Friday 26 June 2015

பகுதி ஒன்று ---- நாளைய நிஜம்

01-11-14 அன்று நடந்த வகுப்பின் முடிவில் பேரண்ட பேரணு அனுபவ பயிற்சி சொல்லி தரப் பட்டது.. அப்படி அதில் அனுபவ படும் படி ஒரிருவருக்கு வாய்த்தாலே இந்த பிரபஞ்சத்தையே இயக்க கூடிய வல்லமை, கூட்டாக அந்த ஒரிருவால் கூட சாத்தியமாகும் என்று சொல்லப் பட்டது.. அப்படி சாத்தியப் படுமாயின் சில வருடங்களாக மழையின்மையால் வாடும் நமக்கு மழை பெய்யட்டும், அதன் மூலம் இந்த பயிற்சியின் மகிமை வெளிப்படட்டும் என்று ஒரு நண்பர் கடைசியாக கூறி வகுப்பினை முடித்தார்.. வகுப்பு முடிந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கி விட்டது.. பெரும் புயல் காற்று என்று இல்லாமல், பெரும் மழையாகவும் இல்லாமல், நிதானமாக, சற்று பலத்த சாரலாய், குறைந்த தொல்லை கொடுக்கும் வண்ணம் இரண்டு நாட்களாய் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது... சில நண்பர்கள் இந்த மழை நம் பயிற்சியின் விளைவாகவும். வேண்டுதல் விளைவாகவும் வந்ததா? என்று கேட்கிறார்கள்.. இந்த மாதிரி நேரங்களில் நாம் ஒரு உண்மையை சொல்ல தயங்க தான் வேண்டிய திருக்கின்றது... காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது என்றும் இது மழை காலம் தானாகவே நடந்ததை சுய விளம்பரத்திற்க்காக எடுத்துக் கொண்டார்கள் என்ற பேச்சுக்கு இடம் அளிக்காமல், இதை மறந்து விடுவோம்..
இனி மேல் எந்த ஒரு அற்புதமும் நிகழ்ந்தாலும், அது பிரபஞ்சமே நடத்துகின்றது என்ற முடிவுக்கே வர வேண்டும்.. நம்முடைய பயிற்சி திறமையால் வந்தது என்ற எண்ணம் ஒன்றே போதும்.. அது நம் சந்திர கலையையும், அதன் அம்சமான ஆணவத்தையும் பலப்படுத்தி, நம் சூரிய கலையில் உள்ள ஈடுபாட்டை குறைத்து விடும்.. அதன் காரணமாக நமது பேரண்ட பேரணு அனுபவம் பாதிக்க தொடங்கும்.. நம் ஏற்றத்தில் பலத்த பின்னடைவு கண்டிப்பாக ஏற்படும்.. நாம் அரசியல் வாதிகள் அல்ல.. எந்த ஒரு பலனையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இலாபம் தேடும் பண்பு நமக்கு அவசியமே இல்லை..
பேரண்ட பேரணு அனுபவத்தால், பேரண்ட ஆன்ம இலாபமே கிடைக்கின்ற பொழுது, அற்ப இலாபங்களால், உண்டான பாதிப்பால், வற்றாத செல்வம் தரும் ஆன்ம இலாபம் தொடர்ந்து பெறுவது தடை படக்கூடாது... இதை என்றும் மறவாமல் நாம் நம் பயிற்சியில் ஈடு பட வேண்டும்.. இனி நமக்கு பொறுப்பு அதிகமாகி விட்டது.. விரைவாக பயின்று அன்பு என்ற பேராயுதத்தை கையில் ஏந்த வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.. நிறை நிலை மனித யோகம் ஒரு மர்ம யோகம்.. அந்த மர்ம யோகத்தை பயின்று மர்ம யோகிகளாக நாம் மாறவேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம்.. சந்திர கலையில் ஒரு யாதார்த்த மனிதனாய் யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத நிலையில் சூரிய கலை மூலம் நினைத்துப் பார்க்க முடியாத தெய்வ பலங்களை பெற்று, இந்த உலகில் குறிப்பாக நம் நாட்டில் தர்மம் சத்தியம் நிலை நாட்ட வேண்டிய அவசியம் நமக்கு வந்து விட்டது.. கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்களையும் நொடியில் செயல் இழக்க செய்யும் அன்பு என்ற நிகரற்ற ஆயுதம் நம் கைவசமாக வேண்டும்.. உலகில் தர்மம் நிலை நிறுத்த செய்யும் அதே வேளையில், நம் தனிப்பட்ட தர்மங்களில் ( குடும்ப பொறுப்புகள் ) இருந்து துளி அளவும் விலகாமல், அதையும் பூரணமாக நிறைவேற்றக் கூடிய வல்லமையும் பெற்றே ஆக வேண்டும்.. ஆன்ம இலாபத்தின் மூலம், அத்தனையும் மிக சுலபமாக பெறக்கூடிய சூட்சம அறிவோடு செயல் பட தயாராக வேண்டும்.. இந்த உலகில் நாம் நம் அடையாளத்தை இழந்த நிலையே நம் மர்மயோகி நிலை.. அதே நேரத்தில் இந்த உலகையே தாங்கும் வல்லமையும் பொறுப்பும் நமக்கே.. இது முரண் பட்டது போல் தோன்றினாலும் நாளைய நிஜம் இந்த முரணாலே மட்டுமே சாத்தியமாகும்.. இந்த முரண் இன்றைய வலுவான சந்திர கலையான மனநிலையே.. சந்திர கலை பூரண மதியாக மாறும் போது, நாளைய நிஜம் ஒரு கற்பனை அல்ல, அது சாத்தியமான சத்தியமே என்பது நன்கு விளங்க வரும்..
நாளைய மர்ம யோக அன்பர்களே, ஒரு பெரும் மாற்றத்திற்கு தயார் ஆகுங்கள்.. நீங்கள் மர்ம யோகிகளாக ஆக வேண்டியது நாளைய நிஜம்.. அது உங்கள் கடமை.. நாளைய நிஜம் என்ன என்ன? நிறை நிலை மனிதனாய் விளங்கும் மர்ம யோகியின் நாளை செயல் பாடுகள் எப்படி எல்லாம் இருக்கும்.. அது சாத்தியமா அல்லது அது பைத்தியமானதா என்ற கேள்விகளுக்கு உகந்த பதிலுக்கான பதிவுகளை இனி எதிர் பார்க்குமாறு வேண்டுகின்றனன்....

No comments:

Post a Comment