Saturday 27 June 2015

பகுதி 10 - சிவகலப்பு சிவ யோகத்தில் ஆன்மீகத்தில் மனிதனின் இரண்டு நிலைகள்..

சிவகலப்பு சிவ யோகத்தில் ஆன்மீகத்தில் இரண்டு நிலைகள் மிக முக்கிய மானது.. ஒன்று மனம் என்னும் போர் களத்தில் புத்தி நிலையாம் உணர்வினை பெருக்கி பரவச நிலை, பேரானந்த நிலையை,என்று ஒருமுகமாக சென்று கொண்டே,முடிவில் இறைநிலையில் ஒடுங்கி போய் விடுவது.. அங்கே தேக செயலற்று இறைநிலையோடு இரண்டற கலந்து மறைந்தே போவது.. மண்ணில் என்ன அதர்மங்கள் நடந்தாலும்,மேலே சொன்னவர்கள் தேகம் என்ற மண் நிலை பூதத்தை
இழந்ததால் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருப்பது.. அதர்மத்தை அழிக்க பேரறிவும், புத்தியும் இருந்தும், மண் என்ற பூதத்தின் துணையின்மையால் மண்ணில் எதுவும் செய்ய முடியாதிருப்பது...
இரண்டாம் நிலை தான் நிறை நிலை மனிதன் நிலை.. புத்தி என்ற உணர்வை பெருக்கி இறைநிலையோடு கலந்த பேரானந்தத்தில் தன் விழிப்பு நிலை குறையாது,தெய்வ சக்திகளோடு,மண், நீர் உள்பட பஞ்ச பூதங்களிலே சம ஆதிக்கம் பெற்று, மண்ணில் அதர்மங்களை அழிக்கும் வல்லமையோடு இருப்பது.. முதலில் மனிதன் முதல் நிலையிலே தேர்ச்சி பெற வேண்டும்.,, தெய்வ பலங்களை கைக்கொள்ள வேண்டும்.. அதற்கு புத்தியின் தன்மையாகிய உணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் பகுதி 9 ல் பார்த்தோம்.. காலத்தை அதற்கென்று ஒதுக்கி பயிலக்கூடாது.. தேக இயக்கத்தில் இணைந்து இறை நிலை நோக்கிய உணர்வை பெருக்கிய பின்பு உணர்வின் தனித்த
இயக்கமாகிய நுண் தேக இயக்கத்தில் மேலும் மேலும் உணர்வினை பெருக்க தேக அசைவற்ற தன்மைக்கு வர வேண்டும்..அப்பொழுது தேக உணர்வு நிலை மறவாத விழிப்பு நிலை குறையாது இருக்க வேண்டும்.. இல்லையேல் மண் என்ற பூதம் செயல் இழக்க தொடங்கி விடும்.. அது சவ நிலை.. சிவ நிலை யோகத்தில் தேக உணர்வு நிலை கெடாத நிலை அதி முக்கியம்.. சுற்று புற சூழ்நிலை மறந்த, தேகத்தை சுற்றி கரையான் புற்றுக்கள் வளர தவ நிலை யோகி என்னவாக இருக்கிறார்... உணர்வு கெட்ட சவ நிலைக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? அப்படியான தவ யோகியின் தவம் கெட ஒருவன் அறியாது தொல்லை கொடுத்து விட்டால் சீறும் சினத்தால் அழித்து விடுவாராம்.. அப்படியானால் அவர் அடைந்த நிலை என்ன ? மண்ணின் முதிர்ந்த நிலை.. அது விலங்கு நிலை.. பொறுமை, சாந்தம் என்பதை அறியாத கொடிய விலங்கு நிலை.. இதற்காகவா கரையான் புற்று சூழ இத்தனை ஆண்டுகள் தவம் இருந்தார்..??தேக உணர்வு நீங்கிய தியானத்திற்கு மிக உயர்ந்த அந்தஸ்து கொடுக்கும் இன்றைய நிலையை என்ன வென்று சொல்லுவது ?.. விழிப்பு நிலையில் குறைவு ஏற்பட்டு மண்ணின் சவால்களை ஏற்கும் துணிவின்றி சந்நியாசம் என்ற போர்வையில் உலகை துறக்கும் அவல நிலைதானே ஏற்படுகிறது.. உண்மை உணராத நிலை அல்லவா அது..? உண்மையை உணர்த்தவே இந்த சிவகலப்பு சிவயோகம்.. என்ன ஒன்று உண்டு என்றால் இதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை..பெறுவது மட்டுமே.. விஞ்ஞானிகள் அணுவை பிளந்து அளவு அறியா ஆற்றலை பெற்றார்கள்.. அதற்கு ஒத்த மன சக்தியை பெற மனதின் உள்ளே ஒரு அணு பிளவிற்கான பயிற்சி சிவ கலப்பு சிவ யோகத்தில் வர இருப்பதை அடுத்த பகுதியிலே எதிர் பாருங்கள்.. முன் பகுதிகளை மீண்டும் சற்று படித்து தயாராக இருக்க வேண்டப்படுகின்றனர்.. இந்த முகநூலில் கண்ணுக்கினிய அதி கவர்ச்சி கருத்துக்கள் படங்கள் கண்காட்சிகள் நடுவே இந்த சிவயோகம் எடுபடாது என்பது உண்மைதான்.. ஆனால் அதே கவர்ச்சி, இந்த சிவ யோகம் தகுந்தவர்களுக்கு சேர அதிக உதவி செய்கிறது என்பதே மிக பெரிய உண்மை..

No comments:

Post a Comment