Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி எட்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி எட்டு
*******************************************************************************
தமிழே உலகை காக்க வல்லது
தமிழாய் இருந்தால் தரணி ஆளும் தகுதி கிடைக்கும்... பண்டை காலத்தில் தமிழ் ஓகநெறியிலே தமிழ் இனம் ஓங்கி இருந்த நிலையிலே தரம் திடம் திரம் இவற்றில் முன்னணியில் இருந்ததாலும் தெய்வீகம் நிறைந்து ஒரே கடவுள் என்ற அசைக்க முடியாத தத்துவத்தில் அருள் சோதி என்ற முகமையான இறை தத்துவத்தில் மட்டுமே நின்று ஓர்மை மற்றும் ஒருமையில் மேன்பட்டு எல்லாவற்றிலும் கலை இலக்கியம் ஆளுமையில் எல்லா இனத்தை விட தேர்ந்த நிலையில் இருந்தனர்... நெஞ்சில் வெள்ளை உள்ளத்தோடு பண்போடு, அன்பு பொங்க இருந்ததால் தமிழகத்தில் வந்தாரை எல்லாம் வாழ வைத்தனர்.. செழிப்பிலே, வந்தாரில் வஞ்சக கூட்டம் இருப்பதை தமிழன் மறந்தது தான் தமிழன் செய்த மிகப் பெரும் தவறு... வஞ்சக கூட்டம் முதலில் தமிழனின் ஒரே கடவுளை பிரித்தது... மூன்றாக ஆக்கியது.. பின் பலவாக ஆக்கியது..... தமிழனின் ஒருமை நிலையையும் ஓர்மை நிலையை சிதைத்தது.. அண்ட ஆற்றலில் மட்டுமே அருள் நிலையாய் பயின்று வந்த தமிழ் இனம் ஓர்மையும் ஒருமையும் இழந்தது.. ஓர்மையும் ஒருமையும் கூடி விழிப்பு நிலையில் கனல் பக்கம் சாய்ந்து கனல் ஓகக் கலையை தன் உயிர் மூச்சாய் பழகி வந்த தமிழன் பல் நிலை கடவுள் நிலைகளால் அவன் மனம் சிதைந்து வெளிச்சம் பக்கம் வெகுவாக சாய்ந்து, சோதிடம் போன்ற வேண்டாத கலைகளில் சாய்ந்து மனம் அளவில் சிதைந்து போனான்.. தன் தரம் திடம் திரத்தில் குறைவு பட்டான்.. சிறுக சிறுக வஞ்ச கூட்டத்தால் அடிமை ஆக்கப் பட்டான்.. வட இந்திய மத வழிகள் பல வகை கோணத்தில் புகுந்து தமிழனின் ஓர்மையும் ஒருமையும் முற்றிலும் பாழாக்கி அவனை சவநிலைக்கு ஆளாக்கி விட்டது... தமிழ் மொழியை சிதைக்க வஞ்சகம் கொண்டோர் வட இந்திய மொழி வார்த்தைகளை பெரும் அளவில் புகுத்தி தமிழ் மொழியின் தரத்தை வெகுவாக தாழ்த்தி விட்டு கெடுத்து விட்டனர்...

தமிழை காப்பாற்ற வெளி நாட்டை சேர்ந்த மறைமலை அடிகள் செய்த தொண்டு கூட தமிழ் இனம் தமிழுக்கு செய்ய மறந்து விட்டது... விழித்துக் கொண்ட தமிழ் அறிஞர்கள் சற்று தாமதமாக விழித்ததால் அதற்குள் தமிழின் உயிரோட்டம் முக்கால் பங்கு முடங்கி போய் விட்டது.. இன்றைய சூழ்நிலையில் சற்று தூய தமிழில் பேசினாலே மற்றவர்களால் ஏறிட்டு கேவலமாய் பார்க்கும் அளவிற்கு தமிழ் மொழியின் மேல் உள்ள மதிப்பு தாழ்ந்து போய் விட்டது... பண்டை காலத்தில் ஒருமை உணர்வு வளர்த்த பண்புக்கு ஏற்ற தமிழ் மொழியின் நடை வள்ளுவனின் திருக்குறள் போல் அன்று இயல்பாக இருந்தது.. திரிந்து மாறி போன இன்றைய தமிழ் அந்த வள்ளுவன் தமிழை புரிந்து கொள்ள முடியாமல் இன்று எத்தனை விரிவுரை நூல்கள் வந்தும் இன்னும் சரியாக புரியாமல் உள்ளது..

அப்படி திரிந்து போன தமிழ் மொழியால் ஓர்மையும் ஒருமையும் வளர்க்கும் தமிழ் ஓகக் கலையை சரிவர சுட்டிக் காட்ட முடியாமல் தவிக்கிறது... சமஸ்கிருதத்தின் கலப்பு தமிழில் 60 விழுக்காடுகளை தாண்டி விட்டது... ஆங்கிலம் 10 விழுக்காடுகளை தாண்டி விட்டது... 30 விழுக்காடுகள் மட்டுமே தமிழ் தமிழாக உள்ளது... தமிழுக்கு வந்த கேடு தமிழ் ஓகக் கலைக்கு வந்த கேடு.. அதனால் மனிதனின் மனதின் ஒருமை கெட்டு, தமிழன் மட்டும் பாதிக்கப் படவில்லை.... உலக மனித இனமே ஒருமை சீர் கேட்டால் பாதிப்பு அடைந்து இன்று மனித குலமே அழிந்து விடுமோ என்ற அச்சம் உலகை கவ்விக் கொண்டு இருக்கிறது.. உலகை காக்க தமிழ் மொழியின் வளமும் அதனால் தமிழ் ஓகக் கலை சுட்டி காட்டப் பட, எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் ஒருமை, ஓர்மை நிலை ஓங்க தமிழ் மொழி தமிழர்களால் மட்டும் அல்லாமல் உலகத்தாரால் காக்கப் பட வேண்டிய அவசியம் ஆகிறது.. தமிழ் மொழியின் மூலம் மட்டுமே உலகத்திற்கு விடிவு.. வேறு எந்த மதத்தாலும் மார்க்கத்தாலும் உலகை காக்க முடியவே முடியாது என்பது திண்ணம்.. இதை படித்து விட்டு சிரிப்பவர்கள் முகம் சுழிப்பவர்கள், நம்பாதவர்கள் இருக்கலாம்.. ஆனால் உண்மையை விழிப்பு நிலையாளர் மட்டுமே உணர முடியும்... காரணம் ஒருமையை தர வல்ல கனல் உணர்வு தமிழ் ஒன்று மட்டுமே தர முடியும்.. கனல் பெருக்க நிலை போன்ற ஒன்றை இதுவரை தமிழை தவிர வேறு மதமும் மார்க்கமும் இதுவரை தரவில்லை... சிவகலப்பு என்ற நெறியை உலகில் எதுவும் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை... தமிழ் வாழ்க வளர்க என உலகத்தாராலால் போற்றப் பட்டால் தான் இனி உலகம் காப்பாற்றப் படும்...

No comments:

Post a Comment