Saturday 27 June 2015

பகுதி 12 - சிவ கலப்பு சிவ யோகத்தில் கற்றலும் உற்றலும்

சிவ கலப்பு சிவ யோகத்தில் மிக முக்கியமான பகுதியை பார்ப்போம்.. உலக வழக்கில் கற்கும் கல்வியானது உலக சம்பந்தப்பட்டதை பிறர் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து நினைவு பதிவுகளாக சித்தத்தில் ஏற்றி நினைத்தவுடன் மனதிற்கு அதை மாற்றும் தகுதியை பெறுவது தான்.. உலகத்தில் தொடர்பு கொள்ள அது உதவும் என்பது ஐயமில்லை.. ஆனால் அப்படியான நினைவு பதிவுகளின் தொடர்பு மனதில் உணர்வின் விகிதாசாரத்தை குறைக்கிறது.. அதிகம் கற்ற கல்வி மனதில் உணர்வினை குறைத்து விழிப்பு நிலையையும் குறைத்து விடும்.. உணர்வே கடவுள் சக்தி... அது 'க்' என்ற இறை ஆற்றல்.. அற்றல் என்றால் குறைதல்.. கற்றல் என்பது க்+ அற்றல் என்பதாகும்.. கற்றல் என்பது இறை ஆற்றல் குறைதல் எனலாம்... கற்றல் என்பது மனதில் எண்ணத்தின் அளவு மிகுந்து உணர்வு அளவை குறைப்பதற்கு சமம்.. கற்றவர் இடம் புலமை இருக்கும்.. ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது.. உணர்வு குறைபாட்டால் புத்தி குறைவாகவே இருக்கும்.. இதை ஈடுகட்ட உற்றல் என்ற பயிற்சியை நிறை நிலை மனிதன் செய்கிறான்.. உற்றல் என்றால் உணர்வு பெறுதல் எனப்படுவது.. நினைவு பகுதிகளின் அளவை கட்டுப்படுத்தி உணர்வின் அளவையும் குறையாது விழிப்பு நிலையில் இருப்பது என்பது தான் உற்றல் என்பது.. சிவ கலப்பு சிவ யோகத்தில் உற்றல் என்பது மிக முக்கியமாகும்..கற்றலுக்கு உற்றல் அவசியம் தேவை... உற்றல் அதாவது உணர்வு நிறைந்த மனம் பக்தி யோகம் உள்பட அனைத்து யோகத்திற்கும் உகந்தது.. அதிக கற்றல் மனதில் சதா 
உறுத்தலை கொடுக்கும்.. உற்றல் உறுத்தலை நீக்கும்.. உற்று அறிந்து உருவாகும் உணர்வுக்கான பயிற்சியே உற்றல்..
சரி.. இப்பொழுது ஒரு பயிற்சிக்கு தயாராகுங்கள்.. அமைதியாக நாற்காலியில் உட்காருங்கள்.. இரு கைகளை சாமி கும்மிடும் பொழுது எப்படி இணைத்து வைப்பீர்களோ அப்படி இணைத்து வைத்து முகத்தில் இருந்து பத்து அங்குலம் தூரத்தில் வைத்து பாருங்கள்.. அப்படி இணைக்கும் போது உள்ளங்கை அடியில் மணிகட்டின் மேல், உள்ளங்கையும் மணிகட்டும் மடங்கும் இடத்தில் உள்ள தடித்த ரேகைகளை பொருத்தி கும்மிடும் நிலையில் வைக்கவும்.. இப்பொழுது இரண்டு கைகளின் நடு விரல்களின் உயரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.. 
பெரும்பாலும் சரியாகதான் இருக்கும்.. அப்படி நடு விரலின் உயரம் ஒன்று குறைவாக இருந்தால் அந்த கையை மட்டும் 
தொடையின் மேல் நிதானமாக வைக்கவும்.. சமமாக இருந்தால் வலது கையை வைக்கவும்.. இப்பொழுது நிதானமாக ஆழமாக தொடையின் மேல்வைத்த கையின் நடு விரலை உற்று பார்க்கவும்..எந்த சிந்தனையும் இன்றி உற்று உற்று பார்க்கவும்... இரண்டு நிமிடங்களே போதும்.. இப்பொழுது கைகளை மீண்டும் பழைய படி இணைத்து பார்க்கவும்.. முன் சொன்ன இரண்டு ரேகைகள் சரியாக இணைந்துள்ளதா என்று கவனிக்கவும்.. இப்பொழுது நடு விரல்கள் உயரத்தை பார்க்கவும்..நீங்கள் பார்த்த அந்த விரலின் உயரம் நிச்சயமாக ஒன்று முதல் இரண்டு செண்டி மீட்டர் வரை அதாவது அரை அங்குலம் வரை வளர்ந்திருக்கும்.. இரண்டாவது உங்கள் உயரத்தை சரியாக அளந்து கொள்ளுங்கள்.. 
படுக்கையில் மல்லார்ந்து மிக ஓய்வாக படுத்து கொள்ளுங்கள்.. கண்களை உள் முகமாக திருப்பி உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உற்று உற்று நிதானமாக பாருங்கள்.. மீண்டும் உங்கள் உயரத்தை அளந்தால் உங்கள் உயரம் ஒரு அங்குலம் வரை உயர்ந்து இருப்பதை கண்டு வியப்பு அடைவீர்கள்.. உயரத்தை அளக்க சுவரில் முதுகு பக்கம் அணைந்து இருந்து பென்சிலால் கோடு போட்டு கூட அறியலாம்.. இதன் பின் இருக்கும் மிக பெரிய மர்மத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment