Saturday 27 June 2015

பகுதி 14 - சிவ கலப்பு சிவ யோகத்தில் மனதில் ஓர் அணு பிளவு...

சித்தம் என்ற எண்ண பதிவுகளிலிருந்து கொட்டி குவியும் எண்ணங்களின் பளு தாங்க முடியாமல் மனம் என்ற பூதம் தன்னில் உயிர் சக்தியான உணர்வுக்கான இடத்தை எண்ணதிற்கு
விட்டு விடுவதால் மனம் தானே நிற்க வழியின்றி தடுமாறுகிறது.. மனம் அழுத்தம் மன அழுத்தம்.. tension,tension என்று கூச்சல் போடும் மனிதர்கள் ஏராளம் இன்று.. அதிசயம் என்னவென்றால் டென்சன் ஆகாதே என்று புத்திமதி சொல்லியே டென்சன் ஆகும் மனிதர் கூட்டம் மிக ஏராளம் ஏராளம்.. இவர்கள் மற்றவர்களின் மன அழுத்தங்களை யெல்லாம் ஏற்று ஏற்று நிலை குழைந்தவர்கள்.. மர்ம அடியை தனக்கு தானே கொடுத்து கொள்பவர்கள்.. மேலே சொல்லப்பட்டவைகளில் ஓர் பெரிய உண்மை இருக்கிறது.. காரணமான ஒன்றை சொல்லும் பொழுது காரியப்பட்ட ஒன்று (அதாவது மர்ம அடி, மற்றவர்கள் என்ற சமுதாய பிரச்சனை ) உட்புகுந்து காரணமான ஒன்றை கெடுக்க முயலுகிறது... இதை யெல்லாம் விழிப்பு என்ற பேரறிவின் துணையால் உடனே அறிந்து நிலை தடுமாறும் மனத்தை
நிலை நிறுத்த காரணமான உணர்வை பெற என்ன வழி என்று அறிய வேண்டும்.. நிலை தடுமாறும் மனதை மற்ற பூதங்களின் துணையால் சரி செய்ய வேண்டும்.. தேக இயக்கத்தை சற்று நிறுத்துக.. தேகத்தில் உள்ள மனதிற்கு வேலை செய்யும் கண்களில் அங்கு இங்கு பிரிந்து பிரிந்து ஓடும் பிரிவு பார்வையை நிறுத்தி, உற்று பார்க்க,மனதில் எண்ண அழுத்தம் குறைவதை விழிப்பு நிலையில், பரிவு பார்வையால் பார்க்கவும்.. இப்பொழுது மிக அழுத்தம் கொடுக்கும் ஒரு எண்ணத்தை ஓடாமல் பரிவு பார்வையால் நிறுத்தவும்.. அந்த ஓர் எண்ணத்தை பரிவு பார்வையால் மேலும் மேலும் உற்று உற்று பார்க்க கண்ணின் கதிர் அலைகளால் வெளிச்சத்தில் ( மனதில் உள்ள பிரிவு பார்வை ) தோன்றும் வடிவமான அந்த எண்ணம் தன் வடிவை சிறுக சிறுக இழந்து தன்னில் சிறை வைத்துள்ள அளவற்ற ஆற்றலான உணர்வை வெளியிட தொடங்குகிறது.. Rays என்று சொல்லப்படும் ஒருவகை கதிர் அமைப்பால் வடிவ உலோகத்தில் அணு பிளவு நடைபெற்று சக்தியை பெறப்படுகிறது.. மனதில் பரிவு பார்வையின் கதிர் அலைகளால் எண்ண வடிவங்களை பிளந்து உணர்வு என்ற பெரும் சக்தியை பெற முடிகிறது.. உணர்வு கூடிய நிலையில் புத்தியின் வலிமை பெற்று மனம் புத்துயிர் அடைந்து திடம் கொண்டு தடு மாற்றத்தை நீக்குகிறது.. மனிதன் தன் நிலை அடையவே கருணை கடவுள் விரும்புகிறான்.. அதற்கான உளவை ஒவ்வொவருக்குள்ளும் பதித்த பதியை (இறைவனை) உணர்ந்த
சித்தர்கள் திருவடி தீட்சையை கண்டு அறிந்தனர்.. திரு என்றால் 'த்' + இரு எனலாம்.. 'த்' என்பது முழுமையை குறிக்கும்.. திரு என்பது முழுமையில் இருப்பவன் எனப்படும்.. அடி என்பது 'அ' + 'ட்'+ 'இ' எனலாம்.. 'அ' என்ற அருள் சக்தியை 'இ' என்ற இயக்கத்துக்கு 'ட்' என்ற விண்ணுக்கும் மண்ணுக்குமான எங்கும் கொண்டு வருவதாகும்.. 'ட்' என்ற எழுத்தில் உயர்வுக்கான ஒரு கோடும், தாழ்வுக்கான ஒரு கோடும் இருப்பதை கவனிக்க.. திருவடி என்பது விண் முதல் மண் வரையிலான ஐந்து பூதங்களிலும் முழுமையாக இருக்கும் தன்மை என பொருள்.. அந்த தன்மை உடையவன் தான் நிறை நிலை மனிதன்.. ஒரு நிறை நிலை மனிதன் இருந்தாலே உலகம் செம்மைப்படும்.. அனைவரும் அடைய அமைக்கப்பட்ட உற்றலில் ஒங்கும் திருவடி நிலை ஓர் இயற்கை இறைநிலை.. எதோ சொல் வித்தைகளால் உருவான புதிய வழி என ஐயம் வேண்டாம்.. சிவம் என்பது 'சி' என்ற மனதோடு 'வ' என்ற காற்றின் புத்தியை கலப்பது தான்.. அதனால் மனம் எனும் அணு உலையில் உள் புதைந்த விடுவிக்க முடியாத எண்ண சக்தியை கண்ணின் கதிர் சக்தியால் அணு பிளவு செய்து வேண்டிய சக்தியை பெறவே சிவ கலப்பு என்ற சிவ யோகம்.. அணு பிளவு ஆற்றலை உடைய மனம் உள்ளவனே அணுமன். பேராற்றலும் நித்தியமும் உடைய அனுமனை (ஆஞ்ச நேயர்) போன்றவனே நிறை நிலை மனிதன். நுண் தேகத்தில் மட்டுமே தோன்றும் அனுமனை போல் அல்லாது பரு தேகத்திலும் இருக்கும் ஆற்றல் உடையவனே நிறைநிலை மனிதன்.. சிவகலப்பு சிவ யோகத்தில் மேலும் பல பயிற்சிகளை காண இனி வரும் பகுதிகளையும் கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment