Saturday 27 June 2015

உளவுகள் பகுதி பத்து - இயந்திர இலாபமும் ஆன்ம இலாபமும்


பகுதி பத்தில், எண் பத்தை பற்றி பார்ப்போம்.. தமிழில் 'ய' என்ற எழுத்து மிக முக்கியமானது.. அது பத்து என்ற எண்ணை குறிக்கும். எட்டும் (அ) இரண்டும் (உ) கூட்டி எண்ணவும் அறியீர் பித்துலகிறீரேரே என்கிறார் வள்ளலார்.. 'ய்' என்பது இரண்டு பகர மெய்யின் இணைப்பு.. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டு அற கலந்த கலப்பு.. அந்த கலப்பு பல ஆயிரம் ஜென்மங்களின் முயற்சி பயனாய் மட்டுமே அடைய முடியும் என்ற தவறான கருத்து சோம்பேறி ஆன்மீகத்தில் உள்ளது. வீர, விவேக,விரைவு, ஆன்மீகமான சிவ கலப்பு சிவ யோகத்தில் அப்படி இல்லை.. மனிதன் உருவாக்கிய உளவுகள் பல ஜென்மங்களின் கால விரையம் ஆக்க; விரைவு,வேகம், தரும் கடவுள் தந்த உளவுகள் மனிதனை மெய் பொருள் அறியவும், அடையவும் மிக பெரிதும் உதவுகின்றது.. காரணம் கடவுள் தந்த உளவுகளில் ஆன்ம இலாபம் என்ற மிகப்பெரிய பொக்கிஷம் உள்ளது.. வேறு எதிலும் இல்லை.. இல்லவே இல்லை.. ஆன்ம இலாபம்.. ஆம் அது மட்டுமே இலாபம் தரக்கூடியது.. நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. ஆன்ம இலாபம் தேட வாருங்கள் என பலதடவைகள் அறைகூவல் விடுக்கின்றார் வள்ளலார்.. அதை நன்கு புரிந்து கொள்ள இயந்திர இலாபம் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம் 
மிக பெரிய இயந்திரம்.. 20 டன்(20000 கிலோ) மேலே இருக்கும்.. அந்த இயந்திரத்தை சுற்றி அதிக பட்சம் 10 பேர் மட்டுமே நிற்கமுடியும்.. அந்த இயந்திரம் சுமார் 600 கிலோ உட்பட்டு இருந்தால் தான் அவர்களால் தூக்க முடியும் ஆனால் இருப்பதோ 20000 கிலோ.. ஆனால் வழக்கத்தில் என்ன நடக்கிறது.. இரண்டு தொழிலாளிகள் தங்கள் புத்தியை உபயோகித்து கடப்பாரையும் கட்டைகளை வைத்து இயந்திர லாபம் என்ற பிரபஞ்ச விதியை பயன் படுத்தி வேண்டிய இடத்திற்கு இயந்திரத்தை நகர்த்தி விடுகிறார்கள்.. அளப்பறிய அந்த இலாபத்தை மையமாக வைத்தே பல இயந்திரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.. இயந்திர இலாபம் (mechanical advantage).. இதை அறியாத உயர் நிலை பள்ளி பிள்ளைகளே இல்லை.. அது இல்லை என்றால் அன்றாட உலகமே இல்லை எனலாம்.. 
அப்படியே ஜென்ம ஜென்மான பாவ மூட்டைகளை சுமந்து இந்த ஜென்மத்தில் நடை பிணங்களாக பெரும் பாவ சுமையை சுமந்த வண்ணம் அல்லல் படும் மனித இனத்திற்கு ஆன்ம இலாபம் பெற்று பாவ சுமைகளை தகர்த்து எறியும் ஆற்றல் பெற வள்ளல் பெருமான் ஆன்ம இலாபத்திற்காக ஓர் அற்புத உளவு ஒன்றை சொல்லுகிறார்.. ஆம் அதுதான் உயிர் கருணை யான ஜீவ காருண்யம்.. தன்னுடைய பாவ மூட்டைகளை தான் தான் தீர்க்கவேண்டுமே யன்றி பிறரிடம் எந்த உதவியும் பெற இயலாதாம்.. அது பாவத்திற்கு பரிகாரமான ஜீவ காருண்யம்.. எப்படி உயிர் கருணை அவ்வளவு வலிமையானது என்பதை இறைவனின் அருள் ஆற்றலை உணர்ந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.. பிரபஞ்ச ஆகாய வெளியில் அளவிட முடியாத உயிர்களின் மூல ஆன்மா ஆற்றல் அணுக்கள் இருக்க, பிறவி நோக்கம் உடைய உயிர் அணுக்கள்,மூல ஆன்மா ஆற்றல் அணுக்களோடு இணைந்து மண்ணில் தேக தோற்றம் கொள்ள விழைகின்றன.. ஆனால் இணைப்பிற்கான வழி தெரியாது பேரறிவு இல்லாது தவிக்கின்றன.. ஒரு உயிரின் பால் மனிதன் கொண்ட கருணை என்ற மகா சக்தி அந்த குறிபிட்ட உயிர் அணுக்களுக்கு 
அறிவு ஒளியை தந்து,பிரகாசத்தை தந்து தனக்கு உகந்த ஆன்மா ஆற்றலை பெற்று அவ்வுயிர் அணுக்கள் மண்ணில் தேக வடிவம் பெறுகிறது.. தன் பிறவிக்கு காரணமான கருணை கொண்ட மனிதனுக்கு,தன் ஆன்மா ஆற்றல் துணையை பரிசாக தந்து தன் நன்றி கடனை செலுத்துகிறது.. ஒரு நெம்பு கோல் விதியில் பெரும் சுமையை சுலபமாக நகர்த்தி வைக்கும் உழைப்பாளி போல், கருணை என்ற நெம்பு கோலால் பெரும் ஆன்மா ஆற்றல் துணையை பெற்று தன் ஜென்ம ஜென்மான பாவ சுமைகளை தகர்த்து எரியும் ஆன்ம இலாபத்தை மனிதன் பெற்று பார சுமையின்றி பேராற்றலோடு இருக்க தகுதி பெறுகிறான்.. நிறை நிலை மனிதனும் தனி பெரும் கருணை வடிவான இறைவனை போன்றே தன் கருணை தன்மையால் எல்லா உயிர்களின் ஆன்மா ஆற்றல் துணையை கொண்டவன்.. அதனால் நினைத்த மாத்திரத்தில் பேராற்றல் பெரும் வல்லமை உடையவன்.. இப்பொழுது உயிர் கருணை அல்லது ஜீவ காருண்யத்தின் உன்னத நிலையை புரிந்து இருக்கலாம்.. ஒரு மனிதன் இயல் வடிவமே கருணை வடிவானது.. உலக சார்புகளின் தொடர்பால் கருணை நிலைக்கு புறம்பாக எதிர்மறை எண்ணங்களின் செயல் பாட்டால் கருணை இழந்து அதனால் ஆன்மா ஆற்றல் இழந்து நிற்கிறான்.. நாத இணைப்பில் நாத ஒழுங்கின் முன்னால் முரண் பட்ட எண்ணங்கள்
அழிக்கப்படுவதால் மனிதன் இயல்பான கருணை உடையவனாகிறான்.. இந்த வகையில் மனிதன் ஆன்மா இலாபம் பெற்று ஆன்மா பேராற்றல் உடையவன் ஆகிறான்.. இறைவனே வழங்கிய உளவான நாதத்தின் தன்மை உணர்ந்த நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆராய நேரம் ஒரு நொடி கூட இல்லை.. அவ்வளவே..

No comments:

Post a Comment