Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஐந்து

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஐந்து 
*************************************************************
வள்ளலார் தமிழ் நெறியில் உள்ள நான்கு பயிற்சி நிலைகளை சொல்லுகிறார்,, இது யோக நிலைக்கு மிகவும் பொருந்தும்.. அந்த நான்கு நிலைகளில் ஒவ்வொன்றிலும் உட் பிரிவுகள் உண்டு.. ஆக மொத்த 16 பயிற்சி நிலைகள் உள்ளன... அந்த நான்கு முக்கிய பயிற்சி நிலைகள் 1) சரியை 2) கிரியை 3) யோகம் 4) ஞானம் .. வாசி யோகத்தில் இந்த நிலைகள் என்ன என்ன என கவனிப்போம்..

1) சரியை:-- உடன்பாடு சுவாசம், சுவாச ஒழுங்கு, உணர்வு நிலையில் பொருந்துதல்
2) கிரியை :-- கதி சுவாசம்
3) யோகம் :-- கனல் சுவாசம்
4) ஞானம் :--- கரு நிலை சுவாசம்

நாம் இப்போது மலை ஏறும் பயிற்சியில் சரியை நிலையில் இருக்கிறோம்.. இந்த சரியை நிலை நான்காக பிரிகிறது.. 
1) சரியையில் சரியை
2) சரியையில் கிரியை
3) சரியையில் யோகம்
4) சரியையில் ஞானம்

சரியையில் சரியையில் நாம் சரியான நேரத்தில் திட சிந்தனையோடு தியாகமும் அன்பும் நிறைந்த உள்ளத்தோடு வாழ வேண்டும் என்ற குறிகோள் உடன் வருகின்றோம்.. காலம் தவறாமையும் திட சிந்தனையும் செயலில் இறங்குவதும்
இதன் முக்கிய பங்குகள்..

சரியையில் கிரியையில் மலை ஏறும் பயிற்சியில் உடன் பாடு சுவாசம் மூலம் நமது தோன்றா நிலையை பிடித்து, அண்ட ஆற்றல் வரவினை அதிகப் படுத்துவது...

சரியையில் யோகத்தில் உணர்விலே மனதை பொருத்தி கால அளவினை அதிகப் படுத்துவதின் மூலம் அண்ட ஆற்றல் வரவினை ஒழுங்கு படுத்தி நினைத்த மாத்திரத்தில் தேகத்தின் துணை இல்லாமல் சுவாசத்திலேயே அண்ட ஆற்றலை ஒழுங்கு படுத்தி சுவாச ஒழுங்கினை பெறுவது..

சரியையில் ஞானத்தில் அகநானை அடையாளம் கண்டு அகநானில் செயல் படுவதும், அப்படி அகநானில் செயல் படும் போது அண்ட ஆற்றலே அகநானாய் இருந்து செயல் படுகின்ற உயர்ந்த ஞானத்தை தெளிவை பெறுவது..

சரியையில் சரியை-- திருமண நிலை
சரியையில் கிரியை-- கருவுற்ற நிலை
சரியையில் யோகம் --- குழந்தை பிறந்த நிலை
சரியையில் ஞானம்--- மகனாய் வளர்ந்து வளர்த்தவனையே தாங்கும் நிலை..

தோன்றா நிலையில் கருவுற்ற நிலையில் அகநான் தோன்றியாயிற்று.. அந்த அக நான் வளர்க்கும் விதமாக சரியையில் யோகம் என்ற நிலைக்கு நாம் அடியெடுத்து வைத்து இருக்கிறோம்.. அந்த அக நான் குழந்தைக்கு உணர்வு என்ற உணவு ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. அன்பும் கடமையும் இரு கண்களாக கொண்டு உணர்வோடு இருந்து 4, 5 &6 வாரங்களில் அகநானை வளர்ப்போம்... இப்பொழுது 5 வது வாரத்தில் ( 15-11-15 அன்று ) அடியெடுத்து வைக்கிறோம் .. மிகவும் கவனமாக பயில வேண்டுகிறோம்...

காலத்தை விரையம் பண்ணாது அக்கரையுடன் பயிலும் போது நாம் அடுத்த நிலையாகிய கிரியையில் காலெடுத்து வைக்க முடியும்... கிரியை நிலைக்கு தங்களை தயாராக்க முனைப்போடு பயிலுமாறு வேண்டுகின்றேன்.. டிசம்பர் மாதம் 27 ந்தேதி கிரியை நிலை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.. அதற்குள் சரியையில் ஞானம் என்ற பயிற்சியை அந்த குன்றத்தூர் முருகன் அருளால் முடித்து யோக குழந்தையை, முருகனாய், நம்மில் காண விழைவோம்...

No comments:

Post a Comment