Friday 26 June 2015

பகுதி ஐந்து :---- நாளைய நிஜம்

பத்தாம் வாசலுக்குள் வாசம்
*****************************
வாசியோகம் பயிலும் சித்த வித்தியார்த்திகள் ஒன்பது வாசல்களை அடைப்பது பற்றியும், அப்படி அடைத்தபின் பத்தாம் வாசல் தானாக திறக்கும் என்றும் போதிப்பார்கள்.. அந்த பத்தாம் வாசல் தான் சொர்க்க வாசல் ஞான வாசல் என்று கூறுவர்... ஆனால் அதற்காக மிகவும் பாடு பட வேண்டும், அப்படி அந்த பத்தாம் வாசல் அடைந்து விட்டால், மீண்டும் வெளியே வருவது கடினம் என்றும் கூறுவர்.. அங்கே ஜீவ சமாதி என்ற உயர் நிலை கிடைக்கும்... அங்கே பிரபஞ்ச முழுவதும் பயணப் படலாம் என்றும் கூறுவர்.. ஆனால் தேகத்தை செயல் இழக்கச் செய்து மரணக்குழியிலே புதைத்து விட வேண்டும்... தேகத்தால் எதுவும் செய்ய இயலாது என்பதை சொல்லாமல் சொல்லுவர்...
வாசியோகப் பயிற்சியில் கதி எடுத்தல் என்று சொல்லக்கூடிய பயிற்சி பல இடங்களில் முறையாக சொல்லி தருவது இல்லை... முறையான பயிற்சியின் மூலம் கதி எடுத்தல் என்ற நிலைக்கு செல்ல வேண்டியவர்கள் எடுத்த எடுப்பிலே கதியை சொல்லி கொடுக்கின்றனர்.. அதன் விளைவாக ஒரு விசித்திரமான முறையில் தேகம் வலு இழக்கிறது... சந்திர கலையின் அவசியத்தை போதிப்பதில்லை.. சந்திர கலை பற்றி அதிகம் கவலை படாது சூரிய கலையிலே அதிகம் கவனம் செலுத்தி உஷ்ண சம்பந்தப் பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.. அதற்கான மருந்து வகைகளையும் கூறி உட் கொள்ள சொல்லுவர்...
ஆனால் நிறை நிலை மனித வாசியோகப் பயிற்சி வேறு விதமாக உள்ளது.. இதில் ஒன்பது வாசலை முழுமையாக அடைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.. இதில் ஒன்பது வாசல்களை தாண்டி செல்லும் முறையே உள்ளது.. தாண்டி பத்தாம் வாசலில் நுழையும் நுணுக்கமே உள்ளது.. பத்தாம் வாசலில் இருந்து கொண்டு ஒன்பது வாசல்களையும் கவனித்து, திறந்திருக்கும் ஒன்பது வாசல்களிலும் பயணப்படும் படியாக தயார் நிலையில் என்றும் இருக்கும்.. முறையாக சந்திர கலையை கையாளுவதாலே மட்டுமே இது சாத்தியமாகும்.. பெரும்பாலான தியான முறைகள் எல்லாம் மோன நிலைக்கு அழைத்துச் சென்று அந்த ஒன்பது கதவுகளை மூடும் நிலைக்கே போகிறார்கள்.. அதனால் தேக உணர்வு இழந்து தேக இயக்கம் இழந்து விடுகிறது.. இந்த மாதிரி தியானம் தான் இன்று மிக கவர்ச்சியாக இருக்கிறது... காரணம் தூங்கி தூங்கி பழகி போனவர்களும், எண்ண ஆதிக்கத்தால் மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டதால் இது கவர்ச்சியாக இருக்கிறது...இதனால் தியானம் பயிற்சி பெறும் இளைஞர்களிடம் செயல் திறமை வெகுவாக பாதிக்கப் படுகிறது.. தூக்கத்திற்கு ஒத்த அமைதியால் ஏமாற்றப் பட்டு ஏதோ முன்னேற்றம் அடைந்தது போன்ற மயக்கம் அடைந்து விடுகிறார்கள்...
நிறை நிலை மனிதன் பத்தாம் வாசலுக்குள்ளும் போவான்; அங்கே பிரபஞ்ச பேராற்றலையும், பிர பஞ்ச இரகசியங்களையும் அறிந்து பேரறிவு துணையையும் பெறுவான்.. ஆரியபட்டரை காட்டிலும் அண்டத்தில் உள்ளதை அனைத்தையும் அறிந்து கொள்வான்.. அபிராமி பட்டரை காட்டிலும் கோள்களில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெறுவான்.. அதே நேரத்தில் பத்தாம் வாசலிருந்து விடுபட்டு ஒன்பது வாசல்களிலும் நுழைந்து ஒரு எதார்த்த நிலையிலும் இருந்து தான் பெற்ற வல்லமையை தன் தேக வல்லமையால் திறம்பட செய்து முடிப்பான்... இந்த பத்தாம் வாசல் தான் தோன்றா நிலையின் இருப்பிடம்.. மூலசக்தியின் இருப்பிடம்.. இந்த இடத்தில் தன்னை இழந்த மோன நிலையில் இருக்கும் மனிதன் ஏதோ கொஞ்சம் சக்தியை பெற்று வரலாம்.. தூக்கத்தில் பெறுவதைக் காட்டிலும் சற்று அதிகமாக பெற முடியும்.. ஆனால் நிறை நிலை மனிதன் சந்திர கலையை மதியாக மாற்றிக் கொள்ளும் யுக்தியை அறிந்துள்ள காரணத்தால் மூல சக்தி இருப்பிடமான தோன்றா நிலையிலிருந்து அளவற்ற ஆற்றலை தன் மர்மயோகத்தால் நிறை நிலை மனிதன் பெற முடியும்... மற்ற தியான தவ யோக முறைக்கும், மர்ம யோகத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இது தான்... எல்லோரும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.. யாம் நடத்தும் வாசியோகம் ஒரு மர்மயோகம்.. ஏன் அது மர்மயோகம் என்றால், தோன்றா நிலையாகிய மர்ம நிலையை அடைந்து அங்கே தன் மதியால் அளவற்ற ஆற்றலை பெறும் ஒரு மர்ம முறை இருப்பதால் தான்.. மற்ற யோக வகுப்புகளில் கலந்து கொள்வது போல் இல்லாமல் இந்த மர்மயோகம் கற்றுக் கொள்ளும் வகுப்பிற்கு வருகின்ற பொழுது மிகுந்த விழிப்பு நிலையோடு வரவேண்டும்.. எண்ண ஆதிக்கங்கள் என்ற பூதங்கள், பேய்கள், பிசாசுகள் கொஞ்சமல்ல மிக பெரிய அளவிலே தொல்லைகள் கொடுக்க ஆரம்பிக்கும்.. ஆனால் பேரண்ட பேரறிவின் துணையை வேண்டிக்கொண்டால் எல்லாம் சுலமாக நடக்கும்..
நமக்கு தேவை சக்தியும் ஆற்றலும், அதை பயன் உள்ளதாக மாற்ற மதியும், அதை பயன் படுத்தும் இடத்தை தேர்வு செய்ய, மாசற்ற புனித அன்பு மட்டுமே... இவ்வளவு பேசும் நீங்கள் நிறை நிலை மனிதனாக தானே இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.. இந்த மாதிரியான கேள்விகளால் உங்கள் ஈடுபாடு மிகவும் மோசமாக குறைந்து விடும்.. நீங்கள் சொல்லுவது போல் ஒருவர் நிறை நிலை மனிதனாய் ஆகி எதாவது சித்து ஒன்றை செய்து விட்டால் குருவென பட்டம் கொடுத்து உடனே பொறுப்பை அனைத்தையும் அவருக்கே கொடுத்து விட்டு மீண்டும் எல்லா முயற்சிகளையும் கைவிட்டு விடுவீர்கள்.. குரு வென ஏற்றுக் கொண்ட இன்றைய மனித குலத்தில் ஒருவரேனும் கரையேறியதாக தெரியவில்லை.. குரு மயக்கம் போல் மோசமான நோய் எதுவும் இல்லை.. அது பிறவி பயனையே நிச்சயம் கெடுத்து விடும்.. இதில் சற்று யோசித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்..
அதனால் தான் சொல்லுபவனை யார் என்று பார்க்காதீர்கள் என்று வலியுறுத்தி சொல்லுவது.. நீங்கள் சொல்லும் யோகத்தை எப்படி நம்புவது.. சொல்லுவதை கவனமாக கேட்டு பயிலுகின்ற போது நீங்கள் அடையும் அளவற்ற மாற்றமே சாட்சி.. பேரண்ட பேரறிவால் உணர்த்தப் பட்ட சித்தர்களால், இரகசியமாக போதிக்கப் பட்ட இந்த மர்ம யோகம் ஏன் அந்த சித்தர்களை நிறை நிலை மனிதன் ஆக்க வில்லை என்ற விசாரனையும் முன்னேற்றத்தை கெடுத்து விடும்.. ஒரே ஒரு சாட்சி, பயிற்சியிலே ஏற்படுகின்ற மிக பெரிய மாற்றம் மட்டுமே.. மற்றபடி சொல்லுகின்றவனை பற்றிக்கொண்டு எந்த முடிவுக்கும் வந்து விட கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.. கடவுள் இருக்க ஏன் நிறை நிலை மனிதன் இன்றைய கால கட்டத்திற்கு தேவை என்ற கேள்வி எழுந்துள்ளது.. கடவுளும், பாபாஜியும், சாய் பாபாவும் இருக்கும் காலத்தில் தானே உலகில் கண்ணுக்கு தெரிகின்ற, கற்பனையே பண்ண முடியாத அராஜகங்கள் நடக்கின்றன.. அவர்களை நம்பி பிரயோசனம் இல்லை சிலர் சொல்வதில் நியாயம் இருக்கத் தானே செய்கிறது.... ஆனால் அவர்கள் கருணையால் வழங்கிய உளவுகளை வைத்து நிறை நிலை மனிதனாக மாறி, கடமைகளை நிறைவேற்றும் உயர்ந்த பொறுப்பினை ஏற்கும் சந்தர்ப்பம் அல்லவா கொடுத்து இருக்கிறார்கள்.. அவர்கள் இன்றைய அராஜகத்தை நிறுத்த முடியாத இயலாமையில் இல்லை.. எல்லாம் அவர்களால் முடியும்.. ஆனால் கடமையை தவற விட்டதால், யாரும் வெல்ல முடியாத கர்ணனும், பீஷ்மரும், துரோணச்சாரியாரும், பாரதப் போரில் மரணத்தை ஏற்றுக் கொண்டார்களே, அந்த அவல நிலை நமக்கும் வரக்கூடாது என்ற கருணையினால் தான், கடமைகளை நாம் செய்யவேண்டிய பொறுப்பினை இந்த கால கட்டத்தில் கொடுத்து உளவுகளையும் உணர்த்தி இருக்கிறார்கள்..
புரிந்து கொண்டு செயல் பட்டால் நாம் நிறை நிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment