Sunday 28 June 2015

வாசியோக ரகசியங்கள் பகுதி இரண்டு


உடன்பாடு உடைய உறவு
***************************************
மூச்சோடு நாம் கொள்ளும் உறவுகள் மிக மிக முக்கியம்.. அதில் நாம் உடன்பாடு அடைவில்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்.. அப்படி உடன்பாடு அடையாத உறவுகளால் வாசியோகம் ஒருவனை மீட்க முடியாத நரக குழியிலே தள்ளி விடும்.. பல யோகங்கள் எதிர்பார்த்த நன்மைகள் தராவிட்டாலும் எந்த தீங்கும் தராது.. மெய் வருந்திய கூலியாவது தரும்.. ஆனால் வாசி யோகம் அப்படியல்ல.. அது பிரபஞ்ச பேராற்றலோடு தொடர்பு கொள்வது.. அதி உயர் அழுத்த மின் இணைபோடு ( High tension current) தொடர்புக்கு சமம்.. அதே போல் பேரற்றலையும் தரக் கூடியது.. அதனால் தான் உடன்பாடு உடைய உறவு அறிந்து கொள்வது மிக மிக முக்கியம்..
உணர்தல்,தொடர்தல்,அழைத்தல்,இணைதல் என்ற நான்கு வகையான உறவுகள் உள்ளன.. மூச்சில் சுவாசத்தை உள் வாங்கல், வெளி விடுதலில் ஒரு பலவந்தமான ஒரு இயக்க சக்தியை சென்ற பகுதியிலே பார்த்தோம்.. சற்று மூச்சை நிறுத்தும் பொழுது ஒரு பலவந்த இயக்க சக்தியை உணராத அளவிற்கு ஒருவனுக்கு உணர்ச்சி கெட்டு போய் இருந்தால் சீக்கிரம் மரணக் குழியை தயார் படுத்த வேண்டியது தான்.. ஆனால் அந்த பலவந்த இயக்க சக்தியை முதலிலேயே எடுத்து சொல்லாத வாசியோக பயிற்சிகள் மரண யோக பயிற்சிகளே..
நீங்கள் பயிலும் வாசி யோகத்தில் அந்த இயக்க சக்தியை உணருவதற்கு இடம் இல்லை என்றால் உடனே அப்படிபட்ட பயிற்சியை விட்டு விடுங்கள்.. அடுத்தது உணர்ந்த அந்த ஒன்றில் தொடர்தல் என்ற பயிற்சி.. அந்த இயக்க சக்தியை தொடர்ந்து தொடர்ந்து செல்ல வேண்டும்.. யார் செல்லுவது.. நம்முடைய மனம் தான்.. செம்மை யடையாத மனம் ஆணவ தன்மையால் நான் ஏன் இதை தொடர வேண்டும் அது என்னை தொடரட்டும் என்று அந்த இயக்க சக்திக்கே முன் சென்று தன் வல்லமையை காட்ட முனையும்.. மொத்த பாதகமும், பங்கமும்,தீவினையும் இந்த ஒரு செயலில் மட்டுமே நடை பெறுகிறது.. இன்றைய சில வாசியோக பயிற்சிகள் இதை தான் செய்து அழிவை தேடிக்கொள்கிறது.. உலகியல் வாழ்க்கையில் பணிவை பற்றி அதிகமாக பேசுவார்கள்.. ஆனால் பணிவார் யாரும் இல்லை.. தன்னை தாங்குகின்ற தாய் தந்தையருக்கே பணியாத மனித குலம் வேறு யாருக்கு பணிவார்கள் ?.. இங்கே பிரபஞ்ச இயக்க சக்தியை தொடருகின்ற தூய பணிவு மிக மிக முக்கியம்.. இந்த பணிவு இன்மையால் தான் பயிற்சி காலங்கள் பல வருடங்கள் தொடருகின்றன.. பணிவு இல்லையேல் பயிற்சியில் தேர்ச்சி பெறாமலேயே முடிந்து போகும்.. பணிவை பயிலாதவர்களுக்கு பயிற்சி பலன் பல்லாண்டு களானாலும் தராது.. இந்த பயிற்சியில் முனைப்போடு பயிலுபவர்களுக்கு உயர் பண்பாகிய தூய பணிவு தானாகவே வரும்.. அந்த பணிவே பக்தி யோகத்தின் ஆணிவேர்.. பணிவு இல்லையேல் இறைவன் சன்னதியில் நிற்க தகுதி இல்லை.. இந்த வாசி யோக ரகசியங்களை கைடைபிடிக்கும் பொழுது உலகியலில் வெற்றி பெறுவதற்கான மிக சுலப வழிகளை கற்று தரும்.. ஒவ்வொரு நொடியும் தொடரும் நிலையை நழுவ விடாது அந்த பிரபஞ்ச பேராற்றலை தொடர்ந்த தொடரலை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.. ஆனால் இன்றைய வாசி யோக பயிற்சியில் இந்த தொடரும் நிலை குறித்து விழிப்பு நிலையே இல்லை.. ஒழுங்கின் வடிவமே ஆன இந்த இயக்க சக்தியை, பணிவு இல்லாத மனதில் உள்ள ஆதிக்கமுள்ள எண்ணங்கள் அந்த புனித இயக்கத்தின் தன்மையை மாற்றவே முயலும்.. முடிவு ஒழுங்கற்ற இயக்க தன்மை,இயக்க சீர் கேடு முடிவில் பேரழிவு.. உண்மையை சொன்னால் முறையற்ற பயிற்சியில் தானே தேடிக்கொண்ட 
அழிவு..
இந்த தொடருதலில் பக்குவமடைந்தால் தான் அடுத்து அழைத்தல் என்ற வாசியோக பயிற்சியில் நுழைய முடியும்.. தொடர்வது நம் செயல்.. அதில் பழுது இல்லாமல் பழகி விட்டால், அழைத்தல் என்ற அந்த இயக்க சக்தியின் செயலே நடைபெற தொடங்கி விடும்.. தொடர்தல் நம் செயல்.. அழைத்தல் அதன் செயல்.. எதுவாக இருந்தாலும் இந்த பயிற்சியின் நடுவே நீங்கள் நாதத்தை தலை நடு பகுதியிலேயே கேட்டீர்களானால் எந்த பிரச்சனையும் இன்றி எல்லாம் ஒழுங்காக நடைபெறுகிறது என்று அர்த்தம்.. இது ஒரு முக்கியமான இரகசியம்.. நாதம் உணரவில்லையே என துவண்டு போகவேண்டாம்.. அந்த கவலை பயிற்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும்.. இங்கே சொல்லப்படும் உளவுகள் உங்கள் முன்னேற்றத்தின் மைல் கற்கள்.. பின் இறக்கம் வராமல் தடுக்க கூடியவை.. இந்த பதிவின் மொழி நடையில் புரிவதற்கு சிக்கல் எதுவும் இருப்பின் சிரமம் பாராது தெரிவித்தால் நான் மாற்றத்திற்கான பதிவை பதிப்பேன்.. தயவு செய்து இயந்திர தன்மையாக படிப்பதை தவிர்க்கவும்.. காரணம் இது உயிருக்கான,ஆன்மாவிற்கான, தெய்வ நிலைக்கான ஒரு தேடல்.. அழைத்தல் என்ற பயிற்சிக்கு அடுத்த பகுதிக்கு அழைத்து செல்கிறேன்.. அவ்வளவே..

No comments:

Post a Comment