Thursday 15 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பத்தொன்பது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பத்தொன்பது
**************************************************************************************
கவனிப்பும் கலப்பும்
ஒருவன் உண்மையை பேச வேண்டும் என்று போதிக்கப் பட்டான்.... உண்மையை பேச முயன்றான்.. அதில் மிகவும் சிரமம் கண்டான்.... உண்மையை பேசுவதை விட்டு விட்டு யாரெல்லாம் உண்மையை பேசுகிறார்கள் என ஆராய 
தொடங்கினான்.. உண்மை பேசுவதில் உள்ள சிரமத்தினால் தன்னை சமாதானம் படுத்திக் கொள்ள எல்லோரையும் ஆராயத் தொடங்கினான்.. இதனால் அவனுக்கு உண்மை பேசுவோர் எவரும் அவன் கண்களில் படவில்லை... எல்லோரும் ஏன் உலகமே பொய் பேசுவதாகவே நினைக்கத் தொடங்கினான்... எந்த உண்மையும் பொய்யாகவே அவன் மனதில் பட்டு உண்மையை பேச முடியாத தன் இயலாமைக்கு சமாதானம் மட்டுமே தேட முயன்றான்.. இப்போது 
போதிக்கப் பட்டவன் உண்மையை பேச வேண்டும் என போதிக்க துவங்கி விட்டான்.. போதிக்க துவங்கி விட்டால் தன் இயலாமையை மறைத்து விடலாம் என்று தவறாக கணக்கு போட்டு விட்டான்... தனக்கு தெரியாமல் தானே குருவாய் 
ஆனதாக கற்பனையில் திளைத்து விட்டான்.. தனக்குள்ளே இனம் தெரியாத ஆணவம் தலையெடுத்து ஆடுவதை கவனிக்க தவறி விட்டான்... முடிவு தன் குறைபாடு தனக்கு தெரியாமல், உலகமே குறைபாடு உடையதாய் இருப்பதாக 
கற்பனை செய்து கொண்டு வருந்துகிறான்.. பிறரிடம் அன்பு குறைந்து தன்னை தானே வருத்திக் கொள்கிறான்..

மதுரையில் மலையேற்ற அனுபவத்தில் மலை உச்சியில் வெளி நாட்டு பெண்களை பார்த்ததால் ஏற்பட்ட வெளிச்சத்தில் உண்டான உயிர் ஆற்றல் இழப்பால் தான் மலை இறங்க முடியாத நிலையையும் பின் உடன்பாட்டு சுவாசத்தினால் ஆற்றல் பெற்று தான் சுலபமாக இறங்க முடிந்ததை ஒரு பதிவில் வெளியிடப் பட்டது.. அதில் உள்ள மிக முக்கியமான தெய்வீக செய்தியை காண தவறிய சில அன்பர்கள் இன்னும் அந்த பெண்களை வேடிக்கை பார்த்த அந்த அன்பர் யார் என்ற கேள்வியை இன்னும் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்... இந்த கேள்வி எழுப்பும் செயல் மிகவும் பரிதாபத்திற்குரிய செயலாகும்.. உண்மையை கண்டு உண்மையில் நிற்க முடியாமல் மனித குலம் இன்று தவித்துக் கொண்டு உள்ளது.. அதனால் தான் மனம் தன் ஆதிக்க நிலையை இழந்த நிலையான தோன்றா நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது.. தோன்றா நிலை அனுபவம் பெறுவது ஒன்றே ஆன்மீகத்தின் நுழைவு வாயில்.. அந்த நுழைவு வாயில் அடையாமல், அங்கே இருக்கும் விழிப்பு நிலை பெறாமல் எந்த ஆன்மீகமும் இல்லை... தோன்றா நிலைக்கு வெளியே உள்ள எந்த ஆன்மீக முயற்சிகளும் மேலே சொன்னது போல் உண்மை போதிக்கப் பட்டவனை 
போல துயரத்தையே தரும்.. மதம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மதத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற காரணங்களை காட்டிலும் பல நூறு மடங்கு அதிகம்.. இன்னும் வரும் காலத்தில் மதத்தால் மட்டுமே உலகில் 
போர் மூண்டு உலகம் அழியத் தொடங்கலாம்..
இதற்கு முக்கிய காரணம் என்ன ? உயர்வு தரவேண்டிய ஆன்மீகம் ஏன் தாழ்வு தருகிறது? எங்கே எதில் குறைபாடு உள்ளது.. அதற்கு மூல காரணம் தமிழ் யோகம் தரும் கலப்பு என்ற ஒரு உயரிய நெறியை மறந்து போனதால் தான்.. 
உலகில் உள்ள அனைத்து மதங்களும் கவனிப்பு என்ற ஒரு நெறியிலே சிக்கி நாசமாகி கொண்டு இருக்கிறது.. கலப்பு என்பதை அறவே மறந்து போய் விட்டது... மன சாட்சி, சாட்சி பாவனை, கவனித்தல் போன்ற மத நெறிகளில் சொல்லப் 
பட்டவை அனைத்தும் மனிதனின் மனதை சிறுக சிறுக பலப் படுத்தி முடிவில் ஆணவ நிலைக்கு அழைத்துச் செல்கிறது... அதனால் மனமும் மதமும் இரண்டாக பிரிந்து மனதின் வெளிச்சம் மதத்தில் புகுந்து மதத்தை நச்சு தன்மை ஆக்கவே செய்யும்.. இதனால் மத ஒற்றுமை துளியும் காணாமல் போய் விடும்.. இயல்பாகவே கவனிப்பு தன்மையால் ஒரு மனிதன் தன் பணிவு தன்மையை முழுமையாக இழந்து கடவுளே நேரடியாக தோன்றும் சமயம் கூட அவன் கடவுளை கவனிக்க தொடங்கி, நீ உண்மையான கடவுளா அல்லது உன்னுடைய கடவுள் யார் என்ற ஆணவ மேதாவிதனத்தை காட்ட தொடங்குகிறான்.. ஒரு மதத்தின் கடவுள் வேறு மதத்தை சார்ந்தவருக்கு தன்னை வெளிப் படுத்தினால் நிலைமை தலைகீழாக மாறி விடும்.. அந்த கடவுளையே கொல்ல முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதில்லை..

