Saturday 17 October 2015

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு
***************************************************************************
1) பொதுவாக மலை ஏறும் போதும் இறங்கும் போதும், தேகத்தில் செயல் படும் சக்தி, அண்ட ஆற்றல் என்பதை உண்மையாக உணர வேண்டும்...
2) அந்த அண்ட ஆற்றல் உண்மையை மனம் நொடிக்கு நொடி பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..
3) தேகத்திற்கு சக்தியை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் சக்தியை அளிப்பதால் அந்த நிலையில் சுவாசத்தை ஒரு போதும் கவனிக்கக் கூடாது.. கவனிக்க கூடாது என்பது மிக முக்கியம்...
4) ஏறும் போதும் இறங்கும் போது,, தேகத்தில் அனைத்து சக்தியும் அதிக பட்ச செலவு செய்யும் விதமாக மிகுந்த விழிப்பு நிலையோடு பயிற்சியில் வேகம் கொள்ள வேண்டும்.. விழிப்பு நிலையில் மட்டுமே நிதானமும் எச்சரிக்கையும் கைகூட கவனமாக ஏற்றம் இறக்கம் செய்ய வேண்டும்..
5) ஒவ்வொரு தேக அசைவும், அண்ட ஆற்றலால் இயக்கப் படுவதையும், ஆற்றலும் தேகமும் கலக்கும் போது அது உணர்வாக வெளிப் படுவதையும் உணர வேண்டும்..எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றம் இறக்கம் சமயம் மூச்சை கவனிக்கக் கூடாது.. தேக உணர்வோடு இருக்கவேண்டும்..
6) இதுவரை தேகம் சுவாசத்தின் மூலம் பெற்ற ஆற்றலை மனம் கவர்ந்து வெளிச்சமாக செயல் பட்ட பழக்கத்தாலும் மலை ஏற்ற இறக்க பயிற்சியால் தேகம் அதிக ஆற்றலை செலவு செய்வதை தடுக்கவும் தனக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் போவதை தடுக்கவும், மலை ஏற்றத்தில் மெத்தனம் காட்டும்.. ஆனால் தேக உணர்வோடு பற்றி கொள்ளும் போது ஏற்படும் விழிப்பு தன்மை பயிற்சியில் மனதை வெல்லும் நிலைக்கு செல்ல சற்று வேகம் பயிற்சியில் காட்ட வேண்டும்...
7) அப்படி வேகம் கொண்ட தேகம் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்வதால், அதை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் அதிகமாக வர தொடங்குவதால் பெரும் சுவாசம் அல்லது மூச்சு இளைப்பு வர தொடங்கும்.. இந்த நிலையில் ஏற்றம் இறக்க செயல் பாட்டினை நிறுத்தி விட்டு அமைதியாக நிற்க வேண்டும்.. இடம் கிடைத்தால் அமர்ந்து கொள்ளலாம்.. இந்த நிலையில் இப்படி வரும் பெரும் சுவாச வேகத்தோடு மனதை பொருத்தும் போது, பழக்கமில்லாத சுவாச வேகத்தோடு மனம் பொருந்த முடியாமல் நின்று விடுவது போல் இருக்கும்.. இந்த பொன்னான நேரத்தில் விழிப்பு என்ற அக குரு நம்மில் தோன்றுவதை உணர வேண்டும்.. யார் உணருவது என்ற கேள்வி எழலாம்.. நிச்சயமாக செயல் படாத மனம் இல்லை.. விழிப்பே தான் உணரும்.. விழிப்பே உணரும் போது இதனை விழித்தல் என்கிறோம்..
8) இந்த விழித்தல் என்ற செயல் பாடு தான் தனக்குள் ஒருவன் பிறப்பதற்கு சமம்.. அவன் தான் மகன்.. மகன் என்றால் மறைவாய் (ம்) அகத்தில் ( அகன் ) தோன்றியவன் என பொருள்.. அகத்தில் தோன்றியவன் அகத்திலிருந்து தோன்றியவனாய் உருவெடுத்து புறத்தே செயல் படும் விழிப்பு நிலையே முருகன் எனலாம்.. மகன் என்பதில் ம் அடுத்து உரு ஆன உருவானதை இணையும் போது அது ம்+ உரு + அகன் என இணைந்து முருகன் ஆகிறான்.. முதலில் நம்மில் மகன் பிறக்கட்டும்.. பின் முருகன் நிலைக்கு வரலாம்... அக நிலையில் மகன் பிறப்பதை உணர வேண்டும்..
9) மனதிற்கு ஏற்ற சுவாச வேகம் குறையும் போது, மனம் எண்ண ஆதிக்கங்களோடு விழிப்பு என்ற கருவறையான தோன்ற நிலைக்கு உள் புக முனையும்.. உடனே ஏற அல்லது இறங்க தொடங்க வேண்டும்..
10 ) இப்படி ஒரு முறை அனுபவப் பட்டது போல் பத்து முறை அனுபவப் பட வேண்டும்.. அதற்காக இரண்டு அல்லது மூன்று முறை மலை ஏறி இறங்க வேண்டியதிருக்கும்..
11) அன்பர்கள் இதனை தேகப் பயிற்சியாக ஒரு போதும் நினைக்கக் கூடாது.. விழிப்பு நிலை பெறுவதற்க்கான உன்னத பயிற்சி.. மற்றவர்களோடு ஒத்து பார்த்து, அவர்களோடு இணையாக மலை ஏறவோ இறங்கவோ ஒரு போதும் கூடாது.. மற்றவர்களை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்.. படியின் மேல் மட்டும் பார்வை, இளைப்பு என்ற பெரும் சுவாசம், அதில் மனம் பொருத்தி விழித்தல் என்ற செயலை உணர்தல், இதை தவிர மனம் எதையும் நாடக்கூடாது...
12) அன்பர்கள் மலை அடிவாரத்தில் கூடும் போதும் பிரியும் போதும் ஒருவர்க்கு ஒருவர் பேச்சில் ஈடுபடுவது மிகவும் பயிற்சிக்கு ஆபத்தானது... இதில் மிகவும் கவனம் தேவை... மன அமைதியில் மட்டுமே விழித்தல் என்ற செயல் பாட்டினை திறம் பட செய்ய முடியும்...
13) முதல் நாள் அகத்தில் மகன் கரு உற்ற நிலையில், கரு வளர்க்கும் பயிற்சியை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து முடிந்த வரை வர வேண்டும்.. ஒவ்வொரு ஞாயிறுக்கும் இடைப் பட்ட நாட்களில் மாடி படி ஏறி பயில வேண்டும்..
14 ) தொடர்ந்து 10 ஞாயிறு கிழமைகளில் வர முடிந்தவர்கள் மட்டும் நேரடி பயிற்சிக்கு வரவும்.. உறுதி பாடு இல்லாதவர்கள் நேரடி பயிற்சியினை தவிர்கலாம்..

இது முதல் கட்ட நிலைக்கான செயல் பாட்டு விளக்க முறைகள்... பின்னால் பயிற்சியின் இடையே புதிய விளக்க முறைகள் அளிக்கப் படும்.. எல்லாமே முகநூல் பக்கத்தில் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத, வெளி ஊர் அன்பர்களுக்காக பதிவு செய்யப் படும்... வெளி ஊர் அன்பர்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.. நுணுக்களை கவனமாக அறிந்து மாடி படிகளில் ஏறி இறங்கியோ மைதானத்தில் ஓடியோ நோக்கத்தோடு பயின்று செயல் படும் வெளி ஊர் அன்பர்கள் மிகவும் பயன் அடைந்து கொண்டு வருகிறார்கள்.. பதிவினை மட்டும் நன்றாக படித்து பயிலுமாறு வெளி ஊர் அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்...

No comments:

Post a Comment