Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு
**************************************************************
சிவகலப்பின் மறுக்கப் பட்ட மறைக்கப் பட்ட மர்மம்
மனம் ஒன்றோடு கலக்கும் செயல்பாடு உடையது.. மண் பொன் பெண் விசயங்களில் மனம் கலக்கும் விதம் வேறு.. அன்பு தயை கருணை நல் ஒழுக்கம் போன்றவைகளில் கலக்கும் விதம் வேறு.. இந்த இரண்டிற்கும் மனதின் கலப்பு திறன், மிகுந்த வித்தியாசம் உடையது.. மேல் பரப்பாக மனம் கலக்கும் போது மனதிறன் மிக குறைவாக இருக்கும்.. ஆழ ஆழ ஆழ் நிலையில் மனம் கலக்கும் போது, மனதிறன் எல்லை இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.. எப்படி வானத்திற்கு எல்லை இல்லையோ அப்படியே இந்த ஆழ் நிலை மனதிறனுக்கு எல்லையே இல்லை..
மனதை ஒன்றில் பொருந்துதல் அல்லது பொருத்துதல்,- இணைத்தல் அல்லது இணைதல்- கலத்தல் அல்லது கலப்பு - இவற்றிற்கு ஒரு அளவு கோல் உண்டு.. தமிழ் யோகத்தில் இதற்கு அளவு கோல் உண்டு.. அது பௌதிக கலப்பு, இரசாயன கலப்பு, அணுக்கூட்டு கலப்பு, அணுக்கலப்பு, அணு துகள் நிலை கலப்பு என ஐந்து வகை கலப்புகள் இருக்கின்றன.. இவைகளின் கருத்து மிக முக்கியமானது.. உண்மையான ஆன்மீக முன்னேற்றம் இந்த கலப்பில் மட்டுமே உள்ளது.. பௌதிக கலப்பு மிக மேலோட்டமான கலப்பு தேக கலப்பு.. இரசாயண கலப்பு என்பது மன கலப்பு.. அணுக்கூட்டு கலப்பு என்பது ஆன்மா கலப்பு அல்லது உயிர் கலப்பு.. அணுக் கலப்பு என்பது அருளோடு கூடிய துவைத கலப்பு.. அணு துகள் கலப்பு என்பது அருளாய் ஆன அத்துவைத கலப்பு.. அத்துவைத கலப்பே முடிவான கலப்பு.. அது எல்லையே இல்லாத மிக ஆழமான கலப்பு.. அதுவே சிவ கலப்பு ஆகும்.. சிவ சிவ என சொல்லுவதில் உள்ள பொருள் அளவில்லா எல்லை கடந்த நிலைக்கு செல்லவே தமிழில் இரண்டு தடவை தொடர்ந்து சொல்லும் பழக்கமாக உள்ளது...
மேலே சொன்ன கலப்புகள் தரம் மிக முக்கியமானது.. பெரும்பாலும் ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் மட்டுமே இன்றைய நிலை உள்ளது.. அதனால் தான் எந்த விதத்திலும் ஆன்மீகம் பலன் தராமல் இருக்கிறது.. ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் இருந்து இரசாயண கலப்பாகிய மன கலப்புக்கு செல்லவே இன்றைய ஆன்மீகம் மிகவும் தடுமாறுகிறது.. அதற்கு மேல் உயிர் கலப்பு, அருளோடு கலப்பு, அருளான கலப்பு என்பது இன்றைய ஆன்மீக குருக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.. மன கலப்பிற்கே அவர்களுடைய குரு பீடமும் குரு மரியாதையும் மிக பெரிய தடைகளாக உள்ளது.. ஒரு குருவையே வேறு படுத்தி அவரை கடவுள் நிலைக்கு எட்ட தள்ளி வைக்கும் போது, பௌதிக கலப்பிற்கே சிரமமாக உள்ளது.. அவ்வளவு கேவலமான முறையில் நமது ஆன்மீகம் உள்ளது.. கண்ணப்பர் நாயனார் சரித்திரத்தை சற்று உற்று கவனித்தோமானால், காட்டிலே இருந்த சிவனை ஏழு நாட்கள் தான் தொழுதார்.. சிவனை தொழ எந்த குருவும் வழி காட்டவில்லை.. அவர் வெறும் பௌதிக கலப்பிலே இருக்கவில்லை.. அவர் அருள் கலப்பு வரை சென்றதால் தான் சிவ தரிசனம் காண முடிந்தது.. அதே சிவனை இருபது வருடங்கள் பௌதிக கலப்பிலே பூசை செய்த பூசாரிக்கு சிவ தரிசனம் காண இயலவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது..
நம்முடைய மர்ம யோகம் அருளான கலப்புக்கு செல்லும் நுணுக்களை உடையது.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் விரைவில் அன்பர்கள் மிக பெரிய முன்னேற்றம் காண்பார்கள்.. மலையேற்றம் காணும் அன்பர்கள் தங்கள் உடன் பாடு சுவாசத்தில் இப்போது பௌதிக கலப்பிலிருந்தும், மன கலப்பாகிய இரசாயண கலப்பிலிருந்தும் விடுபட்டு சுவாத்தோடு ஆன்மா அல்லது உயிர் கலப்பிற்கு சென்று விட்டார்கள்.. இதனால் சற்று தேக்க நிலையில் இருந்த அன்பர்கள் அளவுக்கு அதிகமான அண்ட ஆற்றலை பெற்றதால் எட்டு தடவை தொடர்ந்து மலை ஏறி இறங்கியும் சற்றும் தேக அலுப்பு இன்றி கால் வலி இன்றி உற்சாகமாக இருக்க முடிந்தது சற்று ஆச்சரியமான செய்தி தானே!!.. இதுவே துளி அளவு சாதனைதான்... இன்னும் அன்பர்கள் அருளான கலப்பாகிய சிவ கலப்பிற்கு செல்லும் போது சித்தர் தரத்திற்கு மேல் நிறை நிலை மனித தரத்திற்கு நிச்சயம் உயருவார்கள்.. கோவையிலும் மற்ற இடங்களிலும் பயிலும் அன்பர்கள் சுவாசத்தோடு கலக்கும் கலப்பின் தரத்தை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்..

Marma Yoogi
Marma Yoogi கேள்வி :--உற்சாகம் தரக்கூடிய பதிவு நன்றி அய்யா...பெளதிக கலப்பு இரசாயன கலப்பு புரியவில்லை?கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அய்யா

பதில்:-- பௌதிக கலப்பு என்பது விலங்கியல் கலப்பு போன்றது.. யானை கூட்டம், மான் கூட்டம், தெரு நாய்கள் கூட்டம் ஏதாவது பிரச்சனை என்று வ
ந்தால் எல்லாம் சிதறி ஓடி போய் விடும்.. அதை போல் தான் அரசியல்வாதிகள் மேடை கூட்டம், சாலையில் விபத்து நடந்தால் வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம், எந்த மன கலப்பும் இல்லாமல் மனிதர்கள் இன்று கூடுவது போல், ஆன்மீகத்திலும் மக்கள் கூடுகிறார்கள்... கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்களிலும், பிரார்த்தனைகளில் எந்த மன கலப்பும் இல்லாமல் தேக அளவில் மட்டுமே கூடுகிறார்கள்... மன கலப்பில் இறை நிலையோடு மனம் உருகி கண்ணீர் பெருகி நிற்கும் நிலை என்றோ காணாமல் போய் விட்டது.. கிருஸ்துவ ஆலயங்களில் கண்ணீர் பெருகி நிற்கும் நிலையை அடிக்கடி பார்க்கலாம்.. அது பெரும்பாலும் தன் தேவைக்கு இறைவன் உதவாத இறைவனின் அவல நிலையை எண்ணி பார்த்தே கண்ணீர் வரும்.. இறைவனின் புனிதத்தோடு கலக்க துளியும் மனம் தயாராக இருப்பதில்லை.. மற்ற இடங்களில் இருக்கும் இறை வேண்டுதல் எல்லாம் தன்முக ஆணவ நிலையாக இருக்கும்... எது கிடைத்தால் எல்லாம் கிடைக்கும் அதற்கு மனம் ஒரு போதும் நாடுவதில்லை.. ஒரு ஊரோ ஒரு நாடோ உலகமோ நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலில் அதில் தானும் நன்றாகவே இருக்க முடியும் என்ற எண்ணம் மனதிற்கு துளி அளவும் எழுவதில்லை.. உலக சமாதானத்திற்க்காக நடக்கும் பிரார்த்தனைகள் எல்லாம் பக்குவப் படாத மனிதர்களால் வெறும் கேலி கூத்தாகவே இருக்கும்.. தன்னை தவிர்த்து தான் இருக்கும் சமூகத்திற்காக மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது அங்கே அன்பு என்ற கனலால் மட்டுமே இரசாயன மாற்றம் நிகழுகிறது.. எப்படி உலகியலில் இரண்டு வேதியல் பொருள்கள் ஒன்று கூடி பிரிக்க முடியாத இரசாயண மாற்றம் நிகழ நெருப்பு தேவைப் படுகிறதோ, அது போல் இருவரது மனம் ஒன்று கூட, அன்பு என்ற கனல் தேவை படுகிறது.. இன்றைய சூழ்நிலையில் பெரும் பாலும் ஒன்று கூடி நின்று வாழ்வியல் நடத்தும் குடும்பத்தில் கூட குடும்ப உறுப்பினர்கள் இடையே அந்த இரசாயண மாற்றம் நிகழுவதில்லையே !!!.. பொது மனிதனின் தரம் உண்மையான அன்பு இல்லாமையால் பெரும் பாலும் இரசாயண மாற்றத்திற்கே வகை கிடைக்காமல் இன்று தவிக்கிறது..

No comments:

Post a Comment