Saturday 7 November 2015

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்
அற்புதத்தை அற்பமாக்கி விட்டதால் உலகம் என்றும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.. இன்றைய சூழ்நிலையில் அதிகம் தடுமாறுகிறது.. அற்புதத்திற்கு வரையறுக்க முடியாத அண்ட ஆற்றலும் அதன் எல்லையில்லா தனி பெருங்கருணையும் இன்று மனித குலம் மிக அற்பமாக நினைப்பதை தான் சித்தர்கள் நெஞ்சு பொறுக்குவதில்லையே என புலம்பினர்... அந்த அற்புதத்தை அற்புதமாக நினைக்கும் தருணம் மனிதன் மிக பெரிய அற்புதம் செய்யும் வல்லமை அடைகிறான் என்ற ஒரு மிக சாதாரண உண்மையை அறிந்து கொள்ள முடியாது இருக்கிறான்... அறிவு நிலையாகிய ஆகாயமும் அதன் ஆற்றலையும் என்ன சொன்னாலும் உளமாற மனிதன் நம்பத் தயாராக இல்லை.. நிஜத்தை நம்பிக்கையாகவே வைத்துக் கொண்டு நடைமுறைக்கு வராமல் சில மாயை கோட்பாடுகளை அதை சுற்றி புனைந்து நிஜத்தை முற்றிலும் மறைத்தே விட்டார்கள்.. அந்த மறைப்பிற்கு பின்னால் இருக்கும் நிசத்தை உண்மையை நொடியில் கண்டு அறிந்து ஒவ்வொரு நொடியும், அந்த உண்மையோடு ஒவ்வொரு மலை படி ஏறும் போது ஒவ்வொரு அடியும் வைக்கும் போது, அது தெய்வீகமாக மாறுகிறது.. தெய்வீகத்தை இதுவரை துளியும் அனுபவப் படாத மனித குலம் அந்த அண்ட ஆற்றலால் இந்த தேகம் இயங்குகிறது என்பதை உணரும் போது, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அடியும் ஒரு இனம் தெரியாதஉணர்வு தோன்றுகிறது... அந்த உணர்வு வேறு ஒன்றும் இல்லை.. எல்லையில்லா அகண்டகார பெருவெளியில் அங்கு இங்கு என குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துள்ள புனித பரிசுத்த அண்ட ஆற்றல், தேகத்தில் ஊடுருவும் போது தேக சக்தியான கனலாய் மாறும் மாற்றம் தான் அது.. அப்படி பட்ட உணர்வினை நாம் உணவு உண்ணும் போது எவ்வளவு இழிவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது நாமே நமக்கு தெரிந்த ஒன்றே.. ஒவ்வொரு தொழிலாளியும் தன் தேக உழைப்பு ஒரு தெய்வீக பேர் இயக்கம் என்பதை அறியாது வேலை செய்கிறார்..

நொடிக்கு நொடி மறக்காமல் ஒவ்வொரு படியும் ஏறும் போது அந்த தெய்வீக பேர் இயக்கம் செயல் படுகிறது என்ற உணர்வோடு செல்ல செல்ல என்ன நிகழ்கிறது என்பதை அனுபவப் படும் அன்பர்கள் தான் சொல்ல வேண்டும்... காலிலே தேகத்திலே உள்ள உணர்வோடு மனம் இணைந்து படி ஏறும் போது தோன்றா நிலை அனுபவப் படுவது மட்டும் அல்ல, தோன்றாநிலை வலு படுவதையும் உணரலாம்.. அதனால் அதிக அண்ட ஆற்றல் வரவின் காரணமாக படிகளில் ஏறும் போது ஒரு சுலப தன்மையை மேலும் மேலும் உணரும் போது வியப்பினை தரும்..

அண்ட ஆற்றலின் அதிக வரவால் படிகளே நம்மை தாங்கி தாங்கி ஏற்றிச் செல்லுகிறதோ என சந்தேகிக்கும் அளவிற்கு நம் நிலைமை மாறலாம்.. அப்படி அனுபவப் பட்டதால் தான் படி பூஜையில் ஒவ்வொரு படிக்கும் சந்தனம் குங்குமம் 
கற்பூரம் வைத்து வழிபட்டனர்.. இழந்து போன அந்த அனுபவத்தை நாமாவது இரண்டு மூன்று வாரங்களில் பெறுவோமாக.. அதனை அந்த சத்தியத்தை உணர்ந்து நடப்பதால் இதுவும் நிச்சயம் நமக்கு சாத்தியமாகும்...

நிதானமாக ஆரம்பத்தில் படியேற வேண்டும்.. முதல் மூன்று வாரங்கள் பயின்ற அன்பர்கள் தோன்றா நிலை அனுபவத்தோடு படியேற வேண்டும்.. ஒவ்வொரு படியும் உணர்வினை தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.. எந்த படியையும் உணர்வின்றி மனதால் வேகமாக கடந்து போகக் கூடாது..அப்படி படிகளில் கடக்கும் போது பெரு மூச்சு என்ற இளைப்பு வந்தால் சற்று நின்றோ உட்கார்ந்தோ உடன் பாடு சுவாசத்தில் பயில வேண்டும்.. மூன்று வாரங்களில் முறையோடு அக்கரையோடு பயின்றவர்களுக்கு அப்படி பெருமூச்சு வர சந்தர்ப்பம் இல்லை... அப்படி வந்தால் தாங்கள் பயிற்சியில் பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு தீவிர பயிற்சியை இனி மேலாவது வரும் நாட்களில் மேற் கொள்ள வேண்டும்...

4,5&6 வாரங்கள் உணர்வு வாரங்களாக பயின்றால் தான் அடுத்து 7வது 8வது வாரத்தில் மூன்றாம் கட்ட பயிற்சி சுலபமாக கைகூடும்.. மிக சிக்கலான மூன்றாம் கட்ட நான்காம் பயிற்சியின் தன்மையை மனதில் கொண்டு மிகுந்த சுய ஒழுக்கத்தோடும் சுய சிந்தனையோடும் பயிலுவது அன்பர்களின் பொறுப்பு..உடம்பினுள் உரு பொருள் கண்டேன், உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான், என்ற திருமூலர் வாக்குப் படி, உடம்பினுள் புகுந்து இறை வாழும் கோவிலில் நுழையும் இந்த அரிய பயிற்சி செய்யும் போது வெளியே நம் நடவடிக்கைகளை சுத்தமாக குறைத்துக் கொள்வது மிகுந்த பயன் அளிக்கும்.. நிகழ் கால தெய்வமாகிய அண்ட ஆற்றலை விட்டு விட்டு கடந்த கால எண்ண அலைகளின் ஆதிக்கத்தில் நாம் நம்மை இழப்பது, நம்மை நாமே வருத்திக் கொள்வதாகும்... ஆகவே பேச்சை முடிந்த மட்டும் அதிகப் பட்சம் குறைத்துக் கொண்டு, நிகழ் கால இறையாகிய அண்ட ஆற்றலோடு ஒன்றித்து பயின்று பெருத்த ஆன்ம இலாபம் அடைவோமாக...

No comments:

Post a Comment