Saturday 7 November 2015

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி
அன்பர்கள் மூன்று ஞாயிற்று கிழமைகளில் மலை ஏற்றம் பயின்று, தொடர்ந்து மற்ற நாட்களிலும் வீட்டு மாடி படிகளில் ஏறியோ அல்லது மைதானத்தில் ஓடியோ பயிலும் போது பெரும் சுவாசம் என்ற மூச்சு இளைப்பில் மனம் தன் செயற்ற தன்மையில் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையினை அனுபவப் பட்டீர்கள்.. அந்த எண்ண ஆதிக்கங்கள் இல்லாத நிலையில் தங்கள் மனதின் எல்லைக்கு அப்பால் மனம் அறியாத வண்ணம் அண்ட ஆற்றலின் அதிக வரவால் கடினமாக வேகமாக மலை அல்லது படியேறியும் மூச்சு இளைப்பு வெகுவாக குறைந்து போய் இருக்கிறது என சில நண்பர்கள் சொன்னார்கள்.. இதை தான் எதிர் பார்க்கப் பட்டது.. இது மிகவும் நல்லது.. நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.. இது தோன்றாநிலையில் மட்டுமே அண்ட ஆற்றல் வரவு அதிகமானதின் அடையாளம்.. தோன்றா நிலையில் பெறப் படும் அண்ட ஆற்றல் காரியப் பட்ட செயல் பாடுகளில் மட்டுமே வெளிப் படும்.. அதனை காண மனதால் ஒரு போதும் முடியாது.. ஊக்கமும் உற்சாகமும் செயல் பாட்டின் திறனில் மேன்பட்ட நிலைதான் அதிக அண்ட ஆற்றலின் வரவின் வெளிப்பாடு.. அதனை காண முடியவில்லை என எவராவது புலம்பினால் மர்ம யோகத்திற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.. மர்மத்தை மர்மமாகவே ஏற்றுக் கொண்டு பயின்றால் மட்டுமே பெருத்த ஆதாயம் காண முடியும்.. கடவுளும் ஒரு மர்மமே.. ஒரு மறைவான அருவ நிலையில் உள்ளவரே.. அவரை மனதால் அறிய முயன்று முயன்று இன்று மனித குலம் அவரை விட்டு விலகி விலகி நிற்கிறது..

மர்ம நிலையிலும் அருவ நிலையிலும் இருக்க வேண்டிய பேரறிவு, மன கற்பனையின் குளறுபடியால் திரிபு களங்கம் ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் அந்த பேரறிவு சரியான விதத்தில் செயல் படாமல் உள்ளது.. அடியாளம் காண்பிப்பது அவசியம் ஆயினும் அந்த உருவநிலை அடையாளம் பெரிய அளவிலே ஆதிக்கம் செலுத்தி அருவ நிலையாகிய தோன்றா நிலையினை அழித்து விட்டதால் தான் இன்று உலகில் ஆற்றல் குறைபாட்டால் மனித குலம் மகிழ்ச்சியை இழந்து, அந்த மகிழ்ச்சியை திரும்ப பெற தகாத வழியை தேர்ந்து எடுக்கிறது.. தகாத வழியில் மகிழ்ச்சியை பெற என்றுமே முடியாதது.. ஆகவே மறைவு நிலையான மர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது.. புரியாத மர்மத்தை புரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது.. இதில் மனதால் நுழைய துடிப்பவர்கள் எவரும் கரை ஏறவே மாட்டார்கள்... இன்றைய ஒட்டு மொத்த மதங்களும் ஆன்மீகங்களும் மனதால் நுழைய துடித்து பல தடவை தோற்று போயும் பாடங்களை எதுவும் கற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அதே தவறு செய்து கொண்டு இருக்கிறது.. அந்த தவறை நீக்கி தோன்றா நிலையை மனதால் ஏற்றுக் கொள்ள பயிலுவதற்கு தான் இந்த மலை ஏற்றப் பயிற்சி..

தோன்றா நிலையை விழிப்பு நிலையால் உணரும் அன்பர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல வேண்டும்.. உணர்வு என்றாலே விழிப்பு நிலை அது தோன்றா நிலையில் மட்டுமே உணரப் படும்... நினைப்பு என்றாலே மனத்தின் செயல் பாடு.. அது தோன்றும் நிலையாலே மட்டுமே நடக்கும்.. தோன்றா நிலையில் ஆற்றல் வரவும், தோன்றும் நிலையில் ஆற்றல் செலவும் நடை பெறுவது அன்பர்கள் நன்கு அறிந்ததே.. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நினைப்பு சதா காலமும் உணர்வினை கெடுத்துக் கொண்டே, அல்லது சீரழித்துக்கொண்டே இருக்கிறது என்பது தான்.. உணர்வினை பிடித்துக் கொள்வதின் மூலம் நாம் தோன்றா நிலையில் நீடிக்க முடியும்.. இப்பொழுது தோன்றா நிலையை, உடன் பாடு சுவாச மூலம் அடையாளம் தெரிந்து உணர்ந்து கொண்ட நாம், அதில் நீடிக்க உணர்வு மயமாக இருக்க முயல வேண்டும்... இது மிக கடினமான பயிற்சி.. முந்தைய பயிற்சி வேகத்தில் நடந்தது.. இப்பொழுது மிக நிதானமாக நடக்க வேண்டிய ஒன்று...

இனி வரும் மூன்று வாரங்களில் அதாவது 4, 5, 6, வது வார ஞாயிற்றுக்கிழமைகளில் பயிலக்கூடிய பயிற்சி மிக முக்கியமானது.. இந்த மூன்று வாரங்கள் உணர்வு வாரங்கள்.. கடந்த கால அனுபவ இறப்பு தன்மையை ஒழித்து நிகழ்கால புத்துணர்ச்சியும் வாழ்வும் பெற, பெரிய மாற்றத்திற்கான பயிற்சி.. விழிப்பு நிலை ஏற்றத்திற்கான, வலுவடைவதற்கான பயிற்சி.. வரும் ஞாயிறு முதல் மூன்று வாரங்கள் அன்பர்கள் மிக நிதானமாக மலை ஏற வேண்டும்.. அண்ட ஆற்றல் தேக ஆற்றலான கனலாக மாறும் போது ஏற்படுகின்ற இரசாயன மாற்றம் தான் உணர்வு.. மலையேறும் அன்பர்கள் இந்த இரசாயன மாற்றமான உணர்வில் மனம் பொருந்தும் போது, மனம் வெளிச்சத்தை விட்டு விலகி கனலை நோக்கி நகருகிறது.. கனல் பெருக்கத்திற்கு அது மிக உதவுகிறது.. இரசாயன மாற்றம் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற, அந்த உணர்வில் மனம் பொருந்தும் போது, நிகழ்கிறது.. உணர்வோடு மனம்.. இது தாரக மந்திரம்.. என்றும் மறக்கக் கூடாது.. உணர்வோடு மனம் கனல் என்ற அக்கரை சேர்க்கும்.. அந்த அக்கரை, வெளிச்சம் என்ற இக்கரையான அக கறையை, அக அழுக்கை நீக்கும்.. இதில் புரித்தலில் சிக்கல் இருந்தால் கேள்வி எழுப்பலாம்..

வெளிச்சமான மனதை தான் எண்ண ஆதிக்கங்களோடு கூடிய வழக்கமான மனம் என்று சொல்லிகொண்டு வருகிறோம்.. கனலோடு பொருந்திய மனம் ஒன்று மட்டுமே சுத்த கனலான விழிப்பு நிலையோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.. உணர்வோடு மனம் பொருந்தும் போது கனலோடு தொடர்பு கொள்வதால் இந்த மனம் அகநான் என்ற மனமாக மாறி தெய்வீக தொடர்புடன் இருக்கிறது.. இந்த தெய்வீக அக நான் வேலையை வேல் ஆக மாற்றும் வித்தையை செய்கிறது.. ஆனால் வேல் ஒன்றை ஏவும் வேலவன் அதாவது முருகன் இன்னும் உதிக்க வில்லை.. வேலவன் தோற்றம் அடுத்தக் கட்ட பயிற்சி.. தற்போது குழப்பிக் கொள்ள வேண்டாம்.. வேலவனுக்கு அதாவது முருகனுக்கு முன்பே வேல் தோன்றியது என்பது புராணம்.. தற்போது அகநானாகிய வேல் தோன்ற உணர்வு ஒன்றிலே மனம் பொருந்த வேண்டிய அவசியம் ஆகிறது... எண்ண ஆதிக்கங்கள் நிறைந்த ஒரு வேலை ஒன்றினை கனல் நிறைந்த தோன்றா நிலையான, வேல் ஆக வடிவெடுத்து நாம் புறத்தே திறம் பட இயங்க உணர்வு மயமாய் மனம் ஆக வேண்டும்.. புறத்தே செயல் பாட்டின் திறனை மேலும் மேலும் பெருக்க செயல் பாடு வீரர்களாய் மாறவும், நிறை நிலை மனிதனாய் மாறவும், அடுத்த கட்ட பயிற்சிகளை தொடர்வதற்கு நம்மை தயார் படுத்த, தற்போது உணர்வோடு மனம் பொருந்த, மலை ஏற்றும் பயிற்சியை வரும் மூன்று வாரங்கள் மிகுந்த உணர்வோடு பயில்வோமாக.. ஞாயிற்று கிழமை மற்றும் அல்லாது மற்ற வார நாட்களில் பயில்வது மிக அவசியம் ஆகிறது.. வாழும் நெறியான சிவகலப்பை நோக்கி நகர்ந்து நிறை நிலை மனிதனாக மாறும் நோக்கம் ஒன்றையே குறிக் கோளாக கொள்வோமாக...

No comments:

Post a Comment