Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஆறு ( 15-11-15)

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஆறு ( 15-11-15)
***************************************************************************
வானிலை மைய எச்சரிக்கையையும், தொடர் மழையையும், பொருட்படுத்தாமல் பல பகுதிகளிலிருந்து அன்பர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.. சில வழிமுறைகள் கேட்டு அறிந்த பின் பயிற்சியை தொடங்கினர்... மலை கோவிலில் கந்த சஷ்டி பாடல் எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக ஒலிபெருக்கியின் மூலம் ஒலித்துக் கொண்டு இருந்தது.. ஒருவர்கொருவர் பேசிக் கொள்வதற்கே முடியாத அளவிற்கு பாடல் ஒலி மிக அதிகமாக இருந்தது.. இந்த நிலையில் மழையின் வேகமும் குறைந்து, குற்றால சாரல் போல் விழுந்த நிலையில் பயிற்சியின் நெறி முறை பிரகாரம் மலை ஏறி பயின்றனர்... ஒருவர் கூட தவறாமல் எல்லோருமே தன் தோன்றா நிலையில் தானும் தன் தேக உணர்வு மட்டுமே அனுபவப் படுவது போல் , பயின்றது மிகவும் வியப்பு அளித்தது... தங்களுடைய முந்தைய பயிற்சியில் தீவிரமாக பயின்று தேறிய நிலையை இது சுட்டி காட்டியது... படிகளில் நிதானமாகவும் மிகுந்த விழிப்போடும் நடந்த விதம் அவர்கள் தன்னில் தானாய் எண்ண ஆதிக்கங்களில் சிக்காத நிலையில் முக பாவனை எப்படி இருக்குமோ அப்படியான மிக பாவனையில் இருந்து பயின்றார்கள்.. இது மிகவும் உற்சாகத்தை அளித்தது.. பயிற்சியின் நடுவில் 20 நிமிடமும் பயிற்சியின் கடைசியில் 40 நிமிடமும் சற்று கன மழைகாரணமாக கோவில் உள்ளே வகுப்பு நடை பெற்றது... அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்கள் எடுத்து சொல்லப் பட்டன.. 7 & 8 வது வார புது பயிற்சிக்கு தங்களை ஆயத்தப் படுத்த இந்த இரண்டு வாரங்கள் தீவிர பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லப் பட்டது...

7 & 8 வது வார பயிற்சி என்னவாக இருக்கும் என்பதை பற்றி துளியும் சொல்லவில்லை.. யாரும் கேட்க வில்லை.. காரணம் அதை தெரிந்தால் மனம் அதற்கு தாண்டி விடும் என்பதை தங்கள் விழிப்பு நிலையால் நன்கு அறிந்து இருந்தது அவர்களின் பக்குவ நிலையை எடுத்துக் காட்டியது... கேள்விகள் மறைய தொடங்கி தன்னில் தானாய் இருப்பதில் ஒரு அற்புத நிறைவு அன்பர்கள் அனுபவப் படுவதையே இது காட்டியது... உணர்வு மயமாய் அன்பர்கள் படியேறி பயின்ற போது ஒரு இனம் தெரியாத முன்னேற்றமான மாற்றம் அவர்களிடம் தென்பட்டது பயிற்சியில் அவர்கள் கொண்ட ஈடுபாட்டை சுட்டிக் காட்டியது... வகுப்பில் மனம் படுத்து பாட்டில் எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப் படுகிறோம் என்ற குறிப்புகள் நல்ல சிரிப்பலைகளை மட்டும் உருவாக்கியது... பெரும்பாலும் அன்பர்கள் ஒலி பெருக்கியின் பெருத்த சத்தத்தின் தாக்கத்தாலும் மழையின் தாக்கத்தாலும் சிறிது பாதிக்கப் படாமல் பயிற்சியில் தன்னில் தானாய் மூழ்கி பயிற்சியில் முழு நிலையில் இருந்தது தெய்வீகமாக இருந்தது... முருகனின் இறை அருள் அவர்களை நன்கு சூழ்ந்து செயல் பட்டது போல் தெரிந்தது... அடுத்தப் பயிற்சிக்கு தங்களை தயார் படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது திண்ணம்...

No comments:

Post a Comment