Monday 12 October 2015

மர்மயோகத்தில் கனல் வீரம்- ஆறு


மர்மயோகத்தில் கனல் வீரம்- ஆறு 
****************************************************
எழுத்து வடிவில்
காரண நிலையாய் இருக்கும் இருப்பு தன்மையில் உள்ள அக 'நான்' இறுக்கம் மிகுந்த எண்ணக் குவியலிலிருந்து இறுக்கம் துளியும் இல்லாத, எண்ணம் எதுவும் இல்லாத இருப்பு தன்மைக்கு எண்ணங்கள் பாய்ந்து வரும்.. அந்த எண்ணங்களை மையப் படுத்தி அந்த அக 'நான்' தன் இனமான புற 'நானை' நோக்கி, அந்த இருப்பு தன்மையில் உள்ள விழிப்பு சக்தியை மீறி, பாய தொடங்கும்.. அந்த விழிப்பு சக்தியின் அளவினை கால அளவால் மட்டுமே கணிக்க முடியும்... நம் தோன்றா நிலையின் தன்மையான விழிப்பு சக்தி அந்த தோன்றா நிலையில் நீடிக்க செய்ய வேண்டும்.. அந்த விழிப்பு சக்தி பலம் அடைய அடைய அதுவே ஒரு தடுப்பு சுவராய் அக நானுக்கும் புற நானுக்கும் இடையே அமைகிறது.. அதுவே ஆன்மா பலம் என்பது.. அந்த ஆன்மா பலத்தால் மட்டுமே அளவற்ற ஆன்ம இலாபம் பெற முடியும்... தோன்றா நிலையில் நீடிக்க வைக்கும், அந்த விழிப்பு தடுப்பு சுவர், அளவற்ற கனல் ஆற்றலை அண்டதிலிருந்து பெற உதவுகிறது.. பெறுவதோடு மட்டும் அல்ல அந்த ஆற்றலை 'புற நானுக்கு' பாய்ந்து போகவிடாமல் பார்த்துக் கொள்ளும்.. அது மட்டும் இல்லாமல், எப்பொழுது வெளியே போய் காரியப் பட வேண்டுமோ அப்போது மட்டுமே அந்த தடுப்பு சுவர் அனுமதிக்கும்.. முதலில் தோன்றா நிலையில் 'அக நான்' உருவாக வேண்டும்.. அந்த அக நான் விழிப்பு நிலையால் வளர்க்கப் பட வேண்டும்.. வளர்ந்த பலமான 'அக நான்' தான் ஒரு நல்ல தடுப்பு சுவராய் ஆன்மா நிலையாக உயரும்.. ஆன்மா தரிசனம் காண விரும்புவோர் இப்படி தோன்றா நிலையின் மூலம் மட்டுமே காண முடியும்...
தோன்றா நிலையில் மட்டுமே அருவ நிலையாகிய கனல் உள்ளே புகமுடியும்.. கனல் பெற்ற உணர்வு அனுபவமே விழிப்பு.. அந்த தோன்றா நிலையில் உணர்வாக அனுபவப் படும் போது மட்டுமே அந்த உணர்வே விழிப்பாக மலர்கிறது.. 
அந்த உணர்வை நீடிக்க செய்தால் கனல் பெருக்கம் அடைகிறது.. கனல் பெருக்கம் என்ற சொல்லும், நீடித்தல் என்ற சொல்லும், மிக முக்கியமானது.. அந்த உணர்வை அல்லது விழிப்பு நிலையை நீடிக்காமல் எந்த முன்னேற்றமும் இல்லை.. விழிப்பு நிலை நீடிப்பு என்பது ஆன்மா நிலையில் நீடிப்புக்கு இணையானது... அந்த நீடிப்பு தான் முடிவில் மரணம் இல்லா பெரு வாழ்வு ஆகிறது.. வேறு எங்கும் கிடைக்காத இந்த உண்மை மர்ம யோகமாகிய தமிழ் யோகத்தில் மட்டுமே வெளிப் படுகிறது...
படியேற்றம் ஏறும் அன்பர்கள் அழுத்தமான சுவாசமாகிய இளைப்பில், மனதை பொருத்தும் போது, அந்த அழுத்தம் மன அழுத்தத்தை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், மனம் அந்த சுவாச உயர் அழுத்தத்தில் செயல் இழந்து போய் விடுகிறது.. அப்போது மனம் எண்ணங்களை சுமக்காத நிலையால் எந்த எண்ணங்களையும் தன்னிடம் வைத்து கொள்வதில்லை... செயல் பாடு அற்ற மனதால், எந்த எண்ணமும் தோன்றா நிலை உருவாகிறது.. அதுவே தோன்றா நிலை.. அந்த தோன்றா நிலையில் தான், அண்ட ஆற்றல், கனலாக அதிக அளவு வரவாக வருகிறது.. கனல் வரவுக்கு எண்ணங்கள் தடை மட்டும் போடுவதில்லை.. வந்த கனலையும் எண்ண வடிவமாக விரையம் பண்ணுகிறது.. அதனால் தான் கோபம் காமம் போன்ற தீவிர எண்ண அலைகள் படு தாண்டவமாடுகின்ற போது விரைவில் நம்மிடம் கனல் குறைந்து சோர்வு நிலைக்கு சென்று விடுகிறோம்.. இந்த தோன்றாநிலையில், விழிப்பு சக்தியால் அந்த தோன்றா நிலையின் கால அளவினை அதிகரிக்கும் போது அதற்கு தகுந்தால் போல் கனல் வரவு அதிகப்படுகிறது... உயர் அழுத்த சுவாசம் இளைப்பில் சிறுக சிறுக குறையும் போது அப்படி குறைந்த அழுத்தம் மன அழுத்தத்திற்கு இணையாக வரும் போது, மனம் மீண்டும் எழ தொடங்கி மீண்டும் எண்ணங்களை கவர தொடங்குகிறது.. இப்படி இந்த இரண்டு அழுத்தங்கள் சமநிலை ஆகும் போது மீண்டும் மனம் எண்ணங்களை பிடிக்க விடாமல், அதற்கு முன்னால் பெற்ற கனல் ஆற்றலில் உருவான விழிப்பு ஆற்றலால், சம நிலையாகும் காலத்திற்கு அப்பால் காலத்தை நீடிக்க வைக்கலாம்.. அதனால் கனல் வரவு நிச்சயம் அதிகமாகும்.. இந்த நீடிப்பை அதிகப் படுத்த அதிகப் படுத்த இயல்பான சுவாசத்திலேயே கனல் வரவை அதிகப் படுத்தலாம்.. இயல்பான சுவாசத்திலேயே தோன்றா நிலை கைகூடுமானால் அதுவே சுவாச ஒழுங்கு, சீரான ஒழுங்கு... அந்த சுவாச ஒழுங்கு இல்லாததனால் நரை திரை மூப்பு சாக்காடு வருவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.. எத்தவம் செய்தாலும் ஏது தொழில் புரிந்தாலும் முக்தர் மனம் இருக்கும் மோனத்தே என்பர் அறிஞர்கள்.. இதில் மோனம் என்பது தோன்றா நிலையே.. சுவாச ஒழுங்கு மட்டும் கை கூடி விட்டால் மலையேற்றம் மற்ற யோகப் பயிற்சிகள் போன்றவைகளை எதையும் செய்ய தேவை இல்லை...
மலையேறும் அன்பர்கள் தங்களுக்கு, அப்போதைக்கு அப்போது சுவாச ஒழுங்கு கை கூடுவதாகவும், வேலை திறனில் நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் சொல்லுகின்றனர்.. முக நூல் அன்பர்களே தாங்களும் மேலே சொன்ன விளக்கங்களை பின் பற்றி பயன் அடையுமாறு வேண்டுகிறேன்... விரைவாக நடந்தோ ஓடியோ, மாடி படிகளில் ஏறி இறங்கியோ உடன் பாடு சுவாசத்தை பிடித்துக் கொண்டு, விழிப்பு சக்தியின் உதவியால் தோன்றா நிலையின் கால அளவை நீடிக்கச் செய்து கனல் பெருக்கம் அடையலாம்... சந்தேகம் எதாவது இருந்தால் வினா எழுப்பினால் அதற்கான பதிலால் அனைவரும் பலன் அடைவர்... விழிப்பதும் எழுவதும் ஓங்கி செயல் படுவதும் நம் கையில் மட்டுமே உள்ளது என உணர்ந்து செயல் படுவோமாக...

அன்பர்கள் :  அற்புதம் அய்யா, இந்த விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது சோர்வு இருப்பதில்லை, அதனின் அளவும் நீடித்து இருக்கிறது. சில நேரங்களில் இரவில் தூக்கம் வருவதில்லை, 3.00மணிக்கு நானே தூங்க செல்கிறேன். அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம் அய்யா.இப்படி இரூப்பதினால் தவறு ஏதுமில்லையே அய்யா. தோன்றாநிலையில் நீடித்து இருக்க முயலும்போது ஏதாவது இடையூருகள் வருகிறது. நீடீத்து இருக்க முயலவேண்டுமானால் யதார்த்த மூச்சிலியே சுவாச ஒழுங்கில் இருப்பபதற்கு கொஞ்ச நாள் இந்த பயிற்சில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது சரிதான என்று நீங்கள் எனக்கு அறிவுரை கூறுங்கள். நன்றி... நன்றி... நன்றி..,

Marma Yoogi
Marma Yoogi : மனம் ஒரு பெரிய சோம்பேறி.. ஒரு பக்கம் நேரம் இல்லை இல்லை என அலறும்.. நேரம் கிடைத்து விட்டால் நேரத்தை எப்படி போக்குவது என்ற கவலை அதற்கு வந்து விடும்.. அந்த தூக்கம் வராத அந்த நேரத்தை சுவாச ஒழுங்கிற்கு பயன் படுத்த மனதிற்கு யோசனையே வருவதில்லை.. வேலை நேரங்களிலும் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும் போதும், கடும் வெயிலில் நடக்கும் போதும் மட்டும்தான் சுவாச பயிற்சியை செய்ய யோசனை தரும்... மனதின் விளையாட்டை புரிந்து கொள்ளுங்கள்.. தூக்கம் வராத அந்த நேரம் ஒரு பொன்னான நேரம்.. ஆற்றல் அதிக வரவால் சோர்வு ஏற்படாத அந்த நேரத்தை வாசிபயிற்சிக்கு பயன் படுத்தலாமே!!!... பணத்திற்கு மேல் பணம் சேர்க்கும் மனம் ஆற்றலுக்கு மேல் ஆற்றலை சேர்க்க ஏன் உடன் பட மறுக்கிறது.. அந்த பொன்னான நேரத்தின் அமைதியை இரசிக்கும் போது விழிப்பு நிலை உயர்கிறது என்பது மிக பெரிய உண்மை.. நழுவ விடாதீர்கள்..

அன்பர்கள் : நன்றி அய்யா பொதுவாக வேகமாக செயல் படும் பொழுதூ உடன் பாடு சுவாசம் கை கூடுகிறது அந்த தோன்ற நிலை அனுபவம் வேலை பார்க்கும் போதும் சில நிமிடங்கள் கைகூடுகிறது அப்போது உடம்பில் குறிப்பாக முதுகு பகுதியில் கூச்ச உணர்வை போல் உணர்வு எற்படுகிறது அது ஏன் அய்யா? வீட்டிலே பயிற்சி செய்யும் போது சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுவாசம் தெரிவதில்லை அப்ப நான் சுவாசத்தை உள் இழுக்க முயன்றால் என்னால் செயல் பட முடியவில்லை அப்ப நான் என்ன செய்வது அய்யா? நேற்று ஒரு அனுபவம் கிட்டியது சுவாசம் இல்லா நிலையில் முகம் கை பகுதியில் மட்டுமே உணர்வு கண்ட நான் உடல் முழூவதும் உணர்வை உணர்ந்தேன் அப்ப நான் தூரத்தில் இருந்து என் உடலை சிறு உருவமாக பார்ப்பது போல் பார்த்தேன் அய்யா எனது சந்தேகங்களுக்கு பதில் கூறுங்கள் மர்ம யோகி அய்யா 

Marma Yoogi
Marma Yoogi நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டிய விசயம் என்ன வென்றால், ஆற்றல் குறை பாடு வரும் நேரம் மட்டுமே அதை ஈடு செய்ய சுவாசம் நடைபெறுகிறது.... போதுமான ஆற்றல் தேகம் பெற்று விட்டால், சுவாசம் மிக மெதுவாக தான் ஓடும்.. வன்மையாக ஒடும் சுவாசத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த மனம், மென்மையான சுவாசத்தை அடையாளம் காண முடியாமல் போவதால், சுவாசம் நடைபெறுவதை மனதிற்கு தெரிவதில்லை.. மனம் மென்மை அடைய வேண்டுமானால் அது அமைதியை அடையாளம் கண்டு அதோடு பொருந்தி நிற்க பழகி வேண்டும்.. ஆனால் அமைதியை மனம் ஒரு போதும் விரும்புவதில்லை.. வன்மையும் அராஜகத்தையே நாடும்.. சட்ட திட்டங்களாலும் மத தீவிர கொள்கைகளாலும், சர்வதிகாரத்தாலும், அடக்கு முறையாளும் ஒரு நாட்டில் ஒரு செயற்கையான அமைதியை ஏற்படுத்தி விடலாம்.. ஆனால் அதை விரும்பாத மனித மனம் வெறுப்பு மேலிட திடீரென பொங்கி எழ தொடங்கி விடுவார்கள்.. முஸ்ஸீம் நாடுகளில் தற்போது அந்த நிலையே.. இதற்கு தீர்வு வாசியோகம் தருகிறது.. சூரியகலையில் ஏற்பட்ட அமைதியை எண்ணி சந்திர கலையான உள் வாங்கும் சுவாசத்தில் மனம் பழக வேண்டும்.. எண்ணுவது மனதின் வேலை.. அப்படி மனம் எண்ணுவது சூரிய கலையின் அமைதியாக இருக்கட்டுமே.. மனதை அமைதியை விரும்பி, அமைதியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவரிடம் அன்பு வளரும்.. இது போன்ற அற்புத பயிற்சி உண்மையான வாசியோகத்தில் மட்டுமே உள்ளது.. அமைதி அடைந்த மனம் தோன்றநிலையை உருவாக்க தடையாக இல்லாமல் மிகவும் உதவும்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தான்.... உணர்வை அனுபவிக்க அனுபவிக்க 
கனல் வரவு அதிகமாகும் என்பது பெரிய இரகசியம்.. சந்தேகத்தோடும் ஆராய்ச்சியோடும் அதை மனதால் நினைக்காமல் அந்த உணர்வை உணர்ந்து மகிழுங்கள்.. சமயத்தில் கனல் பெருக்கம் அதிகமாகி விட்டால் தங்க இடம் இன்றி தேகத்தை விட்டு வெளியே வரலாம்.. கனலால் உருவான விழிப்பு நிலை தேகத்தை விட்டு விலகி தேகத்தை சாட்சி நிலையில் பார்க்கலாம்.. விரைவில் தற் செயலாக நடைபெற்ற இது உங்கள் கைவசம் ஆகி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் உடலை விட்டு வெளியே வந்து பார்க்கும் நிலை கைகூடலாம்.. முன்னேற்ற பாதையில் உள்ளீர்கள்.. ஆனால் முன்னேற வேண்டிய இலக்கு மிக வெகு தூரம் உள்ளது.. கனல் வீரத்தால் சாதிப்பீர்கள் என நம்புகிறேன்...

அன்பர்கள் : கனலால் உருவான விழிப்பு நிலை தேகத்தை விட்டு விலகி தேகத்தை சாட்சி நிலையில் பார்க்கலாம்.. விரைவில் தற் செயலாக நடைபெற்ற இது உங்கள் கைவசம் ஆகி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் உடலை விட்டு வெளியே வந்து பார்க்கும் நிலை கைகூடலாம்.. //////// இவ்வாறு உடலை விட்டு வெளியே வரும் போது , ஏற்கனவே உடல் தேடி அலையும் பல ஆத்மாக்கள் இருக்கும் பொது ஏதேனும் ஒன்று உடலில் புகுந்து கொள்ள வாய்ப்பு உள்ளது அல்லவா ? இது பற்றி தங்கள் விளக்கம் என்ன ஐயா ?
Marma Yoogi
Marma Yoogi  : அப்படியெல்லாம் கவலை பட தேவை இல்லை.. எந்த ஆவிகளும் உங்களை நெருங்க தகுதி கிடையாது.. உங்கள் விழிப்பு நிலையில் உள்ள தெய்வீக தன்மையால் உடலை விட்டு வெளியே இருக்கும் போது அவைகளுக்கு நீங்கள் தான் தெய்வம்.. அவைகள் உங்களிடம் மண்டிட்டு கேட்கும் கேள்விகள் போல் உயர்ந்த கேள்விகள் இந்த பூலகில் எங்கேயும் இல்லை.. அதற்கான பதில்கள் உயர்ந்த பதில்கள் உலகில் எந்த மதங்களிலும் வேதங்களிலும் பார்க்க முடியாது.. அவைகள் முற்றிலும் ஆன்மாவுக்கு உயிருக்கு சம்பந்த பட்ட கேள்வி பதிலகள்.. அலையும் அந்த ஆன்மாக்களால் எழுப்பப் படும் கேள்விகளும் பதில்களும் பெரும் பாலும் வெளிப்படுத்த, மொழி கிடைக்க வில்லை.. அந்த மொழி தான் ஆதி தமிழ்.. அவைகளை எப்பொழுதே பாவிகள் அழித்து விட்டனர்.. அதனால் தான் தமிழ் நாடும் தமிழ் கலாச்சாரமும் சுருங்கி போய் விட்டது..
 
 

No comments:

Post a Comment