Saturday 7 November 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு (5-11-15) 
****************************************************************** ***************************
இயல் ஆற்றல்--- நெருப்பாற்றல்
நமது மறையோகமாகிய மர்மயோகத்தில் ஆற்றல் பெரும் விதமே தனி விதம்.. அன்பின் அடிப்படையில் இயங்கும் மர்மயோகம் அவ்வாறு தனி விதமாக இருக்க வேண்டியதிருக்கிறது.. ஒரு சுவாசத்தில் சூரிய கலையில் பெற்ற ஆற்றலை சந்திர கலையில் வானத்தில் ஒரு பெரிய மின்னலை உருவாக்கலாம்.. இது நெருப்பாற்றல் பெற்ற நிலையில் நொடியில் அடைந்து சாதிக்கக் கூடியது... அந்த நொடி என்ற சொல்லில் தான் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.. மொத்த மர்ம யோகத்தின் சாரமும் உள்ளது.. இந்த நிலையில் உள்ளவர்களோடு சாதாரணமானவர்கள் எப்படி இணைந்து செயலாற்ற முடியாது... சாதாரணமானவர்களோடு இணைய முடியாதவர்கள் எப்படி அன்பை செலுத்த முடியும்.. சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் இதனால் தான் அன்பை நேரடியாக உடனே செலுத்த முடியாமல் போய் விடுகிறானோ ? அன்பினை செலுத்த என்றும் இயல்பாய் இருக்க, இயல்பான ஆற்றலுக்கு, திரும்ப மாறும் தகுதிக்கு வர வேண்டும்.. மீண்டும் இயல் ஆற்றல் பெற்று இயல்பாக இருந்தால் மட்டுமே ஒருவன் தனது அன்பை வெளிபடுத்த முடியும்..

அன்றைய புராணத்தில் அகிலத்தையே ஆளும் இறைவன் பிச்சாண்டியாய் உலகில் பிச்சை எடுத்தாராம்.. ஒரு ஏழையின் கூரையிலிருந்து தங்க நாணயங்களை கொட்டி தந்த சங்கரர் பிச்சை எடுக்கும் பொழுது தான் ஏழையை சந்தித்து நெல்லிக்கனியை பிச்சையாக பெற்றார்.. பட்டினத்தாரும் ஆதி சங்கரரும் என்னதான் மகான் நிலைக்கு உயர்ந்தாலும் தாய் இறந்த உடன் பதறி அடித்துக் கொண்டு இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.. இறைவனுடைய அவதாரங்களும் அன்பின் வெளிபாடே.. ஆனால் இன்றைய வசதிப் படைத்த குருமார்களை, சாதாரணமானவர்கள் பார்ப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது... அதற்கு அன்பின் குறைபாடே காரணம்.. அன்பு கலவாத எந்த யோகமும் அர்த்தமற்றது..

மர்ம யோகிகள் தாங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் அளவற்ற ஆற்றலை எந்த நிலையிலும் வெளிக்காட்டாது மறைத்து வைத்தே இருப்பார்கள்.. வானத்தில் ஒரு சுவாசத்தில் மின்னலை உருவாக்கினாலும் அது எவரால் உருவாக்கப் பட்டது என எவரும் அறியாத வண்ணம் தங்களை மறைத்துக் கொள்வதால் அவர்கள் மர்மயோகியர் ஆகிறார்கள்.. பேரும் புகழும் பிறரிடம் காட்டி கையேந்தி பெறவேண்டியது எதுவும் அவசியம் இல்லை.. தங்கள் தவ ஆற்றல் மூலம் தங்களை தனிமை படுத்த ஒருபோதும் விரும்புவே மாட்டார்கள்.... ஆனால் அளவற்ற தனது அன்பின் வெளிபாட்டால் எல்லோரையும் தன்னிடம் இணைத்து கொள்வார்கள்.. இதிலிருந்து தெரிய வேண்டியது முக்கியமான செய்தி ஒன்று உண்டு...

அண்ட ஆற்றல் பெறும் பயிற்சியை செய்பவர்கள் அதில் பலவகையான வினோதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.. பலரின் வருத்தம் என்ன வென்றால் தொடர்ந்து அதில் இருக்க முடிவதில்லை என்பது தான்.. தொடர்ந்து இருக்க முடியாத பட்சத்தில் தாங்கள் யதார்த்த நிலையில் இயல்பான நிலையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைய வேண்டும்... இயல்பு நிலையில் இருந்து கொண்டு நினைத்த மாத்திரத்தில் அளவற்ற அண்ட ஆற்றலை பெறும் திறனை பெற வேண்டும்.. வலுவுக்கும் திறனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. வலு ( strength ) என்பது நிரந்தரமாக இருந்தாலும், ஒரு வரையறைக்கு மேல் செல்ல முடியாது.. ஆனால் திறன் ( efficiency ) என்பது இயல்பான நிலையில் இருந்தாலும் வலுவின் எல்லைக்கு அப்பால் சென்று அளவற்ற நிலையில் விரிந்து விரிந்து செல்லக் கூடியது.. மற்றைய யோக முறைகள் வலுவை பெருக்கி பெருக்கி ஒரு மனிதனை தனிமை படுத்துவது.. ஆனால் எதிலும் சிக்கி கொள்ளாமல் விரிந்து விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்லும் திறனை வளர்க்கும் நெறிதான் மர்ம யோகம்.. அதனால் தான் இதில் அவ்வளவு குறுகிய காலத்தில் பெருத்த ஆன்ம இலாபம் கிடைக்கிறது..

பயிற்சியின் காலத்தில் பயிற்சியின் சமயம் மட்டுமே தீவிரம் காட்டுதல் மூலம் திறனை வளர்த்து பௌதிக கலப்பிலிருந்து முடிவான அருள் கலப்பாகிய சிவ கலப்பிற்கு நாம் செல்ல முடியும்... தீவிரமும் திறனும் கலப்பின் மேன்மையும் ஒன்றுக்கு ஒன்று பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு... முக்கிய இரகசியம் என்னவென்றால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் வாய்த்த நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே பயில வேண்டும்.. மற்ற 22 மணி நேரமும் இயல்பான நிலையில் இருக்க வேண்டும்..

XXX ஒரு கால கட்டத்தில் பயிற்சியை காட்டிலும் இயல்பாய் இருப்பது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்... அந்த நேரத்தில் விழிப்பு நிலை தன்னை பலத்திக் கொண்டு பயிற்சியின் சமயம் திறனை பெருக்கி கொள்ள ஆயத்தமாகும் ... இயல்பு நிலை ஒன்றே திறனை வளர்க்க உதவும் XXX..

மற்றபடி இயல்பு நிலையை கெடுத்துக் கொண்டு தன் உடல் முழுவதும் கரையான் புற்று சூழ தவம் செய்பவர்கள் வலு அடைவார்களே தவிர திறனை அடையமாட்டார்கள்... இயல் நிலையை தவற விட்டவர்கள் ஆன்மீகத்தில் தோற்றே போய் விட்டார்கள்... ஆரம்ப சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் போது மட்டுமே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.. அது இயல் நிலையிலே செய்யப் படுவதால் இயல் நிலையை பாதிக்காது... பின்னால் வரும் மாற்றம் தரக்கூடிய நிலைக்கு வரும் போது கால அளவிலே பயில வேண்டியது அவசியமாகிறது...

மலையேறும் பயிலும் அன்பர்கள் தோன்றா நிலையை உணர்ந்து விட்டால் அண்ட ஆற்றல் சற்று அதிகமாக வரத் தொடங்கும்.. அதுவும் பற்றாது.. மேலும் மேலும் அதிகப் படுத்துவதற்கான பயிற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் போது, பழையவற்றில் பற்று வைக்கக் கூடாது.. காரணம் மேல் பயிற்சியிலேயே கீழ் பயிற்சியின் விளைவுகள் 
தொடர்ந்தே வரும்.. மேல் சொன்னவற்றை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்...

No comments:

Post a Comment