ஆனால் கலப்பு என்ற ஒரு நெறியில் மனம் தன்னை முன்னிலை படுத்தும் செயல்பாட்டிற்கு இடமே இல்லை... மனம்தன்னை கரைத்துக் கொண்டு உண்மையோடு கலக்கும் நெறியில் செல்கிறது.. கலப்பு நெறியில் மனம் தன் ஆதிக்கத்தை இழப்பதால் மதங்களும் மத வெறியும் காணாமல் போய் விடுகிறது.. பண்டை தமிழ் நாட்டில் மதங்களே இல்லை.. மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வர தொடங்கிய மதத்தால் தான் தமிழ் நாடே அழிய தொடங்கியது.. கலப்பு நெறியை விட்டு விட்டு கவனிப்பு நெறிக்கு அழைத்துச் செல்லப் பட்ட தமிழகம் தன் அன்பு நெறியான தமிழ் நெறியை மறக்க தொடங்கி தமிழ் மன்னர்களே ஒருவருக்கு ஒருவர் சண்டை செய்து தமிழக அழிவுக்கு காரணமானார்கள்.. மனிதன் கலப்பு நெறியிலே ஔவையாரை போல் முருகனோடு கலந்து பேசும் தகுதியை இழந்து இன்று கடவுளை 
விட்டு வெகு தூரம் பிரிந்து சென்று விட்டான்..
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மத நெறியும் கலப்பு நெறிக்கு புறம்பாகவே செல்லுகிறது.. மீண்டும் கலப்பு நெறி உருவாகவே மர்ம யோகம் தேவைப் படுகிறது.. கலப்பு நெறியில் மட்டுமே மனிதன் இறைநிலையோடு அம்மயமாகி 
கலந்து நின்று வல்லவன் ஆக முடியும்.. மர்ம யோகிகள் இந்த கலப்பு நெறியை சதாகாலமும் நினைவில் கொண்டு கவனிப்பு என்ற நிலையில் தன் ஆணவத்தை பெருக்காமல், ஐம் பூத நிலைகளுக்கு இடையே பிளவினை உருவாக்காமல், ஐம்பூத சமசீர் கூட்டால் வல்லமை பெறும் நெறிக்கு செல்ல வேண்டும்.. முதல் சுவாச பயிற்சியாகிய உடன் பாடு சுவாசமே கலப்பு நெறிக்கு அழைத்துச் செல்வதே... உடன்படுதல் மூலம் கலப்புக்கு வழி கிடைக்கிறது..

சில அன்பர்கள் தன் சுவாசத்தை கவனிக்கும் நிலைக்கு செல்லுவதால் தான் ஆணவ நிலைக்கு சென்று தங்கள் ஆற்றலை இழந்து சற்று அவதி அடைகிறார்கள்.. கலப்பு நெறியை ஒரு போதும் மறவாமல் இருக்க வேண்டப் படுகிறார்கள்.. மற்ற வாசியோகப் பயிற்சிகளில் போல் இல்லாமல் உடலில் சில ஆதார மையங்களில் கவனிக்கும் பயிற்சிகள் எதுவும் நமது மர்ம யோக பயிற்சிகளில் இல்லாததின் மர்மத்தை அன்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.. கலப்பை கெடுக்கும் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றாநிலையின் உண்மை வடிவத்தை புரிந்து கொண்டு அந்த தோன்றா நிலையில் மட்டுமே கலப்பு நெறி நடத்த முடியும் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கலப்பு நெறியை பெருக்கி பெருக்கி அதனை சிவ கலப்பாக்கும், மேலாண்மை செய்யும் அகநான் ஆகிய அக குருவின் துணையோடு  சிவகலப்புக்கு பயணப் பட்டு உலகை தாங்கும் வல்லவரான நிறை நிலை மனித நிலைக்கு செல்ல முனைவோமாக....

1 comment:

  1. மர்ம யோகப் பயிற்சி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் எங்கு வரவேண்டும், ஐயா?

    ReplyDelete