Monday 17 August 2015

15 & 16 அன்று சேலம் அடுத்த மேச்சேரியில் நடந்த வகுப்பு சம்பந்தமாக

15 & 16 அன்று சேலம் அடுத்த மேச்சேரியில் நடந்த வகுப்பு சம்பந்தமாக....

அன்பர்களே சேலம் அடுத்த மேச்சேரியில் 15 & 16-8-15 ல் நடந்த வகுப்பு மிகவும் நல்லபடியாக நடந்தது.. உலக நடப்புகளில் சிக்க வைக்கும் வெளிச்சத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க பல வகையான உதாரணங்கள் எடுத்து சொல்லப் பட்டதால் அவை ஆன்மீக பயணப் பாதைக்கு விரைவு படுத்த மிகவும் உறுதுணையாக இருந்தது.. கனல் என்றால் என்ன அதன் அவசியம் என்ன என்பதையும் விரிவாக எடுத்துச் சொல்லப் பட்டது... கனல் சார்ந்த வாழ்வு ஒன்றே ஆன்மீகத்திற்கும் உதவும் என்பதையும் வெளிச்சத்தை சார்ந்த எந்த ஆன்மீகவும் முடிவுக்கு உதவாது என்பது விளக்கப் பட்டது.. அண்ட ஆற்றல் உடல் பயிற்சியில் அனைவரும் கலந்து கொண்டதும், எடை இரத்த அழுத்தம் துடிப்பு மற்றும் சக்கரை அளவு இவற்றில் இரண்டு நாள் வாய் வழி உணவு உண்ணாமல் இருந்தும், தேகத்தில் மிக சிறு சிறு மாற்றங்கள், மட்டுமே இருந்தது மிக சிறப்பான விசயம்.. இரவு நயன தீட்சைப்பற்றிய சொற்பொழிவும் அகல் விளக்கு நம் தேகத்தில் ஏற்றி வைக்கும் பயிற்சியும் நடை பெற்றது.. இரவு 12 மணிக்கு மேல் முருகனின் சித்திரத்தில் முன் எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் போது சித்திரத்தில் ஏற்பட்ட பெரிய பெரிய அசைவுகள்,எல்லோராலும் பார்க்க முடிந்தது, மிக சிறப்பானதாகும்.. சித்திரத்தில் இருந்து முருகன் இறங்கி வந்ததை போன்ற காட்சிகள் பிரமிப்பு ஊட்டியது.. ஒவ்வொரு அண்ட ஆற்றல் ஊடல் பயிற்சியின் சமயம் மழை பெய்யும்.. அதே போல் இரவு தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை பெய்தது..

ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணி முதல் மாலை 4.00 மணி வரை நல்ல மனிதனாய் வாழ உடன் பட்ட சுவாசமும் சுவாச ஒழுங்கு பயிற்சியும், மாமனிதனாய் மாற விழிப்பு நிலை சுவாசப் பயிற்சியும் நடைப் பெற்றது.. மருத்துவ பரிசோதனைக்கு பின் அன்பர்கள் கலைந்து சென்றனர்.. தேவையான நன் கொடை அளித்து செலவின் பளுவை மொத்ததையும் குறைத்த அன்பர்களின் தயவு மிகவும் பாராட்டுக்குறியது... தங்கள் கருத்துக் கணிப்பு வரவேற்கப்படுகின்றன..

No comments:

Post a Comment