப்படியாக பயின்று பலப் பட்ட விழிப்பு நிலையை மனம் ஒருபோதும் கட்டுப் படுத்த முடியாது.. அதைதான் நாம் அகநான் என்கின்றோம்.. விழிப்பை தன் வசம் கொண்டுள்ள மனதை நாம் புற நான் என்கின்றோம்..

ஆகவே தோன்றா நிலை மூலம் விழிப்பு நிலை பெருக்கம் பலம் அடைவதே முக்கிய நோக்கம்... அதற்காக விரைவாக மெதுவாக மலை ஏற்றத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.. புறமனம் எந்த வகையிலாவது செயல்பாட்டின் மூலம் விழிப்பு நிலையை தன் அடிமையாக்கவே வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்... விரைவாகவோ அல்லது மெதுவாகவோ விழிப்பு நிலை ஏற்படாத வகையில் தேகத்தை புறத்தே இந்த மனம் இயக்க முயற்சி செய்யும்.. விழிப்பு நிலை மனதிற்கு கட்டுப் பட்ட நிலையில் இருந்த போதிலும் தேக உள் உணர்வில் விழிப்பு நிலை சுதந்திரமாகவே உள்ளது.. தேக உணர்வில் இருப்பது என்பது அகத்தில் சுதந்தரமான விழிப்பு நிலையில் இருப்பதற்கு சமம்.. ஆனால் அந்த உணர்வில் மனம் இருக்க விடாது... உணர்வை விட்டு வெளியே வரவே துடிக்கும்.. இதனால் தான் எதையும் நாம் உணர்வோடு உண்ணவோ எதையும் உணர்வு மயமாய் அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. மறைமுகமான விழிப்பு நிலை உதவி இல்லையேல், மனதின் நிலைப் பாடு சீர் குலைந்து போய் விடும்.. தன்னை நிலை நிறுத்த தனக்கு மறைமுகமாக உதவும் தோன்றா நிலையில் உள்ள விழிப்பு நிலையை மனம் தோன்றும் நிலையில் உள்ள உலக பொருள்களிடத்தில் தேடுகிறது... அந்த தேடலில் தோல்வியை மட்டுமே மனம் அடைகிறது.. இது தான் மிக பெரிய சிக்கலாக நமது உயிர்நிலையான ஆன்மாவுக்கு உள்ளது...

நமது பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தின் மூலம் தோன்றா நிலை என்ற சூழ்நிலையை உருவாக்குகின்றோம்... அந்த நிலையில் உணர்வோடு மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை விரிவாக்கம் செய்கின்றோம்.. அதனால் விழிப்பு நிலையோடு இருக்கும் கால அளவு வளருகிறது... மூன்றாவது பயிற்சியில் உணர்வோடு ஆழ்ந்து இருந்து விழிப்பு நிலையின் கால அளவை வளர்த்து அகநானில் மையம் கொள்ள முயற்சி செய்கிறோம்... இது உடன்பாடு சுவாசத்தை தாண்டி தோன்றா நிலையில் அகப்படும் தன்னில் தானாய் இருக்கும் அகநான் அனுபவம் காண்பதாகும்.. சில ஆரம்ப பயிற்சிகளில் நாம் நன்கு பயின்று தேறி வரவில்லை என்றால் மேல் நிலை பயிற்சிகள் புலப்படாமல் போய்விடும்... நமது பயிற்சியில் சற்று வேகம் அதிகமே.. அதனால் தான் அன்பர்களை மிக கவனமாக விடாமல் தொடர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்... தேறி வந்தவர்கள் உடன்பாடு சுவாசத்தில் அதிக கவனம் செலுத்த தேவை இல்லை.. தேறாதவர்களுக்கு அது மிகவும் அவசியம்... தேறியவர்களுக்கு உணர்வில் ஆழ்நிலையில் அகநானில் மையம் கொள்ளும் பயிற்சியாக மூன்றாம் நிலையை தொடர வேண்டும்... தேறாதவர்கள் இன்னும் சற்று அதிகமாக முயன்று தோன்றா நிலையை உருவாக்கி பின் உணர்வில் ஆழ்ந்து தேறியவர்களை போல் அகநான் அனுபவத்தில் மையம் கொண்டு தேறியவர்களுக்கு சமமாக வர முயற்சி செய்ய வேண்டும்... நான்காம் நிலை பயிற்சி சற்று நுணுக்கமானது.. விசித்திரமானது.. அதோடு சரியை நிலை பயிற்சி முடிவுக்கு வந்து கிரியை நிலை பயிற்சி தொடங்கும்.. இன்னும் இரண்டு வாரங்களில் நான்காம் நிலை பயிற்சிக்கு தங்களை பண்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகின்றனன்..

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி எட்டு ( 28-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி எட்டு ( 28-11-15 )
********************************************************************************
மூன்றாம் கட்ட மலை ஏற்ற பயிற்சிக்கான குறிப்புகள் :

தேக இயக்கம் :
1) அண்ட ஆற்றல் 
2) தேக கனல் ஆற்றல் 
3) நுண் உடல் ஆற்றலான காரண உடல் 
4) காரண உடலால் இயங்கும் பரு உடல் ஆற்றல் 
5) வெளியே அழைத்துச்செல்லும் மன ஆற்றல் 
6) கவர்ச்சி என்னும் வெளி தொடர்புகளின் ஆற்றல் இவைகள் மூலமாக   
    இயங்குகிறது...

வெளியே அழைத்துச் செல்லும் மன ஆற்றலின் போக்கை மாற்றி உள்ளே போக வெளி கவர்ச்சியற்ற தோன்றா நிலையினை அனுபவப் பட வேண்டி உள்ளது.. அதற்கு பரு உடல் ஆற்றலை அதிகப் படுத்த மலை ஏறும் பயிற்சி போன்று சற்று கடினமான பயிற்சி செய்யும் போது வெளியே ஓடும் மன ஆற்றல் உள்ளே ஓட துவங்குகிறது.. இந்த நிலையில் கவர்ச்சி என்னும் வெளி புற தோற்றங்களின் தொடர்பு துண்டிக்கப் படுவதால் தோன்றா நிலை உருவாகிறது.. ஆகாய அனுபவ அறிவு, தோன்றா நிலையினை அனுபவப் பட பட அந்த அறிவு பெருகி பெருகி சித்தத்தில் பதிவாக மாறி பின் நினைத்த மாத்திரத்தில், உடல் இயக்க துணை இல்லாமல், அனுபவ அறிவின் துணையால் தோன்றா நிலை விழிப்பு நிலையில் அனுபவ பட முடிகிறது.. அந்த நிலையில் வெளிச்சமாகிய புற தொடர்புகளை விட்டு விட்டு மனம் கனலாய் மாறி காரண உடலில் பொருந்தி, நினைப்பிலிருந்து உணர்வுக்கு மாறுகிறது.. இந்த மாற்றத்தின் கால அளவு மிக குறுகிய நிலையில் உள்ளதால், நீங்கும் நிலையில் உள்ளது... மனம் கனலிலே போதுமான நேரம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது.. அந்த நிலையில் தான், கனல் வடிவான விழிப்பு நிலையை, மனம் நன்கு அறிந்து பழகி கொண்டு, விழிப்பின் மேன்மையை அறிந்து, அதோடு ஒத்துழைக்கும் நிலைமைக்கு வரும்..

அப்படி கனலிலே மனம் இணைந்து இருக்கும் நிலைதான், அகநான், அககுரு, விழிப்பு என்கின்றோம்.. உணர்வு மயமாய் இருப்பது என்பது வெளிச்சமாக புறநானாய் இருக்கும் மனம்; கனல் மயமான அகநானாக இருக்கப் பயணப்படுவது 
தான்.... அது அகநானாக மாறினாலும், நீங்கும் நிலையிலே அதன் கால அளவு, ஆகாய அனுபவ அறிவுக்கு எட்டாததாக உள்ளது.. இரண்டாம் கட்ட பயிற்சியில் கடந்த இரண்டு வாரங்களில் பயின்ற அன்பர்கள் அகநானில் இருக்கும் கால 
அளவினை சற்று உயர்ந்து இருப்பதை அனுபவ அறிவில் அறிந்து இருக்கலாம்..

7வது 8வது வார மலையேறும் பயிற்சியில் அகநானில் இருக்கும் கால அளவினை உயர்த்தும் பயிற்சியாக பயில வேண்டும்... அது நாம் உணர்விலே ஆழ்ந்து ஆழ்ந்து இருக்க கனல் மயமான அகநானில் மனம் பொருந்து இருக்கும் கால அளவு கூடிக் கொண்டே போகும்... அப்படி அந்த அகநானில் மனம் பொருந்தி இருக்கும் அனுபவ நிலையை இன்னதென விவரிக்க முடியாது... அது பேரின்ப நிலையின் துவக்கம்...

இந்த மூன்றாம் கட்ட பயிற்சி, உணர்விலே ஆழ் நிலையில் செல்லுவதற்கும், அகநானில் மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை அதிகப் படுத்துவதற்குமே.. இந்த நுணுக்கத்தை மனதில் கொண்டு நாம் 7 வது வார தொடக்கமாகிய வரும் ஞாயிறு கிழமை (29-11-15 ) முதல் இரண்டு வாரங்கள் தீவிரமாக பயிலுவோமாக.. குன்றத்தூர் மலை ஏறும் பயிற்சி என்பது ஒரு அடையாளம் காட்டும் பயிற்சி மட்டும் தான்.. மற்ற நாட்களிலும் தீவிரமாகவும் வீட்டு மாடி படிகளில் ஏறி இறங்கியோ அல்லது மைதானத்தில் வேகமாக நடந்தோ, பயில வேண்டியது அவசியமாகிறது.. முறையோடு தீவிரமாக பயின்றால் தான், நுண் உடல் தனி இயக்க பயிற்சிக்கு வழி வகுக்கும், கதி சுவாச பயிற்சி கை கூடும்... அன்பர்கள் தங்கள் மேன்மை நிலை அடைவதற்கு உணர்ந்து விரைந்து செயல் படுமாறு வேண்டுகின்றனன்...