Wednesday 15 July 2015

19-07-15 ல் ஞாயிறு அன்று மதுரையில் ஆன்மீக வகுப்பு



அன்பர்களே மதுரையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று பேரருள் திருவுள சம்மதத்தின் பேரில் ஆன்மீக வகுப்பு நடத்தப் பட உள்ளது.. பிறந்த நிலையில் சவமாக தோன்றிய இந்த தேகத்திற்கு உயிர் என்ற இயக்க சக்தியை அளித்த அந்த பேரருள், இந்த தேகம் உருமாறி நிலைபெற, நித்தியத்தை அடைய, உளவுகளையும் சேர்த்தே மூச்சு என்ற ஒரு இயக்கத்தையும் உயிர் இயக்கத்தோடு இணைத்தே வைத்து இருக்கிறது.. அந்த மூச்சு என்ற உளவு இயக்கத்தை பயன் படுத்த தெரியாமல், தேகம் உருமாறி நித்தியத்தை அடையாமல் மேன்மை அடையாமல் போகிறது.. அந்த மூச்சு என்ற உளவு இயக்கத்தை பற்றிய வாசி யோகத்தின் மிக அரிய மிக நுட்பமான இரகசியங்கள் வெளிப் பட திருவுளம் சம்மதம் கொண்டதால், தாங்கள் அதனை அறிந்து, விதிகளை வெல்லும் மதி வழிக்கு வரவும், கோள்களின் பிடியிலிருந்து விடுபட்டு, பேரருளின் சத்திய நிலைக்கு வரவும், தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும், மதிவழியின் உளவுகளை அறியவும், வகுப்பிற்கு வருமாறு வேண்டப் படுகின்றனன்...
நடக்கும் இடம்:--
**********************
ஹோட்டல் அர்ச்சனா
காலவாசல் சிக்னல் அருகில் 
அரசரடி செல்லும் வழி
குழந்தையப்பர் சமாதி அருகில்
மதுரை ---- முன்பு வகுப்பு நடந்த இடம்
நேரம் :--
***************
காலை 09-30 முதல் மதியம் 1.00 மணி வரை
இடையில் டீ நேரம்
மதியம் 1.00 மணி -- 2.00 மணி வரை உணவு நேரம்
மதியம் 2.00 மணி முதல் 5.30 மணி வரை..
இடையில் டீ நேரம்
இதயத்தில் மையம் கொண்டு பயிற்சியை கவனித்து வந்தால் மிகவும் பயன் அடையலாம்.. மனதில் மையம் கொண்டவர்கள் தாங்கள் முன்பு வேறிடம் கற்றதை ஒத்துப் பார்த்து விமர்ச்சனம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...
கட்டணம் எதுவும் இல்லை.. செலவின் பளுவினை குறைக்க நன்கொடை வரவேற்கப் படுகின்றன..
தொடர்புக்கு :---
திருவாளர் சிவகுமார் அவர்கள்
செல் எண் :-- 9566520482
டீ உணவு சேர் போன்றவற்றில் முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் கண்டிப்பாக திருவாளர் சிவகுமாரிடம் பதிவு செய்து கொள்வது மிகவும் அவசியம்... அன்பர்களின் ஒத்துழைப்பை பொறுத்தும், அவர்களின் தேகம் மனபலம் பொறுத்தும் இரவு பயிற்சிக்கு முடிவு எடுக்கப் படும்.. இரவு பயிற்சியில் காமம் மோகத்தை கடவுள் ஆற்றலாக மாற்றும் ஒரு அற்புத பயிற்சி, நயன தீட்சையை சற்று தழுவி நடை பெறும்....

No comments:

Post a Comment