Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு
****************************************************
எது ஒன்று இருந்தால் எல்லாம் இருக்குமோ ?!!!
அரும்பாடு பெற்ற அனைத்தையும் ஒரு நாள் இழக்க நேரிடுகிறது.. பெற்றதிலே பெருமை கொண்ட மனிதன் அதை இழப்பதை பற்றி துளியும் கவலைப் படுவதில்லை.. அது எவ்வாறு இழக்கப் படுகிறது என்பதை பற்றி ஆராய்வதே இல்லை.. ஒரு நாள் இருந்தது இருந்தேன் என்ற ஆணவ மலம் ஒன்றே போதும் என மனிதன் நினைக்கின்றான்.. அளப்பரிய பொருளை பாடுபட்டு தேடி குவித்தாலும். மரணத்தின் தருவாயில் குவித்த பொருள்கள் அனைத்தும் இழக்கின்றோமே என்ற கவலை மனிதனுக்கு இருப்பது போல தெரியவில்லை.. இறப்பிற்கு முன் சில நொடிகளுக்கு முன்னால் கூட தான் பெற்றதை நினைத்து மன நிறைவு கொண்டுதான் இருக்கின்றான்.. அந்த மன நிறைவோடு மரணத்தை தழுவுவதில் எந்த பிரச்சனையும் மனிதனுக்கு இல்லை.. நிறைவேற்றாத ஒன்று இருந்தால் மட்டுமே மன கசப்போடு இறக்கிறான்.. துரியோதனன் உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கிறான்.. பாண்டவர்கள் மரணச் செய்தியை கேட்காமல் தன் உயிர் பிரியக்கூடாது என்ற பிடிவாதத்தால் உயிரோடு போராடிக்கொண்டு இருக்கின்றான்.. கடைசியில் பாண்டவர்களின் தவறான மரணச்செய்தியை கேட்ட பிறகே அவனின் உயிர் பிரிகிறது.. இப்படியாக எல்லாம் இழந்தாலும் ஏதோ ஒன்றை சாதித்து விட்டால், இழந்தாலும் நிம்மதி அடைகிறான்.. இது அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்ற பழமொழிக்கு ஒத்ததாக உள்ளது.. அறுவை சிகிச்சை வெற்றி களிப்பிலே மரணத்தை தழுவதில் எந்த இடர்பாடும் மனிதன் அடைவதில்லை.. இதுதான் மனிதனின் மன திருப்தி என்பது.. மனதிருப்தி போன்ற மூடச் செயல் எதுவும் இல்லை என்பதை மட்டும் மனிதன் புரிந்து கொள்ளவே முடிவதில்லை..
காதற்ற ஊசியும் நிரந்தரமாக எடுத்துச் செல்ல முடியாது என்று மரணத்திற்கு பின் நன்கு அறிந்து இருந்தும், மன நிறைவு என்ற மாயை ஒன்றே போதும் என மனிதன் இருக்கிறான்... ஆனால் மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக் கூடிய ஒன்று உண்டு என மனிதன் இதுவரை அறியவே இல்லை.. அப்படி அறிந்து இருந்தாலும் அதை நம்பும் படியாக மனிதனுக்கு இருப்பதில்லை... அப்படி மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக்கூடிய அந்த உயர்ந்த பொருள் விழிப்பு என்ற ஒன்றே.. அதனையே வள்ளுவர் புகழ் என குறிப்பிடுகிறார்.. தோன்றில் புகழோடு தோன்றுக என்றார்.. இந்த புகழ் தான் பிறவி விட்டு வேறு ஒரு பிறவிக்கு எடுத்துச் செல்ல கூடிய ஒரு உன்னதமான ஒன்று... பு என்ற உயிர் இயக்கத்திற்கும் க என்ற இறை இயக்கத்திற்கும் பூரண இணைப்பான 'ழ்' என்ற ழ கரமாகும்.. இந்த விழிப்பு நிலையான புகழ் ஒன்றை மட்டுமே மனிதன் மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்ல முடியும்.. மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்லக் கூடிய ஒன்று இருந்தால், மனிதனுடைய மரணம் மரணமாகாது.. அது தூக்க நிலைக்கு ஒத்தாகி விடும்... அதாவது மரணத்திற்கு பின்னும் மனிதன் வாழ்கிறான் என்றால் அதற்கு சாட்சி அவன் தன் உடன் எடுத்து செல்லும் விழிப்பு என்ற புகழ் ஒன்றே..
ஆகவே தான் விழிப்பு என்ற புகழை போல் உன்னத பொருள் எதுவும் இல்லை என்ற உணர்ந்த அந்த கணமே மனிதன் தெளிவு என்ற ஞானம் அடைகிறான்.. ஞானம் அடைந்தவன் தான் வாழும் காலத்தே உலகத்தில் உள்ள அனைத்தையும் பெறக் கூடிய ஆற்றல் இருந்தாலும், எவையெல்லாம் மரணத்திற்கு பின் எடுத்துச் செல்ல முடியாதோ அவைகளுக்கு எல்லாம் ஆசை படுவதில்லை.. மர்ம யோகம் எது ஒன்று கிடைத்தால் நித்தியம் நிரந்தரம் கிடைக்குமோ, அந்த ஒன்றை பெறவே முயலும்.. அதே நேரத்தில் தேவையானால் எல்லாம் பெறக்கூடிய வல்லமையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டும் இருக்கும்... மர்ம யோக பயிற்சிகள் அனைத்தும் நித்திய அநித்தியமானவை அனைத்தையும், பெறும் அளவிற்கு வடிவமைக்கப் பட்டவைகளே.. அதனால் தான் உலகம் வெளிச்சம் போட்டு காட்டும் யோகப் பயிற்சிகள் போல் இல்லாமல், சற்று புரியாத மர்மமாகவே இருக்கும்.. அந்த மர்மத்தை மர்மமாகவே ஏற்றும் கொள்ளும் போது, அந்த தோன்றா நிலையை தோன்றாநிலையாகவே ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே அது வேறு ஒன்றும் இல்லை அது உன்னத மெய் பொருளான விழிப்பு நிலையென விளங்க வரும்.. முதலில் புரியாத ஒன்றாக உள்ள மர்மயோகத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மர்ம யோகிகள் ஆவார்கள்.. பின் எல்லாம் புரிந்தவர்களாக ஆகும் போது ஞான யோகிகளாக மாறுகின்றனர்.. முதலில் புரிய வை பின் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பவர்களுக்கு இந்த மர்ம யோகம் சரிப்பட்டு வராது.. இதுதான் கடவுள் என ஒன்றை காண்பித்து ஏமாற்றும் வேலை எதுவும் இல்லை.. இப்பொழுது சத்தியம் உண்மையை தவிர கவர்ச்சி என்ற பொய்மை எதுவும் இந்த மர்ம யோகத்தில் இல்லை என அன்பர்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

அன்பர்கள் : மிக்க நன்றி ஐயா , அனைவரும் சொல்வது போல் தங்களுடைய பதிவுகள் நன்றாக உணர்ந்த புரிந்த பின்பும் அதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய எங்களால் முடியவில்லை , ஆழமான சோம்பேறி தனத்தில் ஊறி போய் இருக்கிறோம் .தாங்கள் சொல்லி கொடுத்த விசயங்களையே நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வில்லை .மேலும் தங்களிடம் விசயங்களை கேட்டு தங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால் தான் ஐயா தங்களை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன் .
மனதில் ஆசை இருக்கிறது செயல்படுத்த மனதில் உறுதி இல்லை

Marma Yoogi
 
மனதில் ஆசைகள் மட்டுமே இருக்கும்.. ஆசைகளில் உழன்று, உழன்று கனவுகளில் மிதந்து மிதந்து காலத்தை கடக்கும் சோம்பல் நிலையை மட்டுமே மனதில் இருக்கும்.. அந்த மனம் அற்ற நிலையான தோன்றா நிலையில் விழிப்பு என்ற தெய்வீக நிலையில் செயல் பாடு ஒன்று மட்டும் தான் இருக்கும்.. செயல் பாடு எத்தனை சிரமமாக இருந்தாலும், அதனை வெல்ல வீரமும் விவேகமும் கொண்டு முடித்தே தீரும்.. சுவாசத்தில் உடன்பாடு சுவாசத்திற்கு ஏற்ற சூழ்நிலை
ஏற்படும் போது மனம் கடந்த நிலையான தோன்றாநிலையில் மனதின் சோம்பல் அறவே முறியடிக்கப் பட்டு, எழுச்சியும் வேகமும் விழிப்பு நிலையால் பெறுகின்ற அற்புதத்திற்கு இணையான ஒன்று எதுவும் இல்லை.. வீறு கொண்டு எழ தோன்றா நிலையை உடனே பிடிக்கவும் அதில் நிலையாய் நிற்கவும் பழகினாலே போதும்.. அனைத்தும் தானாக செயல் கூடும்.... காரணம் மனம் கடந்த நிலையில் நடப்பதால், தானாக நடப்பது போல மனிதருக்கு தெரியும்...
 
 
 

No comments:

Post a Comment