Monday 24 August 2015

கனல் வீரம் ஒலி பதிவு- பகுதி ஒன்று

மர்ம யோகத்தின் இயக்க சாதனைகளை வெளிப் படுத்தும்- கனல் வீரம் ஒலி பதிவு- பகுதி ஒன்று...




Monday 17 August 2015

15 & 16 அன்று சேலம் அடுத்த மேச்சேரியில் நடந்த வகுப்பு சம்பந்தமாக

15 & 16 அன்று சேலம் அடுத்த மேச்சேரியில் நடந்த வகுப்பு சம்பந்தமாக....

அன்பர்களே சேலம் அடுத்த மேச்சேரியில் 15 & 16-8-15 ல் நடந்த வகுப்பு மிகவும் நல்லபடியாக நடந்தது.. உலக நடப்புகளில் சிக்க வைக்கும் வெளிச்சத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க பல வகையான உதாரணங்கள் எடுத்து சொல்லப் பட்டதால் அவை ஆன்மீக பயணப் பாதைக்கு விரைவு படுத்த மிகவும் உறுதுணையாக இருந்தது.. கனல் என்றால் என்ன அதன் அவசியம் என்ன என்பதையும் விரிவாக எடுத்துச் சொல்லப் பட்டது... கனல் சார்ந்த வாழ்வு ஒன்றே ஆன்மீகத்திற்கும் உதவும் என்பதையும் வெளிச்சத்தை சார்ந்த எந்த ஆன்மீகவும் முடிவுக்கு உதவாது என்பது விளக்கப் பட்டது.. அண்ட ஆற்றல் உடல் பயிற்சியில் அனைவரும் கலந்து கொண்டதும், எடை இரத்த அழுத்தம் துடிப்பு மற்றும் சக்கரை அளவு இவற்றில் இரண்டு நாள் வாய் வழி உணவு உண்ணாமல் இருந்தும், தேகத்தில் மிக சிறு சிறு மாற்றங்கள், மட்டுமே இருந்தது மிக சிறப்பான விசயம்.. இரவு நயன தீட்சைப்பற்றிய சொற்பொழிவும் அகல் விளக்கு நம் தேகத்தில் ஏற்றி வைக்கும் பயிற்சியும் நடை பெற்றது.. இரவு 12 மணிக்கு மேல் முருகனின் சித்திரத்தில் முன் எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் போது சித்திரத்தில் ஏற்பட்ட பெரிய பெரிய அசைவுகள்,எல்லோராலும் பார்க்க முடிந்தது, மிக சிறப்பானதாகும்.. சித்திரத்தில் இருந்து முருகன் இறங்கி வந்ததை போன்ற காட்சிகள் பிரமிப்பு ஊட்டியது.. ஒவ்வொரு அண்ட ஆற்றல் ஊடல் பயிற்சியின் சமயம் மழை பெய்யும்.. அதே போல் இரவு தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை பெய்தது..

ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணி முதல் மாலை 4.00 மணி வரை நல்ல மனிதனாய் வாழ உடன் பட்ட சுவாசமும் சுவாச ஒழுங்கு பயிற்சியும், மாமனிதனாய் மாற விழிப்பு நிலை சுவாசப் பயிற்சியும் நடைப் பெற்றது.. மருத்துவ பரிசோதனைக்கு பின் அன்பர்கள் கலைந்து சென்றனர்.. தேவையான நன் கொடை அளித்து செலவின் பளுவை மொத்ததையும் குறைத்த அன்பர்களின் தயவு மிகவும் பாராட்டுக்குறியது... தங்கள் கருத்துக் கணிப்பு வரவேற்கப்படுகின்றன..

Wednesday 12 August 2015

கனல் வாழ்வு பகுதி ஒன்று


கனல் வாழ்வு பகுதி ஒன்று

எத்தனையோ வாழ்க்கை முறைகளிலே கனல் வாழ்வும் ஒன்று என அனைவரும் நினைப்பர்.. ஆனால் அது முற்றிலும் தவறு.. எல்லா வாழ்க்கை முறைகளிலும் சத்தாக சாரமாக ஜீவ நாடியாக மையமாக மறைமுகமாக செயல் படும் இந்த கனல் ஒரு ஜீவ புள்ளி,மையப்புள்ளி... ஒரு புள்ளி தோற்றம் அற்றது.. ஆனால் அந்த மையப்புள்ளியை ஆதாரமாக வைத்து ஏற்படுத்தப் பட்ட வட்டங்கள், தோற்றத்தை உடையது.. தோற்றம் உடைய எதுவும் வெளிச்சத்தை தன்பால் ஈர்க்கவே முயலும்.. ஆனால் அந்த வெளிச்சமோ கனலிலிருந்து வெளிப்பட்டது.. கனல் சக்தியை வெளிச்ச சக்தியாக மாற்றி இந்த தோற்றங்கள் தன் பால் ஈர்த்துக் கொள்ளும்.. இந்த மாற்றமே கவர்ச்சி என பெயர்.. இந்த கவர்ச்சியின் வேகம் தோற்றத்தின் ஈர்ப்பு சக்தியால் நடை பெறுகிறது.. இந்த கவர்ச்சியை இழந்த தோற்றங்கள் ஈர்ப்பு சக்தியையும் இழந்து, தோற்றங்கள், காணாமல் போய் விடுகின்றன.. ஆனால் அந்த மையப் புள்ளியான கனல் காணாமல் போவதில்லை.. அது நிரந்தரமாக என்றும் இருக்கும்.. இதிலிருந்து முக்கியமாக அறிந்து கொள்வது என்னவென்றால், கனல் என்ற மையப்புள்ளி நிரந்தரம்,நித்தியம் நீங்காநிலை கொண்டது... ஆனால் அதை வைத்து தோன்றிய வட்டங்கள் தான், அநித்தியமானது, நீங்கும் நிலை உடையது... இதை அடைப்படையாக வைத்தே கனல் வாழ்வு தொடங்குகிறது...
மையப்புள்ளி, வெளிச்சம், கவர்ச்சி, தோற்றமான வட்டம், ஈர்ப்பு ஆகிய முக்கிய சொற்களை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, கனல் வாழ்வைப் பற்றிய இரகசியங்கள் நன்கு விளங்கும்...
பிரச்சனை எல்லாம் அநித்தியத்தை உடைய வட்டமான தோற்றத்தில் தான் உள்ளது... தோற்றமே இல்லாத மையப்புள்ளியில் நித்தியமும்; எதுவும் நீங்காநிலையும் இருப்பதால், தொல்லைகள் துயரங்கள் என்பது அதற்கு இல்லை.. கனலான அந்த மையப்புள்ளியோடு தொடர்பு நீங்காமல்; வட்டமான தோற்றமான வாழ்க்கையோடு தொடர்பு கொண்டாலும், தொல்லைகள் துயரங்கள் இன்றி வாழலாம்... அப்படி புள்ளியோடும் வட்டத்தோடும் வாழும் வாழ்க்கை தான் கனல் வாழ்வு என்கிறோம்..
எத்தனை சோதனைகள் வந்தாலும், துயரங்கள் இன்றி சோகங்கள் இன்றி வாழும் வாழ்க்கை தான் ஞான வாழ்க்கை, தெளிவு வாழ்வு என்கிறோம்... மூன்று வகையான வாழ்க்கை உள்ளது..
1) புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை
2) புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை..
3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கை
1) மனிதனுக்கு புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை என்பது, மரணதிற்கு பின் தோற்றமாகிய உடலை இழந்து சுத்த கனலான தோன்றா நிலையில் வாழ்வது.. இது மண்ணில் புதைந்துள்ள புதையல் போன்றது.. யாருக்கும் பயன்படாதது.. அன்பு என்ற மாசக்தி துளியும் இல்லாதது..
2) மூன்றாவது ஆன புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை தான் இன்றைய சராசரி மனிதன் வாழ்க்கை... கனலை தானே உள் வாங்கும் வழி அறியாது, வட்டத்தில் வாழுகின்ற போது கனல் போதுமானதாக இல்லாமல் தவிப்பு பலவகையிலும் ஏற்பட்டு பெரும் பாலும் வாழும் வாழ்க்கை.. இதில் வாழ்வு கலைந்து, தேய்ந்து முடிவில் மரணத்தில் காணாமல் போகும்...
3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கையில் கனல் என்ற புள்ளியான தோன்றா நிலையோடு வட்டம் என்ற தோற்றத்திற்கு வந்த வாழ்வினை இணைத்து நித்திய வாழ்வும் அன்புடன் சேர்ந்த அர்த்தமுள்ள வாழ்வாக வாழுவது...
கனல் என்பது என்ன ?
அண்ட ஆற்றல் தேகத்தில் செயல் படும் பொழுது அதை கனல் என்று சொல்லுகிறோம்..

புள்ளி  என்பது என்ன ?
அந்த ஆற்றலுடன் உள்ளிருந்து பயிலுதல் என்பதாகும்.. வட்டம் என்பது பெற்ற ஆற்றலை தேகத்தில் பயன் படுத்துவதால் தோன்றிய தோற்றம் ஆகும்... கனலை பற்றிய மிக விசித்திரமான பகுதிகளை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்...
வரும் சனி ஞாயிற்று கிழமைகளில் ( 15 & 16 August ) சேலம் மேச்சேரியில் நடை பெறும் வகுப்பில் கனலை பற்றிய அதிக விளக்கங்களை அறியலாம்... நாம் இந்த சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும், இன்றைய ஆன்மீகம் எப்படியெல்லாம் நம்மை திசைதிருப்பி பயணற்ற மரண நிலைக்கு அழைத்துச் செல்லுகிறது என்ற திடுக்கிடும் உண்மை அறிய வகுப்பிற்கு வருமாறு அழைக்கப் படுகிறார்கள்... வருபவர்கள் எல்லோரும் அண்ட உடல் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ள தேவை இல்லை.. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாய் வழி உணவு இன்றி, அண்ட ஆற்றலையே உணவாக கொண்டு பயிலலாம்.. மற்றவர்கள் கனல் பயிற்சி, வாசியோகப் பயிற்சி போன்றவற்றின் நுணுக்கங்களை அறிய வரலாம்.. மிகுந்த பலனை தரும் எளிய வாசியோக பயிற்சிகள் மிக முக்கியமானது.. அவசியம் சேலம் சுற்றியுள்ளவர்களும் கலந்து கொள்ள வேண்டுகின்றனன்...

Thursday 6 August 2015

அண்ட ஊடல் மற்றும் வாசியோக பயிற்சி

அண்ட ஊடல் மற்றும் வாசியோக பயிற்சி
********************************************************
சேலம் அடுத்த மேச்சேரியில் வரும் 15-8-15 & 16-8-15 இரண்டு நாட்கள், அண்ட ஊடல் மற்றும் வாசி யோகப் பயிற்சிகள் 
நடைபெற உள்ளது.. அண்ட ஊடல் பயிற்சி என்பது வாய் வழி உணவு இன்றி அண்ட ஆற்றலையே தேக உணவாக ஊடுருவ செய்து, அண்ட அமிர்த்தத்தையே கருப்பை சிகிச்சை மூலம் சிதைவடைந்த தேகத்தை மீண்டும் அண்ட ஆற்றலின் மூல அமைப்புக்கு மாற்றி அமைக்க முயலும் பயிற்சி தான்.. ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள், அடைந்த பலன்கள் அளவற்றவை... அண்ட ஊடல் பயிற்சி நடக்கும் இந்த இரண்டு நாட்களில் மண்டபத்தில் தண்ணீரை தவிர வேறு எதுவும் வழங்கப்பட மாட்டாது.. இந்த பயிற்சியில் பசியா நிலை உருவாக்கப் படுவதால், ஆழ்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு தண்ணீர் கூட குடிக்கத் தோன்றாது.. எந்த நோயாளிகளும் கலந்து கொள்ளலாம்... சக்கரை நோய் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் இந்த இரண்டு நாட்கள் வாய் வழி உணவு இன்றி மாத்திரை எதுவும் உட்கொள்ளாமல் இருந்தால் அதிசய முன்னேற்றம் பெறலாம்.. எந்த நோய்கள் இருந்தாலும் நோய் தீர்ந்து, அதிசய முன்னேற்றம் காணலாம்...
அண்ட ஊடல் பயிற்சியில் ஆர்வம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்.. இது முற்றிலும் ஆன்மீக வகுப்பு ஆகையால், மிக பலன் தரும் வாசியோக பயிற்சிகள் நடைபெறும்.. சனி இரவு நயன தீட்சை பற்றிய வகுப்பு நடைபெறும்.. சனி இரவு, மண்டபத்தில் இரவு தங்க நினைப்பவர்கள் போர்வை, மாற்று உடை, கொண்டு வருவது நல்லது..
எந்த கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் கிடையாது.. அமைதியும் மௌனம் மட்டுமே தங்களிடம் எதிர் பார்க்கப் படுகிறது... சலசலப்புகள் பயிற்சியை மிகவும் பாதிக்கும்.. கவனம் தேவை..
இடம்:--
சன்மார்க்க அருணாச்சல செட்டியார் திருமண மண்டபம் 
நங்க வள்ளி ரோடு
மேச்சேரி, மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம்....
நாள்:- 15- 8-15 & 16- 8-15 இரண்டு நாட்கள்
வகுப்பு நேரம்:-- சனி கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
மாலை 5.00 மணிக்கு வகுப்பு முடிகிறது.. மண்டபம் நிர்வாகியிடம் ஒப்படைத்தல்..
அண்ட ஊடல் பயிற்சியில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கு முதலிலும் கடைசியிலும் இலவச வைத்திய பரிசோதனை -sugar weight B.P. pulse முதலியவை செய்யப் படும்...
அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும்
தொடர்புக்கு :--- அமைப்பாளர்
திருவாளர் இளம் வழுதி அவர்கள்
செல் எண்:-- 9003967462
கட்டணம் எதுவும் கிடையாது.. செலவின் பளுவினை குறைக்க, நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன...

Wednesday 5 August 2015

சித்தர் ஆவது எப்படி -- பகுதி ஐம்பது

ஒட்டு மொத்த இரகசியமும் ஒரே வரியில்
அன்பர்களே ஒட்டு மொத்த இரகசியமும் ஒரே வரியில் கொடுக்க முடியுமா ? புரிந்தவர்களுக்கு இந்த வரி ஒன்றே போதும்.. அதற்கு மேலே புரியாதவர்களுக்கு பல ஆயிர புத்தகங்கள் தேவைப்படும்.. அந்த ஒரே வரி இது தான்....
உடலின் உறவு, இருப்பின் துறவு, அருளின் வரவு, பெற்றால் சித்தராகலாம்...
சற்று புரியாததாக இருந்தாலும், ஏனைய முந்தைய பதிவுகளை படித்து உணர்ந்தவர்களுக்கு ஓரளவு புரியலாம்... இருந்தாலும் புரிய முயற்சி செய்கின்றோம்..
உடலின் உறவு ;- மனிதன் உலகில் உள்ள அத்தனையும் தன் கைவசப்படுத்திக் கொண்டாலும், தன் உடலை கைவசப்படுத்திக் கொள்ள தெரியவில்லை.. தன் உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகள் அசைவையும், இதய துடிப்பையும், இதய இயக்கத்தையும் அளவிட முடியவில்லை.. இரத்த ஓட்டத்தை உணர முடிவதில்லை.. அத்தனையும் இயக்க கூடிய ஆற்றலையும் துளியும் உணர முடிவதில்லை.. அந்த ஆற்றலையும் பெருக்கி தேகம் அழியா வகை அறியப்படவில்லை.. அப்படியே சித்தர்களால் உணர்த்தப் பட்டாலும், அதில் மனம் துளியும் ஈடு பட விரும்புவதில்லை.. மனம் எதிர்பார்க்கின்ற வகையில், வழியில், சத்தியம் உண்மை இல்லை.. மனம் துளியும் ஈடுபடாத வழியில் மட்டுமே உண்மை சத்தியம் இருக்கின்றது... மனதை திசை திருப்ப போதுமான பலத்தோடு புத்தி என்ற விழிப்பு நிலை இல்லை.. அந்த விழிப்பில் வல்லமை பெற உதவும் வாசியோகத்தில் மனத்திற்கு பிடிமானம் துளியும் இல்லை.. இருக்கின்ற விழிப்பு சக்தியை பயன் படுத்தி முன்னேறவும் தெரியவில்லை..
சரி இதலெல்லாம் எதற்கு ? உடலோடு உறவு அற்ற நிலையில் அந்த உடலை சரி செய்ய எந்த வழியும் இல்லை.. மனம் உடலில் உள்ள உணர்வோடு தொடர்பு இல்லாத நிலையில் எந்த ஆற்றலையும் மனம் தேகத்திற்குள் எடுத்த செல்ல முடியாது.. மரணப் படுக்கையில் கூட மனம் தன் கடைசி ஆசையை புற உலகில் தேடவே முயலும்.. அதனால் தேகத்தை காக்க அதனால் துளியும் இயலாது.. காரணம் உடலுக்குள் செல்ல மனதிற்கு துளியும் பயிற்சி கிடையாது.. அதனால் உடலை காக்க மனதால் துளியும் முடியாததாகவே உள்ளது.. உள் கடந்து போனால் கடவுளை பார்க்கலாம் என்று எத்தனை முறை மனதிற்கு போதித்தாலும், தேகத்தின் உள் கடக்க மனதால் முடியாததாகவே உள்ளது.. ஒரே வழிதான் உள்ளது.. உடலுக்கு உள்ளே செல்ல முடிந்த வலிமை வாய்ந்த விழிப்பு நிலையால் மட்டுமே ஆகக் கூடிய அந்த காரியத்தை விழிப்பு நிலை பெருக்கத்தால் மட்டுமே நடக்கும்... ஆற்றலை எடுத்து செல்ல மனதால் மட்டுமே முடியும் ஆதலால், மனம் வலிமையான விழிப்பு நிலைக்கு கட்டுப் படவேண்டும்.. ஆகவே தான் விழிப்பு நிலை அதிபதியான அகக்குருவுக்கு அத்தனை முக்கியத்துவம் தருவது... உடலோடு உறவு, விழிப்பு நிலையால் சாத்தியமாகும் மனதால், தேகத்தை எந்த நிலையிலும் பேணிக் காக்கலாம்... குணங்குடி மஸ்தான் போல தேகம் நூறு துண்டுகளாக நைந்து போனாலும், தேகத்தை சீர் செய்து பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும்.. அப்படி நடக்க மனம் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்...
இருப்பின் துறவு :--- விழிப்பு இருக்கும் இடமே இருப்பு நிலைதான்.. இருப்பு நிலை என்பது சித்தத்தின் எண்ண ஆதிக்கம் அற்ற நிலையானது.... எந்த ஒரு எண்ணமும் மனதில் தலை தூக்கினாலும் மனதிற்கு ஏதோ பொறுப்பு வந்து விடுகிறது.. பொறுப்பினை, எண்ணத்தால் பெற்ற மனம், தன் இருப்பு நிலையிலிருந்து விலகி, பொறுப்பு என்ற வெளிச்சத்திற்கு புறம் அதாவது வெளியே வந்து விடை தேட தொடங்கி விடுகிறது... இருப்பு தன்மை என்பது விழிப்பு செயல் பட இருக்கின்ற ஆயத்த நிலை.. அந்த நிலையில் இருந்தால் மட்டுமே விழிப்பு நிலை செயல் பட முடியும்.. மனதை வைத்து செயல் படும் விழிப்பு, பொறுப்பினை ஏற்று வெளியே சென்ற மனம் இல்லாமல் தேகத்தின் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கிறது.. இருப்பில் மனம் இருந்தால் மட்டுமே விழிப்பு மனதை வைத்து தெய்வீக செயலையும் செய்ய முடியும்... எண்ணங்களை துறந்த நிலையில் மனம் இருப்பில் இருக்க வேண்டும்.. அப்படிபட்ட மனதின் துறவு தான் உண்மையான துறவு... இருப்பிலே மனம் துறவு கொள்ளும் போது மட்டுமே விழிப்பு தெய்வீக செயல்களை செய்ய இயலும்.. அந்த இருப்பே மனதின் கனல் நிலை.. மனம் கனல் நிலையில் இருந்தால் மட்டுமே தெய்வீகத்தோடும், நித்தியத்தோடும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்... வெளிச்சத்தில் மனம், அதாவது இருப்பு நிலை நீங்கிய நிலையில் அநித்திய உறவுகளில் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள முடியும்.. மனம் அப்படி எண்ணங்களை, துறவு பூண்டு இருப்பில் இருக்கும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
அருளின் வரவு :--- இருப்பு தன்மையில் மனம் எண்ணங்களை துறந்து வெறுமையாக சூனியமாக இருக்கும் போது தன்னில் தானாய் இருக்கும் அந்த அதி அற்புத விழிப்பு நிலை மையம் கொள்கிறது.. அந்த அமைதி சூனிய நிலையில் தான் எதையும் படைக்கும் எங்கும் நிறைந்துள்ள அண்ட ஆற்றல் பெரு வெள்ளமாக வருகிறது.. விழிப்பு நிலையில் புகும் அந்த புனித உயிர் ஆற்றல் உடலிலும் புகுந்து உயிரை மேன்மை படுத்துகிறது... உயிர் துன்பத்தை, மனம் அறிய விழிப்பு நிலை கனல் மயமான மனதிற்கு உதவுவதால், மனமானது அண்ட ஆற்றலை, தேகத்தில் சேர்க்கிறது.. தேகத்தில் சேர்ந்த அந்த ஆற்றல் தூல தேக சக்தியாகவும் எதையும் செய்ய வல்ல சூட்சம தேக சக்தியாகவும் விளங்க தொடங்குகிறது.. வல்லமை வாய்ந்த சூட்சம தேக சக்தி பலப் பட்டவுடன் சூட்சம தேகம், தூல தேகத்தை விட்டு பிரிந்து சென்று மீண்டும் கூடும் ஆற்றலை அடைவதோடு மட்டும் அல்லாமல், தூல தேகத்தை காட்டிலும் பல ஆயிரம் மடங்கு செயல் திறன் உடையதாய் விளங்குகிறது.. சித்தர்கள் என்பவர்கள் சூட்சம தேகத்தில் வலு பெற்றவர்களே.. போதும்
இப்போது உடன் பாடுடன் கூடிய சுவாச ஒழுங்கில் என்ன நடக்கிறது ? வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையில் பேர் அமைதியும் மகா மௌனமும் பெற்று, அதனால் சூனிய நிலையாகிய விழிப்பு நிலைபெறவும், உள்வாங்கும் மூச்சாகிய சந்திரகலை தேகத்தில் புகுந்த மதியான, மனம் பெறவும், பயிலுகின்றோம்.. சூரிய கலையில் இருப்பின் துறவால் அருள் வரவால் பெற்ற ஆற்றலை சந்திர கலையில் மதியான மனத்தால் தேகத்தில் சேர்க்கிறோம்.. தேகத்தில் புகுந்த மனமே உடலின் உறவான மதியான மனம்..
அருளின் வரவினை இருப்பின் துறவால் பெற்று உடல் உறவால் சித்தராகலாம் என்பது முற்றிலும் உண்மை...
இத்துடன் 
சித்தர் ஆவது எப்படி?
என்ற தொடர் பதிவு
முடிவடைகிறது...

Monday 3 August 2015

அருள் இயங்கும் முறை- படி மூன்று


மலை ஏற்றத்தில் கனல் ஏற்றம்
******************************************
மதுரை ஆசிரமத்தில் நடந்தது என்ன? அன்பர்கள் உடன் பாடு சுவாசத்தை உணரவும், பழகவும், சூட்டுக்கோல் ஆசிரமத்தின் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் அமைந்துள்ள தண்டபாணி முருகன் கோவிலுக்கு படிகளில் ஏறிச் செல்கின்றனர்.. மனம் விதித்த கட்டுபாடுகளை தாண்டி, சற்று விரைவாக படியேறுகின்றனர்.. இந்த நிலையில் மூன்றை உணர தொடங்குகின்றனர்..
1) மனம் விதித்த கட்டுபாடுகளை தாண்டும் போது உடல் விழிப்பு நிலையை நாடுகிறது.. உயரமான இடத்தில் வேகமாக நடக்கும் போது மனம் இயல்பாகவே பயத்தால் செயல் இழக்கிறது.. அதனால் தான் வீரம் மிகுந்த விழிப்பு நிலை செயல் பாட்டிற்கு வருகிறது..
2) தேகம் படிகளில் விரைந்து செல்லும் போது, அதிக ஆற்றல் எடுத்துக் கொள்வதால், அண்ட ஆற்றல் சுவாசத்தின் வழியாக தேக ஆற்றலை ஈடு கட்ட முயலுகிறது.. அதனால் சுவாசத்தின் வேகம் மிக அதிகமாகி இளைப்பாக மாறுகிறது.. இந்த நிலையில் தான் அந்த அற்புத யோகம் தொடங்குகிறது.. அன்பர்கள் படி ஏறுவதை நிறுத்திக் கொள்கிறார்கள்.. அதிகமான சுவாச வேகத்தோடு மனதை இணைகின்றனர்.. இணைக்கப் பட்ட மனம் அந்த சுவாசத்திற்கு உடன் படுகிறது.. உடன் பட்டே ஆகவேண்டும்.. அதுதான் மனதின் விதி.. காரணம் பாய்ந்து வரும் அண்ட ஆற்றலுக்கு முன் மனதின் ஆதிக்க செயல் பாடு பலிக்காமல் போய் விடுகிறது.. சுவாசத்தோடு உடன் பட்ட அந்த மனம் அண்ட ஆற்றலான கனலோடு இணைவதால் தேகத்திற்கு கனல் பெருக்கம் அதிகமாகி தேக ஆற்றல் அதிகமாகிறது.. மிக ஆழமாக உடன் படும் போது, உடல், தான் இழந்த ஆற்றலை காட்டிலும் மிக அதிகமான ஆற்றலை பெற முடிகிறது.. அப்படி பெற்ற ஆற்றலால் மீண்டும் இரண்டாம் நிலைக்கு படியேறும் போது, முதல் நிலை காட்டிலும் இன்னும் மிக வேகமாக படி ஏற முடிந்தது... இப்படியாக மூச்சு இளைப்பு ஒரு நிலைக்கு வேகமாக வரும் போது, படியேறுவதை நிறுத்தி, மனதால் இணைந்து இருக்கும் போது உடன் பாடு சுவாசத்தை மிக எளிதாக உணர முடிந்தது.. அடையாளம் மிக தெளிவாக கண்டு கொள்ள முடிந்தது..
மிக யதார்த்தமான வேகம் குறைந்த இயல்பான சுவாசத்தோடு, மனம் இணைய முடிவதில்லை.. அப்படி இணையும் போது மனம் சுவாசத்தை இயக்க முயற்சி செய்கிறது... அதன் காரணமாக முரண்பாடு சுவாசம் உருவாகி, அண்ட ஆற்றல் தடை பட்டு தேகமும் ஆற்றலின்றி சோர்வு அடைகிறது... அதனால் சுவாசத்தை கட்டுப் படுத்துகின்ற எந்த வாசி யோக பயிற்சிகளும் பலன் அற்று போய் முடிவில் உடலுக்கு தீங்கே நேரிடுகிறது.. மனம் உடன்பாடு உடைய சுவாசமே ஒழுங்கான சுவாசம் அல்லது சுவாச ஒழுங்கு என்பதை அன்பர்கள் உணர்ந்து கொண்டனர்..
