Saturday 27 June 2015

உளவுகள் பகுதி இரண்டு - உணர்வு கொள்ள எண்ண வழி


இந்த உலகம் இயங்க கனல் சக்தி தேவை.. இந்த கனலால் மண்ணின் இறுகிய தன்மையை இளகி நீர் போன்ற இளகிய தன்மையால் இயக்கம் என்பதே வருகிறது.. உடலில் கனல் குறைந்தால் உறைந்த ரத்தத்தால் என்ன நிகழும் அறிந்ததே.. தேக திசுக்கள் உற்பத்திக்கு போதுமான (இதமான) கனல் இல்லையேல் உற்பத்தி குறைந்து நோய்கள் பெருகும்.. வற்றாத கனலும், இதமான கனலும், போதுமான கனலும் தேவை.. குறைந்த,நிறைந்த கனல் நிலை இதமான கனலை விட்டு விலகினால் மரணமே.. இதம் நிலை கனல் நாதம் என்ற ஒலியின் கையில் உள்ளது.. நாதம் பிரபஞ்சத்தின் சீரான ஆற்றலின் கட்டு பாட்டில் உள்ளது.. ஜீவ சமாதி அடைந்தவர்கள் இந்த இத நிலை கனலை இழக்காமல் வேண்டிய காலம் மட்டும் உடலை காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். ஆனால் மிக குறைந்த கனலால் தேக இயக்கம் அறவே இழந்து செத்தாரை போல் இருப்பர்.. ஒளிதேகம் பெற்ற முனிவர்களோ இத நிலை கனலை இழந்து அதி கனலை பெற்று பரு உடல் செயல் இழந்து போனார்கள்.. பரு உடல் செயல் இழந்து போனவர்கள் அனைவரும் செத்தாருள் வைக்கப்படும் என்றார் வள்ளலார்.. ஒரு பேர் இயக்கத்திற்கு இத நிலை மாறாத அதிநிலை (அதிகமான) கனல் தேவைப் படுகிறது.. இதநிலையும் அதிநிலையும் இணைந்து செயல் ஆற்ற ஓர் பேர் அறிவு தேவை படுகிறது.. அந்த பேரறிவின் நீங்கா துணையான உணர்வு மயமான புத்தி மிக அதிகமாக தேவை படுகிறது.. கனலின் அதிநிலை பெருகி இதநிலைக்கு எதாவது பங்கம் வருகின்ற சமயம் அதி நுட்ப உணர்வின் எச்சரிக்கை பெற்று பேரறிவு வேண்டியதை தகுந்த நேரத்தில் தகுந்தபடி செய்கிறது.. இந்த புத்தியையும் பேரறிவையும் பெருக்கும் ஒன்றே ஒன்று இருக்கிறது என்றால் அது நாதம் தான் என்றால்,சொன்னவனை இந்த உலகம் வேறு மாதிரியாகத் தான் பார்க்கும்.. இதனால் சத்தியத்தை சொல்ல அஞ்சுகின்றனர்.. தலைநடு பகுதியிலே இருக்கிற அந்த ஒலிக்கு அவ்வளவு ஆற்றலா என்ற கேள்வி யாருக்கும் எழுவது இயற்கையே.. அந்த அசாதாரண ஒலியின் அலைவரிசை எண்ணை (frequency) எந்த கருவியாலும் அளக்கமுடியாது.. அந்த ஒலியின் தன்மை பிரமாண்டமாக இருக்க அதோடு பொருந்துகின்ற மனித திறமை பிரமாண்டமாக இருந்தே ஆக வேண்டும்.. நமது திறனை விரைவு படுத்தி பெருக்கி கொள்ள நாதத்தை தவிர நம் கைவசம் வேறு ஒன்றும் இல்லை.. அந்த நாதத்தோடு நீங்காமல் தொடர்பு விட்டு போகாமல் ஒரு மூன்று நிமிடங்கள் நாத இணைப்போடு இருக்கமுடியுமா என்று முயன்று பாருங்கள்.. அதில் ஆயிரத்தில் ஒருவர் கூட தேற மாட்டார்கள்.. வியப்பாய் இல்லையா? முயன்று பாருங்கள்.. எண்ணம் குறிக்கிடாமல் தொடர்ந்து நாத இணைபோடு இருப்பது என்பது ஜென்ம ஜென்மான எண்ணங்களின் பந்தத்தை விடுவது போல.. சிகரெட், குடி போன்ற சிறு பந்தங்களை விட முடியாமல் தவிக்கும் மனித குலம் ஜென்ம பந்தங்களை விட்டு விலகி நிற்க ஐந்து வினாடிகளுக்கே மிக சிரமப் படுவார்கள்.. ஆனால் தொல்லை தரும் எந்த பந்தங்களையும் விட்டு விலகும் ஆற்றலை தருவது உள்ளே தலைநடு பகுதியிலே சுரிதி பெட்டி போல ஒரு ஒழுங்கு தன்மையில் வாசித்துக் கொண்டிருக்கும் நாதத்தோடு இணைந்து இருப்பது தான்.. அந்த வாசித்தலோடு இணைவது தான் உண்மையான வாசி யோகம்.. ஒவ்வொரு மனிதனும் அந்த வாசி தீட்சை பெற்றே பிறக்கிறான் என்பது இன்னும் அதிசயமான செய்தி.. உலகியலில் கற்று தரும் வாசி யோகம் விரைவாக கற்று விரைவாக மரண குழிக்கு ஜீவ சமாதி என்ற பெயரில் அழைத்து செல்லும் ஒரு மார்க்கமாக இருப்பதையும், அன்னவர்கள் மரண குழியை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளும் அவலநிலை நினைக்கின்ற போது
மனம் வேதனையாக தான் இருக்கின்றது.. உண்மை வாசியோகம் நாதத்தோடு இணைந்து இருப்பதே.. மேல் சொன்ன மூன்று நிமிடங்கள் நாத இணைப்போடு இருந்து விட்டால் உங்கள் எடையும் உயரமும் நிச்சயமாக கூடும்.. இதில் ஐயமே இல்லை.. எதையும் கற்று கற்று பழகிப் போன மனித குலம் தானே கற்று கொண்ட இந்த விசயத்தை எப்போதுமே ஏற்று கொள்ள மறுக்கிறது.. என்ன சற்று நாதத்தின் பெருமை புரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.. இந்த பெருமையை வெளிப்படுத்ததான் விஷ்ணு கையில் சங்கையும் சிவன் கைகளில் உடுக்கையும் வைத்தார்கள்.. நாதத்தின் பெருமை சுட்டி காட்டவே அவைகள்.. இறந்த பின் சங்கு ஊதுவது எதானால் என்றால் எதோ ஆழ்ந்த மயக்க நிலையிலே ஒருவர் இறந்தது போல் இருந்தால் சங்கின் ஒலியால் அதிக உணர்வு என்ற சக்தியை ஊட்டி எழுப்பி விடவே.. செத்தாரையும் மீட்டி எழுப்பும் சக்தி நாதத்திற்கு உண்டு என்பதை சித்தர்கள் செய்து காட்டிய அதிசயங்களில் ஒன்று.. எந்த பணியும் கெடாமல் பணி அனைத்தும் சிறந்து விளங்க இந்த வினாடி முதல் நாத இணைப்போடு இருக்க
தொடங்கலாமே.. தொடங்கும் அந்த தருணம் முதல், வெற்றி பாசறை முழங்குவதை கேட்கலாம்.. ம்ம் இம்மட்டும் அவ்வளவே..

No comments:

Post a Comment