Saturday 17 October 2015

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு
***************************************************************************
1) பொதுவாக மலை ஏறும் போதும் இறங்கும் போதும், தேகத்தில் செயல் படும் சக்தி, அண்ட ஆற்றல் என்பதை உண்மையாக உணர வேண்டும்...
2) அந்த அண்ட ஆற்றல் உண்மையை மனம் நொடிக்கு நொடி பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..
3) தேகத்திற்கு சக்தியை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் சக்தியை அளிப்பதால் அந்த நிலையில் சுவாசத்தை ஒரு போதும் கவனிக்கக் கூடாது.. கவனிக்க கூடாது என்பது மிக முக்கியம்...
4) ஏறும் போதும் இறங்கும் போது,, தேகத்தில் அனைத்து சக்தியும் அதிக பட்ச செலவு செய்யும் விதமாக மிகுந்த விழிப்பு நிலையோடு பயிற்சியில் வேகம் கொள்ள வேண்டும்.. விழிப்பு நிலையில் மட்டுமே நிதானமும் எச்சரிக்கையும் கைகூட கவனமாக ஏற்றம் இறக்கம் செய்ய வேண்டும்..
5) ஒவ்வொரு தேக அசைவும், அண்ட ஆற்றலால் இயக்கப் படுவதையும், ஆற்றலும் தேகமும் கலக்கும் போது அது உணர்வாக வெளிப் படுவதையும் உணர வேண்டும்..எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றம் இறக்கம் சமயம் மூச்சை கவனிக்கக் கூடாது.. தேக உணர்வோடு இருக்கவேண்டும்..
6) இதுவரை தேகம் சுவாசத்தின் மூலம் பெற்ற ஆற்றலை மனம் கவர்ந்து வெளிச்சமாக செயல் பட்ட பழக்கத்தாலும் மலை ஏற்ற இறக்க பயிற்சியால் தேகம் அதிக ஆற்றலை செலவு செய்வதை தடுக்கவும் தனக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் போவதை தடுக்கவும், மலை ஏற்றத்தில் மெத்தனம் காட்டும்.. ஆனால் தேக உணர்வோடு பற்றி கொள்ளும் போது ஏற்படும் விழிப்பு தன்மை பயிற்சியில் மனதை வெல்லும் நிலைக்கு செல்ல சற்று வேகம் பயிற்சியில் காட்ட வேண்டும்...
7) அப்படி வேகம் கொண்ட தேகம் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்வதால், அதை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் அதிகமாக வர தொடங்குவதால் பெரும் சுவாசம் அல்லது மூச்சு இளைப்பு வர தொடங்கும்.. இந்த நிலையில் ஏற்றம் இறக்க செயல் பாட்டினை நிறுத்தி விட்டு அமைதியாக நிற்க வேண்டும்.. இடம் கிடைத்தால் அமர்ந்து கொள்ளலாம்.. இந்த நிலையில் இப்படி வரும் பெரும் சுவாச வேகத்தோடு மனதை பொருத்தும் போது, பழக்கமில்லாத சுவாச வேகத்தோடு மனம் பொருந்த முடியாமல் நின்று விடுவது போல் இருக்கும்.. இந்த பொன்னான நேரத்தில் விழிப்பு என்ற அக குரு நம்மில் தோன்றுவதை உணர வேண்டும்.. யார் உணருவது என்ற கேள்வி எழலாம்.. நிச்சயமாக செயல் படாத மனம் இல்லை.. விழிப்பே தான் உணரும்.. விழிப்பே உணரும் போது இதனை விழித்தல் என்கிறோம்..
8) இந்த விழித்தல் என்ற செயல் பாடு தான் தனக்குள் ஒருவன் பிறப்பதற்கு சமம்.. அவன் தான் மகன்.. மகன் என்றால் மறைவாய் (ம்) அகத்தில் ( அகன் ) தோன்றியவன் என பொருள்.. அகத்தில் தோன்றியவன் அகத்திலிருந்து தோன்றியவனாய் உருவெடுத்து புறத்தே செயல் படும் விழிப்பு நிலையே முருகன் எனலாம்.. மகன் என்பதில் ம் அடுத்து உரு ஆன உருவானதை இணையும் போது அது ம்+ உரு + அகன் என இணைந்து முருகன் ஆகிறான்.. முதலில் நம்மில் மகன் பிறக்கட்டும்.. பின் முருகன் நிலைக்கு வரலாம்... அக நிலையில் மகன் பிறப்பதை உணர வேண்டும்..
9) மனதிற்கு ஏற்ற சுவாச வேகம் குறையும் போது, மனம் எண்ண ஆதிக்கங்களோடு விழிப்பு என்ற கருவறையான தோன்ற நிலைக்கு உள் புக முனையும்.. உடனே ஏற அல்லது இறங்க தொடங்க வேண்டும்..
10 ) இப்படி ஒரு முறை அனுபவப் பட்டது போல் பத்து முறை அனுபவப் பட வேண்டும்.. அதற்காக இரண்டு அல்லது மூன்று முறை மலை ஏறி இறங்க வேண்டியதிருக்கும்..
11) அன்பர்கள் இதனை தேகப் பயிற்சியாக ஒரு போதும் நினைக்கக் கூடாது.. விழிப்பு நிலை பெறுவதற்க்கான உன்னத பயிற்சி.. மற்றவர்களோடு ஒத்து பார்த்து, அவர்களோடு இணையாக மலை ஏறவோ இறங்கவோ ஒரு போதும் கூடாது.. மற்றவர்களை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்.. படியின் மேல் மட்டும் பார்வை, இளைப்பு என்ற பெரும் சுவாசம், அதில் மனம் பொருத்தி விழித்தல் என்ற செயலை உணர்தல், இதை தவிர மனம் எதையும் நாடக்கூடாது...
12) அன்பர்கள் மலை அடிவாரத்தில் கூடும் போதும் பிரியும் போதும் ஒருவர்க்கு ஒருவர் பேச்சில் ஈடுபடுவது மிகவும் பயிற்சிக்கு ஆபத்தானது... இதில் மிகவும் கவனம் தேவை... மன அமைதியில் மட்டுமே விழித்தல் என்ற செயல் பாட்டினை திறம் பட செய்ய முடியும்...
13) முதல் நாள் அகத்தில் மகன் கரு உற்ற நிலையில், கரு வளர்க்கும் பயிற்சியை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து முடிந்த வரை வர வேண்டும்.. ஒவ்வொரு ஞாயிறுக்கும் இடைப் பட்ட நாட்களில் மாடி படி ஏறி பயில வேண்டும்..
14 ) தொடர்ந்து 10 ஞாயிறு கிழமைகளில் வர முடிந்தவர்கள் மட்டும் நேரடி பயிற்சிக்கு வரவும்.. உறுதி பாடு இல்லாதவர்கள் நேரடி பயிற்சியினை தவிர்கலாம்..

இது முதல் கட்ட நிலைக்கான செயல் பாட்டு விளக்க முறைகள்... பின்னால் பயிற்சியின் இடையே புதிய விளக்க முறைகள் அளிக்கப் படும்.. எல்லாமே முகநூல் பக்கத்தில் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத, வெளி ஊர் அன்பர்களுக்காக பதிவு செய்யப் படும்... வெளி ஊர் அன்பர்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.. நுணுக்களை கவனமாக அறிந்து மாடி படிகளில் ஏறி இறங்கியோ மைதானத்தில் ஓடியோ நோக்கத்தோடு பயின்று செயல் படும் வெளி ஊர் அன்பர்கள் மிகவும் பயன் அடைந்து கொண்டு வருகிறார்கள்.. பதிவினை மட்டும் நன்றாக படித்து பயிலுமாறு வெளி ஊர் அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று


Marma Yoogi
மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று
            ***********************************************************
தேவைகளை கெடுப்பது ஆசைகளே
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.. கேட்டு கேட்டு சலித்துப் போன புத்திமதி.. ஆனாலும் இந்த புத்திமதி மனதை தாண்டி மேலே துளியும் செல்லவில்லை... துன்பத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம்.. துன்பம் என்ற கேள்வி எழும் போது அதற்கான விடை ஒன்றில் மட்டுமே உள்ளது.. ஆம் அது தான் நிறைவேற்றபடாத தேவைகள்... ஆசைகளிலே உழலும் மனம், தேவைகளை கவனிப்பதே இல்லை.. இந்த ஆசைகளை உருவாக்குகின்ற சுற்றுப் புற சூழ்நிலைகளில் மனம் சிக்கி ஒடுங்கி போவதால், அதனால் அது அதிலிருந்து மீள முடியாமல் போய் விடுகிறது.. அந்த சுற்று புற சூழ்நிலைகள் போலவே ஆகவேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொள்வதால் தேவைகளில் மனம் கவனம் செலுத்த முடிவதில்லை....

உடல் துயரம் உயிர் துயரத்தினால் ஏற்படும் மன துயரம் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும், மனம் அவைகளை போக்குவதற்கு துளியும் முனைவதில்லை... ஆசைகளின் உந்துதலால் ஆசைகளை நாடும் மனம் அந்த ஆசைகளை துளியும் நிறைவேற்ற முடியாத நிலையில் கற்பனைகளிலும் கனவுகளிலும் மனம் வாழத் தொடங்குகிறது.. ஒவ்வொரு மதமும் அந்த ஆசைகளை மட்டுமே காட்டி பிழைப்பை நடத்துகின்றன.. கேட்டதெல்லாம் இறைவன் கொடுப்பார் என சொல்லாத மதங்கள் உலகில் ஏதாவது உண்டா ? ஆசைகளை காட்டி, தேவைகளை தட்டி கழித்து, உடல் உயிர் துயரங்களை பெற்றுக் கொண்டு இருக்கும் தருணம் இந்த மதங்கள் மிக அழகாக சொல்லும் வார்த்தை என்னவென்றால், எல்லாம் இறைவன் சித்தம் பிரகாரம் நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பது தான்....

இறைவனிடம் பெற வேண்டியது எதுவுமே இல்லை.. இது தான் வலுவான உண்மை.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், இறைவன் நமக்கு எல்லாவற்றையும் குறைவில்லாமல் கொடுத்து இந்த மண்ணிற்கு அனுப்பி இருக்கின்றான்.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், ஐம்பூதங்களிலே குறைவில்லாமல் கொடுத்ததை முறையாக பயன் படுத்தினால் அவனோடு கலந்து நிற்க முடியும் என்பது தான்.. தேவைகளும் குறைகளும் இல்லாத முழுமையான வாழ்வாகிய இறை கலப்பே முடிவானது.. அதற்காக வேண்டிய அனைத்தையும் கொடுத்து இருக்கிறான் இறைவன்... அப்படி கொடுக்க காரணம் அவனின் தனி பெருங்கருணையே..

தனிப்பெருங்கருணையின் அருமை தெரியாமல் அதனை வேடிக்கை பார்க்கும் செயல் ஒன்றே இன்று நடைபெறுகிறது.. இறைவன் கொடுத்ததை கைபிடிக்க தெரியாமல் அறியாமையில் வாழ்கிறோம்.. கையில் கூடியதை கையில் பிடிக்க தெரியவில்லை என்றால் குற்றம் யாருடையது என்பதை உணராமல் சதா காலமும் இறைவனிடம் முறையிட்டு, முறையிட்டு கண்ணிர் மல்கி நிற்கின்றான்.. பாவம் இறைவன் என்ன செய்வான் ? மீண்டும் மீண்டும் கொடுத்தாலும், கொடுத்த ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடிவதில்லை.. ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடியாமல் புதியது நீங்கி விடும்.. இல்லையென்றால் ஏற்கனவே கொடுத்ததை நீக்கி விட்டு அதன் இடத்தில் புதிதாக கொடுத்தது அமர்ந்து விடும்.. முடிவில் இறைவன் நமக்கு எதுவும் கொடுக்க வில்லை என்ற ஏக்கம் மட்டுமே மனிதனுக்கு மிஞ்சும்.. கணணியில் ( computer ) ஒரு கோப்பு இருக்கும் போது அதே போன்ற கோப்பு ( file ) பதிக்கும் போது ஏற்படும் நிலையை நாம் நன்கு அறிவோம்.. அதே போன்ற நிலைதான்.. இறைவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றான்.. அவன் நம் உரிமை நாயகன்.. நமக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்ற உரிமை நமக்கு அவனிடம் உள்ளதால் கருணை வடிவான சத்திய நிலையில் உள்ள கடவுள் நமக்கு ஏற்கனவே எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றார்.. இவைகளை எல்லாம் நினைவு படுத்தவும் அதனை பயன் படுத்த கூடிய விழிப்பு நிலை இல்லாத காரணத்தினால் மனிதனுக்கு இத்தனை துயரம்.. ழ் என்ற ழகரமெய் தாங்கிய தமிழ் என்ற சொல்லே ஒரு நிலையில் விழிப்பு என்றும் பொருள் கொள்ளும்..

ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்த நாட்டின் கபட நிர்வாகிகள் எதுவேண்டுமானாலும் இலவசமாக கொடுப்பார்கள்.. ஆனால் விழிப்பினை கொடுக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவே மாட்டார்கள்.. விழிப்பினை கெடுக்கும் குடியை, மதுவை ஊக்கப் படுத்தவே பார்ப்பார்கள்.. பல ஆண்டுகள் நம் நாட்டை விட பொருளாதாரத்தில் மிக பின் தங்கிய நாடாக இருந்த சீனா கலாச்சார புரட்சியின் மூலம் அனைத்து போதை பொருள்களையும் ஒழித்துக் கட்டியது.. போதை கருத்துகளை தந்த மதங்களையும் - புத்த மதம் உள்பட-- ஒழித்துக் கட்டியது.. முப்பதே ஆண்டுகளில் உலகில் இன்று பெரிய வல்லரசாக விளங்குகிறது.. சமீபத்தில் மோடி அவர்கள் இந்தியா விரைவில் சீனாவை மிஞ்சும் என்றார்.. அதற்கு சீன பத்திரிக்கை மிக அற்புதமான நாகரீகமான பதில் தந்தது.. சீனர்களின் உழைப்பிலும் ஒழுக்கத்திலும் விழிப்பாற்றலிலும் மிஞ்சும் தகுதி இந்தியர்களுக்கு தற்போது இல்லை.. ஆகவே பொருளாதாரத்தில் மிஞ்சும் பேச்சுக்கே இடம் இல்லை என்றது.. மிகவும் உண்மையான சத்தியமான சொல் அது.. விழிப்பினை கெடுக்கும் குடியும் மதுவும் கற்பனை பாத்திரத்தை அடையாளம் காட்டும் சின்ன திரை பெரிய திரை உள்ளவரை, இந்தியாவை எவராலும் வல்லரசாக்க முடியாது.. குடி குடியை கெடுக்கும், புகை மரணத்தை தரும் என்ற விளம்பரத்தை தொடர்ந்து அவைகளின் விற்பனையும் அதிகப் படுத்துவது கேவலத்திலும் மகா கேவலம்.... விழிப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக ஓரிரு நிறைநிலை மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றினால் மட்டுமே இந்த மண்ணிற்கு விடிவு காலம் வரும்.. இந்த மண்ணை காக்க பூரண விழிப்பு நிலையில் பல அற்புதங்களை செய்து இந்த மண்ணில் உள்ளோரை மாற்ற செய்ய வேண்டியது நமது கடமை.. அதற்காக முனைவோமாக...

Thursday 15 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது
********************************************************************
அந்த ஒன்றே போதும்
கேள்வி :--- ஐயா நான் உங்கள் பதிவுகளை நன்றாக படித்தேன்.. அதில் நான் நிறை நிலை மனிதனாகி மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை அடைந்து பலர் போற்ற நான் பெரு மகிழ்ச்சி அடைவேன் என்பது உறுதியாக தெரிகிறது... பயிற்சியை தீவிரமாக பயில தொடங்கும் எனக்கு தாங்கள் தனி பட்ட முறையில் உதவி செய்வீர்களா ?
நோக்கம் சரிதான்.. ஆனால் அதில் இரண்டு பெரும் பாரங்களை, சுமைகளை சுமந்து கொண்டு, அந்த அன்பரை போன்றோர் இம்மி அளவும் முன்னேற முடியாது... அந்த இரண்டு பாரங்களில் ஒன்று, மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை.. மற்றொன்று பலர் போற்றும் எதிர் பார்ப்பு... ஒரு பெரும் குடிகாரன், ஒரு ஊனமுற்றவரை விட இந்த இரண்டு பாரங்களை உடையவர் துளியும் முன்னேற முடியாது... ஏதோ ஒரு உத்வேகத்தில் முன்னேறி சென்றாலும், முயல் ஆமை கதையில் வருவது போல முடிவில் பின் தங்கியே போவார்கள்...
பெரும் பாலும் மனித குலம் இந்த இரண்டு சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறது... இவர்களுக்கு பெரு மகிழ்ச்சி என்பது கானல் நீரை போலவே இருக்கும்.. இன்று மனித குலம் வேதனையில் மூழ்கி இருப்பதற்கு காரணம் இந்த சுமைகளே.. இந்த வேதனையில் இருப்பவர்கள், மற்றவர்களையும் சந்தோசத்தில் இருக்க விட மாட்டார்கள்...
பெரு மகிழ்ச்சி அடைய ஒரே வழி அண்ட ஆற்றலை பெறுவது தான்.. அந்த மகிழ்ச்சியில் நீடித்து இருக்க ஒரே வழி மனம் அந்த ஆற்றலை கொள்ளை அடித்து செல்லாத வண்ணம், விழிப்பு நிலையிலே இருப்பது தான்.. பலரை கொன்றான், பல நாட்டை வென்றான், குறிக்கோள் அடையும் முன் தன்னை இழந்தான் அலெக்சாண்டர்.. அந்த இரண்டு பாரங்களால் தன்னையே முடிவாக இழக்கும் முடிவு தான் எல்லா மனிதர்களுக்கும்... மனிதன் ஒன்றை மறந்து விட்டான்.. எங்கும் நீக்கமற இருக்கும் அண்ட ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை... ஒருவரை விட உயர்வாக தன்னை ஆக்கி கொள்ள நினைப்பவர்கள் அந்த ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலையே சவாலாக கொண்டு உயர்வடைய நினைப்பது, முற்றிலும் முரண் பட்ட செயல்... குறைந்த அண்ட ஆற்றலை உடையவர்களுக்கு தன் பேராற்றலை பயன் படுத்தி, தானாமாக வழங்கும் கருணை உள்ளவர்களுக்கு, அவர்களை வற்றாத நிலைக்கு அண்ட ஆற்றலும் அறிவும் பார்த்துக் கொள்ளும்..
ஆணவ மலத்தினால் வரும் அற்ப மகிழ்ச்சிக்கு ஆசை கொண்டவர்கள் முடிவில் அலெக்சாண்டரை போல் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்... மனித குலமே ஆணவ மலத்தால் அவதி படும் போது அவர்களிடம் பெரும் மதிப்பு ஒன்றை எதிர்பார்ப்பது, அது போன்ற அறிவற்ற தன்மை உலகில் எதுவும் இல்லை.. இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் கூடும் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய் முடிவில் பலத்த ஏமாற்றமே ஏற்படும்... அந்த எதிர்பார்ப்புகள் மனதை மிகவும் பலப் படுத்தி ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலை முழுமையாக இழக்க வைத்து, மனிதனை மரணக்குழியில் தள்ளி விடும்...
வெறும் அண்ட ஆற்றல் என்பது ஆற்றல் மட்டும் இல்லை.. மனிதன் கண்ட மற்ற ஆற்றல்களுக்கும், எங்கும் நீக்கமற இருக்கும் ஆதி ஆற்றலுக்கும் ஒரு மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. இந்த ஆதி ஆற்றலான அண்ட ஆற்றலுக்கு எங்கும் இல்லாத, எதுவும் இணையாக இருக்க முடியாத அண்ட பேரறிவு உள்ளது... விழிப்பு நிலையோடு ஞான வடிவான பேரின்ப நிலையான அண்ட பேரறிவால் இந்த அண்டமே துல்லிதமாக இயங்கி கொண்டு இருக்கிறது... அப்படி பட்ட அண்ட ஆற்றலுக்கும் அண்ட பேரறிவுக்கும், இணையாக வேறு எதுவும் மனிதன் நாடினால், அதை விட மடமை எதுவும் இல்லை...

நிறை நிலை மனிதன் அன்பு வடிவானவன்.. மதிப்பும் புகழ்ச்சியும் தன்னை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்வான்.. காரணம் அவை தன்னை குறை நிலை மனிதனாக்கி விடும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டவன்.. விழிப்பு நிலையிலே தனக்கு தகுந்தது, தகாது எது, என்பதை நன்கு அறிந்த காரணத்தினால் தான், நிறை நிலை மனிதன் ஆவதற்கான தகுதியை பெறுகிறான்.. இப்பொழுது உள்ள மார்க்கங்கள் மதங்கள் காட்டும் மதிப்பும் குரு மரியாதையும் அன்பற்ற செயல் பாடுகளில் உள்ள நிலைகளில் உள்ளவற்றில் ஒரு சிறு துளி பற்றிக் கொண்டால் கூட நிறைநிலை மனிதன் ஆக முடியாது.. காரணம் அந்த சிறு துளியே மனிதனை குறைநிலை மனிதனாக்கி விடும்.. எந்த மதங்களாலும் வழி சொல்லி தர முடியாததால் தான் இது மர்மயோகம் அல்லது காணாமல் போன மறந்து போன தமிழ் யோகம் என்பது... நிறை நிலை மனிதனான தமிழனாக மாற, அன்றைக்கு முல்லை கொடிக்கு தன் தேரை ஈந்த தமிழ் மன்னரை உயர் பண்பாக்கிய அந்த வீரமும் தீரமும் கருணையும் நல்கும் தமிழ் யோகம் வெளிப்பட்டால் மட்டுமே முடியும்... அந்த ஒன்றே போதும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றே போதும்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பத்தொன்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பத்தொன்பது
**************************************************************************************
கவனிப்பும் கலப்பும்
ஒருவன் உண்மையை பேச வேண்டும் என்று போதிக்கப் பட்டான்.... உண்மையை பேச முயன்றான்.. அதில் மிகவும் சிரமம் கண்டான்.... உண்மையை பேசுவதை விட்டு விட்டு யாரெல்லாம் உண்மையை பேசுகிறார்கள் என ஆராய 
தொடங்கினான்.. உண்மை பேசுவதில் உள்ள சிரமத்தினால் தன்னை சமாதானம் படுத்திக் கொள்ள எல்லோரையும் ஆராயத் தொடங்கினான்.. இதனால் அவனுக்கு உண்மை பேசுவோர் எவரும் அவன் கண்களில் படவில்லை... எல்லோரும் ஏன் உலகமே பொய் பேசுவதாகவே நினைக்கத் தொடங்கினான்... எந்த உண்மையும் பொய்யாகவே அவன் மனதில் பட்டு உண்மையை பேச முடியாத தன் இயலாமைக்கு சமாதானம் மட்டுமே தேட முயன்றான்.. இப்போது 
போதிக்கப் பட்டவன் உண்மையை பேச வேண்டும் என போதிக்க துவங்கி விட்டான்.. போதிக்க துவங்கி விட்டால் தன் இயலாமையை மறைத்து விடலாம் என்று தவறாக கணக்கு போட்டு விட்டான்... தனக்கு தெரியாமல் தானே குருவாய் 
ஆனதாக கற்பனையில் திளைத்து விட்டான்.. தனக்குள்ளே இனம் தெரியாத ஆணவம் தலையெடுத்து ஆடுவதை கவனிக்க தவறி விட்டான்... முடிவு தன் குறைபாடு தனக்கு தெரியாமல், உலகமே குறைபாடு உடையதாய் இருப்பதாக 
கற்பனை செய்து கொண்டு வருந்துகிறான்.. பிறரிடம் அன்பு குறைந்து தன்னை தானே வருத்திக் கொள்கிறான்..

மதுரையில் மலையேற்ற அனுபவத்தில் மலை உச்சியில் வெளி நாட்டு பெண்களை பார்த்ததால் ஏற்பட்ட வெளிச்சத்தில் உண்டான உயிர் ஆற்றல் இழப்பால் தான் மலை இறங்க முடியாத நிலையையும் பின் உடன்பாட்டு சுவாசத்தினால் ஆற்றல் பெற்று தான் சுலபமாக இறங்க முடிந்ததை ஒரு பதிவில் வெளியிடப் பட்டது.. அதில் உள்ள மிக முக்கியமான தெய்வீக செய்தியை காண தவறிய சில அன்பர்கள் இன்னும் அந்த பெண்களை வேடிக்கை பார்த்த அந்த அன்பர் யார் என்ற கேள்வியை இன்னும் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்... இந்த கேள்வி எழுப்பும் செயல் மிகவும் பரிதாபத்திற்குரிய செயலாகும்.. உண்மையை கண்டு உண்மையில் நிற்க முடியாமல் மனித குலம் இன்று தவித்துக் கொண்டு உள்ளது.. அதனால் தான் மனம் தன் ஆதிக்க நிலையை இழந்த நிலையான தோன்றா நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது.. தோன்றா நிலை அனுபவம் பெறுவது ஒன்றே ஆன்மீகத்தின் நுழைவு வாயில்.. அந்த நுழைவு வாயில் அடையாமல், அங்கே இருக்கும் விழிப்பு நிலை பெறாமல் எந்த ஆன்மீகமும் இல்லை... தோன்றா நிலைக்கு வெளியே உள்ள எந்த ஆன்மீக முயற்சிகளும் மேலே சொன்னது போல் உண்மை போதிக்கப் பட்டவனை 
போல துயரத்தையே தரும்.. மதம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மதத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற காரணங்களை காட்டிலும் பல நூறு மடங்கு அதிகம்.. இன்னும் வரும் காலத்தில் மதத்தால் மட்டுமே உலகில் 
போர் மூண்டு உலகம் அழியத் தொடங்கலாம்..
இதற்கு முக்கிய காரணம் என்ன ? உயர்வு தரவேண்டிய ஆன்மீகம் ஏன் தாழ்வு தருகிறது? எங்கே எதில் குறைபாடு உள்ளது.. அதற்கு மூல காரணம் தமிழ் யோகம் தரும் கலப்பு என்ற ஒரு உயரிய நெறியை மறந்து போனதால் தான்.. 
உலகில் உள்ள அனைத்து மதங்களும் கவனிப்பு என்ற ஒரு நெறியிலே சிக்கி நாசமாகி கொண்டு இருக்கிறது.. கலப்பு என்பதை அறவே மறந்து போய் விட்டது... மன சாட்சி, சாட்சி பாவனை, கவனித்தல் போன்ற மத நெறிகளில் சொல்லப் 
பட்டவை அனைத்தும் மனிதனின் மனதை சிறுக சிறுக பலப் படுத்தி முடிவில் ஆணவ நிலைக்கு அழைத்துச் செல்கிறது... அதனால் மனமும் மதமும் இரண்டாக பிரிந்து மனதின் வெளிச்சம் மதத்தில் புகுந்து மதத்தை நச்சு தன்மை ஆக்கவே செய்யும்.. இதனால் மத ஒற்றுமை துளியும் காணாமல் போய் விடும்.. இயல்பாகவே கவனிப்பு தன்மையால் ஒரு மனிதன் தன் பணிவு தன்மையை முழுமையாக இழந்து கடவுளே நேரடியாக தோன்றும் சமயம் கூட அவன் கடவுளை கவனிக்க தொடங்கி, நீ உண்மையான கடவுளா அல்லது உன்னுடைய கடவுள் யார் என்ற ஆணவ மேதாவிதனத்தை காட்ட தொடங்குகிறான்.. ஒரு மதத்தின் கடவுள் வேறு மதத்தை சார்ந்தவருக்கு தன்னை வெளிப் படுத்தினால் நிலைமை தலைகீழாக மாறி விடும்.. அந்த கடவுளையே கொல்ல முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதில்லை..

ஆனால் கலப்பு என்ற ஒரு நெறியில் மனம் தன்னை முன்னிலை படுத்தும் செயல்பாட்டிற்கு இடமே இல்லை... மனம்தன்னை கரைத்துக் கொண்டு உண்மையோடு கலக்கும் நெறியில் செல்கிறது.. கலப்பு நெறியில் மனம் தன் ஆதிக்கத்தை இழப்பதால் மதங்களும் மத வெறியும் காணாமல் போய் விடுகிறது.. பண்டை தமிழ் நாட்டில் மதங்களே இல்லை.. மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வர தொடங்கிய மதத்தால் தான் தமிழ் நாடே அழிய தொடங்கியது.. கலப்பு நெறியை விட்டு விட்டு கவனிப்பு நெறிக்கு அழைத்துச் செல்லப் பட்ட தமிழகம் தன் அன்பு நெறியான தமிழ் நெறியை மறக்க தொடங்கி தமிழ் மன்னர்களே ஒருவருக்கு ஒருவர் சண்டை செய்து தமிழக அழிவுக்கு காரணமானார்கள்.. மனிதன் கலப்பு நெறியிலே ஔவையாரை போல் முருகனோடு கலந்து பேசும் தகுதியை இழந்து இன்று கடவுளை 
விட்டு வெகு தூரம் பிரிந்து சென்று விட்டான்..
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மத நெறியும் கலப்பு நெறிக்கு புறம்பாகவே செல்லுகிறது.. மீண்டும் கலப்பு நெறி உருவாகவே மர்ம யோகம் தேவைப் படுகிறது.. கலப்பு நெறியில் மட்டுமே மனிதன் இறைநிலையோடு அம்மயமாகி 
கலந்து நின்று வல்லவன் ஆக முடியும்.. மர்ம யோகிகள் இந்த கலப்பு நெறியை சதாகாலமும் நினைவில் கொண்டு கவனிப்பு என்ற நிலையில் தன் ஆணவத்தை பெருக்காமல், ஐம் பூத நிலைகளுக்கு இடையே பிளவினை உருவாக்காமல், ஐம்பூத சமசீர் கூட்டால் வல்லமை பெறும் நெறிக்கு செல்ல வேண்டும்.. முதல் சுவாச பயிற்சியாகிய உடன் பாடு சுவாசமே கலப்பு நெறிக்கு அழைத்துச் செல்வதே... உடன்படுதல் மூலம் கலப்புக்கு வழி கிடைக்கிறது..

சில அன்பர்கள் தன் சுவாசத்தை கவனிக்கும் நிலைக்கு செல்லுவதால் தான் ஆணவ நிலைக்கு சென்று தங்கள் ஆற்றலை இழந்து சற்று அவதி அடைகிறார்கள்.. கலப்பு நெறியை ஒரு போதும் மறவாமல் இருக்க வேண்டப் படுகிறார்கள்.. மற்ற வாசியோகப் பயிற்சிகளில் போல் இல்லாமல் உடலில் சில ஆதார மையங்களில் கவனிக்கும் பயிற்சிகள் எதுவும் நமது மர்ம யோக பயிற்சிகளில் இல்லாததின் மர்மத்தை அன்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.. கலப்பை கெடுக்கும் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றாநிலையின் உண்மை வடிவத்தை புரிந்து கொண்டு அந்த தோன்றா நிலையில் மட்டுமே கலப்பு நெறி நடத்த முடியும் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கலப்பு நெறியை பெருக்கி பெருக்கி அதனை சிவ கலப்பாக்கும், மேலாண்மை செய்யும் அகநான் ஆகிய அக குருவின் துணையோடு  சிவகலப்புக்கு பயணப் பட்டு உலகை தாங்கும் வல்லவரான நிறை நிலை மனித நிலைக்கு செல்ல முனைவோமாக....

Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினெட்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினெட்டு 
***********************************************************
முடியவே முடியாது என்பதை முடிக்கும் தோன்றா நிலை
அன்பர்களே இந்த பதிவு மிக முக்கியமானது... பிரச்சனைகளில் சிக்காத மனிதர்களே இல்லை.. எண்ண ஆதிக்கத்தில் சிக்குண்ட மனம் உடையவர்கள் அனைவருக்கும் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.. பிரச்சனை இல்லையேல் மனம் இல்லை.. பிரச்சனை இல்லா விட்டால் மனம் உடனே பிரச்சனை உருவாக்கி கொள்ளும் என்பது மிகவும் வியப்பானது மட்டும் அல்ல மிகவும் உண்மையானதும் ஆகும்... முடிந்ததை முடியாத ஒன்றாக ஆக்கி விளையாடுவது மனதின் இயல்பு.. முடியாத ஒன்றாக ஆக்கிய பின் அதில் வருத்தப் படுவதில் மனம் தன் செயல்பாட்டை நிலைநிறுத்தி தற்பெருமை கொள்வதும் மனதின் இயல்பே.... எந்த பிரச்சனை இல்லாதது போல் தோன்றினாலும் முதுமை நோய் போன்ற பிரச்சனைகளில் மனிதன் மடிகிறான்..

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி மரணத்தின் மேன்மையை நாம் கவனிக்க வேண்டும்.. விடுதலை தரும் அற்புத மரணம்.. ஆனால் அந்த மரணத்தை பற்றிய பயம் மிக மிக மனிதர்களுக்கு கொடியது.. எத்தனை கடன்கள் எத்தனை வழக்குகள், எத்தனையோ நோய்கள், எவ்வளவோ துரத்தி அடிக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும், ஒருவன் மரணம் அடைந்து விட்டால் அவனோடு அவைகளும் எரிக்கப் பட்டு அல்லது புதைக்கப் பட்டு விடும்.. மரணம் ஒருவனுக்கு அனைத்திலிருந்தும் விடுதலை அளித்து விடும்.. இந்த வகையில் மரணத்தின் மேன்மையை கணிக்க முடியாது... மரணம் என்றாலே மங்களம் என்பார்கள்.. மரணம் அடைந்தவர்கள் தங்கள் மூல ஆற்றலான அண்ட ஆற்றலோடு இணைந்து விடுவதால் எந்த சக்தியாலும் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.. உலக சட்ட திட்டங்கள் எதுவும் மரணம் அடைந்தவர்களிடம் செல்லுபடி ஆகாது.. காரணம் அண்ட ஆற்றலோடு தங்களை இணைத்து கொண்டதால் அவர்கள் பூரண விடுதலை அடைகிறார்கள்...

அப்படி பூரண விடுதலை அடைந்தவர்கள், அந்த விடுதலையை மரணத்தின் மூலம் அடைவதால் என்ன பலன் ? அந்த பூரண விடுதலையை, தேகத்தை உடலை துறப்பதால் அனுபவிக்க முடியாமல் போய் விடுவதால் அதனால் ஒரு பலனும் இல்லாமல் போய் விடுகிறதே ? அந்த பூரண விடுதலை ஒரு அர்த்தமற்ற செயலாகத் தானே இருக்கும் ? ஒரு பெரிய கற்பாறையை பார்த்து உனக்கு பூரண விடுதலை கொடுத்து விட்டேன் என்று சொன்னால் எதையும் உணர்ந்து கொள்ள சக்தியற்ற கற்பாறை போலவே தான் இறந்த மனிதனுக்கும்... பூரண விடுதலை ஒரு இறந்த மனிதனுக்கு அர்த்தமற்ற ஒன்று... பூரண விடுதலை உயிரோடு உள்ள மனிதருக்கு மட்டுமே அர்த்த உடையதாகும்.. இதில் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.. இங்கே ஒரு அற்புதமான கேள்வி ஒன்று எழுகிறது..

ஒரு மனிதன் இறந்த பின் அண்ட ஆற்றலான மூல ஆற்றலோடு கலப்பதால் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுகிறான்.. சரி உயிரோடு இருக்கும் மனிதன் அண்ட ஆற்றலோடு கலந்து இருக்கும் திறனை பெற்றால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பூரண விடுதலை பெற முடியுமா ? மிக அற்புதமான இந்த கேள்விக்கு என்ன பதில் ?

பதில் ஒன்றே ஒன்று தான்.. மரணத்தோடு அண்ட ஆற்றலோடு கலந்தாலும் உயிர் இருக்கும் போதே கலந்தாலும் சத்தியமான உண்மையான அண்ட ஆற்றல், எல்லா பிரச்சனைகளை தீர்த்து வைத்து பூரண விடுதலையை அளித்தே தீரும்.. இதுவே உண்மைகளுக்கெல்லாம் உண்மை.. என்றும் நிரந்தர உண்மை.. ஆனால் உயிரோடு இருக்கும் காலத்தே அண்ட ஆற்றலோடு கலக்க வகை அறியாது மனிதன் இருக்கின்றான்.. அந்த பெரும் குறையை தீர்க்க வந்ததே மர்ம யோகமாகிய தமிழ் யோகம்.. தோன்றா நிலையை விளக்கி அதில் அகநான் ஆகிய அக குருவை வெளிப்படுத்தி அந்த பூரண தகுதி பெற்ற அககுருவே அண்ட ஆற்றலோடு இணைந்து அத்து விதமாக மாறி பிரச்சனையும் மனிதனும் இரண்டு என நிலையை அறவே அகற்றி முழுமையான விடுதலையை தரும் 'ழ்' கர மெய் ஞானம் தரும் தமிழ் யோகமான மர்ம யோகம் போல் வேறு எதுவும் உண்டோ ? மார்க்கண்டேயன் தோன்றா நிலையில் சிவகலப்போடு அத்துவிதமாக இருந்ததால் தான் எமனே அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.. அதனால் மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவி என்ற இறவா வரம் பெற்றான்.. பிரச்சனைகளில் இருந்து விடுபட தீக்கோழி தன் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளுமாம்.. அப்படி இல்லாமல் முழு வல்லமை வாய்ந்த அண்ட ஆற்றல் பிரச்சனைகளை நேரடியாய் சந்தித்து அவைகளை தவிடு பொடியாக்கும் அற்புதத்தை அல்லவா நிகழ்த்தும்... எவ்வளவு கொடிய பிரச்சனைகள் இருந்தாலும் அண்ட ஆற்றலை அடையும் அந்த தருணமே சூரிய ஒளியை கண்ட இருள் போல அகன்று மறைவது தமிழ் யோகியரின் உண்மை அனுபவம்..

துவண்டு போன அன்பர்கள் எதிலும் பூரண விடுதலை அடைய தேடும் ஒரே வழி, அண்ட ஆற்றல் அடையும் வழி மட்டுமே.. தாங்கள் விடுதலை அடைவது மட்டும் அன்றி தங்களை சூழ்ந்தவர்களுக்கும் முழுமையான விடுதலை தரும் வல்லவர்கள் மர்ம யோகிகளான தமிழ் யோகியர்களே...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினேழு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினேழு
************************************************************************
அன்பும் அறிவும் இரு கண்கள்
ஒரு அன்பரின் கேள்வி :---- ஐய்யா தங்கள் பயிற்சியின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்பு நிலை அடைந்ததாக எண்ணுகிறேன்.. அதனால் தான் என்னவோ என்னை சுற்றி உள்ளோரின் மனதின் கபட நாடகங்கள், வெட்ட வெளிச்சமாக எனக்கு தெரிகிறது.. என்னோடு உறவு வைத்துக் கொள்ளும் அத்தனை பேரிடமும் ஒரு வித கபட தன்மையை நன்றாகவே உணரமுடிகிறது.. அந்த நிலையில் என் விழிப்பு தன்மை மேன்மையை குறித்து ஒத்துப் பார்த்து அவர்களிடம் இருந்து என் மேதாவிதனத்தால் என்னை பிரித்துக் கொள்ள முயலுகிறேன்.. இதனால் என் ஆணவ நிலை ஓங்கி விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.. இந்த பிரச்சனைக்கு தக்க பதில் தருமாறு வேண்டிக்கொள்கின்றேன்..
 பதில் :--- உண்மைதான்.. விழிப்பு நிலை உயர்வால் ஒருவர் உலகை பார்த்து நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா என கேட்கும் அளவிற்கு ஒரு மேதாவி தன்மை இந்த விழிப்பு நிலையாளருக்கு ஆரம்பத்தில் வரலாம்.. இது முதல் கட்ட விழிப்பு நிலை.. ஆனால் இன்னும் மேன்மை அடைய அடைய இந்த விழிப்பு நிலையாளருக்கு கூடவே அன்பு என்ற உயரிய பண்பு வளர தொடங்கும்... 'அ' என்ற அருளியல் விழிப்பு நிலையில் உள்ளவர்கள் 'பு' என்ற புவியில் வாழும் அனைத்திலும் அவர்கள் எந்த தரமாக இருந்தாலும், தன்னை 'ன்' என்ற முடிவான அதாவது மாறுபாடு இன்றி தங்களை இணைத்துக் கொள்வார்கள்... அன்பால் தங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் கொள்ள முனைய மாட்டார்கள்.. 
இந்த அன்பு உண்மையிலேயே விழிப்பு நிலையாளர்களுக்கு மட்டுமே இயலும்..

அண்ட ஆற்றலின் அதிக வரவால் விழிப்பு நிலை பெருக்கத்தால் விழிப்பு உற்ற விழிப்பு நிலையாளர்கள் ஓர் உயிர் முதற் கொண்டு ஆறறிவு உடைய மனிதர்கள் வரை அந்த அண்ட ஆற்றலே இயங்கி கொண்டு இருக்கின்ற சத்தியத்தை, உண்மையை, நன்றாகவே உணர்ந்த காரணத்தினால் எந்த உயிரையும் அண்ட ஆற்றலின் விளைவாக வந்தது என்பதை, தெளிவு பட அறிந்ததால் எவ்வுயிரையும், அண்ட ஆற்றலை போற்றுகின்ற விதமாகவே, மதிப்பு அளித்து போற்றுவார்கள்.. விழிப்பாளர்கள் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும், எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் உயர் பண்பு உடையவர்களாக இருப்பதால் அரசன் நிலையும், ஆண்டி நிலையும், அவர்களுக்கு ஒன்றே.. இதில் அரசன் ஆகும் அனைத்து தகுதிகளும், அளவிற்கு மேல் அதிகமாக இருந்தாலும், நினைத்த மாத்திரத்தில் அரசன் ஆகும் வல்லமை இருந்தாலும், ஆண்டியின் நிலையை ஏற்றே, எளிமையாக வாழ்வார்கள்..

ஒன்றை மட்டும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.. தங்களின் உயர்ந்த பண்பினாலே தான் தமிழ் மன்னர்களை அரியானையில் அதாவது சிம்மாசனத்தில் ஏற்றி ஆசியா கண்டத்தில் உள்ள பெரும் பாலான நாடுகள் அன்றைய கால கட்டத்தில் தங்கள் நாட்டின் மன்னராக முடி சூட்டி மகிழ்ந்தனர்.. இப்பொழுது எப்படி ஆகம கோவில்களில் பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் எனப் பட்டோருக்கு மட்டுமே பூஜை செய்யும் தகுதி உடையவர்கள் என்று நியமிக்கப் படுகிறார்களோ அவ்வாறே நேர்மை தவறாத தமிழ் யோகத்தால் தகுதி பெற்ற விழிப்பு நிலையாளரான தமிழ் மன்னர்களுக்கு நாட்டை ஆளும் தகுதி அளிக்கப் பட்டது... ஒரு சாதாரண குடிமகள் கண்ணகி, பாண்டியனுக்கு தவறை சுட்டிக் காட்டிய அந்த தருணமே தன் தவறை எண்ணி தாங்க முடியாமல் உயிரை விட்டான் பாண்டியன்.. முல்லை கொடி நிலை கண்டு தன் தேரையே தந்தான் ஒரு தமிழ் மன்னன்.. ஒரு பசுவின் கன்றுக்கு செய்த அநீதிக்காக தன் மகனையே தேர் சக்கரத்தில் மாய்த்தான் மற்றொரு தமிழ் மன்னன்... இந்த உயரிய பண்பினால் தான் தமிழ் மன்னர்களுக்கு ஆளும் தகுதி அளிக்கப் பட்டது.. இன்றைய கால கட்டத்தில் நம் அரசியல் வாதிகள் நம் தமிழ் மன்னர்களின் உயரிய நேர்மையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு இருக்கிறார்கள்..

ஆனால் விரைவில் மர்ம யோகிகள் தங்களின் விழிப்பு நிலை உயர்வால் அன்பும் அறிவும் ஆற்றலும் அளவற்ற நிலையில் பெறப் போவதால், நாளைய உலகை ஆளும் பொறுப்பு அவர்களிடமே தரப் படலாம்.. காரணம் தமிழ் யோகத்தின் மேன்மை அத்தகையது.. ஆகவே மர்ம யோகம் பயிலும் அன்பர்கள் விழிப்பு நிலையில், அறிவும் ஆற்றலை மட்டும் பெற்று இருக்க மாட்டார்கள்... சிவ கலப்பின் மூலம் பாகு பாடு இன்றி எல்லா உயிரிடத்திலும் அன்பால் இணைக்கப் பட்டு 'அன்பே சிவம்' என்ற நிலையில் எளிமை என்ற உன்னத நிலையை தன்னகத்தே வைத்து இருப்பார்கள்.. இந்த எளிமை என்பதற்கு எடுத்துக் காட்டாய் சிவனே பிச்சாண்டியாய் வந்தார் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. காமராசர் அப்துல் கலாம் போன்றோர் எளிமையால் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து நின்றது போல், அதற்கு மேலே மர்மயோகிகள் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.. மேலே சொன்ன அன்பரின் பிரச்சனை ஆரம்ப கட்ட விழிப்பு நிலையில் மனம் ஆடும் கடைசி விளையாட்டு.. அது விரைவில் காணாமல் போய் விழிப்பின் உன்னதத்தால் அன்பு மயமாகி சிவகலப்பால் சிவநிலை எய்துவார்கள்.... அது திண்ணம்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு
**************************************************
அந்த இருண்ட நாட்களில்
சுவாச ஒழுங்கின் மூலமும் சுவாச கூத்தின் மூலமும் தோன்றா நிலை அனுபவ பட தொடங்கும் அன்பர்கள் சற்று நீண்ட இருண்ட நாட்கள் அந்த தோன்றா நிலையில் அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.. அந்த இருண்ட நாட்கள் தான் ஒரு வரம்பிலே உள்ள தேகம் மற்றொரு வரம்புக்கு சரியாக தொடர்பு கொண்டு இரு வரம்பிலும் சென்று வரக்கூடிய பக்குவம் அடையும்.. திட தேகமான தூல தேகம், பயிற்சியில் அடையாளம் கண்டு கொண்ட தோன்றா நிலையாக விளங்கும் நுண் தேகமாக விளங்கும், இரண்டிற்கும் இணைப்பு ஏற்பட இரகசிய உடன் பாடு ஏற்பட சில நாட்கள் ஆகும்.. இந்த நாட்களே இருண்ட நாட்கள்.. வள்ளலார் திரு மூலர் போன்றோர் வாழ்வில் அந்த இருண்ட நாட்கள் சில வருடங்களாக இருந்தன.. வள்ளலார் வாழ்வில் 12 வருடங்களும் திரு மூலர் வாழ்வில் 30 வருடங்களும் அவர்கள் என்னவானர்கள் என்பது யாருக்கும் தெரியாது... அதே போல் இராமர் பஞ்சபாண்டவர்கள் 14 வருடங்கள் என வனவாசம் என மறைவாக இருந்தார்கள்.. நாடு காடு என்ற இரு வகை வாழ்வில் உண்மை பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. நாடு வாழ்க்கை என்பது நாடுதல் தேடுதல் கூடிய வாழ்க்கை.. காடு (க்+ ஆடு) வாழ்க்கை என்பது 'க்' என்ற இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ் நிலையோடு வாழ்வது..

தோன்றா நிலையோடு வாழும் வாழ்க்கை, இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ்நிலையில் வாழுகின்ற வாழ்க்கை.. அண்ட ஆற்றல் ஒரு மனிதனை பரிணாம வளர்ச்சி கொடுக்க ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.. அந்த நேரம் மனிதன் அமைதியாக காத்துக் கொண்டு இருக்கும் நேரமே இருண்ட நேரம்.. இருத்தல் என்ற ஒரு நிலையில் இருப்பதே இருண்ட நேரம் எனவும் சொல்லலாம்.. நம் இருப்பு தன்மை ஓங்கி இருக்கும் நேரம் இது தான்.. கருவிலே குழந்தை பத்து மாதங்கள் இருப்பு தன்மையிலே அண்ட ஆற்றல் செயல் பட காத்து இருக்கும் நேரம் இது தான்..

ஆகவே இருப்பு தன்மையில் காத்திருக்கும் தகுதி இல்லாத மனிதன் யோக நிலையில் முன்னேற முடியாது... காத்திருத்தலும் ஒரு யோகமே.. அதை தவம் யோகம் என சொல்லலாம்.. தன் தேகத்தை சுற்றி கரையான் புற்றுக்கள் வளரும் அளவிற்கு தவம் இருந்தனர் முந்தைய தமிழ் நிலை அறியாத தவசிகள்.. ஆனால் தமிழ் நிலை கற்றுதந்த தவமே சிவ கலப்பு.. கலப்பில் தீவீரம் அது பணிவு என்பதின் ஆழ்நிலை.. நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பணிவு என்ற நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தார்கள்.. பணிவு என்பது பிரிந்தால் ப்+அணி+ வ்+ உ எனலாம். பகர மெய் ஆகிய உயிரை ஏற்கும் அல்லது அணியும் அண்ட (விண்ணாகிய வ் ) ஆற்றலின், இயக்கம் ( உ )... அந்த இருண்ட நாட்களில் பணிவு என்ற அந்த நிகழ்வு நடக்கும்...

அருவருக்கத்தக்க கம்பளி புழு தன்னை சுற்றி கூடு கட்டிக் கொண்டு 15 நாட்கள் அந்த இருண்ட காலத்தை தன் இருப்பு தன்மையிலே கடக்கும் போது அண்ட ஆற்றலின் பணிவு என்ற செயல் பாடு திறம்பட நடப்பதால் தன் கூண்டிலிருந்து அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளி வருகிறது.. கம்பளி புழுவின் தோற்றத்திற்கும் வண்ணத்து பூச்சியின் தோற்றத்திற்கு எவ்வளவு பெரிய வித்தியாசம்... மனிதனும் அவ்வாறே கம்பளி புழுவுக்கு ஒத்த தன் தேக அமைப்பிலிருந்து தெய்வீக தேகத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடைவன்.. கம்பளி புழு விடவா மனிதன் தன் தரம் தாழ்ந்து போய்விட்டான் ? விடவேண்டியதை விட்டு விட்டு பிடிக்கவேண்டியதை பிடித்து விட்டால் எல்லாம் செயல் கூடும்..

சுவாச ஒழுங்கிலே தோன்றா நிலையை அடையாளம் கண்மர்டு அதில் தன் இருப்பு தன்மை வல்லமையால் இருக்க தொடங்கி விட்டால் அந்த தோன்றாநிலையே சுவர்க்க வாசல்.. அங்கே தன்னில் தானாய் இருக்கும், அந்த தோன்றா நிலையை அடையாளம் காணும் சிறு வெளிச்சமான அக நான் என்ற விழிப்பு நிலை இருக்கும்..

இப்பொழுது செயல் அற்று இருக்கும் அந்த அகநானை செயல் படுத்த முனையவேண்டும்.. அந்த கதியை அல்லது சுவாசத்தை அந்த அகநானே செய்யும் நிலைக்கு ஆளாக்க வேண்டும்... இது மிகவும் உன்னதமான யோக மாற்றம் .. இதற்கு நிகர் எதுவும் இல்லை.. சாட்சி நிலையாய் இருந்து தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இரண்டாய் இருந்து பிரிவினை செய்யும் அந்த நிலையை நீக்க அந்த அகநானையே கதி அல்லது சுவாசம் செய்து வைத்திட வேண்டும்.. அப்போது அகநான் அண்ட ஆற்றலோடு இணைய தொடங்கி அகநான் அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும்.. அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும் அந்த நாட்கள் தான் இருண்ட நாட்கள் அண்ட ஆற்றல் தன் பணியை செவ்வனே செய்ய பணிவு என்ற உன்னத யோகநிலை அவசியம் தேவை.. அகநான் சுவாசத்தோடு இருக்கும் அந்த இருண்ட நாட்களில் மிகுந்த கவனம் தேவை... அகநான் சுவாசத்தோடு இரண்டு என்ற நிலை அகன்று ஒன்றாய் இருக்கவும் பிரிந்து இரண்டாய் இருக்கவும், மீண்டும் மனதின் செயல்பாட்டினை அனுமதிக்கும் தகுதியோடு இருக்க வேண்டும்.. இப்படி பணிவோடு தவம் கோலம் பூண்ட நிலையில் அண்ட ஆற்றல் தூல தேகத்தின் உள்ளே ஒரு சூட்சம தேகத்தை உருவாக்கி விழிப்பு நிலையின் உதவியுடன் தூல தேகத்தை விட்டு வெளியே பிறப்பு எடுக்க செய்யும்.. இதனை இரண்டாம் பிறப்பு என்பர்..

இரண்டாம் பிறப்பு எடுப்பதே சித்தர்களின் நோக்கம்.. தூல தேகம் கட்டுப் பட்ட நிலையில் எங்கிருந்தாலும் அதிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய சூட்சம தேகம் அதிக வலு வாய்ந்தது.. காலமும் தேசமும் கடந்து தூல தேகத்தைக் காட்டிலும் பல மடங்கு திறனுடன் அந்த சூட்சம தேகம் செயல் படும் போது, இந்த உலகின் தரமே தலை கீழாக மாறி விடும்... சத்தியமும் தர்மமும் உண்மையும் மட்டுமே இங்கு இருக்க முடியும்..

மதுரை அன்பர்களுக்கு அந்த இருண்ட நாட்களில் இருக்க வேண்டிய முக்கிய பயிற்சி கடைசியாக அளிக்கப் பட்டு 14 நாட்கள் தீவிர பயிற்சி இன்றோடு ( 28-9-15 ) முடிந்தது.. அவர்கள் தங்கள் விழிப்பு நிலையால் தோன்றா நிலையில் உள்ள அக நானே சுவாசிக்கும் பயிற்சியில் தேர்ந்து அண்ட ஆற்றலாய் ஒருமையுடன் கலக்கும் திறனை பெறுவார்கள் என நம்பலாம்.. மலை ஏறி பயிலும் அன்பர்களுக்கு மட்டுமே அந்த கதி என்ற தோன்றாநிலையை பலப்படுத்தும் சுவாசம் எளிதாக சுத்தமாக விரைவாக கைகூடும் என்பதால் மலை ஏறும் பயிற்சியை செய்கிறார்கள்.. அப்பயிற்சியை செய்யும் கோவை அன்பர்களுக்கு விரைவில் நேரடி பயிற்சி அளிக்கப் படும்.. இது மிக நுண்ணிய ஆபத்தான பயிற்சி ஆகையால் நேரடி பார்வையில் மட்டுமே இப்பயிற்சி தரப் படும்.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் எல்லாம் செயல் கூடும் என உறுதியாக நம்பலாம்.. வெறும் கற்பனை வளத்தில் உருவானதல்ல.. நடைமுறை சாத்தியத்தால் ஆனது..

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து
*************************************************************************
அனைத்தையும் தரும் தமிழ் நிலை
தமிழ் தீவிர ஆர்வலர் திரு ஓதியடிமை அவர்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.. எனது பேசும் தமிழை காட்டிலும் செய்யும் தமிழ் நிலையை கண்டு கோரி உள்ளார்.. தமிழ் மொழியில் பள்ளி நிலை மட்டுமே தேர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரியில் முழுமையாக ஆங்கிலத்தில் படித்ததால் எனது மொழியில் குறை இருப்பின் மொழி அறிஞர்கள் மன்னிக்கவும்...

பாடல் :--- 
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”
தண்டியலங்காரம் .. இந்த அருள்பாவிற்கும் சிவ கலப்பின் ஒங்குதலுக்கும் உள்ள சிறப்பை சற்று விளக்குங்கள் அய்யனே
அதாவது:--
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது 
தன் ஏர் இலாத தமிழ்

விளக்கம் :--
 
தன் ஏர் இலாத தமிழ் 
*********************************
ஏர் என்பது, என்று என்று ( எ+ எ = ஏ ) தொடர் நிலையாக பிறவி குணமாய் இருக்கும் நிலை.. 'ர்' என்பது பிறவியால் அமைந்த நிலை.. தன் ஏர் என்பது தனது தனது என்று என்று தன்முனைப்போடு தொடர் நிலையாய் இருக்கும் ஆணவ நிலையாகும்.. அது இல்லாத நிலையை போக்குவது தமிழ் நிலை.. ஆம் தமிழ் நிலை ஒன்றே தன் ஏர் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.. தமிழ் நிலையை சுட்டிக் காட்டாத தமிழ் மொழி பாழ் தான்.. இன்று நம் தமிழ் மொழி அவ்வாறு இல்லை என்பது மிகவும் வருந்த தக்க விசயம்.. அதனால் தான் உலகில் உள்ள ஆயிர மொழிகளில் தன் தனி சிறப்பை இழந்து அதில் ஒன்றாக உள்ளது.. அந்த தமிழ் நிலையால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தமிழ் மன்னன் தன் அடையாளத்தை முற்றிலும் துறந்து தன் ஏர் இலாத நிலையில் இருந்தான்.. முகநூல் பக்கத்தில் அவர் சமாதி அடைந்த ஒரு சாதாரண இடத்தை காட்டும் படத்தை பார்க்கும் போது அவரின் தன் ஏர் இலாத உயரிய நிலை கண்டு கண்களில் நீர் வடிகிறது.. தமிழ் நிலை கண்ட தமிழ் மொழி அறிந்தவர்கள் நம் நாயன்மார்களும் ஆழ்வார்களும்.. தொண்டர் அடி பொடி ஆழ்வார், நந்தனார் போன்றோர் தன் ஏர் இலாத நிலையில் உயர்ந்த நிலையில் விளங்கிய விதம் நெஞ்சை உருக்குகிறது.. ஆனால் மேலோட்டப் பார்வையால் ஆணவ போக்கால் அவர்கள் மேன்மை அறியாது இருக்கிறோம்..

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ:--
*******************************************
அப்படி பட்ட தமிழ் நிலையால் என்றும் ஓங்குதல் நிலையே மனிதருக்கு வந்து சேரும்.. ஒடுங்குதல் என்பதும், சோர்வும் என்பதும் இல்லைவே இல்லை.. விழிப்பின் உச்சத்தில் ஓங்கியே இருக்கும் தமிழ் நிலை அறிந்தோர் வடித்த கற் சிலைகள் சொல்லும் ஆனந்த கண்ணீர் கதைகள் ஏராளம்.. ஒரே கல்லில் வடித்த அற்புத சிலை வடிக்கும் சிற்பி சிவ கலப்பில் இல்லையென்றால் அந்த சிலையை வடிக்கவே முடியாது.. எல்லாம் வடிவமைத்து காலில் ஒரு விரலில் ஒரு நகத்தை செதுக்கும் போது சிறு தவறு ஏற்பட்டாலும், பல மாதங்கள் வடிவமைத்த சிலையே பாழாகி போய் விடும்.. வினாடிக்கு வினாடி சிவகலப்பு என்ற தெய்வீக விழிப்பு நிலையில் இருந்ததால் மாத்திரமே அது சாத்தியமாயிற்று.. அன்றைய ஒரு சிற்பி முழுமையாக சிவகலப்பு அறிந்த தமிழ் நிலையில் இருந்த அருள் அரசன்.. அவருடைய தன் ஏர் இல்லாத நிலை கண்டு இன்றைய ஆட்சி ஆளார்கள் தலை குனிந்து நிற்க வேண்டும்.. ஓங்கலிலே ஓங்கி ஓங்கி சென்ற நிலையிலே பொருள் சக்தியாலும் அதிகார சக்தியாலும் உயர்ந்தோர் அவர்களை தொழுதனர்.. தொழுதே ஆக வேண்டும் என்ற உயரிய அருள் நிலையில் தமிழ் நிலை அறிந்தோர் இருந்தனர்.. பட்டினத்தாரை பார்த்து அரசன் கேட்டான்.. எல்லாவற்றையும் துறந்து இப்படி இருப்பதால் என்ன பலன் என கேட்க நீர் நிற்க நான் கிடக்க என்றார் பட்டினத்தார்.. அருள் ஓங்கலிலே இருந்து அமர்ந்த வண்ணம் இருந்து தேடி வந்து வணங்கி கேட்ட, நின்ற படி, இருந்த அரசனுக்கு ஒரு தகுந்த பதிலை தந்தார் பட்டினத்தார்.. அதனால் தான் ஓங்கலிலே இருக்கும் தமிழ் நிலையாளரை அரசனை போன்றோர் தொழுதே ஆக வேண்டும் என்பது...

ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் :--
*********************************************
பிரபஞ்சமான அண்டம், ஒலியால் ஒளியால் ஆனது.. யோகத்தில் ஒலியை சக்தியாகவும் இயக்கமாகவும் குறிப்பர்.. அறிவினை ஒளியாக குறிப்பர்.. சிவநிலையாக அறிவு நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் காதற்ற ஊசியும் வாராது காண் காணா கடை வழிக்கே என்ற சிறு அறிவு கூட இன்றி, செயல் இயக்கத்தின் மூலம் பொன்னும் பொருளும் அதிகாரமும் சேர்க்க ஏங்கி ஏங்கி செயல் இயக்கம் மூலம் முனைவோரை ஏங்கும் ஒலி இனத்தார் என்றனர் தமிழ் நிலை கண்டோர்.. நீர் என்பது எண்ண ஆதிக்க முடைய சித்தம் என்ற எண்ணப் பதிவுகள்.. நீர் பூதத்தால் இயங்கி பொன் பொருள் அதிகாரம் சேர்க்க மனிதன் முனைகிறான்.. அப்படியான எண்ண பதிவுகளும் எண்ண ஆதிக்கமும் நிறைந்த ஞாலம் என்ற பூமியில் ஒளி யின்றி இருள் பரவி கிடக்கிறது.. அந்த இருளை அகற்ற முடியும் என்றால் அது தமிழ் நிலையால் மட்டுமே முடியும் என்பதை அறியாது இன்றைய ஞாலம், உலகம் உள்ளது,, இனி வரும் காலங்களில் தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழியாக ஆனால் மட்டுமே உலகம் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப் படும்..

மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்று:-
****************************************
தன் ஏர் நிலைக்கு நேர் எதிரானது மின் ஏர்.. நுண் ஆற்றல் சூட்சம சக்தி மின் ஆற்றல் எனலாம்.. மின்சார ஆற்றலை நாம் மின் சக்தி என்கிறோம்... ம் என்ற எழுத்து நீக்க மற அதாவது நீக்க முடியாத அளவு சிவ கலப்பாக பொருந்திய நிலை.. இதில் ன் என்ற 18ஆம் கடைசி மெய் எழுத்து முடிவானது என பொருள் கொள்ளும்.. நீக்கமற பொருந்திய நுண் சக்தியை சக்தியை குறிக்கும் அண்டத்தின் ஒரே சக்தி கருணை மட்டுமே.. அதனால் தான் அருட் பெருஞ்சோதி வடிவமே தனி பெருங்கருணை என்றார் வள்ளலார்... தன்னை மட்டுமே நினைக்கும் ஆணவ நிலையான தன் ஏர் நிலை இல்லாமல் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணும் மின் ஏர் நிலைக்கு கொண்டு செல்லுவது தமிழ் நிலையாம்.. முல்லைக்கு தேரை தந்த பாரி, பசுவின் கன்று உயிர் பறித்த தன் மகனை தேர் சக்கரத்தில் பலி இட்ட தமிழ் மன்னன், நீதிக்கு தன் கையை தானே வெட்டிக் கொண்ட கரிகால் வளவன் போன்ற எண்ணற்ற தமிழ் நிலை அறிந்தோர் தன்னகத்தே கொண்டது மின் ஏர் நிலையே.. அன்னவர்கள் உடல் உள்ளம் உயிர் மூன்றிலும் முழுமையாக பொருந்திய யாழி நிலையினை பெற்றிருந்தார்கள்.. தனி யாழி நிலை என்பது தனிப் பெரும் கருணை போல் எதுவும் கலவாத தனித்த யாழி நிலை என்பது.. அது எவ்வளவு இனிமையானதோ அந்த அளவுக்கு இனிமையானது யாழ் என்ற இசைக் கருவி.. அந்த நிலையால் தங்கள் அருள் ஆற்றலால் வெங்கதிர் வீசும் அதாவது கருணை என்னும் அருள் ஆற்றல் பரப்பும் திறனை பெற்று இருந்தார்கள்.. வெங்கதிர் என்றால் வெளி கதிர் அதாவது எல்லை இல்லாத வெளி நிலையாகிய அண்ட முழுவதும் பரப்பும் கதிர் ஆற்றல்.. அப்படி பட்ட மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனைத்தும் தரவல்லது மற்றும் அதுவாக தன் நிலைக்கு மாற்றும் மாற்றம் மட்டுமே தருவதாம் நமது தன் ஏர் இலாத தமிழ்.. அதாவது எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே தருவது தமிழே...
ஆங்கம் அவற்றுள் என்பதில் அங்கம் என்ற குறுகிய தேக நிலை இல்லாமல் ஆங்கம் என்ற அண்ட அகண்ட காரத்தில் உள்ள அனைத்திலும் என பொருள் கொள்ளும்...

மொத்த பாடலின் விளக்கம்
****************************
ஓங்கல் என்ற ஒன்றிலேயே தொடர்ந்து இருக்கும் போது உயர்ந்தோர் அவர்களை தொழுது வாழ்த்த, அதனால் அவர்களின் சிறப்பு உயர்ந்து விளங்கி நிற்கவும், எண்ணப் பதிவுகளால் உலகியலில் பொருள் சேர்க்கைக்கு வேண்டி போராடும் இருளை போக்கவும் மின் ஏர் நிலையால் அருள் கருணையால் அருள் கதிரொளி பாய்ச்சி அனைத்தையும் அதுவாகவே ஆக்கவும் செய்யவல்லதாம் தன் முனைப்பை நீக்க வல்ல தமிழ்..

அன்பர்களே மர்ம யோகம் என்ற மறையோகம் அல்லது தமிழ் ஓகம் ஒருவரது கருணை பெருக்கத்தால் தகுதி பெருக்கம் அடைந்து உலகை ஆளும் தகுதி அவர்களுக்கு ஒப்படைக்கப் பட்டதால் தான் அன்றைய நிலையில் உலகில் பல பகுதிகளிலும் தமிழ் நிலை அறிந்தோர் ஆண்டு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.. அலெக்ஸாண்டரை போல் கத்தி முனையில் ஆளும் தகுதியை நம் தமிழ் மன்னர்கள் ஒரு போதும் பெற்றிருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.. அப்படி பட்ட தமிழ் நிலை தரும் தகுதி பெருக்கம் அடைந்தோர் இடம் ஆளும் தகுதி ஒப்படைக்கப் படும்.. அது பலவந்தமாக பிடுங்கப் படுவதல்ல.. மர்ம யோகம் என்பது அண்ட அற்றல் பெருக்கத்தால் கருணை வடிவாகி தகுதி பெருக்கம் அடைந்து தனியாழி வெங்கதிரோனாய் மாற்றம் காணுவதே.. திரு ஓதியடிமைக்கு என் தமிழ் நிலை பணிவினை அளிக்கின்றோம்.. அதை விட உயர்ந்த பணிவு பரிசு வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை...

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு
*************************************************************************
இளக்கம் இறுக்கம் இவற்றின் தாக்கம்
தகாத காதலில் விழுந்தேன், தகுதிக்கு உடன் படாத ஆசையில் விழுந்தேன், கோபத்தில் விழுந்தேன், காமத்தில் இராவணனை போல் விழுந்தேன், என மனிதன் சதாகாலமும் விழுந்து கொண்டே இருந்து புண் பட்டு மாய்கின்றான்.. ஆறாத மன புண்கள் அவனது அடுத்த பிறவிக்கும் தொடருகிறது.. பீஷ்மரை பலி வாங்க சிகண்டி அம்பை ஆக அடுத்த பிறவி எடுக்கிறாள்.. இனம் தெரியாத பல மன புண்களோடு பிறக்கிறோம்.. அந்த மன புண்களால் புற வாழ்வில் தன்னிச்சையாக விழுகின்றோம்.. எந்த குறிக் கோளையும் முன் வைக்காமல் காதல் கோபம் ஆசையில் விழுகின்றோம்..
குதித்தல் என்பதும் விழுவதற்கே.. அதில் ஒரு குறிக்கோள் இருக்கிறது.. கண்ணப்பர் தன் கண்களை பிடுங்க குதித்தார்.. காளி தாசன் காளியின் முன் மாய்வதற்கு குதித்தான்.. ஆனால் விழுந்த இடமோ இறைவன் மடியில்.. அதற்கு நிகரான உடன் பாடு சுவாசத்தில் பயிலும் அன்பர்கள் மனதின் கடைசி அடையாளத்தை இழந்து விழிப்பு என்ற புனிதத்தில் விழ வீரம் கொண்டு குதித்தே ஆக வேண்டும்... ஆனால் மனதால் அந்த கடைசி அடையாளத்தை நகர்ந்து சென்று இழக்கத் துணியாது.. ஒரு போதும் அப்படி செய்யாது.. அதனை விழிப்பால் தள்ளி விடப் பட்டு குதிக்கச் செய்தால் மட்டுமே மனம் சுவாச ஒழுங்கில், நான் இருக்கிறேன், செய்கிறேன் என்ற கடைசி அடையாளத்தை இழக்க முடியும்.. ஆன்மீகத்திலும் புற உலக நல்ல செயல்களிலும் தயக்கம் ஒரு பெரிய தடையாக இருந்து, மனிதன் இழந்தது அளவிட முடியாதது.. விழிப்பு நிலையால் இயக்கப் படும் குதித்தல் என்பது ஒரு வீர யோகம்.. அன்றாட வாழ்வில் எத்தனை பேர் தயக்கத்தின் காரணமாக நாளை நாளை என்று நாட்களை கடத்தி வீணாய் போகின்றனர்.. பயம் உணர்ச்சி ஒன்றினாலே மட்டுமே உந்தப் பட்டு வாழ்வியலை நடத்துவோர் அநேகம்.. கடைசி தேதியன்று மன உழைச்சலோடு நிற்போர் கூட்டம் அதிகம்.. அந்த குதித்தல் என்ற வீர யோகம் ஒன்றே மனதின் கடைசி தயக்கத்தை உடைத்து எறியும்..
 அடுத்தப் படியாக ஏன் மூச்சு திணறல் வருகின்றது என பார்ப்போம்.. நமது தேகம் செயல் பாடுகள் குறைவுப் பாட்டால் இறுகி போய் விட்டால், சற்று அதிக உழைப்பு என்று வரும் சமயம், அதிக சக்திக்காக அதிக மூச்சுக் காற்று உள்வாங்க வேண்டியதிருக்கும்.. அந்த சமயம் இறுகி போன நுறையீரல் மார்பகங்கள் அந்த அதிக காற்றை உள் வாங்க போதிய இளக்கம் கொடுக்காமல் இறுகிய நிலையில் திடமாக உள்ளதால் தான், உள்சென்ற காற்று எதிரொலித்து வெளியே தள்ளப் படுகிறது.. உள் செல்ல முனையும் காற்றும், வெளியே தள்ளப் படும் காற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுவதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.. சாதாரண நிலையிலே மூச்சு திணறல் இருந்தால், சுவாச உறுப்புகள் மிக மோசமான நிலையில் இறுக்கத்தில் இருக்கிறது என்று அர்த்தம்... அதுவும் மழை குளிர் காலங்களில் தேக இறுக்கம் மிகமோசமானதாக இருக்கும்..
மலையேற்றப் பயிற்சியில் முதலில் தேக இறுக்கத்தை நீக்குவதே முதல் குறிக்கோள்.. மலையேறும் போது ஏற்படும் சுவாச இளைப்பினை ஒன்று மனதை கட்டுப்படுத்தி மன இளக்கம் பெறவும், மற்றொன்று தேக இறுக்கத்தை தளர்த்தி, தேக இளக்கம் பெறவும் பயன் படுத்துகிறோம்.. அந்த சில நிமிடங்களில் மிகவும் தோய்வாக தளர்வாக வைத்துக் கொள்ளும் போது, இளைப்பு வேகம் மிக வேகமாக குறைய தொடங்குவது வியப்பாக இருக்கும்.. மலை ஏற்றம் காணும் போது உணர்வோடு தேக அசைவுகளில் மனம் மிக பொருந்தி இருக்கவேண்டிய அவசியம் மிக மிக முக்கியம்.. இதன் மூலம் மட்டுமே தேகத்தை தளர்வாக தோய்வாக வைத்துக் கொள்ள முடியும்.. அண்ட ஆற்றல் தேகத்திற்குள் சென்று செயல் பட தேகம் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.. அது தன்னை தளர்வு படுத்திக் கொண்டால் மட்டுமே, தளர்வுக்கு ஏற்றார் போல் அண்ட ஆற்றல் தேகத்தில் உள்ளே பாயும்.. அந்த இளைப்பு வரும் சமயம் அந்த இளைப்பை 
ஏன் மனம் உடன் பட்டு நிற்க வேண்டும் என்றால் தேக தளர்வு ஏற்படவே.. தேக தளர்வு ஏற்படும் சமயம் மனமும் அதற்கு ஏற்றால் போல் தன் விரைப்பு குணத்தை விட்டு விட்டு, தளர்வு அடைய தொடங்கும்.. அதனால் அண்ட ஆற்றல் அதிகம் உள் புக தேகம் அதிக ஆற்றலை பெறுகிறது..
இந்த பயிற்சியில் இளைப்பு வரும் வரை சிரமம் எடுத்துக் கொண்டு படியேற வேண்டும்.. இளைப்பின் வேகத்தை முறையாக பயன் படுத்தி தேக இறுக்கத்தை நீக்கி தேக இளக்கம் பெற வேண்டும்.. தொடர் பயிற்சியில் தேகம் இரப்பர் போல் உடனடி இளக்கத்தை பெறும் போது, படியேற்றத்தில் பயங்கர முன்னேற்றத்தை காண முடியும்.. இன்றைய நிலையில் அன்பர்கள் 6 நிமிட அளவில் மலையேறி சாதித்தனர்.. அதில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்பர் ஒருவரும், 67 வயது மர்ம யோகியும் சேர்த்து தான்... வயதும் தேக நோய்களும் இங்கே காணாமல் போய் விடுகிறது...

எந்த காரணத்தை கொண்டும் இளைப்பு இல்லாத மலைஏற்றம் கூடவே கூடாது.. அதன் மூலம் மட்டுமே தேகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தளர்வாகவும் இளக்கமாகவும் மேலும் மேலும் வைத்துக்கொள்ள முடியும்.. அந்த இளக்கம் காற்றின் அளவிற்கு தளர்வாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்லலாம்... இப்படி தேக இளக்கத்தை உருவாக்க மடி கூத்து சுவாசத்தை அன்பர்கள் பயிலுகின்றனர்.. மடி அல்லது மடிதல் என்றால் மரணம்.. மரணத்தில் தேகம் தளர்வின் உச்சத்திற்கு செல்வது போல் இந்த சுவாசத்தில் தேகம் தளர்வு நிலை உச்சத்திற்கு செல்லுகிறது.. இந்த நிலையில்  உள் வாங்கும் சுவாசத்தில் அளவற்ற காற்று இழுக்கப் படுவதால் தேகம் அதனை தாங்கும் தகுதியையும் பெறுகிறது.. இப்பயிற்சியின் மூலம் சுவாச இளைப்பு விரைவாக குறைக்கப் பட்டு மலை ஏற்றத்தில் செயன் திறன் மிகவும் அதிகரிக்கிறது... மலை ஏற்றத்தில் மட்டும் அல்ல அன்றாட வாழ்வியலிலும் செயன் திறன் கூடவே செய்யும்.. அடுத்த வகுப்பு தொடங்கும் வரை மலைஏற்றமோ அல்லது தரையில் ஓடியோ வேகமாக நடந்தோ மூச்சு இளைப்பை உருவாக்கி தேக இளக்கம் காணுமாறு மற்ற அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்..

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று
***********************************************************************
குதித்தல் ஒன்றுக்கான வீரம் தேவை இப்போது
மறந்து போனதால் காணாமல் போன சுவாசத்தை தேடி கண்டு பிடித்தது ஒரு பக்கம்.. அப்படி தேடி கண்டு பிடித்த சுவாசம் முரண் பாடாய் இருப்பதால் ஏற்பட்ட நஷ்டங்களை உணர்ந்து முரண் பட்ட மனதை உடன் பாடு கொண்டு,
அண்ட ஆற்றலை முழுமையாக பெறுவது மற்றொரு பக்கம்... உடன் பாடு சுவாசத்தையே அடியாளமாக கொண்டு, தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள மனம் நடத்தும் நாடகம் சற்று விசித்திரமானது.. உடன் பாடு சுவாசத்தில் தன் அடையாளத்தை மிக குறைந்த அளவில் மனம் நிலை நிறுத்திக் கொள்ள மிகவும் சிரமப் படுவது அன்பர்கள் அறிந்ததே.. தன் அதிகார ஆணவ செயல்கள் பலவும் பறி போய் இருக்கின்ற நிலையில், அற்ப அதிகார அடையாளங்களோடு, மேலும் இழக்காமல் இருக்க மனம் மிகவும் முயலும்.. இந்த நிலையில் உடன் பாடு சுவாசத்தையே ஒரு பயிற்சியாக கொண்டு மேலும் மனம் தன் அற்ப அடையாளங்களை இழக்காமல், எதிரே இருக்கும் தோன்றா நிலையை கண்டு களிக்காமல், பயிற்சியிலேயே தான் மிகவும் விசுவாசமாக இருப்பது போல் நடித்துக் கொண்டு தோன்றா நிலையை தவிர்க்கவே முயலும்... இந்த நிலையில் தன்னில் நிலை கொண்ட விழிப்பு சக்தி செயல் பட தொடங்க வேண்டும்.. அது உடன் பாடு சுவாச பயிற்சியில் சிக்குண்ட மனதை தன் பால் முழுமையாக இழுத்துக் கொள்ள வேண்டும்.. இதுவே விழிப்பு நிலையின் மனம் மேல் கொண்ட முதல் ஆதிக்க நிலை... அதன் பிறகு விழிப்பே மனதின் அதிபதியாக விளங்கத் தொடங்கும்..
 ஒரு நிலையில் மன இழுப்பிற்கு சமமான இழுப்பிற்கு மேல் விழிப்பு நிலையின் இழுப்பு மேல் ஓங்கும் போது அது நிகழுகிறது.. அதுவே மனதின் திருப்பு முனை.. அந்த திருப்பு முனைக்கு பின் மனதின் இயல்பே முழுமையாக மாறி விடும்.. அசுத்த மனம் சுத்த மனமாகி விடும்.. உடன்பாடு சுவாசம் பயிலும் ஒவ்வொரு அன்பர்களும் அந்த திருப்புமுனைக்கு முயல வேண்டும்.. உடன் பாடு சுவாசம் ஒரு சுட்டி காண்பிக்கும் ஒன்றாகும்.. ஆனால் அது சுட்டிகாட்டும் மெய் பொருள் தோன்றா நிலையே.. சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை விட்டு விட்டு சுட்டும் பொருளாகிய சுவாச ஒழுங்கே அனைத்தும் என தீர்மானமாய் இருக்கும் மனதின் செயல் பாட்டை அன்பர்கள் புரிந்து கொண்டு சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை நோக்கி விழ வேண்டும்.. மனதில் இருந்து விழிப்பில் குதித்தல் இதுதான்.. இதில் குதித்தல் மட்டுமே உதவும்.. நகர்தல் உதவாது.. நகர்ந்து செல்லும் தருணம் மனம் மீண்டும் விழிப்பு நிலை விட்டு விலகி விடும்.. குதித்தல் ஒன்றே செயல் கூடும்.. குதித்தலால் மட்டுமே 'க்' என்ற கனல் நிலையாம் விழிப்பு நிலை உதித்து கைகூடும்.. குதி என்ற பயிற்சியே க் என்ற விழிப்பு நிலை உதி-க்க ( க்+ உதி=குதி ) செய்யக்கூடியது.. அதற்கு வீரம் வேண்டும்.. மனம் தன்னை இழந்து விழிப்பு நிலையோடு ஒன்றி புதுமை பெற தாயாராக வேண்டும்...

அங்கே அந்த விழிப்பு நிலையோடு எதுவும் மனம் பிடித்துக் கொள்ளாத புதுமை நிலையோடு சற்று பழக வேண்டும்.. அங்கே மனத்திற்கு வேண்டுவது எதுவும் இல்லை.. ஆனால் எல்லாம் கிடைத்தது போல் ஒரு நிறைவு கிடைக்கும்.. அந்த நிறைவு எந்த ஒன்றாலும் தரமுடியாத முழுமையான பரி சுத்த நிறைவு.. எதனோடும் ஒப்பிட முடியாத நிறைவு.. எந்த உலகப் பொருளாலும் ஈடு கட்ட முடியாத நிறைவு.. இதுவரை உலகப் பொருள்களிடம் ஆசைகள் ஆயிரம் வைத்து, நிறைவேறாமல் ஏக்கங்களை சுமந்த மனம் இந்த புனித நிறைவால் பூரண நிறைவடைந்து இனி எதற்கும் ஆசை படாத உன்னத நிலையினை அடைய துவங்கும்.. விழிப்பு நிலையோடு பொருந்திய மனம் பரி சுத்த நிறைவு கொள்வதால், அது உலகப் பொருள்களிடம் நாட எந்த தேவையும் இல்லை.. இந்த நிலையில் மனம் உலக பொருள்களிடத்தில் ஆதாயம் எதையும் தேடாமல், அவைகளிடம் தனக்குள்ள கடமையை செய்ய துவங்கும்... இந்த மாபெரும் புனித மன மாற்றம் விழிப்பு நிலை என்ற புனிதத்தோடு சேரும் போது மட்டுமே நிகழும்..

இங்கே தன் கடமையை நிறைவேற்ற தனக்கு வேண்டிய சக்தியை தான் தேடி போய் அலைய மனதிற்கு தேவை இல்லை.. தானே விழிப்பு என்ற அண்ட ஆற்றல் மையத்தில் இருப்பதால் ஆற்றலுக்கு எந்த குறை பாடும் மனதிற்கு இல்லை.. அதனால் மனதிற்கு தேடுதல் என்பது துளியும் இல்லை.. அன்பர்களே உடன் பாடு சுவாசத்திலிருந்து வீரம் கொண்டு குதித்து விழிப்பு என்ற தோன்றா நிலைக்கு மையம் கொள்ள விரைவீர்.. அங்கே மனதிற்கு பூரண நிறைவு காத்துக் கொண்டு இருக்கிறது..

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு 
***************************************************************************
 அடி கூத்தின் அவசியம்
அடி கூத்து என்பது அடிப் படை கூத்து அல்லது ஆதார கூத்து எனப்படும்.. முதலில் கூத்து என்பது என்னவென்று பார்ப்போம்.. க் என்பது கடவுள் ஆற்றல்... ' உ' என்பது இயக்கம்.. 'ஊ' என்பது 'உ' என்ற இயக்கத்தின் தொடர்ச்சி நிலை. அதுவே தடை படா இயக்கமான ஊக்கம் என்பது.. உலகில் உடைமை என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தது ஊக்கம் ஒன்றே.. ஊக்கம் உடைமையே உடைமை என்றார் தெய்வ புலவர் திருவள்ளுவர்.. மற்ற உடைமைகள் எல்லாம் ஊக்கம் என்பதை பின் தொடர்ந்து வருபவையே.. இப்படியாக உள்ள ஊக்கம் ஒரு நுண் பொருள் அதாவது சூட்சமமானது.. இந்த நுண் பொருள் நுண் பொருளாகவே இருந்தால் ஒரு பலனும் இல்லை.. அது தகர இயக்கமாக உருவாக வேண்டும்.. அதாவது திட இயக்கமாக வேண்டும்... திடம் ஆக வேண்டும்.. அப்பொழுது தான் பொறி புலன்களுக்கு வெளிப் பட்டு விளக்கம் பெறும்.. பரந்த அண்டமும் சூரியன் முதலிட்ட கோள்களும் இறைவனின் அருள் திறத்தை விளக்க வந்த திடநிலை.. இந்த திட நிலையை பார்த்து பார்த்து வியந்து வியந்து அருள் திறத்தை உணர்ந்து உணர்ந்து நெகழ வேண்டிய மனிதன் மாயா தோற்றங்களில் சிக்கி அருள் இயக்க உண்மைகளை தொலைத்து விட்டு, சினிமா போலி அரசியல் போன்ற மாயா வாதங்களில் சிக்கி வாடுகிறான்.. தமிழ் என்ற சொல்லில் உள்ள முதல் எழுத்தே இந்த உண்மை விளக்கம் பெற்ற திட நிலையான தகர மெய் ஞானம் அல்லது மெய் தெளிவு.. சிவனை தகராசனன் என்பார்கள்.. அருள் சக்தி, உண்மை என்றால், திடநிலை விளக்கம் பெற்றது, சிவம் ஆகும்.. சிவம் இல்லையேல் சக்தியின் வெளிப்பாடு அறிய முடியாது.. அருள் என்ற விழிப்பு சக்தி இலையேல், எதுவும் விளக்கம் பெறாமல் வெளிப்படாது.. இப்பொழுது நாம் காணும் திட அல்லது உருவ காட்சிகள் எல்லாம் சிவநிலையாகி அருளின் உண்மையை உணர்த்த வந்த தகர மெய் ஞானம் அல்லது தெளிவு...
கூத்து என்பது கடவுள் நுண் ஆற்றலை திட நிலையாக விளக்கம் பெற மாற்றம் காணுவது.. சிவனின் கூத்து என்பது அவனின் நுண் ஆற்றலை விளக்கம் அளிக்க இயங்கும் முறையே... ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற ஞானம் பெற சிவன் எடுக்கும் ஒவ்வொரு இயக்கமும் தெளிவை நோக்கிய பயணமே.. தெளிவை நோக்கி பயணப்படவேண்டிய மனிதன் இன்று மயங்கிய நிலை நோக்கியே பயணப் படுகிறான்.. தமிழ் காட்டும் வழியே முழுமையான தெளிவை நோக்கிய பயணமே.. அந்த வழியே முழுமையான விழிப்பு நிலை.... தமிழ் காட்டும் விழிப்பு நிலை சென்றவர்களே தமிழர்கள்.. அவர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்கள் தமிழ் நிலை அறிந்த தமிழர்கள்.. தமிழ் நிலை வேறு தமிழ் மொழி வேறு.. தமிழ் நிலை காட்ட வந்த தமிழ் மொழி இன்று ஆங்கில வடமொழி கலப்பில் தமிழ் நிலை காட்டும் வல்லமையை பெரும் பாலும் இழந்து விட்டதே.. அதனால் உலக முழுமைக்கும் உள்ள மனித குலம் இன்று வேதனை கடலில் மூழ்கி தெளிவு இன்றி தவிக்கிறது.. தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழி ஆனால் மட்டுமே உலகம் காப்பாற்றப் படும்... இதை தான் முகநூல் அன்பர் ஓதியடிமை அவர்களின் ஆழ்ந்த வற்புறுத்தல்.. வள்ளலார் அவர்கள் வெள்ளை இனத்தவர் இதனை செய்து முடிப்பார்கள் என்றார்.. தமிழ் நெறியே சன்மார்க்க நெறி அதாவது எல்லாவற்றிக்கும் சத்தாக ஆதாரமாக உள்ள நெறி என குறிப்பால் உணர்த்தினார்..

அப்படி பட்ட கூத்தை ஏன் அடி கூத்து என சொல்ல வேண்டும்.. அடி என்றால் அருள் நிலையில் மேலும் கீழும் முழுமையாக இருப்பவர்கள்.. அடியார்கள் என்பது அத்தகையோரே.. அடி கூத்து பயிலும் போது அடியார் தகுதியை பெறுவதோடு கூத்தின் மூலம் அருள் விளக்கம் பெறவும், அருளை திட நிலை ஆக்கும் வல்லமையையும் பெறுகிறோம்.. மின்சாரம் அருவமான அருள் நிலையை சார்ந்தது.. அது மின் விசிறி இயக்கமாக விளக்கம் பெறும் போது மட்டுமே அதன் பயன் தூய்ப்பு திடமாக தெரிகிறது.. இப்படி அடி கூத்து செயல் பாட்டை நடத்த உதவ, சுவாசத்தை ஒரு வழியில் உட் படுத்துவது தான் கதி எடுத்தல் என்ற அடி கூத்து.. அதாவது கூ என்ற இறை அருள் ஆற்றலை து என்ற திட தேக ஆற்றலாக மாற்றுவதே கூத்து.. இந்த கதி சுவாசத்தில் ஆரம்ப தொடக்க நிலையாக உள்ள அடி கூத்தில், அருள் சக்தியானது திட நிலைக்கு உதவும் அதிர்வுகளாக மாற்றப் படுகிறது.. அப்படி மாற்றப் பட்ட அதிர்வுகளை முறையாக பயன் படுத்துவதே தடி கூத்து, படி கூத்து, மடி கூத்து போன்றவைகள்.. அவைகளை ஒவ்வொன்றாக தெளிவாக பார்க்கலாம்.. அடி கூத்தில் மேன்மை அடையவில்லையென்றால் எல்லாம் பொய்த்து விடும்.. இப்படி மாற்றத்தை உருவாக்கும் அடி கூத்திற்கு தேவையான சக்தியை வழங்குவதே உடன் பாடு கூடிய சுவாச ஒழுங்கு.. சுவாச ஒழுங்கு தாயாகி நின்று கூத்தாட உதவி செய்யும்... இந்த கூத்தின் விளைவாக தோன்றா நிலை என்ற விழிப்பு கருவறையில் அகநான் என்ற அககுரு பக்குவ நிலையில் வளர்க்கப் பட்டு ஞான குழந்தையாக முருகனாக வெளிப்படுவார்.. அவரே தமிழ் நிலையை, தரும் தகுதி உடையவர் என்பது தமிழ் மறையின் மூல கருத்து... ம் என்ற சிவகலப்பிலே உருகன் அதாவது உருவானவன் தான் முருகனாக கருதப் படும் அக குரு... சமய முருகன் இந்த தமிழ் முருகனை மையப் படுத்தி எழுந்தவன்.. மேற் கொண்டு நகரும் விளக்கம் நமக்கு குழப்பமே தரும்.. சத்தை பிடித்துக் கொள்வோம்.. அதுவே அடி ஆகும்.. அடி கூத்தை முறையாக பிடிக்கும் முன் அன்பர்கள் உடன்பாடு சுவாச ஒழுங்கில் மேன்மை அடைய முனையுமாறு வேண்டிக்கொள்கிறேன்...