Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று
******************************************************
Irakasiya Thedal : - அன்பரின் பல வினாக்களுக்கான பதில்
இரண்டு நிமிடங்களில் சிரமப் பட்டு மலை ஏற இன்னும் ஒரு மாத காலம் ஆகும்.. மிக மிக யதார்த்தமாக மூச்சு இளைப்பு சிறிதும் இன்றி சுலபமாக இரண்டு நிமிடங்களில் மலையேற நிர்ணயக்கப் பட்ட காலம் டிசம்பர் 31.. பின் தான் சூட்சம தேக தீவிர பயிற்சி தரப் படும்.. தடி கூத்தின் மூலம் விண்ணக சக்தியை பெற பயிற்சி தரப் படுகிறது.. புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த விண்ணக சக்தி ( Lavitational force ) மூலம் ஒரு பறவைக்கான விசேச ஆற்றல் கிடைக்கும்... இயக்கத்தில் 80 கிலோ எடைகொண்ட தேகம் இந்த விண்ணக சக்தியால் 30 கிலோ எடையாக நொடி பொழுதில் மாறி இருக்கும் வேளையில் தங்கள் செயல் திறனில் பெருந்த உயர் மாற்றம் காண முடியும்.. இப்பொழுது எல்லா அன்பர்களும் மிக குறைந்த இளைப்போடு நிற்காமல் மலை ஏற்றத்தை 7 நிமிடம் முதல் 12 நிமிடத்திற்குள் முடிக்கின்றனர்.. அதுவும் இரவு முழுவதும் விழித்திருந்து பின் காலையில் செய்கிறார்கள்.. அதுவே இரவு நன்கு தூங்கி காலையில் எப்பொழும் போல செய்தானர்களானால் 5 நிமிடத்திற்கு குறைவாக முடிப்பார்கள் என நம்பலாம்..
உடன் பாடு சுவாசம் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி பயிற்சி சொல்லி தரப் படும்.. காரணம் இளைபாறுதல் ஆற்றல் ஈடு கட்டுதல் போன்றவைகள் யதார்த்த உடன்பாடு சுவாசத்தில் மட்டுமே உள்ளது.. கதி என்பது சக்தியை முறையாக செலவு செய்து பெருத்த இலாபம் ஆதாயம் தேடும் வழி.. கதி என்பது சக்தியை செலவு செய்யும் நிர்வாகம்.. ஆகையால் கதி சுவாச ஒழுங்கிற்கிற்கு எந்த வகையிலும் ஈடு ஆகாது... முறையற்ற செலவால் இயக்கத்தில் குறை ஏற்படாமல் தடுக்கவே கதி சுவாசமும் அதில் உள்ள எட்டு வகை கூத்தும்... மனிதன் முறையற்ற சக்தி செலவால் தான் மிகுந்த நஷ்டம் அடைந்து முடிவில் மரணத்தை ஏற்கின்றான்.. சங்கரர் விவேகானந்தர் போன்றோர்கள் மரணத்தை முடிவில் ஏற்றாலும். தங்கள் பிறவியில் மிக உன்னத காரியங்களை இந்த கூத்துகளின் மூலம் செய்ய முடிந்தது... என் முடிவான பதில் இதுவே உடன்பாடு சுவாசத்தில் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி சுவாசத்திற்கான வாசல் திறக்கப் படும்.. அப்படி இல்லாத கதி சுவாசம் பொய்யான கதியாய் மாறி தீங்கு மிக செய்யும்.. சில அன்பர்கள் விண்ணக சக்தியை சற்று உணர்வதாக கூறுகிறார்கள்..

மடி கூத்து என்பது தூங்காமல் தூங்கும் பயிற்சி.. நெருப்பில் நடக்கும் போது ஒரு மனிதன் தூங்க முடியுமா ? தூங்க முடியும் என்பது மடி கூத்து பயில்பவர்களுக்கு மட்டுமே புரியும்... மடி கூத்து பயில்பவர்கள் எந்த ஒரு அரிய காரியத்தையும் மிக யதார்த்த நிலையில் செய்யும் திறன் உடையவர்கள் ஆவார்கள்... மிகுந்த ஓய்வினை கடுமையான பயிற்சியின் நடுவே பெற்றுக்கொள்ளும் நுணுக்கங்களை உடையது.. புருஸ் லீ பல தடவை சொன்னான்.. என்னவென்றால் எனது இரண்டு மிக பலமான குத்துக்களிடையே நான் எடுத்துக் கொள்ளும் அந்த அரை வினாடி ஓய்வின் மூலம் மட்டுமே அந்த அசாதரண காரியம் சாத்தியமாகிறது என்பது தான்.. கடுமையான பாரத போரின் நடுவே மிகுந்த அமைதியில் சொல்லப் படவேண்டிய பகவத் கீதை உருவானது இந்த மடி கூத்தின் மூலம் தான்.. சுவாச ஒழுங்கில் மேன்மை அடைந்த அன்பர்கள் அனைவருக்கும் கதி சுவாசப் பயிற்சி நிச்சயம் உண்டு.. அன்பர்களுக்கு பொறுமையும் காத்திருக்கும் பண்பும் தேவை... பொறுமையும் காத்திருத்தலும் ஒரு சிறந்த யோகம் என்பதை உணர்ந்தவர்களின் திடமான நம்பிக்கை.... முறையற்ற கதி பயிற்சியில் ஆர்வ கோளாரினால் பாதிக்கப் பட்ட மனித வர்க்கத்திற்கு நமது முறையான கதி சுவாச பயிற்சி அவசியம் தேவை... பயின்ற அன்பர்கள் பல கிளைகளாக பிரிந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கற்று தருவார்கள்..

No comments:

Post a Comment