Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு
**************************************************
அந்த இருண்ட நாட்களில்
சுவாச ஒழுங்கின் மூலமும் சுவாச கூத்தின் மூலமும் தோன்றா நிலை அனுபவ பட தொடங்கும் அன்பர்கள் சற்று நீண்ட இருண்ட நாட்கள் அந்த தோன்றா நிலையில் அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.. அந்த இருண்ட நாட்கள் தான் ஒரு வரம்பிலே உள்ள தேகம் மற்றொரு வரம்புக்கு சரியாக தொடர்பு கொண்டு இரு வரம்பிலும் சென்று வரக்கூடிய பக்குவம் அடையும்.. திட தேகமான தூல தேகம், பயிற்சியில் அடையாளம் கண்டு கொண்ட தோன்றா நிலையாக விளங்கும் நுண் தேகமாக விளங்கும், இரண்டிற்கும் இணைப்பு ஏற்பட இரகசிய உடன் பாடு ஏற்பட சில நாட்கள் ஆகும்.. இந்த நாட்களே இருண்ட நாட்கள்.. வள்ளலார் திரு மூலர் போன்றோர் வாழ்வில் அந்த இருண்ட நாட்கள் சில வருடங்களாக இருந்தன.. வள்ளலார் வாழ்வில் 12 வருடங்களும் திரு மூலர் வாழ்வில் 30 வருடங்களும் அவர்கள் என்னவானர்கள் என்பது யாருக்கும் தெரியாது... அதே போல் இராமர் பஞ்சபாண்டவர்கள் 14 வருடங்கள் என வனவாசம் என மறைவாக இருந்தார்கள்.. நாடு காடு என்ற இரு வகை வாழ்வில் உண்மை பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. நாடு வாழ்க்கை என்பது நாடுதல் தேடுதல் கூடிய வாழ்க்கை.. காடு (க்+ ஆடு) வாழ்க்கை என்பது 'க்' என்ற இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ் நிலையோடு வாழ்வது..

தோன்றா நிலையோடு வாழும் வாழ்க்கை, இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ்நிலையில் வாழுகின்ற வாழ்க்கை.. அண்ட ஆற்றல் ஒரு மனிதனை பரிணாம வளர்ச்சி கொடுக்க ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.. அந்த நேரம் மனிதன் அமைதியாக காத்துக் கொண்டு இருக்கும் நேரமே இருண்ட நேரம்.. இருத்தல் என்ற ஒரு நிலையில் இருப்பதே இருண்ட நேரம் எனவும் சொல்லலாம்.. நம் இருப்பு தன்மை ஓங்கி இருக்கும் நேரம் இது தான்.. கருவிலே குழந்தை பத்து மாதங்கள் இருப்பு தன்மையிலே அண்ட ஆற்றல் செயல் பட காத்து இருக்கும் நேரம் இது தான்..

ஆகவே இருப்பு தன்மையில் காத்திருக்கும் தகுதி இல்லாத மனிதன் யோக நிலையில் முன்னேற முடியாது... காத்திருத்தலும் ஒரு யோகமே.. அதை தவம் யோகம் என சொல்லலாம்.. தன் தேகத்தை சுற்றி கரையான் புற்றுக்கள் வளரும் அளவிற்கு தவம் இருந்தனர் முந்தைய தமிழ் நிலை அறியாத தவசிகள்.. ஆனால் தமிழ் நிலை கற்றுதந்த தவமே சிவ கலப்பு.. கலப்பில் தீவீரம் அது பணிவு என்பதின் ஆழ்நிலை.. நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பணிவு என்ற நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தார்கள்.. பணிவு என்பது பிரிந்தால் ப்+அணி+ வ்+ உ எனலாம். பகர மெய் ஆகிய உயிரை ஏற்கும் அல்லது அணியும் அண்ட (விண்ணாகிய வ் ) ஆற்றலின், இயக்கம் ( உ )... அந்த இருண்ட நாட்களில் பணிவு என்ற அந்த நிகழ்வு நடக்கும்...

அருவருக்கத்தக்க கம்பளி புழு தன்னை சுற்றி கூடு கட்டிக் கொண்டு 15 நாட்கள் அந்த இருண்ட காலத்தை தன் இருப்பு தன்மையிலே கடக்கும் போது அண்ட ஆற்றலின் பணிவு என்ற செயல் பாடு திறம்பட நடப்பதால் தன் கூண்டிலிருந்து அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளி வருகிறது.. கம்பளி புழுவின் தோற்றத்திற்கும் வண்ணத்து பூச்சியின் தோற்றத்திற்கு எவ்வளவு பெரிய வித்தியாசம்... மனிதனும் அவ்வாறே கம்பளி புழுவுக்கு ஒத்த தன் தேக அமைப்பிலிருந்து தெய்வீக தேகத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடைவன்.. கம்பளி புழு விடவா மனிதன் தன் தரம் தாழ்ந்து போய்விட்டான் ? விடவேண்டியதை விட்டு விட்டு பிடிக்கவேண்டியதை பிடித்து விட்டால் எல்லாம் செயல் கூடும்..

சுவாச ஒழுங்கிலே தோன்றா நிலையை அடையாளம் கண்மர்டு அதில் தன் இருப்பு தன்மை வல்லமையால் இருக்க தொடங்கி விட்டால் அந்த தோன்றாநிலையே சுவர்க்க வாசல்.. அங்கே தன்னில் தானாய் இருக்கும், அந்த தோன்றா நிலையை அடையாளம் காணும் சிறு வெளிச்சமான அக நான் என்ற விழிப்பு நிலை இருக்கும்..

இப்பொழுது செயல் அற்று இருக்கும் அந்த அகநானை செயல் படுத்த முனையவேண்டும்.. அந்த கதியை அல்லது சுவாசத்தை அந்த அகநானே செய்யும் நிலைக்கு ஆளாக்க வேண்டும்... இது மிகவும் உன்னதமான யோக மாற்றம் .. இதற்கு நிகர் எதுவும் இல்லை.. சாட்சி நிலையாய் இருந்து தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இரண்டாய் இருந்து பிரிவினை செய்யும் அந்த நிலையை நீக்க அந்த அகநானையே கதி அல்லது சுவாசம் செய்து வைத்திட வேண்டும்.. அப்போது அகநான் அண்ட ஆற்றலோடு இணைய தொடங்கி அகநான் அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும்.. அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும் அந்த நாட்கள் தான் இருண்ட நாட்கள் அண்ட ஆற்றல் தன் பணியை செவ்வனே செய்ய பணிவு என்ற உன்னத யோகநிலை அவசியம் தேவை.. அகநான் சுவாசத்தோடு இருக்கும் அந்த இருண்ட நாட்களில் மிகுந்த கவனம் தேவை... அகநான் சுவாசத்தோடு இரண்டு என்ற நிலை அகன்று ஒன்றாய் இருக்கவும் பிரிந்து இரண்டாய் இருக்கவும், மீண்டும் மனதின் செயல்பாட்டினை அனுமதிக்கும் தகுதியோடு இருக்க வேண்டும்.. இப்படி பணிவோடு தவம் கோலம் பூண்ட நிலையில் அண்ட ஆற்றல் தூல தேகத்தின் உள்ளே ஒரு சூட்சம தேகத்தை உருவாக்கி விழிப்பு நிலையின் உதவியுடன் தூல தேகத்தை விட்டு வெளியே பிறப்பு எடுக்க செய்யும்.. இதனை இரண்டாம் பிறப்பு என்பர்..

இரண்டாம் பிறப்பு எடுப்பதே சித்தர்களின் நோக்கம்.. தூல தேகம் கட்டுப் பட்ட நிலையில் எங்கிருந்தாலும் அதிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய சூட்சம தேகம் அதிக வலு வாய்ந்தது.. காலமும் தேசமும் கடந்து தூல தேகத்தைக் காட்டிலும் பல மடங்கு திறனுடன் அந்த சூட்சம தேகம் செயல் படும் போது, இந்த உலகின் தரமே தலை கீழாக மாறி விடும்... சத்தியமும் தர்மமும் உண்மையும் மட்டுமே இங்கு இருக்க முடியும்..

மதுரை அன்பர்களுக்கு அந்த இருண்ட நாட்களில் இருக்க வேண்டிய முக்கிய பயிற்சி கடைசியாக அளிக்கப் பட்டு 14 நாட்கள் தீவிர பயிற்சி இன்றோடு ( 28-9-15 ) முடிந்தது.. அவர்கள் தங்கள் விழிப்பு நிலையால் தோன்றா நிலையில் உள்ள அக நானே சுவாசிக்கும் பயிற்சியில் தேர்ந்து அண்ட ஆற்றலாய் ஒருமையுடன் கலக்கும் திறனை பெறுவார்கள் என நம்பலாம்.. மலை ஏறி பயிலும் அன்பர்களுக்கு மட்டுமே அந்த கதி என்ற தோன்றாநிலையை பலப்படுத்தும் சுவாசம் எளிதாக சுத்தமாக விரைவாக கைகூடும் என்பதால் மலை ஏறும் பயிற்சியை செய்கிறார்கள்.. அப்பயிற்சியை செய்யும் கோவை அன்பர்களுக்கு விரைவில் நேரடி பயிற்சி அளிக்கப் படும்.. இது மிக நுண்ணிய ஆபத்தான பயிற்சி ஆகையால் நேரடி பார்வையில் மட்டுமே இப்பயிற்சி தரப் படும்.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் எல்லாம் செயல் கூடும் என உறுதியாக நம்பலாம்.. வெறும் கற்பனை வளத்தில் உருவானதல்ல.. நடைமுறை சாத்தியத்தால் ஆனது..

No comments:

Post a Comment