3) மனம் கடினமான தேக இயக்கத்தால் ஏற்பட்ட வேகமான சுவாசத்தோடு உடன் பாடு கொள்வதில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளால், தாங்கள் பெற்ற அண்ட ஆற்றலில் வேறு பாடு காண முடிந்தது... ஒரு நிலைக்கு இன்னொரு நிலைக்கும் வேக தொடர்பில் வித்தியாசங்கள் காணப் பட்டதை உணரும் போது, மனம் உடன் பட வேண்டிய நெருக்கத்தின் அளவின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்.. அண்ட ஆற்றலின் வரவின் அளவு அந்த நெருக்கத்தின் அளவை பொருத்தே அமைகின்ற மிக பெரிய உண்மை உணர்ந்தனர்..
மிக முக்கியமாக மனம் உடன் பட்ட அந்த சுவாச நெருக்கத்தில் இது வரை அனுபவப் படாத தியானத்தின் ஆழம் உணர்ந்தது மிக முக்கியமானது.. வாழ்வில் மனம் அடங்கும் ஒரு ஆழமான விசித்திரமான அதே வேளையில் விழிப்பு நிலை ஒரு உச்சத்திற்கு சென்ற அனுபவத்தை முதல் முறையாக உணர்ந்து போல தென்பட்டனர்.. மிகவும் உண்மையே...விழிப்பு நிலை உச்சத்திற்கு அழைத்து செல்லும் ஒரு தியான முறை மலை படிகளில் ஏறும் போது கிடைக்கிறது.. அதனால் தான் அப்படி பட்ட அனுபவம் கிடைக்க, மலை கோவில்கள் அமைக்கப் பட்டு இருக்கின்றன...
சற்று நின்று சுவாச வேகத்தோடு அதாவது இளைப்போடு மனம் உடன் படும் அதே சமயம், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், சுவாச வேகம் சிறுக, சிறுக குறையத்தொடங்க மனம் சுவாசத்தோடு உடன்படும் இயக்கத்தின் அளவும் குறையத் துவங்குகிறது... அப்படி மனதின் ஈடுபாட்டில் குறைவு ஏற்படாமல் விழிப்பு நிலையால் மனதின் ஈடுபாட்டை தக்க வைக்க முயல வேண்டும் என்பதை உணர்த்திய பின், அன்பர்கள் தங்கள் வேகம் குறைந்த இயல்பான சுவாசத்தில் மனம் உடன் பட்டதால் உடன் பாடு சுவாசத்தை சுவாசிக்க முடிந்தது.. இந்த நிலையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.. எந்த தியானப் பயிற்சியை பண்ணாமல் உடன் பாடு சுவாசத்தில் மட்டும் இயல்பான சுவாசத்தில் ஒரு ஆழமான தியான நிலையை உணர முடிந்தது..
அன்பர்கள் மூன்று முறை மலை ஏறி இறங்கி தங்கள் அனுபவத்தை வலுப் படுத்திக் கொண்டார்கள்.. இயல்பான சுவாசத்தில் உடன்பாடு சுவாசம் பழகி விட்டால் பின் இது போன்ற மலை ஏறும் பயிற்சி தேவை இல்லை என்பதை நன்கு உணர்ந்தனர்... இந்த மலை ஏற்றத்தில் கனல் ஏற்றம் கண்டதால் மூன்று முறை மலை ஏறி இறங்க எளிதாக முடிந்தது என்பது மறக்க முடியாத ஒன்றாகும்...

**********************************************************************************

மலை ஏற்றத்தில் கனல் ஏ்ற்றம் கண்ட குழு
*************************************************************