Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு 
***************************************************************************
 அடி கூத்தின் அவசியம்
அடி கூத்து என்பது அடிப் படை கூத்து அல்லது ஆதார கூத்து எனப்படும்.. முதலில் கூத்து என்பது என்னவென்று பார்ப்போம்.. க் என்பது கடவுள் ஆற்றல்... ' உ' என்பது இயக்கம்.. 'ஊ' என்பது 'உ' என்ற இயக்கத்தின் தொடர்ச்சி நிலை. அதுவே தடை படா இயக்கமான ஊக்கம் என்பது.. உலகில் உடைமை என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தது ஊக்கம் ஒன்றே.. ஊக்கம் உடைமையே உடைமை என்றார் தெய்வ புலவர் திருவள்ளுவர்.. மற்ற உடைமைகள் எல்லாம் ஊக்கம் என்பதை பின் தொடர்ந்து வருபவையே.. இப்படியாக உள்ள ஊக்கம் ஒரு நுண் பொருள் அதாவது சூட்சமமானது.. இந்த நுண் பொருள் நுண் பொருளாகவே இருந்தால் ஒரு பலனும் இல்லை.. அது தகர இயக்கமாக உருவாக வேண்டும்.. அதாவது திட இயக்கமாக வேண்டும்... திடம் ஆக வேண்டும்.. அப்பொழுது தான் பொறி புலன்களுக்கு வெளிப் பட்டு விளக்கம் பெறும்.. பரந்த அண்டமும் சூரியன் முதலிட்ட கோள்களும் இறைவனின் அருள் திறத்தை விளக்க வந்த திடநிலை.. இந்த திட நிலையை பார்த்து பார்த்து வியந்து வியந்து அருள் திறத்தை உணர்ந்து உணர்ந்து நெகழ வேண்டிய மனிதன் மாயா தோற்றங்களில் சிக்கி அருள் இயக்க உண்மைகளை தொலைத்து விட்டு, சினிமா போலி அரசியல் போன்ற மாயா வாதங்களில் சிக்கி வாடுகிறான்.. தமிழ் என்ற சொல்லில் உள்ள முதல் எழுத்தே இந்த உண்மை விளக்கம் பெற்ற திட நிலையான தகர மெய் ஞானம் அல்லது மெய் தெளிவு.. சிவனை தகராசனன் என்பார்கள்.. அருள் சக்தி, உண்மை என்றால், திடநிலை விளக்கம் பெற்றது, சிவம் ஆகும்.. சிவம் இல்லையேல் சக்தியின் வெளிப்பாடு அறிய முடியாது.. அருள் என்ற விழிப்பு சக்தி இலையேல், எதுவும் விளக்கம் பெறாமல் வெளிப்படாது.. இப்பொழுது நாம் காணும் திட அல்லது உருவ காட்சிகள் எல்லாம் சிவநிலையாகி அருளின் உண்மையை உணர்த்த வந்த தகர மெய் ஞானம் அல்லது தெளிவு...
கூத்து என்பது கடவுள் நுண் ஆற்றலை திட நிலையாக விளக்கம் பெற மாற்றம் காணுவது.. சிவனின் கூத்து என்பது அவனின் நுண் ஆற்றலை விளக்கம் அளிக்க இயங்கும் முறையே... ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற ஞானம் பெற சிவன் எடுக்கும் ஒவ்வொரு இயக்கமும் தெளிவை நோக்கிய பயணமே.. தெளிவை நோக்கி பயணப்படவேண்டிய மனிதன் இன்று மயங்கிய நிலை நோக்கியே பயணப் படுகிறான்.. தமிழ் காட்டும் வழியே முழுமையான தெளிவை நோக்கிய பயணமே.. அந்த வழியே முழுமையான விழிப்பு நிலை.... தமிழ் காட்டும் விழிப்பு நிலை சென்றவர்களே தமிழர்கள்.. அவர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்கள் தமிழ் நிலை அறிந்த தமிழர்கள்.. தமிழ் நிலை வேறு தமிழ் மொழி வேறு.. தமிழ் நிலை காட்ட வந்த தமிழ் மொழி இன்று ஆங்கில வடமொழி கலப்பில் தமிழ் நிலை காட்டும் வல்லமையை பெரும் பாலும் இழந்து விட்டதே.. அதனால் உலக முழுமைக்கும் உள்ள மனித குலம் இன்று வேதனை கடலில் மூழ்கி தெளிவு இன்றி தவிக்கிறது.. தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழி ஆனால் மட்டுமே உலகம் காப்பாற்றப் படும்... இதை தான் முகநூல் அன்பர் ஓதியடிமை அவர்களின் ஆழ்ந்த வற்புறுத்தல்.. வள்ளலார் அவர்கள் வெள்ளை இனத்தவர் இதனை செய்து முடிப்பார்கள் என்றார்.. தமிழ் நெறியே சன்மார்க்க நெறி அதாவது எல்லாவற்றிக்கும் சத்தாக ஆதாரமாக உள்ள நெறி என குறிப்பால் உணர்த்தினார்..

அப்படி பட்ட கூத்தை ஏன் அடி கூத்து என சொல்ல வேண்டும்.. அடி என்றால் அருள் நிலையில் மேலும் கீழும் முழுமையாக இருப்பவர்கள்.. அடியார்கள் என்பது அத்தகையோரே.. அடி கூத்து பயிலும் போது அடியார் தகுதியை பெறுவதோடு கூத்தின் மூலம் அருள் விளக்கம் பெறவும், அருளை திட நிலை ஆக்கும் வல்லமையையும் பெறுகிறோம்.. மின்சாரம் அருவமான அருள் நிலையை சார்ந்தது.. அது மின் விசிறி இயக்கமாக விளக்கம் பெறும் போது மட்டுமே அதன் பயன் தூய்ப்பு திடமாக தெரிகிறது.. இப்படி அடி கூத்து செயல் பாட்டை நடத்த உதவ, சுவாசத்தை ஒரு வழியில் உட் படுத்துவது தான் கதி எடுத்தல் என்ற அடி கூத்து.. அதாவது கூ என்ற இறை அருள் ஆற்றலை து என்ற திட தேக ஆற்றலாக மாற்றுவதே கூத்து.. இந்த கதி சுவாசத்தில் ஆரம்ப தொடக்க நிலையாக உள்ள அடி கூத்தில், அருள் சக்தியானது திட நிலைக்கு உதவும் அதிர்வுகளாக மாற்றப் படுகிறது.. அப்படி மாற்றப் பட்ட அதிர்வுகளை முறையாக பயன் படுத்துவதே தடி கூத்து, படி கூத்து, மடி கூத்து போன்றவைகள்.. அவைகளை ஒவ்வொன்றாக தெளிவாக பார்க்கலாம்.. அடி கூத்தில் மேன்மை அடையவில்லையென்றால் எல்லாம் பொய்த்து விடும்.. இப்படி மாற்றத்தை உருவாக்கும் அடி கூத்திற்கு தேவையான சக்தியை வழங்குவதே உடன் பாடு கூடிய சுவாச ஒழுங்கு.. சுவாச ஒழுங்கு தாயாகி நின்று கூத்தாட உதவி செய்யும்... இந்த கூத்தின் விளைவாக தோன்றா நிலை என்ற விழிப்பு கருவறையில் அகநான் என்ற அககுரு பக்குவ நிலையில் வளர்க்கப் பட்டு ஞான குழந்தையாக முருகனாக வெளிப்படுவார்.. அவரே தமிழ் நிலையை, தரும் தகுதி உடையவர் என்பது தமிழ் மறையின் மூல கருத்து... ம் என்ற சிவகலப்பிலே உருகன் அதாவது உருவானவன் தான் முருகனாக கருதப் படும் அக குரு... சமய முருகன் இந்த தமிழ் முருகனை மையப் படுத்தி எழுந்தவன்.. மேற் கொண்டு நகரும் விளக்கம் நமக்கு குழப்பமே தரும்.. சத்தை பிடித்துக் கொள்வோம்.. அதுவே அடி ஆகும்.. அடி கூத்தை முறையாக பிடிக்கும் முன் அன்பர்கள் உடன்பாடு சுவாச ஒழுங்கில் மேன்மை அடைய முனையுமாறு வேண்டிக்கொள்கிறேன்...

No comments:

Post a Comment