Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து
*************************************************************************
அனைத்தையும் தரும் தமிழ் நிலை
தமிழ் தீவிர ஆர்வலர் திரு ஓதியடிமை அவர்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.. எனது பேசும் தமிழை காட்டிலும் செய்யும் தமிழ் நிலையை கண்டு கோரி உள்ளார்.. தமிழ் மொழியில் பள்ளி நிலை மட்டுமே தேர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரியில் முழுமையாக ஆங்கிலத்தில் படித்ததால் எனது மொழியில் குறை இருப்பின் மொழி அறிஞர்கள் மன்னிக்கவும்...

பாடல் :--- 
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”
தண்டியலங்காரம் .. இந்த அருள்பாவிற்கும் சிவ கலப்பின் ஒங்குதலுக்கும் உள்ள சிறப்பை சற்று விளக்குங்கள் அய்யனே
அதாவது:--
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது 
தன் ஏர் இலாத தமிழ்

விளக்கம் :--
 
தன் ஏர் இலாத தமிழ் 
*********************************
ஏர் என்பது, என்று என்று ( எ+ எ = ஏ ) தொடர் நிலையாக பிறவி குணமாய் இருக்கும் நிலை.. 'ர்' என்பது பிறவியால் அமைந்த நிலை.. தன் ஏர் என்பது தனது தனது என்று என்று தன்முனைப்போடு தொடர் நிலையாய் இருக்கும் ஆணவ நிலையாகும்.. அது இல்லாத நிலையை போக்குவது தமிழ் நிலை.. ஆம் தமிழ் நிலை ஒன்றே தன் ஏர் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.. தமிழ் நிலையை சுட்டிக் காட்டாத தமிழ் மொழி பாழ் தான்.. இன்று நம் தமிழ் மொழி அவ்வாறு இல்லை என்பது மிகவும் வருந்த தக்க விசயம்.. அதனால் தான் உலகில் உள்ள ஆயிர மொழிகளில் தன் தனி சிறப்பை இழந்து அதில் ஒன்றாக உள்ளது.. அந்த தமிழ் நிலையால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தமிழ் மன்னன் தன் அடையாளத்தை முற்றிலும் துறந்து தன் ஏர் இலாத நிலையில் இருந்தான்.. முகநூல் பக்கத்தில் அவர் சமாதி அடைந்த ஒரு சாதாரண இடத்தை காட்டும் படத்தை பார்க்கும் போது அவரின் தன் ஏர் இலாத உயரிய நிலை கண்டு கண்களில் நீர் வடிகிறது.. தமிழ் நிலை கண்ட தமிழ் மொழி அறிந்தவர்கள் நம் நாயன்மார்களும் ஆழ்வார்களும்.. தொண்டர் அடி பொடி ஆழ்வார், நந்தனார் போன்றோர் தன் ஏர் இலாத நிலையில் உயர்ந்த நிலையில் விளங்கிய விதம் நெஞ்சை உருக்குகிறது.. ஆனால் மேலோட்டப் பார்வையால் ஆணவ போக்கால் அவர்கள் மேன்மை அறியாது இருக்கிறோம்..

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ:--
*******************************************
அப்படி பட்ட தமிழ் நிலையால் என்றும் ஓங்குதல் நிலையே மனிதருக்கு வந்து சேரும்.. ஒடுங்குதல் என்பதும், சோர்வும் என்பதும் இல்லைவே இல்லை.. விழிப்பின் உச்சத்தில் ஓங்கியே இருக்கும் தமிழ் நிலை அறிந்தோர் வடித்த கற் சிலைகள் சொல்லும் ஆனந்த கண்ணீர் கதைகள் ஏராளம்.. ஒரே கல்லில் வடித்த அற்புத சிலை வடிக்கும் சிற்பி சிவ கலப்பில் இல்லையென்றால் அந்த சிலையை வடிக்கவே முடியாது.. எல்லாம் வடிவமைத்து காலில் ஒரு விரலில் ஒரு நகத்தை செதுக்கும் போது சிறு தவறு ஏற்பட்டாலும், பல மாதங்கள் வடிவமைத்த சிலையே பாழாகி போய் விடும்.. வினாடிக்கு வினாடி சிவகலப்பு என்ற தெய்வீக விழிப்பு நிலையில் இருந்ததால் மாத்திரமே அது சாத்தியமாயிற்று.. அன்றைய ஒரு சிற்பி முழுமையாக சிவகலப்பு அறிந்த தமிழ் நிலையில் இருந்த அருள் அரசன்.. அவருடைய தன் ஏர் இல்லாத நிலை கண்டு இன்றைய ஆட்சி ஆளார்கள் தலை குனிந்து நிற்க வேண்டும்.. ஓங்கலிலே ஓங்கி ஓங்கி சென்ற நிலையிலே பொருள் சக்தியாலும் அதிகார சக்தியாலும் உயர்ந்தோர் அவர்களை தொழுதனர்.. தொழுதே ஆக வேண்டும் என்ற உயரிய அருள் நிலையில் தமிழ் நிலை அறிந்தோர் இருந்தனர்.. பட்டினத்தாரை பார்த்து அரசன் கேட்டான்.. எல்லாவற்றையும் துறந்து இப்படி இருப்பதால் என்ன பலன் என கேட்க நீர் நிற்க நான் கிடக்க என்றார் பட்டினத்தார்.. அருள் ஓங்கலிலே இருந்து அமர்ந்த வண்ணம் இருந்து தேடி வந்து வணங்கி கேட்ட, நின்ற படி, இருந்த அரசனுக்கு ஒரு தகுந்த பதிலை தந்தார் பட்டினத்தார்.. அதனால் தான் ஓங்கலிலே இருக்கும் தமிழ் நிலையாளரை அரசனை போன்றோர் தொழுதே ஆக வேண்டும் என்பது...

ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் :--
*********************************************
பிரபஞ்சமான அண்டம், ஒலியால் ஒளியால் ஆனது.. யோகத்தில் ஒலியை சக்தியாகவும் இயக்கமாகவும் குறிப்பர்.. அறிவினை ஒளியாக குறிப்பர்.. சிவநிலையாக அறிவு நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் காதற்ற ஊசியும் வாராது காண் காணா கடை வழிக்கே என்ற சிறு அறிவு கூட இன்றி, செயல் இயக்கத்தின் மூலம் பொன்னும் பொருளும் அதிகாரமும் சேர்க்க ஏங்கி ஏங்கி செயல் இயக்கம் மூலம் முனைவோரை ஏங்கும் ஒலி இனத்தார் என்றனர் தமிழ் நிலை கண்டோர்.. நீர் என்பது எண்ண ஆதிக்க முடைய சித்தம் என்ற எண்ணப் பதிவுகள்.. நீர் பூதத்தால் இயங்கி பொன் பொருள் அதிகாரம் சேர்க்க மனிதன் முனைகிறான்.. அப்படியான எண்ண பதிவுகளும் எண்ண ஆதிக்கமும் நிறைந்த ஞாலம் என்ற பூமியில் ஒளி யின்றி இருள் பரவி கிடக்கிறது.. அந்த இருளை அகற்ற முடியும் என்றால் அது தமிழ் நிலையால் மட்டுமே முடியும் என்பதை அறியாது இன்றைய ஞாலம், உலகம் உள்ளது,, இனி வரும் காலங்களில் தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழியாக ஆனால் மட்டுமே உலகம் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப் படும்..

மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்று:-
****************************************
தன் ஏர் நிலைக்கு நேர் எதிரானது மின் ஏர்.. நுண் ஆற்றல் சூட்சம சக்தி மின் ஆற்றல் எனலாம்.. மின்சார ஆற்றலை நாம் மின் சக்தி என்கிறோம்... ம் என்ற எழுத்து நீக்க மற அதாவது நீக்க முடியாத அளவு சிவ கலப்பாக பொருந்திய நிலை.. இதில் ன் என்ற 18ஆம் கடைசி மெய் எழுத்து முடிவானது என பொருள் கொள்ளும்.. நீக்கமற பொருந்திய நுண் சக்தியை சக்தியை குறிக்கும் அண்டத்தின் ஒரே சக்தி கருணை மட்டுமே.. அதனால் தான் அருட் பெருஞ்சோதி வடிவமே தனி பெருங்கருணை என்றார் வள்ளலார்... தன்னை மட்டுமே நினைக்கும் ஆணவ நிலையான தன் ஏர் நிலை இல்லாமல் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணும் மின் ஏர் நிலைக்கு கொண்டு செல்லுவது தமிழ் நிலையாம்.. முல்லைக்கு தேரை தந்த பாரி, பசுவின் கன்று உயிர் பறித்த தன் மகனை தேர் சக்கரத்தில் பலி இட்ட தமிழ் மன்னன், நீதிக்கு தன் கையை தானே வெட்டிக் கொண்ட கரிகால் வளவன் போன்ற எண்ணற்ற தமிழ் நிலை அறிந்தோர் தன்னகத்தே கொண்டது மின் ஏர் நிலையே.. அன்னவர்கள் உடல் உள்ளம் உயிர் மூன்றிலும் முழுமையாக பொருந்திய யாழி நிலையினை பெற்றிருந்தார்கள்.. தனி யாழி நிலை என்பது தனிப் பெரும் கருணை போல் எதுவும் கலவாத தனித்த யாழி நிலை என்பது.. அது எவ்வளவு இனிமையானதோ அந்த அளவுக்கு இனிமையானது யாழ் என்ற இசைக் கருவி.. அந்த நிலையால் தங்கள் அருள் ஆற்றலால் வெங்கதிர் வீசும் அதாவது கருணை என்னும் அருள் ஆற்றல் பரப்பும் திறனை பெற்று இருந்தார்கள்.. வெங்கதிர் என்றால் வெளி கதிர் அதாவது எல்லை இல்லாத வெளி நிலையாகிய அண்ட முழுவதும் பரப்பும் கதிர் ஆற்றல்.. அப்படி பட்ட மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனைத்தும் தரவல்லது மற்றும் அதுவாக தன் நிலைக்கு மாற்றும் மாற்றம் மட்டுமே தருவதாம் நமது தன் ஏர் இலாத தமிழ்.. அதாவது எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே தருவது தமிழே...
ஆங்கம் அவற்றுள் என்பதில் அங்கம் என்ற குறுகிய தேக நிலை இல்லாமல் ஆங்கம் என்ற அண்ட அகண்ட காரத்தில் உள்ள அனைத்திலும் என பொருள் கொள்ளும்...

மொத்த பாடலின் விளக்கம்
****************************
ஓங்கல் என்ற ஒன்றிலேயே தொடர்ந்து இருக்கும் போது உயர்ந்தோர் அவர்களை தொழுது வாழ்த்த, அதனால் அவர்களின் சிறப்பு உயர்ந்து விளங்கி நிற்கவும், எண்ணப் பதிவுகளால் உலகியலில் பொருள் சேர்க்கைக்கு வேண்டி போராடும் இருளை போக்கவும் மின் ஏர் நிலையால் அருள் கருணையால் அருள் கதிரொளி பாய்ச்சி அனைத்தையும் அதுவாகவே ஆக்கவும் செய்யவல்லதாம் தன் முனைப்பை நீக்க வல்ல தமிழ்..

அன்பர்களே மர்ம யோகம் என்ற மறையோகம் அல்லது தமிழ் ஓகம் ஒருவரது கருணை பெருக்கத்தால் தகுதி பெருக்கம் அடைந்து உலகை ஆளும் தகுதி அவர்களுக்கு ஒப்படைக்கப் பட்டதால் தான் அன்றைய நிலையில் உலகில் பல பகுதிகளிலும் தமிழ் நிலை அறிந்தோர் ஆண்டு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.. அலெக்ஸாண்டரை போல் கத்தி முனையில் ஆளும் தகுதியை நம் தமிழ் மன்னர்கள் ஒரு போதும் பெற்றிருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.. அப்படி பட்ட தமிழ் நிலை தரும் தகுதி பெருக்கம் அடைந்தோர் இடம் ஆளும் தகுதி ஒப்படைக்கப் படும்.. அது பலவந்தமாக பிடுங்கப் படுவதல்ல.. மர்ம யோகம் என்பது அண்ட அற்றல் பெருக்கத்தால் கருணை வடிவாகி தகுதி பெருக்கம் அடைந்து தனியாழி வெங்கதிரோனாய் மாற்றம் காணுவதே.. திரு ஓதியடிமைக்கு என் தமிழ் நிலை பணிவினை அளிக்கின்றோம்.. அதை விட உயர்ந்த பணிவு பரிசு வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை...

4 comments: