Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஏழு ( 18-11-27 )

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஏழு ( 18-11-27 ) 
**************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி :--- அய்யா மலை ஏறும் சமயம் உடன் பாடு சுவாசம் செய்கின்ற போது சிறிது தலை வலிக்கிறது.. காரணத்தை அறிய விரும்புகிறேன்...

நாம் மனம் என்ற சிலந்தி வலையில் சிக்கி மிகவும் தவிக்கிறோம்... வானத்திலிருந்து மண்ணில் விழும் போது, புனித மழை நீர் எப்படியாவது மண்ணின் மாசுவால் கெட்டுப் போவது போல, விழிப்பு நிலையிலிருந்து வரும் ஒவ்வொரு செயலும் அண்ட ஆற்றலால் நடக்கும் போது, அதனை விழிப்பு நிலையில் உணராமல் மனம் அந்த செயலின் பலன்களை எல்லாம் வெளிச்சமாக மாற்றி விரையமாக்குகிறது.. மழை நீர் பூமிக்கு உதவாது கடலில் கலப்பது போல் நமது ஒவ்வொரு செயலின் பயன்களை உணர்வின் மூலமாக அதனை உடல் வளத்திற்கும், உடல் மேன்மைக்கும் பயன் படாமல், மனதால் அந்த பலன்களை எல்லாம் உடலுக்கு வெளியே பாய்ந்து விரையம் ஆகுகிறது.. அப்படி பாய்கின்ற போது அந்த ஆற்றலோடு ஏற்கனவே தேகத்தில் தங்கிய ஆற்றலையும் சேர்ந்து கணிசமான முறையில் வெளியே பாய்ந்து ஓடுகிறது... அதனால் விழிப்பு நிலையில் கால் ஊன்றாத எந்த யோகப் பயிற்சியும் முடிவில் உடல் சோர்வை மட்டுமே தருகிறது... நமது பயிற்சிகள் அனைத்தும் விழிப்பு நிலையில் கால் ஊன்றி பயிலும் பயிற்சிகளாகவே வடிவமைக்கப் படுகின்றன.... ஆனாலும் பழக்கத்தால் பயிற்சிகள் செய்யும் போது மனம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நான் செய்கின்றேன் நான் செய்கின்றேன் என்ற இறுமாப்போடு தன்னை ஈடு படுத்தி கொள்ளும் போது, ஆற்று வெள்ளம் கிணற்று நீரை அள்ளிக் கொண்டு சென்றது போல் உடல் ஆற்றல் இழந்து, இழந்ததின் காரணமாக உடலில் அங்காங்கே வலி தோன்றுகிறது.. சற்று பயின்று தேறி வரும் வரை நாம் வலி இருக்கும் இடத்தை விட்டு வேறு சில பயிற்சிகளை செய்தால் வலி உடனே காணாமல் போய்விடும்.. தலை வலி வரும் போது கால் பயிற்சியாக சற்று நடைபயணம் மேற் கொண்டால், கண்டிப்பாக தலைவலி நீங்கி விடும்... கால் வலி வரும் போது சற்று கைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கால் வலி குறையலாம்.. எந்த பயிற்சியும் செய்யும் போது மனதினுடைய ஆர்பாட்டம், கணிப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்யும் போது நாம் உணர்வோடு பொருந்தி அண்ட ஆற்றலின் தேக கலப்பை நாம் பெருக்கி பயன் கொள்ள முடியும்...

நான் பயிலுகின்றேன், இதோ நான் உணர்வோடு பொருந்தி யாரும் அடையாத பெரிய நிலைக்கு செல்லுகின்றேன், இனி நானே நாளைய இந்த நாட்டின் அதிபதி, எல்லோரையும் விட நானே உயர்ந்து நிற்பேன் போன்ற மன ஆர்பாட்டங்கள் துளி அளவும் தலை தூக்கினால் போதும் பயிற்சியின் தன்மை கீழ் நிலைக்கு போய் விடும்... ஆகவே பயிற்சி செய்யும் போது வலி தோன்றினால் சற்று விழிப்பு நிலையால் ஆராய்ந்து பார்த்தால் இந்த தவறுகள் மனதால் நடந்து இருப்பதை உணரலாம்.. அந்த வலியை மனதால் அறிய வைக்க வைக்க மனதிற்கு ஒரு பய உணர்வு ஏற்படும்.. இதுவும் சிறந்த உபாயம்.. பய உணர்வு மனதை ஓரளவு கட்டுப் படுத்தும்.. வலி வந்தால் அதனை பயன்படுத்தி அந்த வலியை நீடிக்க வைத்து அந்த வலிக்கான காரணம் மனம் தன் செயல் பாட்டினால் தான் என மனதிற்கு உணர வைக்கும் போது மனதிற்கு பய உணர்வு வருகிறது.. இப்படியாக நாம் போராடி போராடி விழிப்பு நிலையில் வாழும் அகநான் ஆகிய அககுருவை எழுப்பி விட்டால் அதன் பின் செய்யும் காரியங்கள் எல்லாம் சித்தி பெறும்...

நாம் அகநான் நிலையில் எந்த காரியத்தை செய்தாலும், அது முழு சித்தி பெறும்.. பயன் தரும்.. புற நானாகிய மனதின் மூலம் செய்யும் ஒவ்வொரு காரியமும் சீர் கெட்டே போகும்.. ஆனால் புற நானில் கலந்த பய உணர்வால் விழிப்பு நிலை செயல் படும் போது, செயல் படும் அளவிற்கு ஒரு காரியம் வெற்றி பெறுகிறது... பக்தியில் பயபக்தி அதிக பலன் தரும் என்பது இதனால் தான்.. ஆனாலும் அது ஓர் அளவிற்கே... அந்த அளவிற்குள் விழிப்பு நிலை பெருக்கம் அடைந்து, அந்த பயத்தை போக்கா விட்டால் அந்த பயமே மேல் பயிற்சிக்கு தடையாகி விடும்.. பய உணர்வில் கண்டுண்ட மதங்களில் உள்ளோர் விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கு காரணம் அந்த பய உணர்வே.. விழிப்பு நிலையை மையமாக வைத்து, அந்த விழிப்பு நிலையால் விழிப்பு நிலை பெருக்கத்தை அடைவது மிக சிறந்த வழி... நம்மில் இருக்கும் குறைந்த நிலையில் உள்ள விழிப்பு நிலையை பயன் படுத்தி மெல்ல மெல்ல முன்னேறி செல்வது சிறந்த வழியாகும்..

உலக அமைதிக்காகவும் மழைக்காவும் செய்யும் பூஜைகள் அனைத்தும் புறநான் நிலையில், செய்யப் படுவதால் உலக அமைதி மேலும் மேலும் கெடுகிறது.. சென்ற நான்கு ஆண்டுகள் தமிழ்நாட்டில் மழைக்காக செய்த பூஜைகள் ஏராளம்.. ஆனால் மழை பொய்த்துப் போய் ஏமாற்றி விட்டது.. ஆனால் இந்த வருடம் மழைக்காக தீவிரமாக எதுவும் செய்யவில்லை.. அதிக அளவு மழை பெய்து பூமி தேவைக்கு மேலே குளிர்ந்து விட்டது.. வானிலை மைய எச்சரிக்கையை மனதால் பொருட் படுத்தாமல் 15-11-15 அன்று குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து கூடிய அன்பர்கள், மழை நிற்பதற்காக எந்த வேண்டுதலும் செய்யாமல் கீழ் மண்டபத்தில் விழிப்பு நிலையில் காத்து இருந்தனர்.. சற்று நேரத்தில் மழை நின்றது.. 45 நிமிடங்கள் வரை சிறு இதமான சாரல் மட்டுமே விழுந்தது.. பின் கோவில் உள்ளே வகுப்பு நடந்த போது கன மழை பெய்தது.. வகுப்பு முடிந்து வெளியே வந்த உடன் மழை நின்றது.. மீண்டும் பயிற்சி 30 நிமிடங்கள் தொடர்ந்த நிலையில் மழை சுத்தமாக நின்று விட்டது.. மீண்டும் வகுப்பு இரண்டாம் முறையாக கூடிய போது கன மழை பெய்தது.. வகுப்பும் பயிற்சியும் முடிந்த உடன் சற்று கன மழை பெய்தது.. சிறிது நேரம் மழை தாழ்ந்த உடன் அன்பர்கள் கலைந்து சென்றனர்.. அவர்கள் வீடு சேரும் வரை கன மழை இல்லை.. பின் தொடர்ந்த கன மழையில் குன்றத்தூரே நீரில் மூழ்கியது.. ஒரு மணி நேர தாமத மழையால் அன்பர்கள் பத்திரமாக வீடு போய் சேர முடிந்தது.. எந்த நிலையிலும் அவர்கள் மழையை கட்டுப் படுத்த, மனதளவில் நினைக்க வில்லை என்பது மிக முக்கியமானது.. விழிப்பு நிலையில் இருந்த அவர்கள் அண்ட பேரறிவோடு தொடர்பு கொண்டதால் வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அண்ட அறிவே பார்த்துக் கொண்டது... பயிற்சிக்கு முன் இரண்டு நாட்கள் முன்பாக அய்யா மழை, பயிற்சியின் சமயம் நிற்க நீங்கள் ஏதாவது பிரார்த்தனை பண்ண வேண்டும் என அன்பர்கள் வேண்டிக் கொண்டனர்.. நான் முற்றிலுமாக மறுத்து விட்டேன்.. நமது விழிப்பு நிலையால் அண்ட அறிவே அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்றேன்.. அதே போலவே அன்பர்களின் கூட்டு விழிப்பு நிலையால் எல்லாமே சிறப்பாக, பாதுகாப்பாக நடந்தது... விழிப்பு நிலையில் அண்ட பேரறிவு செய்யும் அனைத்து சீரான காரியங்களை கனல் பக்கம் சாயாத, வெளிச்சம் பக்கம் சாய்ந்த மனம் காரியங்களை கெடுத்து விடும் என்பது முற்றிலும் உண்மை... அகநான் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியுமா ?.. அதன் மூலம் மட்டுமே ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும்... அகநானாய் மாறுவது என்பதே மர்ம யோகத்தில் முதல் அடிப்படை தகுதி.. பேரறிவுடனும் பேராற்றலுடனும் சிவகலப்பிலே கலந்து நிறை நிலை மனிதன் ஆவது முடிவானது...

No comments:

Post a Comment