Friday 26 June 2015

பகுதி நாற்பத்தி மூன்று :-- சித்தராவது எப்படி ?

மூடமும்,போகமும் நீங்க,நீக்க,வேண்டிய அவசர நிலை..
அதிகமாக உணவு உள் கொள்பவரை போகி என்பர்.. காரணம் உண்ட உணவு கொழுப்பு பொருளாக உடம்பில் சேகரித்து வைக்கப் படுவதால், தேகத்தின் திறன் பாதிக்கப் படுகிறது... சராசரி எடை கொண்ட ஒரு மனிதன் செய்யும் வேலையை மிக பருமனான ஒருவர் செய்ய முடிவதில்லை... இதனை திறன் என்பர்.. அப்படியானால் தேகம் திறன் உடையதாக இருக்க வேண்டுமானால், தேகம் ஒரு அளவிற்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.. தேகத்தை ஒரு வரையறை அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்... தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்ட தேகம் மீதியை கொழுப்பாக சேமிக்கவே செய்யும்..
தியானமும் அவ்வாறே என்பது ஒரு ஆச்சரியமான விசயம்.. தியானத்தில் அதிகமாக ஈடுபாடு கொள்பவர்கள் மனதின் எழும் எண்ண ஆதிக்கத்தின் விளைவான ஆசையின் நிமித்தம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் போது ஒரு மிதமிஞ்சிய ஓய்வின் விளைவாக பெறப்படும் மிகைப் பட்ட ஆற்றல் தேகத்திற்கு நல்லதல்ல.. ஒரு குறிப்பிட்ட அளவே ஆற்றலை தாங்கும் தேகம், அதிகமான ஆற்றலை பெறும் போது தேக திசுக்கள் செயல் இழந்து ஒரு மூடம் தேகத்தை கவ்விக் கொள்ளும்.. இதனால் தேகம் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் குறைந்து விடுவதை கண்கூடாக பார்க்கலாம்.. இந்த மூடத்தால் வாழ்வே சிதைந்து போகும் ஆன்மீகவாதிகள் ஆயிரம் ஆயிரம்... இந்த மூடம் கவ்விய நோய்க்கு சரியான மருந்து இல்லை எனலாம்.. வெளி உணவால் எப்படி அதிக கொழுப்பு சேர்ந்து தேகம் தன் திறனை இழந்து விடுகிறதோ அதே போலவே அதிக ஆற்றலை பெற்ற தேகம் பெற்ற ஆற்றலை மூடமாக தேகம் தன்னை மாற்றி விடும்.. கொழுப்பை கரைப்பது போன்று மூடத்தை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது.. இப்படி மூடம் கவ்விய ஆன்மீக வாதிகள் தான் தோன்றித்தனமாக வீதிகளில் பைத்தியகாரர்களாக திரிந்து உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல், அரைகுறை அல்லது நிர்வான ஆடைகளிலோ இருப்பதை தவறாக நாம் எடுத்துகொள்கிறோம்.. அவர்கள் உலகப் பற்று நீங்கிய ஞானிகள் என்றும், அமுதப் பால் உண்டவர்கள் என்றும், ஞானம் அடைந்தவர்கள் என்றும் தவறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.. உண்மையில் அவர்கள் மூடம் கவ்விய நிலையில் உலகியல் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மன நோயாளிகளே..
இப்படி பட்ட மனநோயாளிகள் மிக அதிகம் இருக்கும் இடமும் அதிக நோயாளிகளை உருவாக்கும் இடமும் எதுவென்றால் நமது பாரத நாடு தான்.. அதனால் தான் இந்த நாட்டை பழங்கால முதல் வெளி நாட்டவர்கள் மிக எளிதாக இந்த நாட்டை கைப்பற்றி இங்கே உள்ள வளங்களை சூறையாட முடிந்தது.. இன்றைக்கும் இந்த மூடம் கவ்விய சூழ்நிலை நீங்காமல் இருப்பதால் மக்களிடையே விழிப்பு உணர்ச்சி மிக குறைவாக இருப்பதின் காரணமாக அடிதள மக்களின் வாழ்க்கை தரம் துளியும் முன்னேற வில்லை.. இந்த மூடம் தரும் அற்ப சுகத்தையே வியாபாரமாக்கி மிக தந்திரமாக கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆன்மீக வாதிகள் இங்கே தான் இருக்கிறார்கள்..
இப்படி பெற்ற ஆற்றலால் மூடம் கவ்வாமல், மயக்க நிலையை தவிர்க்கவே, நமது சுவாசத்தில் சந்திர கலையாகிய உள் வாங்கும் மூச்சையும் இறைவன் அமைத்துள்ளான்.. இந்த சந்திரகலையை மதியாக்கும் நுணுக்கம் அறியாத காரணத்தில் தான் இந்த நாடே பல நூற்றாண்டுகளாக சீரழிவினை சந்திந்து வருகிறது.. மதியான அந்த அககுரு எழவிடாமல் என்ன என்ன வழிமுறைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் இம்மியும் பிசகாமல் சதி திட்டமாக நடை பெற்று வருகிறது.. இந்து மதத்தின் சிவகலப்பு என்ற வாழ்வியல் நெறி முறைகள் அடியோடு வேரறுக்கப் பட்டு, இன்று மூடம் தரும் கருத்துக்களாக இந்து மதமும் மற்ற வெளி மதங்களும் மாறி விட்டன.. புத்த மதம் இங்கே மூடம் தரும் மதமாக பெரும்பாலும் உள்ளது.. அதே புத்தமதம் ஜப்பானில் ஆக்கம் தரும் மதமாக மாறி விட்டது.. இங்கே மூடம் பரப்பும் சதியை முறியடித்தால் ஒழிய நம் பாரத நாட்டிற்கு என்றைக்கும் விமோச்சனமே இல்லை போல் தோன்றுகிறது.. விரைவில் நம்மில் அககுருவை எழுப்பி வல்லதொரு சித்தனாக மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இனியேனும் செயல் பட தொடங்குவோமாக...

No comments:

Post a Comment