Friday 26 June 2015

பகுதி ஒன்பது :----- நாளைய நிஜம்

பேரண்ட பேராற்றலும் பேரறிவும்
*****************************************
பேராற்றலையும் பேரறிவையும் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.... பொதுவாக பேராற்றல் என்பது பிரபஞ்ச ஆற்றல் தான்... அது கட்டுப்படாத ஆற்றல்.. இடி மின்னல் சுனாமி போன்றவை பேராற்றலை ஒத்த ஆற்றல்; கட்டுப்படாத ஆற்றல்.. ஆனால் மின்னலைக் காட்டிலும், அல்லது அதற்கு ஒத்த ஆற்றலான மின்சார ஆற்றல் ஒரு கட்டுப்பட்ட ஆற்றல்.. மின் நிலையங்களில் மனித கட்டுப்பாட்டில் உற்பத்தி ஆகும் அந்த பேராற்றலான மின் ஆற்றல் மனிதனின் முழு கட்டுப் பாட்டில் உள்ளது.. அந்த மின் ஆற்றலை மனிதன், தான் நினைத்த வண்ணம் கையாளலாம்.. ஆனால் கட்டுபடாத பேராற்றலால் மனிதனுக்கு அழிவே ஏற்படுகிறது.. ஆட்டோமொபைல் வண்டிகளில் எஞ்சினில் இருந்து வரும் சக்தியை, கிளட்ச், பிரேக் மூலம் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறான் மனிதன்.. அந்த கட்டுப் பாட்டில் இல்லாத நிலையில் வண்டியை ஓட்டி செல்லுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது, எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை நாம் நன்றாகவே யூகிக்க முடியும்..
அப்படிதான் இன்றைய யோகப் பயிற்சிகளில் கட்டுப் படாத சக்தியை அடையும் உபாயம் ஒன்றையே கற்று கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அதுவே கவர்ச்சி பயிற்சியாக மாறுகிறது.. கட்டுப்படாத சக்தியை மனிதன் விரும்பும் காரணம் மிக விசித்திரமானது.. எண்ணப்பதிவுகளின் ஆதிக்கத்தால் முறையற்ற ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் மனிதன், பெரும்பாலும் அதில் தோல்வி அடைந்த நிலையை அடைகிறான்.. இரஜினி போலவும் புரூஸ் லீ போலவும் கற்பனை பாத்திரங்களை அடைய துடிக்கும் இளைஞர் சமுதாயம் போல.. அதனால் தோல்வி அடைந்த ஆணவ மனம் மிகுந்த கணம் அடைகிறது.. தன் கணத்தை இறக்கி வைக்க தெரியாத மனம் தற் கொலை செய்து கொள்ளத் துடிக்கிறது.. அதற்கு தன்னை இழந்த நிலையை தேர்ந்தெடுக்கிறது.. அப்படி அது தேர்ந்து எடுத்தது தான் போதை பொருள்கள்.. அளவுக்கு மிச்சிய சுவையான உணவு.. ஆணவத்தின் கணம் தாங்க முடியாமல் இங்கும் அங்கும் கணத்தை இறக்கி வைக்க கிளப் பொழுது போக்கு தளங்கள்
போன்றவற்றை தேடுதல்... ஒரு தீக் கோழி தனக்கு எதாவது ஆபத்து வந்தால், மண்ணில் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம்.. அது போல் கட்டு படாத போதை சக்திகளிலும்; யோகப்பயிற்சிகளிலே கிடைக்கும் தன்னை மறந்த மோன நிலைக்கும், மனிதன் மிகவும் ஆசைப் படுகிறான்,,
அதனால் தான், அப்பாவிகள் கட்டுப் படாத சக்திகளை, யோக பயிற்சிகளில் பெற்று , தன்னை மறந்த நிலையை உருவாக்கும், யோக குருமார்களிடம் சிக்கி கொண்டு இருக்கிறார்கள்.. ஆகா என் குரு நடத்திய கூட்டத்தில் ஆனந்த பரவசத்தில் நான் என்னையே மறந்து இருந்தேன்.. இப்படி பட்ட வார்த்தைகளில் தன்னை இழந்த நிலை ஒரு போதை போல் செயல் படுவதை தாங்கள் சற்று கவனத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.. அப்படி நடத்தும் பயிற்சிகளில் கத்துவதும் கூக்குரல் இடுவதும், தன்னை மறந்து ஆடுவதும், சாமி வந்தது போன்ற நிலைக்கு வருவதும், சகஜமாக பார்க்கலாம்.. அப்படியான பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டை விரைவில் இழந்து, மனம் போன போக்கில் செல்ல தொடங்கி விடுவார்கள்.. ஏதாவது கெட்ட பழக்கத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருப்பார்கள்.. இதுவே மிக கவர்ச்சி யோகமாக மாறி தன்னை மறந்த, சவ யோகத்தை, தன் அறியாமையின் விளைவாக அப்பாவிகள் செய்து கொண்டு இருப்பார்கள்... சவயோகம் ஒன்றே இன்று கவர்ச்சி யோகமாக உள்ளது..
கட்டுப் பட்ட ஆற்றலை பெறுவது தான் உண்மையான யோகம்.. உண்மை கசக்கும் என்பது பழமொழி.. ஆன்மீகத்தில் பிரபஞ்ச, பேரண்ட பேராற்றலை பெறுகின்ற போது அதை கட்டுப்பட்ட ஆற்றலாக பெற வேண்டும்.. அந்த ஆற்றலை பெறவும், கட்டுப்படுத்தவும், கையாளவும், சேமித்து வைக்கவும் வேண்டிய முறைகளோடு கூடிய யோகப் பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும்...அதில் தன்னை மறந்த நிலை என்பது துளியும் இல்லை.. தன்னை உணர்ந்த நிலையே மேல் ஓங்கி நிற்கும்.. எதுவும் தன்னை மீறி நடக்காது.. அதில் தீய பழக்கங்கள் ஆதிக்கத்திற்கு அடிமை என்ற நிலைக்கு துளியும் இடம் இல்லை.. மாறாக தான் பெற்ற பிரபஞ்ச ஆற்றலை எண்ண ஆதிக்கத்திற்கு வசப் படாத நிலையால் அந்த ஆற்றலை தர்மம் ஒன்றுக்கே பயன் படுத்தப் படும்.. கட்டுப் படுத்த பட்ட பேராற்றலுக்கு பெயர் ஒன்று இல்லையா ? என்று கேட்கலாம்.. ஆம் அதற்கு பெயர் ஒன்று உண்டு.. அது இது தான்
விழிப்பு நிலை
******************
இந்த விழிப்பு நிலையான கட்டுபட்ட ஆற்றலை பெறாத காரணத்தினால் தான், இன்றைய குருமார்கள் எந்த ஒரு சிறு சித்தையும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.. அப்படி செய்யும் சில சித்துக்களும் முற்றிலும் ஏமாற்று வேலையாக இருக்கிறது.. அல்லது சீடர்களால் மிகைப் படுத்தப் பட்ட ஒன்றாகவே இருக்கிறது.. விழிப்பு நிலையில் பெறும் கட்டுபட்ட ஆற்றலை பெறுவதற்கான பயிற்சி ஒன்றின் மூலமே, பெற்ற பேராற்றலை முறையோடு கட்டுப் படுத்தி நம் சித்தர்களை போல உண்மையான சித்துக்களை பெற முடியும்.. கட்டுப் படாத ஆற்றலை பெறுவது மிக சுலபம்.. அதை யார் வேண்டுமானாலும் கற்று தரலாம்.. மேளமும் உடுக்கையும் இருந்தாலே போதும்.. ஆனால் கட்டுப்பட்ட ஆற்றலை பெறுவது பண்பட்ட யோகத்தின் மூலமே சாத்தியமாகும்.. வரும் சனிக் கிழமை பயிற்சியில் சில சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தவே இது போன்ற சில பதிவுகள் தேவைப் படுகிறது..
தன்னை நன்கு உணர்ந்த விழிப்பு நிலையில் மட்டுமே, கட்டுப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை, வேண்டிய வண்ணம் இயக்கி அற்புதங்களை ஆற்ற முடியும்.. இந்த விழிப்பு நிலையே பேரறிவு என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.. இந்த பேரறிவு என்பது எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ அந்த ஒன்றானது.. ஒன்றான இந்த விழிப்பு என்ற பேரறிவுக்கு அகப்படாத பலதரப்பட்ட அறிவுகளில் ஒன்று கூட இல்லை.. எல்லா அறிவுகளும் இதற்கு அகப்படும், வசப்படும் .. பேரண்ட பேரணு அனுபவ வாசியோகப்பயிற்சியில் மதியான சந்திர கலை பேரறிவாகவும் சூரிய கலை பேராற்றலாகவும், அந்த சூரிய கலையோடு மதி இணைந்து கட்டுப்பட்ட ஆற்றலை பெறும் போது அக்னி கலையாக அனுபவப் படுகிறோம்... இந்த பயிற்சி, விழிப்பு நிலை பெறாத, குறிக்கோள் அற்ற பயிற்சிகளிடமிருந்து மாறு பட்டதால், முன் குருமார்கள் கற்று தந்ததை போல் இல்லையே என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே விளையும்..
முறையான பயிற்சியால், விழிப்பு நிலை என்ற பேரறிவின் மூலம் கட்டுப்பட்ட பேராற்றலை பெற்று, நிறைநிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்....

No comments:

Post a Comment