Saturday 27 June 2015

பகுதி 1 - சிவ கலப்பு சிவயோகம் ( குறை மனிதன் நிறை மனிதன்)

சிவ கலப்பு சிவயோகம் என்ற தலைப்பில் யோக குறிப்புகளை தொடர்ந்து வெளியிட உள்ள நிலையில் தொடர்ந்து படிக்குங்கால் ஆன்மீகத்தின் உண்மை நிலை புரியத்தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.. முரண்பாடாக தோன்றுகின்றதை சற்று உற்று கவனிக்குமாறு வேண்டப் படுக்கின்றது.... இதுவரை உலகம் கண்ட அனைத்து மனிதர்களும் குறை மனிதர்களே... இன்னும்
நிறை மனிதன் பிறக்கவே இல்லை... சற்று வியப்பாகவும் வருத்தமாகத்தான் இருக்கும்.. சில உண்மைகளை அறியும் பொழுது தான் நியாமாக தெரியும்... அதுவரை சற்று பொறுமை தேவை...
மனிதன் பஞ்ச பூதங்களால் ஆனவன்..இதில் மறுப்பதற்க்கு எதுவும் இல்லை...மண்ணில் வாழும் உயிர் அனைத்தும் நிலம் நீர் என்ற பஞ்சபூதத்தில் ஓரளவிற்கு முழுமை அடைந்தது போல் தோன்றுகிறது.. நிலம் என்ற தேகத்தை பெற்று நீர் என்ற இயக்கத்தை பெற்று தேகத்தோடு மண்ணில் வாழ்க்கையை நடத்தி இயங்கி கொண்டு உள்ளன..மனிதன் மட்டும் நெருப்பு என்ற பூதத்தில் மனம் என்ற நிலையில் சற்று உயர்ந்து மற்ற உயிர்களை விட உயர்வு பெற்று இருக்கின்றான்... சரி,ஆனால் காற்று என்ற
பூதத்தில் புத்தி என்ற நிலையில் மிக குறைவாகவும் ஆகாயம் என்ற பூதத்தில் அறிவு என்ற நிலையில் அறவே இல்லாமல் இருக்கின்றான்.. அறிவுக்கான விளக்கம் கிடைக்கும் வரை நாம் பெற்றதாக நினைக்கின்ற அறிவு உண்மை அறிவு அல்ல என உணர்க...அப்பொழுதுதான் எல்லோருடைய உண்மை நிலை புரியும்...ஏன் புத்தி குறைவாக இருக்கிறது என்றால் புத்தியால் கண்டு பிடித்த சில அற்புத விஞ்ஞானத்தால் நிலம் நீர் என்ற இரு பஞ்ச பூதத்தையே காப்பாற்ற முடியவில்லை.. அதாவது தேகத்தையும் உயிர் இயக்கத்தையும் காப்பாற்ற தெரியவில்லை.. அதனால் புத்தியில் குறைவு பட்டவனாக உள்ளான்.. ஐந்து பூதங்களில் குறைவான அளவிலே ஒரளவு முழுமை பெற்றதால் ஏறக்குறைய ஒட்டு மொத்த மனித இனமே குறை மனிதனாக குறைவு பட்ட மனிதனாக உள்ளது... சரி இந்த ஞானிகளை, சித்தர்களை எப்படிசேர்த்து கொள்ளுவது.. சொல்ல பயமாக இருக்கிறது.. அவர்களும் குறை மனிதர்களே.. ஆனால் வேறு ஒரு வகையில்.. புத்தி அறிவில் மேன்பட்ட அவர்கள் தங்கள் நிலம் நீர் என்ற தேகம் உயிர் இயக்கத்தை காப்பாற்ற கூடிய உயர் அறிவு பெறாததால் தேகத்தை இழந்தார்கள்.. அந்த நிலையில் அவர்களும் குறை மனிதர்களே... சற்று கற்பனை செய்து பாருங்கள்..
நிறை மனிதர்களாக கண்ணணும் ஏசுவும் நபிகளும்,புத்தரும் இன்றுவரை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?அப்படி இப்படி என புலம்பும் விசுவாசிகள், பிழைப்பை நடத்துபவர்கள் ஏதேதோ காரணங்களை சொன்னாலும் பஞ்ச பூதங்களில் நிறைவு பெற்று நித்தியனாக வாழும் மனிதனையே நிறை மனிதன் என்று சொல்ல தகுதி பெறுகிறான்.. ஞானிகள் நமக்காக என்ன செய்தார்கள்? வருங்கால மனிதன் நிறை மனிதன் ஆக வேண்டும் என்பதற்காக அதற்கான உளவுகளை தன் தேகம் உயிரை தியாகம் செய்து கண்டுபிடித்து வைத்துவிட்டு போனார்கள்.. உண்மை அறிந்தவர்கள் நன்றி பெருக்கால் அவர்களுக்காக இரத்த கண்ணீர் வடிப்பார்கள்.. எப்படியோ நம் நாடு பெற்ற சுதந்திரம் இன்றைய நிலையில் எவ்வாறெல்லாம் அவமானப்படுவது போல ஞானிகள் சித்தர்களின் நிறை மனிதனுக்கான உளவுகள் அவமதிக்கப்படுகின்றன.. சிவகலப்பு சிவயோகத்தில் சித்தர்களின் உளவுகள் வெளிப்பட அவர்கள் அருள் புரிவார்கள் என்ற நம்பிக்கையில் பகுதி ஒன்று முடிவடைகிறது..

No comments:

Post a Comment