Saturday 27 June 2015

பகுதி 3 - சிவ கலப்பு சிவ யோகத்தில் உள்ளம் என்ற தூய மன நிலையின் உளவுகள்

சிவ கலப்பு சிவ யோகத்தில் கனல் அல்லது நெருப்பு என்ற பஞ்சபூதத்தில் மனம் என்ற நிலையில் பார்க்க வேண்டியது தான் அதி முக்கியமானது.. மனிதன் மட்டுமே மனம் என்ற நிலையில் கடும் பயணம் செய்ய வேண்டிய திருக்கின்றது...முதலில் மனம் எண்ணம் இவற்றின் வித்தியாசம் மிக மிக முக்கியம்.. எண்ணத்தையே மனம் என நினைக்கும் ஆன்மீகவாதிகள் ஒரு படி கூட மேல் ஏற முடியாது.. என் மனதில் ஒரு எண்ணம் உதிக்கிறது என்று வழக்கத்தில் சொல்லும் பொழுதே மனம் வேறு எண்ணம் வேறு என்பது உறுதி ஆகிறது.. மனத்திற்கு தமிழில் அழகான பெயர் ஒன்று உள்ளது..அது தான் உள்ளம்.. 'உ' என்ற உயிர்
எழுத்து உண்மை,உயிர் சக்தியை குறிக்கும்.. 'ள்' மெய் எழுத்து பயிலுதலை குறிக்கும்..'ம்' என்ற எழுத்து பொருந்தி நிற்பதை குறிக்கும்... முடிவில் உள்ளம் என்பது ஒன்றான உண்மையாய் இருக்கின்ற பிரபஞ்ச சக்தி பயின்று பொருந்தி இருக்கின்ற இடம் என்பதாகும்.. இந்த உள்ளம் என்ற மனதில் தான் எண்ணம் என்ற மாசு படிந்த சக்தி அலைகள் உட்புக முடிந்த இடமாக உள்ளது.. எல்லாவற்றிக்கும்ஆதாரமான பிரபஞ்ச சக்தி எண்ணத்தையும் மாசுவையும் மட்டும் புறம் தள்ள செய்வதில்லை.. அதனாலே பிரபஞ்ச சக்தியின் செயல் முழுமையான கருணை வடிவாக உள்ளது.. சதா பயிலுகின்ற அதாவது ஓதுகின்ற அந்த சக்தி அருட்பெரும் சோதியாய் இருக்க அதன் செயல் தனி பெரும் கருணைவடிவாய் உள்ளது... இங்கே தான் சிக்கலே தோன்றுகிறது..பஞ்ச பூதங்களிலேயே எண்ணம் தாங்கிய
மனம் தான் மிகுந்த சிக்கலும் முரண்பாடுகளும் நிறைந்தது.. இதை நீக்க வந்தவைகளே மதங்களும் மார்க்கங்களும்.. ஆனால் என்ன வேதனை என்றால் அவைகள் தீர்க்கமுடியாத அளவிற்க்கு சிக்கலையும் முரண்பாடுகளையும் வலுவாக்கிவிட்டன.. தீர்க்க முயன்ற வள்ளாரின் சன்மார்க்க அமைப்பினையும் முடமாக்கி விட்டனர்.. முரண்பாடே வாழ்வாக்கி விட்ட மதங்கள் அழிவை நோக்கிய பயணத்தை விரைவு படுத்துகின்றனர்.. பஞ்ச பூதங்களிலே சமசீர் ஆதிக்கம் பெற்ற நிறை மனிதன் வந்தாலொழிய உலகிற்க்கு எந்த விமோச்சனமும் இல்லை... இந்த சிவகலப்பு சிவயோகம் அதற்கான முயற்சியே.. இந்த எண்ணத்தில் ஏன் மாசு வந்தது என்றால் பஞ்ச அதாவது ஐந்து புலன்கள் ஒத்த நிலையில் செயல் படாததனால் ஒன்றோடு ஒன்று குறுக்கிடுவதால் அதனதற்குண்டான அலை சக்தி வரிசையில், வேறு ஒரு பூதத்தின் சக்தி அலைவரிசைகள் குறுக்கீடால் உண்டான முரண்பாடு.. ரேடியோ அலைவரிசைகளில் இடி மின்னல் அலைவரிசைகள் குறிக்கிட்டால் எப்படியோ அப்படி.. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்றார் வள்ளுவர்.. பஞ்ச பூதங்களின் ஒத்த இயக்கத்திற்கான ஒத்தது ஒன்றை அறிந்தால்தான் உயிர் வாழமுடியும்.. ஒத்ததை அறிந்து அதை செயல்படுத்துவதற்கான சிவகலப்பு பயிற்ச்சியை அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.இதற்கு முன் பகுதிகளை பார்க்க தவறினால் பின் பகுதிகள் விளங்காது..
குழப்பம் தான் விளையும்.. முன் பகுதிகளை பார்க்க தவறாதீர்கள்.

No comments:

Post a Comment