Saturday 27 June 2015

பகுதி 8 - சிவகலப்பு சிவயோகத்தில் சித்த பதிவான நீர் என்ற பூதம்.

சிவகலப்பு சிவயோகத்தில் நீர் என்ற பூதத்தின் இயல்பான சித்த பதிவுகளின் முக்கியத்துவத்தை அறிய வேண்டியது அவசிய மாகிறது.. சித்த பதிவுகள் என்பது எல்லா பிறவிகளின் பதிவு தொகுப்பு.. ஒரு மனிதன் ஒரு பிறவியில் அறிவு சொத்து திறமை இவற்றை சேர்த்து வைக்கிறான்.. ஏதோ காரணங்களால் மரணம் வந்து விட்டது என்றால் அவை அனைத்தும் வீணாக போகாமல் பிரபஞ்ச அமைப்பான இறைவன் அவற்றை சித்தமாக மாற்றி வைத்து, மீண்டும் தேகம் எடுக்கும் பொழுது அவற்றை தேகத்தோடு இணைக்கின்றான்..அது நீர் என்ற பூதம்.. நீர் ஒரு பாத்திரத்தில் இருக்கும் வரை அசையாது.. ஆனால் வெளியே வந்தால் பரவி ஓடி ஓர் இயக்கமாக மாறும்.. அசைக்க முடியாத தேகத்திற்கு நீரின் இளக்கத்தை கொடுத்து குறிகோளை நோக்கி நகர, சித்தம் தேகத்திற்கு இயக்கம் கொடுக்கிறது.. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.. உலகிற்கு இயக்கம் பிரபஞ்ச சித்தத்தால் மட்டுமே.. வெற்றிக்கான சரியான இயக்கத்திற்கான உளவுகள் உபாயங்கள் அறிவு முன் பிறவியில் சேர்த்து வைத்த முன் அனுபவங்களை அடைந்தால் மட்டுமே வெற்றியை விரைவு படுத்த முடியும்.. வாழ்க்கையில் பெரும் வெற்றி அடைந்தவர்களை எல்லாம் கவனித்தால் முற்பிறவி பொக்கிசத்தை கைப்பற்றி வெற்றியை மிக சுலபமாக்கியவர்களே.. இப்பிறவியில் அரும்பாடு பட்டாலும் முற்பிறவி முன் அனுபவ புதையலை கைகொள்ளாமல் வெற்றி பெருவது மிக மிக கடினம்.. சித்தத்தை பெற்று வெற்றி கண்டவர்கள் தான் சித்தர்கள்.. நீர் என்ற பூதத்தை பூரணமாக அறிந்தவன் தான் நிறை மனிதன்.. பல கோடி பிறவிகளின் ஒட்டுமொத்த சக்தியை ஒருங்கிணைத்து தான் வந்த பிறவியில் இயங்குபவன் தான் நிறை மனிதன்... சக்தியின் பேரற்றலின் மொத்த வடிவம் தான் நிறை மனிதன்.. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே ஏங்கேயோ தேடி அலைந்து வீண் போகாமல் தனக்குள் காத்திருக்கும் சித்தம் என்ற பூதத்தை அணுகி மாபெரும் வல்லமை பெறுவது முதல் கடமை ஆகிறது.. அதற்கான உளவு சிவ கலப்பு சிவ யோகத்தில் இருந்தால் எவ்வளவு இனிப்பான செய்தி.. முன் பகுதிகளின் தொகுப்பு செய்திகளை நினைவில் கொண்டால் மட்டுமே பின் பகுதி விளங்கும்.. அதற்கு வேண்டிய இப்பிறவி சித்த பலத்தையாவது பெற்று விளங்க வேண்டுகின்றேன்..

No comments:

Post a Comment