Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து
***********************************************************************
திரு கூத்தன் நிலை
சுவாசம் என்பதின் உண்மையான பொருள் சுவர்க்க வாசம்.. முறையான சுவாசம் அல்லது சுவாச ஒழுங்கு நம்மை இந்த பூவுலகிலேயே சுவர்க்கத்தில் வாசம் செய்வதற்கு இணையான அனுபவத்தை தரவல்லது.. அப்படியான சுவாசத்தை நரக வாசம் ஆக்கிய பெருமை (!!!! ???? ) நம் மனதிற்கே உண்டு.. மனம் கெடுத்தவிட்ட, பாழ் படுத்திய சுவாசத்தை ஒழுங்கு படுத்த முனையும் போது, அந்த சுவாசம் சு (சுவர்க்க) வாசமாக நிச்சயம் மாறும்.. இந்த சுவாசம் தன் இயல் நிலையான இன்பநிலையை அடைய நான்கு வகையான சுவாச நிலைகளில் மேன்மை அடைகிறது..
1) இயல்பான சுவாசம்:--- இயல்பான நிலையில் விலங்குகளும், சற்று மேன் பட்ட நிலையில் உள்ள மனித சுவாசம். இது பூமியில் புவி ஈர்ப்பு எதிராகவும் உள்ளே மொத்தமாக ஒடுங்கி போகாமல் உள் இருந்து சதா காலமும் ஓங்க செய்ய அண்ட ஆற்றலின் தூண்டலால் வெளிக் காற்றின் மூலம் நடை பெறுவது.. இதில் மட்டுமே வாழும் மனிதன் அவனவன் விதி பிரகாரம் வாழ்வியலை நடத்தலாம்... ஆனால் முதல் நிலையான இந்த இயல்பான சுவாசத்தில் அரை குறையான அண்ட ஆற்றலையே மனிதன் பெறுகிறான்...
2) சுவாச ஒழுங்கு:--- இயல்பான சுவாசத்தில் இயங்கும் மனிதன் தன் விழிப்பு நிலையை பெருக்குவதின் மூலம் தன் சுவாசத்தின் மூலம் அதிகமான அண்ட ஆற்றலை மனித தரத்தில் உயர்வாக பெற முடியும்.. இதில் சுவாசத்தை முழுமையாக பயன் படுத்தி சுவாச ஒழுங்கினை தன்னில் நிறுவி மனித தரத்தின் உச்சிக்கு செல்ல முடியும்.. காற்றை ஊடகமாக, ஒரு வாகனமாக வைத்து, அதில் கிடைக்கும் அண்ட ஆற்றலை முழுமையாக உள் வாங்குகிறான் யோகி..
3) கதி சுவாசம்:-- கதி சுவாசத்தை அறியும் முன் சுவாசிக்கும் காற்றின் தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. அண்ட ஆற்றலை தாங்கி வரும் காற்று உடலில் உட் புகுந்து வெளி வரும் போது, உடலில் உள்ள வெப்பத்தையும் அபகரித்து வெளியே வருகிறது.. அதனால் விளையும் தேக ஆற்றல் இழப்பு மிகவும் அதிகமானது.. அந்த வெப்பத்தோடு மனமும் வெளியே செல்லத் துடிக்கிறது... கரும் புகையை கக்கும் பெட்ரோல் வண்டி குறைந்த மைலேஜ் தருவது போல் நம் சுவாசத்தால் நாம் சரியான அளவில் அண்ட ஆற்றலை பெற இயலவில்லை... இதை மையப் படுத்தியே நம் தமிழ் சித்தர்கள் சுவாசத்தில் அதி கனல் பெற கதி சுவாசத்தை கண்டு பிடித்தனர்.. கதி என்பதை பிரித்தால் க்+ அதி எனலாம்.. இதில் 'க்' என்பது கனல் என்ற கடவுள் ஆற்றல் ஆகும்... இதில் காற்றின் துணையை வெகுவாக குறைத்துக் கொண்டு கனலை அதிகமாக வாங்கும் திறனை பெறலாம்.. ஆனால் இன்றைய சித்த வித்தியார்த்திகள் கதி என்று கூறிக்கொண்டு அதிகமான வெப்பத்தை வெளியே விட்டு ஜீவ சக்தியை தவறான சுவாசத்தால் கனல் மிக குறைவாகப் பெற்று, தங்கள் மரணக்குழியை தாங்களே விரைவாக தேர்வு செய்யும் அவல நிலைக்கு செல்லுகிறார்கள்.. இந்த கதி சுவாசம் நேரடி பயிற்சி மூலம் மட்டுமே தரப் பட வேண்டும்... கதி சுவாசம் பயிலுகிறவர்கள் மாமனித தரத்திற்கு செல்லும் தகுதியை பெறுகிறார்கள்...
இந்த கதி சுவாசத்தில் தான் எட்டு வகையான கூத்துகள் என்ற கதி சுவாச வகைகள் உள்ளன.. அவைகளின் மூலம் கனலை முறையாக திறமையாக பயன் படுத்தி யோக கலைகள் தற்காப்பு கலைகள் மருத்துவ கலைகள், அஷ்டமா சித்து கலைகள் போன்றவைகளை பெறலாம்... அடி கூத்து, தடி கூத்து, படி கூத்து, மடிகூத்து, இடிகூத்து, பரகூத்து, மற்ற இரண்டு உள் அடங்கிய மறை கூத்து போன்ற எட்டு வகை கூத்துக்கள்.. பிரம்மவஸ்திரம் போன்ற மிக பயங்கரமான சக்திகளை இயக்கக்கூடிய கூத்துக்கள் அந்த மறை கூத்தில் உள்ளது... அப்படி எட்டு வகை கூத்துகளில் செயல் பாட்டை மேன் படுத்த நடு நாயகமாக விளங்கும் சிவ கலப்பு ஒன்று இல்லையேல் எல்லாமே கேலி கூத்து ஆக மாறி விடும்.. அப்படி சிவ கலப்பு துணை புரியாத எந்த கூத்தும் சிறு பலனை கூட தராது.. கலப்பு திறனை பெருக்க உதவக்கூடிய சிவகலப்பு தந்த நம் சித்தர் மக்களின் கருணை உள்ளத்திற்கு நாம் எந்த விதத்திலும் நன்றி கடன் செலுத்த முடியாது..
கதி என்ற சொல்லுக்கு இன்னொரு விளக்கம் கலப்பு -க- திறன் -தி- என சொல்லப் படுகிறது..
கலப்பு திறன் தரும் சிவ கலப்பு இன்றி செய்யும் எதுவும் சவமாய் பலன் இன்றியே போகும்.. சிவ கலப்போடு எட்டு கூத்தக்களை ஆடும் சிவனை தான் திரு கூத்தன் என்றார்கள்.. அந்த எட்டு கூத்துகளோடு சிவ என்ற இரண்டு பூதங்களை சேர்த்து பத்தாகி நின்ற நிலையை அடைய முடியாததால் எட்டு இரண்டு கூட்டி எண்ணவும் அறியாது இருக்கின்றீர் பித்த உலகினரே என்றார் வள்ளலார்.. பத்து என்ற சொல்லை பிரித்தால் ப் + அத்து எனலாம்.. ஏகம் என்ற வடமொழி சொல்லே தமிழில் அத்து என்பது... து என்பது துவைதம் என்ற இரண்டு நிலை.. அத்து என்பது இரண்டு அற்ற அத்துவைத நிலையாகிய ஏக நிலை.. பத்து என்பது, இறை நிலையும் உயிரின நிலையும் ( ப் என்பது) ஒன்றாகி இரண்டு அற ( அற்று ) கலந்து ஒன்றாய் நின்ற ஏக நிலையாம்..
4) கனல் சுவாசம் என்பது வெளிக்காற்றின் துணை சிறிதும் இன்றி, கனலை மட்டுமே உள் வாங்கி ஆதி சக்தியை இறைவனுக்கு சமமாக பெற்று சமாதி ( சம ஆதி ) நிலையில் நிறை நிலை மனிதனாய் கருணை வடிவாய் நீதிமானாய் நீதியை நிலை நாட்டுபவனாய், நிற்பது..
தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்து மதுரை அன்பர்களுக்கு இரவு முழுவதும் தொடர்ந்து தீவிர பயிற்சியாக முதல் நான்கு கூத்துக்கள் கற்று தரப் படுகிறது... ஆனால் பிறவி பழக்கமாக வந்த வெளிச்ச தொடர்பு காரணமாக சிவ கலப்பின் திறன் குறைந்த காரணத்தினால் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை.. சிவகலப்பின் முக்கியத்தவத்தை முற்றிலும் உணர்ந்த பின் அவர்களின் வேகம் அதிகமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.. தீர்மானிக்கப் பட்ட கால கெடுவுக்குள் தங்கள் பயிற்சியில் முழுமை அடைவார்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வார்கள் என நம்பலாம்.. அவர்கள் வெற்றியை தொடர்ந்து கோவை திருச்சியில் பயிலும் மற்ற அன்பர்களுக்கும் நிச்சயம் பயிற்சி அளிக்கப் படும்...

No comments:

Post a Comment