Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது
*************************************************
முடியாததை முடிவுக்கு கொண்டு வர
புற கடன் அக கடன் என்பதில் அக கடன் என்ற மிகப் பெரிய பயிற்சியை அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது... புற கடன் பெருக பெருக ஒரு மனிதன் தன் நிலை இழந்து வேதனையும் துன்பத்தையே பெறுவான்.. ஆனால் அக கடன் பெருக பெருக ஒரு மனிதன் புறக் கடனிலிருந்து முழுமையாக விடுப்பட்டு புறத்தே தானமாக இலவசமாக மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கும் தகுதியை பெறுவான்..
அந்த அக கடன் தான் என்ன என்பதை சற்று பார்ப்போம்.. ஆதி தமிழில் கடன் என்பது 'க்' + அடன் என்பது.. அடன் என்பது அடைந்தவன் அடைகிறவன் அடையப் போகிறவன் என பொருள்... கடன் என்பது 'க்' என்ற கடவுள் ஆற்றலை அடைகிறவன் என பொருள்.. ஒவ்வொரு ஆன்மீக வாதியும் அந்த அக கடன் அடையவே பயணிக்க வேண்டும்.. ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப் பட்ட நிலையில் இறை ஆற்றல் வந்து கொண்டே இருக்கிறது.. மிகவும் வருந்த தக்க செய்தி என்னவென்றால் அந்த விதிக்கப் பட்ட ஆற்றலை மனிதன் முழுமையாக பயன் படுத்துவதே இல்லை.. அப்படி முழுமையாக பயன் படுத்துவபவர்கள் தான் உலக வரலாற்று நாயகர்கள்... அவர்கள் மனித தரத்திற்கு உச்சத்திற்கு போனவர்கள்.. அவ்வளவே... ஆனால் மா மனித தரத்திற்கு செல்ல மர்ம யோகம் பல நுணுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.. அதில் அக கடன் பெறும் பயிற்சி முக முக்கியமானது...
விதிக்கப் பட்ட ஆற்றலையே குறைவாக பயன் படுத்தும் மனித குலம் சிறுக சிறுக தன் சோம்பலால் குறைத்துக் கொள்கிறது.. பின் தன் தேகத்திற்கு போதுமான ஆற்றல் கிடைக்காத நிலையில் உடல் துன்பம் அனுபவிக்க தொடங்குகிறான்.. மீண்டும் மீண்டும் சோம்பலால் ஆற்றலை பயன் படுத்தாமல் உயிர் துன்பம் வர தொடங்குகிறது.. பின் உயிரே உடலில் நிற்க முடியாத நிலையில், தேகத்தில் மையம் கொண்ட ஆற்றல் அனைத்தையும் இழந்த நிலையில் மரணம் நிகழுகிறது.. மனிதன் குழந்தையாக இருந்த நிலையில் கிடைத்த விதிக்கப் பட்ட ஆற்றலை தன் சோம்பலால் சிறுக சிறுக குறைத்துக் கொண்டு முடிவில் சுவாசிக்க முடியாத அளவிற்கு சுருங்கி, மரணம் அடைகிறான்.. மர்ம யோகிகள் முதலில் தங்களுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலை முழுமையாக வீரம் கொண்டு வெற்றி கொள்கிறார்கள்.. பின் மரண நிலைக்கு தாங்களே விழிப்பு நிலையால் செல்லும் அளவிற்கு தங்களிடம் உள்ள மையம் கொண்ட ஆற்றலையும் இழக்க துணிவு வீரம் கொள்கிறார்கள்... இந்த மையம் கொண்ட ஆற்றல் தான் இறைவன் இறைவன் எல்லா உயிருக்கும் கொடுத்த உயிர் கொடை அல்லது பரிசு.. இதில் உள்ள ஆற்றலை இலவசமாக பெற மனிதனுக்கு உரிமை இல்லை.. ஆனால் கடனாக பெறலாம்.. ஆனால் மனிதர்கள் இறைவனுக்கு துரோகம் செய்து இலவசமாக பெற்று செலவழித்து மரணத்தை தண்டையாக பெறுகிறார்கள்... இப்படி இருக்க மர்மயோகியர் விதிக்கப் பட்ட ஆற்றலுக்கு மேல் மையம் கொண்ட ஆற்றலையும் கடனாக வாங்கி பயன் படுத்துகிறார்கள் .. ஏறக்குறைய மரண நிலைக்கு துணிவு கொண்டு செல்லுகிறார்கள்.. இப்படி மரண நிலைக்கு விழிப்பு நிலையால் செல்லும் போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை..
இந்த நிலையில் தான் இந்த உயிரை படைத்த அண்ட ஆற்றல் தன் தனி பெரும் கருணையால் இழந்த மையம் கொண்ட தேக ஆற்றலையும், விதிக்கப் பட்ட அண்ட ஆற்றலையும் சேர்த்து கொடுக்கத் துவங்குகிறது.. இதனை தன் விழிப்பு நிலையில் உடன் பாடு சுவாசத்தின் மூலம் முழுமையாக மர்ம யோகிகள் பெறுகிறார்கள்.. இந்த ஆற்றலே அதிகப் பட்ட ஆற்றலாகும்... இது கடனாக பெற்ற மையம் கொண்ட உயிர் கொடை ஆற்றலையும் ஈடு செய்து மேற் கொண்டு விதிக்கப் பட்ட ஆற்றலையும் நிறைவு செய்ய அதிகப் பட்ட ஆற்றலை அண்ட பேரறிவு வாரி வழங்குகிறது.. இதனை முன் பதிவுகளில் தெளிவாக சொல்லப் பட்டு இருக்கிறது.. இந்த அதிகப் பட்ட ஆற்றலை பெறவே குணங்குடி மஸ்தான் தன் பாடல்களில் இறக்கத் துணிந்து கொண்டேன் என்ற தலைப்பில் பல பாடல்களை பாடி உள்ளார்..
இதில் அதிசயம் என்ன வென்றால் ஒரு தடவை அண்ட ஆற்றலை அதிகப் பட்ட ஆற்றலாக, கிடைத்து விட்டால் அதுவே அந்த மனிதனுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலாய் மாறி விடுகிறது.. இந்த முறையில் விதிக்கப் பட்ட ஆற்றலை படிப்படியாக மர்ம யோகிகள் உயர்த்திக் கொண்டே செல்லுகிறார்கள்.. அதனால் மனித தரத்திலிருந்து மாமனித தரத்திற்கு உயர தொடங்குகிறார்கள்... பின் தெய்வ தரத்திற்கும் முடிவான இறை நிலை தரமான நிறை நிலை மனித தரத்திற்கும் செல்லுகிறார்கள்.. கனல் பெருக்கத்தை அடைய மரண நிலை நோக்கி நகரும் வீரத்தால் இந்த பயிற்சி கனல் வீர பயிற்சி என அழைக்கப் படுகிறது... இப்படி மரண பயம் இன்றி வீரம் கொண்டு கனலை அதிகப் பட்ட ஆற்றலாக பெற துணிவு கொண்ட மதுரை அன்பர்கள் ஐவருக்கு தற்போது தீவிர பயிற்சி தரப் படுகிறது.. தங்கள் வீரத்தால் கனலை அதிகம் பெற்று விரைவில் மாமனித தரத்திற்கு உயர்வார்கள் என நம்பலாம்.. அவர்களின் வீரம் அவர்களுக்கு மிகவும் துணையாக இருக்கிறது.. மர்ம யோகம் வீரம் கொண்டவர்களுக்கே பொருந்தும்.. இந்த பயிற்சியே தமிழ் வீரம் தான்.. அந்த வீரம் இல்லாமையால் பொய்யான வீரம் வெளிப்பட்டு இன்று தமிழ் மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறது.. உண்மை வீரமாம் தமிழ் வீரம் கொண்டு மேன்மை அடைவோமாக.. முடியாததோடு மோதி மோதி அககடன் பெற்று அதிகப் பட்ட ஆற்றலால் முடியாததை முடிவுக்கு கொண்டு வருவோம்.. உலகிற்கு நல் வழி காட்டுவோமாக...



No comments:

Post a Comment